கோடிகள் இருந்தால்தான் வெற்றி இங்கே… தெருக் கோடியில் இருந்தாலும் ஜெயிக்கலாம் அங்கே!

pratab - 2026

இவர் தான் பாஜக.,வின் புதிய எம்.பி., பிரதாப் சந்திர சாரங்கி! தற்போது, ஒடிஸாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக., எம்.பி.!

1955ல் ஜனவரி 4ம் தேதி மிக ஏழ்மையான பிராமணக் குடும்பத்தில் ஒடிஸாவின் பாலாசோர் நிலாகிர் அருகே கோபிநாத்புர் என்ற கிராமத்தில் பிறந்தவர். 1975ல் உத்கல் பல்கலையின் கீழுள்ள பகிர் மோகன் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவர்.

சிறுவயதில் இருந்தே மிக எளிமையான ஆன்மிக வாழ்க்கை. ஆன்மிக எண்ணம் மேலோங்க, கோல்கத்தாவில் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு அடிக்கடி சென்று வந்தார். அங்கே தாமும் ஒரு சந்யாசியாசியாக வேண்டும் என்ற தம் விருப்பத்தை அவர்களிடம் வெளிப்படுத்தினார்.

ஒருநாள் ராமகிருஷ்ண மடத்தில் இருந்து அழைப்பு வந்தது. ஓடோடிப் போய் விழுந்து வணங்கினார். இவரது பயோடேடாவை அலசினார்கள் மடத்தில். அதில் அவரது விதவைத் தாயார் இன்னமும் கவனிப்பதற்கு வேறு நபர் இன்றி வாழ்ந்து கொண்டிப்பது தெரிந்தது. அவர்கள், இவரது தாயாரை முதலில் நன்கு கவனித்துக் கொள்ளும் படி, திருப்பி அனுப்பினார்கள்.pratab chandra sarangi - 2026

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

கிராமத்துக்கு வந்தார். அதே எளிய ஆன்மிக வாழ்க்கை. தன் நேரத்தை சமுதாயப் பணிகளில் செலவிட்டார். கிராமத்து மக்களுக்கு தன் சேவைகளை அர்ப்பணித்தார்.

பழங்குடியின கிராமங்கள் நிறைந்த பாலாசோர் மற்றும் மாயுர்பஞ்ச் மாவட்டங்களில், கண சிக்‌ஷா மந்திர் யோஜனா என்ற திட்டத்தின்கீழ், சமர் கர கேந்த்ரா என்ற பெயர்களில் பள்ளிகள் பல தொடங்கி வைத்தார்.

பின்னாளில் பாஜக.,வில் இணைந்தார். 2004, 2009 இரு முறையும் ஒடிசா சட்டமன்றத்துக்கு தேர்வாகி எம்.எல்.ஏ.,வாக சேவை செய்தார். தொடர்ந்து கடந்த 2014 ஆம் வருடம் பாலாசோர் தொகுதியில் பாஜக., சார்பில் போட்டியிட்டார். ஆனால் தோல்வி அடைந்தார்.

தொடர்ந்து, 2019 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார். இம்முறை மக்கள் அவருக்கு அங்கீகாரம் அளித்தனர். அதே பாலாசோர் தொகுதி. பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த தற்போதைய எம்.பி., ரபீந்த்ர குமாரை 12,956 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குள் செல்கிறார்.

இவரை ஒரிசாவின் மோடி என அழைக்கிறார்கள்! காரணம் எளிய வாழ்க்கை! இந்த வயதிலும் எங்கும் சைக்கிள் பயணம். மண் சுவர் கொண்ட வீட்டில் இருந்து தில்லிக்கு பதவி ஏற்கச் செல்லும் மனிதர்.pratap 123 - 2026

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

பல கோடிகள் செலவு செய்தால் மட்டுமே தேர்தலில் நிற்பதற்கு சீட்டே வழங்கப் படும் என்ற நிலை இருக்கும் தமிழகம் எங்கே…! தெருக்கோடியில் இருந்தாலும் ஓர் ஏழை மனிதனை எம்.பி.யாக்கி அனுப்பி வைக்கும் ஒடிஸா எங்கே..?!

சாதாரண பெட்டி மற்றும் சில வேஷ்டிகளுடன் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி உள்ளது பாஜக! குறிப்பாக, ஒடிஸாவின் அறிவும் உணர்வும் சேர்ந்த வாக்காளர்கள்!

பிரதாப் சந்திர சாரங்கி, தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில்… இருந்து! 

pratab chandra sarangi affidavit - 2026

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories