தனியார் ஆம்னி பேருந்து திடீர் தீ விபத்து-உயிர் தப்பிய பயணிகள்..

IMG 20230402 WA0031 - 2026
#image_title

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் ஆம்னி பேருந்து திடீர் தீ விபத்து ஏற்பட்டு பேருந்து முற்றிலும் எரிந்து சேதமானது.அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் ஆம்னி பேருந்து வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு வழக்கம்போல் களியக்காவிளையிலிருந்து கோவைக்கு கிளம்பியது. இந்த ஆம்னி பேருந்து ஒட்டுநர் இராம்நாடு பகுதியை சேர்ந்த அகிலன் (44) மற்றும் நடத்துனர் களியக்காவிளையை சேர்ந்த விவண்(35) ஆகும்.

இவர்கள் 14 பயணிகள் உட்பட பேருந்தினை ஓட்டிக் கொண்டு சாத்தூர் வழியாக வரும்போது பைபாஸ் பாலத்தின் மீது ஏறிய சமயம் பேருந்தில் திடீரென பலத்த வெடி சத்தம் கேட்டது. இதனை அடுத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பேருந்தினை நிறுத்திவிட்டு இறங்கி சோதனை செய்து பார்த்தனர்.

அப்போது பேருந்தில் இருந்த டீசல் டேங்க் அருகே புகை வந்தது. பின்னர் பேருந்து மள மளவெண தீப்பற்றியது. உடனடியாக ஒட்டுநர் மற்றும் நடத்துனர் பயணிகளை அவசர அவசரமாக இறக்கினர். அதிக அளவிலான தீ பேருந்து முழுவதும் பற்றியது. இதில் பயணிகளின் உடைமைகள் மற்றும் பேருந்து முற்றிலும் தீப்பற்றியது. துரிதமாக செயல்பட்டு பயணிகளை இறக்கியதால் 14 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

ஆம்னி பேருந்து தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் டவுன் போலீசார் சாத்தூர் தீயணைப்பு துறையினரை வரவழைத்தனர். விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ALSO READ:  மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

எனினும் ஆம்னி பேருந்து முற்றிலும் எரிந்து கருகியது. டவுன் போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தினால் போக்குவரத்தை மாற்றி அமைத்ததுடன் பயணிகளை பாதுகாப்பான முறையில் பத்திரப்படுத்தி மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் ஆம்னி பேருந்து தீ பற்றியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் இருந்தது.

போலீசார் போக்குவரத்தை மாற்றிய பின்னர் போக்குவரத்து சரியானது. மேலும் விபத்து குறித்து சாத்தூர் டவுண் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Topics

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

முன்பெல்லாம், அனேகமாக, எல்லோரும் பிரிவினை பேசுவார்கள். இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. பிரிவினைவாதத்தை எதிர்த்து பேசாமல் இருக்க காரணம் பிரிவினைவாதிகளிடம் இருக்கும் துப்பாக்கிதான். தேசியம், தேசபக்தி வளர்ந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் யாரும் சீனாவுடனோ பங்களாதேஷுடனோ இணைவதை விரும்பவில்லை

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

மோடி அரசு வந்த பிறகு மக்கள் மாறி வருகிறார்கள். பக்கத்து நாட்டில் இருந்து சட்ட விரோதமாக குடியேறும் முஸ்லிம்கள் பிரச்சனை வளர்ந்து வருகிறது. சர்சுகளும் இப்போது அந்த பிரச்சினையை பேச தொடங்கியுள்ளன. தேசபக்தி வளர்த்து வருகிறது. இந்துத்துவம் வளர்ந்து வருகிறது மேகாலயாவில். இது தெளிவாகத் தெரிகிறது.

Entertainment News

Popular Categories