
சதுரகிரி திருவிழாவிற்கு அனுமதி கோரி 500க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராமமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி மலையில் ஆனந்தவல்லி அம்மன் கோயில் நவராத்திரி திருவிழா வரும் 15 தேதி துவங்கி 10 நாள் திருவிழா நடைபெற உள்ள நிலையில்
கடைசி மூன்று நாட்கள் இரவில் தங்கி திருவிழாவை நடத்த கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி தர வேண்டும், மேலும் ஒரு ஊருக்கு 50 பேர் வீதம் மொத்தம் ஏழு ஊரு மக்களுக்கு மொத்தம் 350 பேர் தங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுந்தரபாண்டியம் ஏழூர் சாலியர் சமூகத்தினர் அப்பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டடுள்ளனர். இந்தநிலையில்
10 நாள் திருவிழாவில் கடைசி மூன்று நாட்கள் மட்டுமே அனுமதி எனவும், இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும், வனத்துறை தெரிவித்துள்ளது.