December 6, 2025, 3:28 AM
24.9 C
Chennai

நாட்டின் பிரதமரை விடவா நீங்கள் உயர்ந்தவர்கள்?! ஊடகத்தினரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

anbumani ramadoss 2 - 2025

தேமுதிக., திமுக., இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையை அடுத்து, தேமுதிக., பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பை இன்று நடத்தினார்.

ஆனால், அவரை பேச விடாமலும், திமுக.,, கட்சியைச் சேர்ந்த இரு ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்களும் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி, பிரேமலதா விஜயகாந்தை கோபப் பட வைத்தார்கள். இதனால் கடுப்பான அவர், தொடர்ந்து அனைத்து செய்தியாளர்களையும் நீ, வா, போ என மரியாதைக் குறைவாக ஒருமையில் அழைத்தார்.

மேலும், எங்க அலுவலக கேட்டுவாசல்ல காத்துக் கிடக்குறாங்கன்றதுக்காக நீங்க எதிர்பார்க்குற நேரத்துல, நீங்க நினைக்கிற   போதெல்லாம் நாங்க செய்திய தரமுடியுமா? நாங்க எப்ப எந்த முடிவு எடுக்கிறோமோ அப்பதான் கொடுக்க முடியும் என்றார்.

தங்களை கேட்டு வாசலில் காத்துக் கிடப்பவர்கள் என்று பிரேமலதா சொன்னது, செய்தியாளர்களை உசுப்பேற்றியது. தொடர்ந்து தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தார்கள். ஒருமித்த குரலில் கூச்சலிட்டு, பிரேமலதா மன்னிப்பு கேட்கவேண்டும் என்றார்கள்.

இது போல் அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டியும் மிக காரசாரமாக இருந்தது. அதிலும், ஊடகத்தைச் சேர்ந்த ஓரிருவர் செய்த அலம்பல்கள் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களுக்கே மோசமான பெயரைப் பெற்றுத் தந்தது.

இது இப்படி இருக்க, இன்னொரு தகவல் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.

இப்போதெல்லாம் பிரதம மந்திரி நரேந்திர மோடியை வெறுமே மோடி மோடி என்றுதான் மேடைகளிலும் பத்திரிகைகளிலும் டிவியிலும் உச்சரிக்கிறார்கள்.

ஆனால் இதற்கு முன் கருணாநிதியையோ ஜெயலலிதாவையோ இதுபோல் வெறும் பெயர் சொல்லி உச்சரித்து விட முடிந்த தில்லையே!

கலைஞர் டாக்டர் கருணாநிதி என்றோ அல்லது கலைஞர் என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்று ஒரு பயமுறுத்தல் இருந்தது.

அதேபோல் செல்வி ஜெயலலிதா என்றோ இன்னும் போகப்போக அம்மா என்றோ குறிப்பிட வேண்டும் என்றும் எச்சரிக்கை இருந்ததல்லவா?

அப்படி எனில் ஊடகத்தினருக்கு ஒரு நாட்டின் பிரதமர் என்றால் இளக்காரமாகப் போய் விட்டதா?! பிரதமர் மோடி என்றோ, அல்லது முழுப் பெயரைச் சொல்லியோ ஏன் அவர்கள் அழைப்பதில்லை!

ஒரு நாட்டின் பிரதமரை கேவலமாகவும், மிக மோசமாகவும் தரம் தாழ்ந்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சிக்கும் போது இது பற்றி ஏன் அவர்கள் சுட்டிக் காட்டுவதில்லை.

குறிப்பாக வைகோ போன்ற பச்சோந்திகளுக்கு பத்திரிகையாளர்கள் ஏன் அச்சப் படுகிறார்கள்?! தங்களைக் குறித்து வைகோ தங்கள் ஊடக முதலாளியிடமே போட்டுக் கொடுத்துவிடுவார், நேரடியாகப் பேசி வத்தி வைத்து விடுவார் என்ற பயம் தானே!

அதையெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்காதவர்கள், தங்களை ஒரு பெண்மணி ஒருமையில் அழைக்கிறார் என்பதற்காக கோவம் கொள்வது முரணாக இல்லையா?! – என்று கேள்வி எழுப்புகிறார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories