December 5, 2025, 9:00 PM
26.6 C
Chennai

5வது முறையாக கோயில் உண்டியலைக் கொள்ளை அடித்தவர்கள்! சிசிடிவி., காட்சிகளால் அதிர்ச்சி!

temple hundi roberry - 2025
#image_title

சோழவந்தான் அருகே மேட்டு நீரேத்தான் கிராமம் துர்க்கை அம்மன் கோவிலில், ஐந்தாவது முறையாக கோவில் உண்டியலை உடைத்து முகமூடிக் கொள்ளையர்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் சிசிடிவி காட்சிகள்;
போலீசார் விசாரணை !

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேட்டு நீரேத்தான் கிராமத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், நேற்றைய முன் தினம் நடு இரவில் மர்ம நபர்கள் இருவர் கோயிலுக்குள் புகுந்தனர். இதில், ஒருவர் கருப்புத் துணியால் முகத்தை மூடிக்கொண்டு வந்திருந்தார். மற்றொருவர் கோவிலில் இருந்த மஞ்சள் சேலையை கிழித்து முகத்தில் அடையாளம் தெரியாதவாறு கட்டியிருந்தார். இருவரும் சேர்ந்து உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, சோழவந்தான் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இக்கோவிலில், ஐந்தாவது முறையாக உண்டியல் திருட்டு மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலில் சாமி கும்பிடுவதில் இரு பிரிவினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இக்கோவிலில் திருவிழா நடைபெறவில்லை இரு தரப்பினரையும் வருவாய்த்துறை மற்றும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், சமரசம் ஏற்படவில்லை இதனால், துர்க்கை அம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு நடந்திருப்பதை யார் புகார் கொடுப்பது என்று கேள்விக்குறியாக இருப்பதால், நேற்று இரவு வரை சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர் .
இரு பிரிவினரும் கருத்து வேறுபாட்டால் சாமி கும்பிடாததால் இதை சாதகமாக பயன்படுத்தி உண்டியலில் அதிகமாக பணம் இருக்கும் என்று உண்டியலை திருடி சென்று விட்டார்கள் என்று இப்பகுதி பக்தர்கள் கூறுகின்றனர் .
மேலும், இக்கோவிலில் முகூர்த்த காலங்களில் திருமண விழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஆகையால், பெண்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐந்து முறை கொள்ளை சம்பவம் நடந்தும் இதுவரை கொள்ளையர்களை காவல்துறையினர் பிடிக்காததால் , மக்கள் ஒருவித அச்சத்துடன் உள்ளனர் .

கொள்ளை சம்பவம் நடக்கும் போது பக்தர்கள் யாரேனும் கோவிலுக்குள் வந்திருந்தால் கொலை நடந்திருக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் பொதுமக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர் . ஆகையால், இக்கோவில் அருகில் ரோந்து பணியை அதிகரிக்கவும் புற காவல் நிலையம் ஒன்று அமைக்கவும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories