பிற மதத்தவர் ஊருக்குள் பிரசாரம் செய்ய அனுமதியில்லை! ஸ்ட்ரிக்ட் கிராமம்!

anannadarpatti1 - 2026

நெல்லை மாவட்டத்தின் கிராமமான அணைந்தநாடார் பட்டியில் வைக்கப் பட்டுள்ள இந்த பெயர்ப் பலகை இப்போது இணையத்தில் ஹிட் அடித்திருக்கிறது.

இந்துவாகப் பிறந்தோம்! இந்துவாகவே வாழ்வோம்! பிற மதத்தினர் ஊருக்குள் பிரசாரம் செய்ய அனுமதியில்லை! இவண் ஊர் பொதுமக்கள் அணைந்தநாடார்பட்டி – என்று எழுதப் பட்ட வாசகங்களுடன் உள்ள பெயர்ப் பலகை இப்போது இணையத்தில் அதிகம் வலம் வருகிறது.

இதே போல் நெல்லை மாவட்டத்தின் சில ஊர்களிலும் பெயர்ப் பலகைகளை வைத்து, வேற்று மதத்தினர் மதப் பிரசாரம் செய்ய ஊருக்குள் அனுமதி இல்லை என்று ஊரில் உள்ள இந்து மக்கள் சார்பில் வைத்திருக்கிறார்கள்.

கடந்த இரு நூற்றாண்டுகளாகவே, குமரி மாவட்டத்திலும் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்திலும் கிறிஸ்துவ இஸ்லாமிய மதப் பிரசாரம், கட்டாய மதமாற்றங்கள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இது பொதுமக்களிடையே அமைதியின்மையைத் தோற்றுவித்து, மத மோதல்களுக்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக, நெல்லை, குமரி மாவட்டத்தில், நாடார் சமூக மக்களிடையே கிறிஸ்துவ மதமாற்றத்தின் தாக்கம் அதிகம் காணப் படுகிறது. அதன் காரணத்தாலேயே இந்து நாடார், கிறிஸ்துவ நாடார் என்று தங்களுக்குள் மதம் மாறிய பின்னும் பிரிவுகளை வைத்துக் கொண்டு, தகராறுகளில் ஈடுபடுவதாகக் கூறப் படுகிறது.anannadarpatti - 2026

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

தங்கள் பகுதியில் வந்து மதப் பிரசாரம் செய்து தங்கள் தெய்வங்களை இழிவாகப் பேசுவதும் நோட்டீஸ் அடித்துக் கொடுப்பதுமாக கிறிஸ்துவ மிஷனரிகள் ஈடுபடும்போது பொறுமை இழக்கும் பொதுமக்கள் அவர்களுடன் தகராறில் ஈடுபடுவதும், அதைத் தொடர்ந்து புகார்கள், வழக்குகள் என காவல் நிலையங்களுக்குச் செல்வதுமாக ஆகிவிடுகிறது. அவரவர் போக்கில் அமைதியாகச் சென்று கொண்டிருக்கும் இந்துக்களின் வாழ்க்கையை இவ்வாறு சீர்குலைப்பதற்காகவே மத பிரசாரகர்கள் ஊருக்குள் வருவதால் பிரச்னை ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது போன்ற செயல்களைத் தவிர்ப்பதற்காகவே வேற்று மதத்தினர் மதப் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை என்று போர்டுகள் வைத்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories