கோடிகள் இருந்தால்தான் வெற்றி இங்கே… தெருக் கோடியில் இருந்தாலும் ஜெயிக்கலாம் அங்கே!

pratab - 2026

இவர் தான் பாஜக.,வின் புதிய எம்.பி., பிரதாப் சந்திர சாரங்கி! தற்போது, ஒடிஸாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக., எம்.பி.!

1955ல் ஜனவரி 4ம் தேதி மிக ஏழ்மையான பிராமணக் குடும்பத்தில் ஒடிஸாவின் பாலாசோர் நிலாகிர் அருகே கோபிநாத்புர் என்ற கிராமத்தில் பிறந்தவர். 1975ல் உத்கல் பல்கலையின் கீழுள்ள பகிர் மோகன் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவர்.

சிறுவயதில் இருந்தே மிக எளிமையான ஆன்மிக வாழ்க்கை. ஆன்மிக எண்ணம் மேலோங்க, கோல்கத்தாவில் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு அடிக்கடி சென்று வந்தார். அங்கே தாமும் ஒரு சந்யாசியாசியாக வேண்டும் என்ற தம் விருப்பத்தை அவர்களிடம் வெளிப்படுத்தினார்.

ஒருநாள் ராமகிருஷ்ண மடத்தில் இருந்து அழைப்பு வந்தது. ஓடோடிப் போய் விழுந்து வணங்கினார். இவரது பயோடேடாவை அலசினார்கள் மடத்தில். அதில் அவரது விதவைத் தாயார் இன்னமும் கவனிப்பதற்கு வேறு நபர் இன்றி வாழ்ந்து கொண்டிப்பது தெரிந்தது. அவர்கள், இவரது தாயாரை முதலில் நன்கு கவனித்துக் கொள்ளும் படி, திருப்பி அனுப்பினார்கள்.pratab chandra sarangi - 2026

கிராமத்துக்கு வந்தார். அதே எளிய ஆன்மிக வாழ்க்கை. தன் நேரத்தை சமுதாயப் பணிகளில் செலவிட்டார். கிராமத்து மக்களுக்கு தன் சேவைகளை அர்ப்பணித்தார்.

பழங்குடியின கிராமங்கள் நிறைந்த பாலாசோர் மற்றும் மாயுர்பஞ்ச் மாவட்டங்களில், கண சிக்‌ஷா மந்திர் யோஜனா என்ற திட்டத்தின்கீழ், சமர் கர கேந்த்ரா என்ற பெயர்களில் பள்ளிகள் பல தொடங்கி வைத்தார்.

பின்னாளில் பாஜக.,வில் இணைந்தார். 2004, 2009 இரு முறையும் ஒடிசா சட்டமன்றத்துக்கு தேர்வாகி எம்.எல்.ஏ.,வாக சேவை செய்தார். தொடர்ந்து கடந்த 2014 ஆம் வருடம் பாலாசோர் தொகுதியில் பாஜக., சார்பில் போட்டியிட்டார். ஆனால் தோல்வி அடைந்தார்.

தொடர்ந்து, 2019 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார். இம்முறை மக்கள் அவருக்கு அங்கீகாரம் அளித்தனர். அதே பாலாசோர் தொகுதி. பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த தற்போதைய எம்.பி., ரபீந்த்ர குமாரை 12,956 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குள் செல்கிறார்.

இவரை ஒரிசாவின் மோடி என அழைக்கிறார்கள்! காரணம் எளிய வாழ்க்கை! இந்த வயதிலும் எங்கும் சைக்கிள் பயணம். மண் சுவர் கொண்ட வீட்டில் இருந்து தில்லிக்கு பதவி ஏற்கச் செல்லும் மனிதர்.pratap 123 - 2026

பல கோடிகள் செலவு செய்தால் மட்டுமே தேர்தலில் நிற்பதற்கு சீட்டே வழங்கப் படும் என்ற நிலை இருக்கும் தமிழகம் எங்கே…! தெருக்கோடியில் இருந்தாலும் ஓர் ஏழை மனிதனை எம்.பி.யாக்கி அனுப்பி வைக்கும் ஒடிஸா எங்கே..?!

சாதாரண பெட்டி மற்றும் சில வேஷ்டிகளுடன் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி உள்ளது பாஜக! குறிப்பாக, ஒடிஸாவின் அறிவும் உணர்வும் சேர்ந்த வாக்காளர்கள்!

பிரதாப் சந்திர சாரங்கி, தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில்… இருந்து! 

pratab chandra sarangi affidavit - 2026

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories