புனலூர் -இடமன், பகவதிபுரம்-விருதுநகர் மின் ரயில் சோதனை ஓட்டம் முடிந்தது…

IMG 20230329 WA0073 - 2026
#image_title

புனலூர் -இடமன், பகவதிபுரம்-செங்கோட்டை-ராஜபாளையம்-விருதுநகர் மின்மயமாக்கல் ரயில் சோதனை ஓட்டம் முடிந்தது .

விருதுநகர் – ராஜபாளையம் – தென்காசி – செங்கோட்டை – பகவதிபுரம் & இடமன் – புனலூர் இடையே ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.
இதற்கான மின்சார இன்சின் பொருத்திய ரயில் சோதனை ஓட்டம் இன்று மாலை கேரளாவில் புனலூர் இடமன் இடையேயும் தமிழ்நாட்டில் பகவதிபுரம் – விருதுநகர் இடையேயும் தெற்கு ரயில்வே முதன்மை மின் பொறியாளர் திரு .சித்தார்த்தா , மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் அதிகாரிகள் குழுவுடன் இணைந்து நடத்தப்பட்டது.

இதன் முதல் அங்கமாக இன்று காலை விருதுநகரிலிருந்து டீசல் இன்சினால் இயக்கப்பட்ட சிறப்பு சோதனை ரயில் ஆங்காங்கே ரயில் நிலையங்களிலும் பிற இடங்களிலும் நிறுத்தப்பட்டு சித்தார்த்தா ஆனந்த் குழுவினர் சார்பில் மின் இணைப்பு சோதனைகள் நடத்தப்பட்டன.

IMG 20230329 WA0021 - 2026
#image_title

இலஞ்சி – மதுரை சாலை ரயில் கேட்டில் சோதனையை முடித்த பிறகு இந்த ரயில் பகல் 12.13க்கு செங்கோட்டை ரயில் நிலையத்தின் இரண்டாம் நடைமேடையை வந்தடைந்தது.

ரயிலில் இருந்து ஆய்விற்கு இறங்கிய முதன்மை மின் பொறியாளரையும் மதுரை கோட்ட மேலாளரையும் வரவேற்றனர்.

இந்த சிறப்பு ரயில் 12.19க்கு
செங்கோட்டையிலிருந்து (பகவதிபுரம் ஆரியங்காவு தென்மலை இடமன் வழி)புனலூருக்கு புறப்பட்டு
சென்றது.

புனலூர் முதல் இடமண்‌வரை மின்சார இன்ஜின் மூலம் ரயில் தண்டவாளத்தில் ஆய்வும்‌ மின் சப்ளை மற்றும் மின் போல்களின் தரம் உட்பட பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு ரயில் பகவதிபுரம் வந்தடைந்தது.

இன்று மாலை 6.30 மணி அளவில் பகவதிபுரத்தில் இருந்து விருதுநகர் வரை மின்சார இன்சின் பொருத்திய சிறப்பு ரயில் சோதனை ஓட்டம் முதன்மை தலைமை மின் பொறியாளர் திரு.சித்தார்த்தா & மதுரை கோட்ட மேலாளர் திருஆனந்த் மற்றும் அதிகாரிகளால் துவக்கப்பட்டு விருதுநகர் வரை ஆய்வுகளை நடத்தினர்.

தற்போது ராஜபாளையம் சோழபுரத்தில் மின் உபநிலைய பணிகள் இறுதியாக நடந்து வருவதால் விருதுநகர் உப மின்நிலையம் மூலம் மின் சப்ளை விருதுநகர் தென்காசி வழியில் கிடைக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories