சூரியவம்சம் படம் போல் இந்த நாட்டாமை; மனைவியை எம்பி., ஆக்குவேன் என பக்க பலமாக நிற்கிறார்!

radhika sarathkumar election campaign - 2026

சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்துக் கொடுத்து, “நீ‌ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன்” என ஒரு தூண் போல் இல்லாமல் ஒரு ஆலமரமாக நிற்கிறார். அதற்கு என் குடும்பமும் பின்னால் நிற்கிறது” என்று, அருப்புக்கோட்டையில் ராதிகா சரத்குமார் பேசினார்.

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராதிகா சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராதிகா சரத்குமார் அருப்புக்கோட்டை ஆத்திபட்டி அருகே உள்ள பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சியினரின் ஆர்வத்தையும் வெறியையும் பார்க்கும் போது மிக சந்தோசமாக உள்ளது. பணியாற்றுபவர்களை மரியாதையாக நடத்தக்கூடிய கட்சி பாரதிய ஜனதா கட்சி.

ALSO READ:  தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் பெண்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும். தன்னம்பிக்கை இருக்க வேண்டும் சுயமரியாதையோடு வாழ வேண்டும். வேலை வாய்ப்பு இருக்க வேண்டும் அதற்கு ஒரே நம்பிக்கை மோடிஜி தான்.‌ நான் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்தவள்.

உழைப்பு மட்டுமே என் வாழ்வில் எனக்கு துரோகம் செய்யாதது. உழைப்பு அனைவருக்கும் பலமாக இருக்கும்.‌ சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்து கொடுத்து நீ‌ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன் என ஒரு தூண் போல் இல்லாமல் ஒரு ஆலமரமாக நிற்கிறார் அதற்கு என் குடும்பமும் பின்னால் நிற்கிறது. எனக்கு அதுதான் மிக்க மகிழ்ச்சி.

இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது அவர்தான் அவருக்கு நான் நன்றி சொல்லி கொள்கிறேன். 50 வருடமாக இந்த திராவிட கட்சிகள் என்ன செய்தது அவர்கள் குடும்பம் மட்டும் தான் உயர்ந்துள்ளது என‌ பேசினார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

நிகழ்ச்சியில் இறுதியாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ராதிகா சரத்குமார்.

தங்களது வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என செய்தியாளர்கள் கேட்டதற்கு

கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை கொடுக்க முடியும் எல்லோரும் ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு வெற்றி வரும் என பேசினார். மக்களை கணிக்க முடியாது அவர்கள் நிச்சயம் ஒரு வெற்றியை கொடுப்பார்கள் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார்.

மேலும் இந்த தொகுதியில் செயல்படுத்த படாத திட்டங்களை தெரிந்து கொண்டோம் அதை நிச்சயம் செயல்படுத்துவோம். வீடு தண்ணீர் விட்டு அடிப்படை விஷயங்களை மக்களுக்கு கொண்டு வந்து சேர்ப்போம் என பேசினார்.

முன்னதாக அருப்புக்கோட்டை தேர்தல் அலுவலகத்திற்கு வந்த ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமாருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories