போலி பலாத்கார வழக்கில், பணம் பறித்த பிரபல யூ-டியூபர் கைது..

1022116 ytnpa - 2026

ரூ.80 லட்சம் வரை மிரட்டி பறித்த போலி பலாத்கார வழக்கில், டெல்லியை சேர்ந்த பிரபல யூ-டியூபர் நம்ரா காதிர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

டெல்லி ஷாலிமார் பாக் பகுதியை சேர்ந்த பிரபல யூ-டியூபர் நம்ரா காதிர் (வயது 22). இவரது கணவர் மணீஷ் என்ற விராட் பெனிவால். நம்ரா யூ-டியூப்பில் வீடியோக்களை பகிர்வது வழக்கம். இவருக்கு 6.17 லட்சம் பின்தொடர்வோர் உள்ளனர். இந்த நிலையில், பாட்ஷாப்பூர் பகுதியை சேர்ந்த தனியார் விளம்பர நிறுவன உரிமையாளரான தினேஷ் யாதவ் (வயது 21) என்ற வாலிபர், நம்ரா மீது மிரட்டி பணம் பறித்தல் புகாரை போலீசில் அளித்து உள்ளார். இதன்படி, போலீசார் விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. தினேஷ் சில மாதங்களுக்கு முன்பு நம்ராவை ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டுள்ளார். நம்ராவுடன் பெனிவாலும் இருந்துள்ளார். நம்ராவின் சேனலில் தனது விளம்பர நிறுவனம் பற்றி விளம்பரப்படுத்த வேண்டும் என தினேஷ் கேட்டுள்ளார். அதற்கு நம்ரா ரூ.2 லட்சம் தரும்படி கூறியுள்ளார். அதன்படி, தினேசும் கொடுத்துள்ளார். பின்பு, நம்ரா ரூ.50 ஆயிரம் கேட்டு வாங்கியுள்ளார்.

ஒரு சில நாள் சென்ற பின்னர், விளம்பர வேலை எதுவும் நடைபெறாத நிலையில், நம்ராவிடம் தினேஷ் அதுபற்றி கேட்டுள்ளார். ஆனால், அதற்கு நம்ரா, தினேசை விரும்புகிறேன் என்றும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார். இதன்பின்னர், அவர்கள் நண்பர்களானார்கள் என புகாரில் கூறப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்டில், நம்ரா காதிர் மற்றும் மணீஷ் உடன் சேர்ந்து தினேஷ் கிளப் ஒன்றில் விருந்தில் பங்கேற்க சென்றுள்ளார். இரவில் அறை எடுத்து தங்கியுள்ளனர். மறுநாள் காலையில், எழுந்த தினேஷிடம் அவரது வங்கி அட்டைகள் மற்றும் கைக்கெடிகாரம் உள்ளிட்டவற்றை நம்ரா கேட்டுள்ளார். தராவிட்டால் போலியான பலாத்கார வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் தினேஷ் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், தொடர்ந்து மிரட்டி ரூ.80 லட்சத்திற்கும் கூடுதலாக பணம் மற்றும் பரிசு பொருட்களை தினேஷிடம் இருந்து நம்ரா கறந்துள்ளார். ஒரு கட்டத்தில், ரூ.5 லட்சம் தொகையை தனது தந்தையின் வங்கி கணக்கில் இருந்து தினேஷ் எடுத்துள்ளார். அவ்வளவு பணம் எதற்கு என தினேஷின் தந்தை கேட்டதும், உண்மையை தெரிவித்து உள்ளார். இதன்பின் அவர் என்னை போலீசில் புகார் அளிக்க அழைத்து சென்றார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் நம்ராவை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை வருகிற வெள்ளி கிழமை வரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்துகின்றனர். தப்பியோடிய மணீஷை போலீசார் தேடி வருகின்றனர். ரூ.80 லட்சம் பணம், பரிசு பொருட்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories