நாட்டுக்கு நல்லது! காணாமலே போகும் கம்யூனிஸ்ட் கட்சிகள்!

kannur communist - 2026

எங்கே போனார்கள் இந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.ராஜா

கடந்த ஐந்து ஆண்டுகளில் காங்கிரஸ், மாநில கட்சிகளுடன் சேர்ந்து பாராளுமன்றத்தில் பேசியவர்கள் மற்றும் ஊடகங்களில் மற்றும் பத்திரிக்கைகளில் அதிக அளவில் பேசியவர்களை காணவில்லை…

ஏதாவது ஒரு மாநிலத்தில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை.

விதிவிலக்கு தமிழகத்தில் மட்டும் திமுக கூட்டணியில் 4 இடங்கள் தரப்பட்டுள்ளது.

2004 ல் 60 எம்பிக்கள், ஆனால்
2014 ல் 10 எம்பிக்கள், மார்க்சிஸ்ட் 9 + இந்திய கம்யூனிஸ்ட் 1

2019 ல் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கும் இடம் தெரியவில்லை…

மேற்கு வங்கத்தில்… 30 ஆண்டுகளா ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சி படு வீழ்ச்சி அடைந்து விட்டது…

7 அல்லது 8 இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்றும், அதே போல காங்கிரஸ் போட்டியிடும் சில இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுவது என்று சீதாராம் யெச்சூரி கடுமையாக முயன்று தோல்வி அடைந்தார். இவருடைய கோரிக்கையை ராகுல் காந்தி நிராகரித்து விட்டார்…

பீகாரில்… கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கூட்டணியில் தர முடியாது என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்து உள்ளார். மேலும் துக்கடே துக்கடே கன்கய்ய குமார் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவு தர முடியாது என்று கூறியுள்ளார்.
கம்யூனிஸ்ட் தனித்து போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில்… லட்சக்கணக்கில் விவசாயிகள் பேரணி நடத்தி மிகப்பெரிய போராட்டம் நடத்தியது கம்யூனிஸ்ட் கட்சிகள்…

ஒரு இடம் கூட இந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்க முடியாது என்று சரத் பவார் கூறி விரட்டி விட்டார்…

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஹாஜரிபாக் தொகுதி கூட தரமுடியாது என்று காங்கிரஸ் கட்சி கையை விரித்து விட்டது.

உபியில், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று காங்கிரஸ், மாயாவதி, அகிலேஷ் கூறி விட்டார்கள்…

JNU பல்கலைக்கழக வளாகத்தில் காஷ்மீர் விடுதலை என்று கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாணவர்கள் சங்கம் போராட்டம் நடத்தியது. சீதாராம் யெச்சூரி, ராஜா, ராகுல் காந்தி எல்லாம் அங்கே வந்து ஆதரவு தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைக்க தயாராக இல்லை…

கேரளா… கம்யூனிஸ்ட் கட்சியின் கடைசி கோட்டையும் வீழ்ச்சி அடைந்து விட்டது. அராஜகம், படுகொலை மற்றும் ஐயப்பன் பக்தர்களை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டதால், 3 அல்லது 4 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியாது என்ற சூழ்நிலையை மார்க்சிஸ்ட் கட்சி உருவாக்கி உள்ளது.

திரிபுராவில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் போய் விட்டது. அந்த நிலையை நோக்கி கேரள மார்க்சிஸ்ட் கட்சி பயணம் செய்கிறது…

பரப்பரப்பான நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எங்கே இருக்கிறார்கள் என்று யாராவது சொன்னால் தான் தெரியும் என்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது…

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜாவை காணவில்லை…

எந்த ஊடகங்களிலும் இந்த இருவரையும் காணவில்லை… காணாமல் போய் விட்டது இந்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள்… இனிமேல் இவர்கள் சுய பரிசோதனை செய்ய கால அவகாசம் கூட இல்லை…!

இந்திய ஜனநாயக அரசியலில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது அடையாளத்தை முற்றிலுமாக தொலைத்து விட்டார்கள்….

  • உஷா சங்கர் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories