January 19, 2025, 3:32 PM
28.5 C
Chennai

சூரியவம்சம் படம் போல் இந்த நாட்டாமை; மனைவியை எம்பி., ஆக்குவேன் என பக்க பலமாக நிற்கிறார்!

சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்துக் கொடுத்து, “நீ‌ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன்” என ஒரு தூண் போல் இல்லாமல் ஒரு ஆலமரமாக நிற்கிறார். அதற்கு என் குடும்பமும் பின்னால் நிற்கிறது” என்று, அருப்புக்கோட்டையில் ராதிகா சரத்குமார் பேசினார்.

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராதிகா சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராதிகா சரத்குமார் அருப்புக்கோட்டை ஆத்திபட்டி அருகே உள்ள பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சியினரின் ஆர்வத்தையும் வெறியையும் பார்க்கும் போது மிக சந்தோசமாக உள்ளது. பணியாற்றுபவர்களை மரியாதையாக நடத்தக்கூடிய கட்சி பாரதிய ஜனதா கட்சி.

ALSO READ:  மதுரை கோயில்களில் வரும் 15ம் தேதி அன்னாபிஷேகம்!

சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் பெண்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும். தன்னம்பிக்கை இருக்க வேண்டும் சுயமரியாதையோடு வாழ வேண்டும். வேலை வாய்ப்பு இருக்க வேண்டும் அதற்கு ஒரே நம்பிக்கை மோடிஜி தான்.‌ நான் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்தவள்.

உழைப்பு மட்டுமே என் வாழ்வில் எனக்கு துரோகம் செய்யாதது. உழைப்பு அனைவருக்கும் பலமாக இருக்கும்.‌ சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்து கொடுத்து நீ‌ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன் என ஒரு தூண் போல் இல்லாமல் ஒரு ஆலமரமாக நிற்கிறார் அதற்கு என் குடும்பமும் பின்னால் நிற்கிறது. எனக்கு அதுதான் மிக்க மகிழ்ச்சி.

இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது அவர்தான் அவருக்கு நான் நன்றி சொல்லி கொள்கிறேன். 50 வருடமாக இந்த திராவிட கட்சிகள் என்ன செய்தது அவர்கள் குடும்பம் மட்டும் தான் உயர்ந்துள்ளது என‌ பேசினார்.

ALSO READ:  வங்கதேசத்தில் இந்து சந்யாசி கைது; இந்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

நிகழ்ச்சியில் இறுதியாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ராதிகா சரத்குமார்.

தங்களது வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என செய்தியாளர்கள் கேட்டதற்கு

கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை கொடுக்க முடியும் எல்லோரும் ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு வெற்றி வரும் என பேசினார். மக்களை கணிக்க முடியாது அவர்கள் நிச்சயம் ஒரு வெற்றியை கொடுப்பார்கள் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார்.

மேலும் இந்த தொகுதியில் செயல்படுத்த படாத திட்டங்களை தெரிந்து கொண்டோம் அதை நிச்சயம் செயல்படுத்துவோம். வீடு தண்ணீர் விட்டு அடிப்படை விஷயங்களை மக்களுக்கு கொண்டு வந்து சேர்ப்போம் என பேசினார்.

முன்னதாக அருப்புக்கோட்டை தேர்தல் அலுவலகத்திற்கு வந்த ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமாருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.