நாட்டுக்கு நல்லது! காணாமலே போகும் கம்யூனிஸ்ட் கட்சிகள்!

kannur communist - 2026

எங்கே போனார்கள் இந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.ராஜா

கடந்த ஐந்து ஆண்டுகளில் காங்கிரஸ், மாநில கட்சிகளுடன் சேர்ந்து பாராளுமன்றத்தில் பேசியவர்கள் மற்றும் ஊடகங்களில் மற்றும் பத்திரிக்கைகளில் அதிக அளவில் பேசியவர்களை காணவில்லை…

ஏதாவது ஒரு மாநிலத்தில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை.

விதிவிலக்கு தமிழகத்தில் மட்டும் திமுக கூட்டணியில் 4 இடங்கள் தரப்பட்டுள்ளது.

2004 ல் 60 எம்பிக்கள், ஆனால்
2014 ல் 10 எம்பிக்கள், மார்க்சிஸ்ட் 9 + இந்திய கம்யூனிஸ்ட் 1

2019 ல் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கும் இடம் தெரியவில்லை…

மேற்கு வங்கத்தில்… 30 ஆண்டுகளா ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சி படு வீழ்ச்சி அடைந்து விட்டது…

7 அல்லது 8 இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்றும், அதே போல காங்கிரஸ் போட்டியிடும் சில இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுவது என்று சீதாராம் யெச்சூரி கடுமையாக முயன்று தோல்வி அடைந்தார். இவருடைய கோரிக்கையை ராகுல் காந்தி நிராகரித்து விட்டார்…

பீகாரில்… கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கூட்டணியில் தர முடியாது என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்து உள்ளார். மேலும் துக்கடே துக்கடே கன்கய்ய குமார் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவு தர முடியாது என்று கூறியுள்ளார்.
கம்யூனிஸ்ட் தனித்து போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில்… லட்சக்கணக்கில் விவசாயிகள் பேரணி நடத்தி மிகப்பெரிய போராட்டம் நடத்தியது கம்யூனிஸ்ட் கட்சிகள்…

ஒரு இடம் கூட இந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்க முடியாது என்று சரத் பவார் கூறி விரட்டி விட்டார்…

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஹாஜரிபாக் தொகுதி கூட தரமுடியாது என்று காங்கிரஸ் கட்சி கையை விரித்து விட்டது.

உபியில், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று காங்கிரஸ், மாயாவதி, அகிலேஷ் கூறி விட்டார்கள்…

JNU பல்கலைக்கழக வளாகத்தில் காஷ்மீர் விடுதலை என்று கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாணவர்கள் சங்கம் போராட்டம் நடத்தியது. சீதாராம் யெச்சூரி, ராஜா, ராகுல் காந்தி எல்லாம் அங்கே வந்து ஆதரவு தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைக்க தயாராக இல்லை…

கேரளா… கம்யூனிஸ்ட் கட்சியின் கடைசி கோட்டையும் வீழ்ச்சி அடைந்து விட்டது. அராஜகம், படுகொலை மற்றும் ஐயப்பன் பக்தர்களை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டதால், 3 அல்லது 4 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியாது என்ற சூழ்நிலையை மார்க்சிஸ்ட் கட்சி உருவாக்கி உள்ளது.

திரிபுராவில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் போய் விட்டது. அந்த நிலையை நோக்கி கேரள மார்க்சிஸ்ட் கட்சி பயணம் செய்கிறது…

பரப்பரப்பான நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எங்கே இருக்கிறார்கள் என்று யாராவது சொன்னால் தான் தெரியும் என்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது…

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜாவை காணவில்லை…

எந்த ஊடகங்களிலும் இந்த இருவரையும் காணவில்லை… காணாமல் போய் விட்டது இந்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள்… இனிமேல் இவர்கள் சுய பரிசோதனை செய்ய கால அவகாசம் கூட இல்லை…!

இந்திய ஜனநாயக அரசியலில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது அடையாளத்தை முற்றிலுமாக தொலைத்து விட்டார்கள்….

  • உஷா சங்கர் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories