தரமில்லாத பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கி ஏமாற வேண்டாம் : தமிழக அரசு முதன்மை செயலாளர் அறிவுரை

Published:

ஈரோடு மாவட்ட நுகர்வோர் மையம் சார்பில் நுகர்வோர் காவலன் வெள்ளி விழா ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடந்தது. நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் எஸ்.கே.எம் மயிலானந்தன் வரவேற்றார்.

விழாவில் தமிழக அரசின் முதன்மை செயலர் மற்றும் உணவு மற்றம் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் கோபாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். விழா மலரை முதன்மை செயலர் கோபால கிருஷ்ணன் வெளியிட அதை ஆட்சியர் பெற்று கொண்டார்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யவும் சில மாற்றம் கொண்டு வரவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தங்களது ஆலோசனைகளை பொதுமக்கள் இணையதளம் மூலம் தெரிவிக்கலாம்.

பொதுமக்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வை வாட்ஸ் ஆப் போன்ற தொழில் நுட்பங்கள்மூலம், தெரிவிக்கலாம். சமீப காலமாக இணையதளம் மூலம் பொதுமக்கள் பொருட்களை பதிவு செய்து வாங்குகிறார்கள். இந்த பொருட்கள் பற்றிய தரம் மற்றும் பாதுகாப்பு பற்றி நாம் தெரிந்து கொள்ள முடிவதில்லை. இதுபோல இணைய தளம் மூலம் பொருட்களை வாங்கும் போது பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

படித்தவர்கள் கூட செல்போனில் வரும் குறுந்தகவல்களை நம்பி பாங்கியில் உள்ள பணத்தை ஏமாறும் நிலை உள்ளது. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ஏமாற்றுபவர்களிடம் இருந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அரசு முதன்மை செயலாளர் அறிவுரை கூறினார்.

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img