திமுக வின் ‛பி’ டீமாக இருந்த எட்டப்பர்களின் முகத்திரை கிழிக்கப்பு-மதுரையில் இபிஎஸ்..

gallerye 121837607 3249792 - 2026

இன்று வெளியான அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மதுரையில் நடந்த 50ஜோடி திருமண விழாவில் கருத்து தெரிவித்துள்ள அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, ‛இந்த தீர்ப்பால் திமுக.,வின் ‛பி’ டீமாக இருந்த சில எட்டப்பர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளதாக இன்று மதுரையில் தெரிவித்தார்.

அதிமுக சார்பில்‌ மதுரையில் நடைபெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இல்லத் திருமண விழா மற்றும்50 ஜோடிகளுக்கு திருமணத்தை அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார். பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பழனிசாமி பேசியதாவது:

உச்சநீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு வரும் என்பது குறித்து மனதில் அச்சத்துடன் தீர்ப்புக்காக இரவு முழுவதும் தூங்காமல் இருந்தேன்; கலங்கி இருந்தேன்.

இந்த விழாவிற்கு முன்னதாக ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, நல்ல தீர்ப்பாக வரவேண்டும் என வேண்டினேன். அடுத்த சில நிமிடங்களில் அற்புதமான செய்தி வந்தது.


தமிழகத்திலேயே வலிமையான கட்சி அதிமுக; அதன் வீரத்தை குறைத்து மதிப்பிட முடியாது. அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மீது பொய்யான வழக்குகள் போடுகிறது ஆளும்கட்சி. ஈரோடு கிழக்கில் நியாயமான முறையில் தேர்தல் நடக்கவில்லை.

அதிமுக புகாரை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. திருமங்கலம் இடைத்தேர்தலில் முதல் பார்முலாவை கொண்டுவந்த திமுக, இப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களை அடைத்துவைத்து 2வது பார்முலாவை நடத்துகிறது.

ஜெயலலிதா, எம்ஜிஆர் என இரு தலைவர்களும் அருள் கொடுத்தார்கள் என்று குறிப்பிட்ட அவர், சக்தி மிக்க தெய்வ தலைவர்கள் கொடுத்த வர பிரசாதம் தீர்ப்பு இது எனவும், 1.5 கோடி தொண்டர்களை காக்கும் தீர்ப்பு இன்று வந்துள்ளது, இனிமேல் அதிமுக தொண்டர்கள் தலைமையில் தான் இயங்கும் என்றும் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories