பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
டி20 உலகக் கோப்பை -சூப்பர் 8 ஆட்டங்கள் – 21 ஜூன் மற்றும் 22 ஜூன் 2024
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
சூப்பர் 8 இல் புள்ளிகள் அட்டவணை 22.06.2024 வரை
குரூப் 1
குரூப் 2
A
இந்தியா 4
அமெரிக்கா 0
B
ஆஸ்திரேலியா 2
இங்கிலாந்து 2
C
ஆஃப்கானிஸ்தான் 0
மேற்கு இந்தியத் தீவுகள் 0
D
வங்கதேசம் 0
தென் ஆப்பிரிக்கா 2
ஆஸ்திரேலியா vs வங்கதேசம்
21.06.2024 அன்று நார்த் சவுண்ட் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேசம் (140/8), ஆஸ்திரேலிய (100/2) அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி டக்வொர்த் – லூயிஸ் முறைப்படி 28 ரன் கள் வித்தியாசத்தில் வென்றது. ரசிகர்களை குஷிப்படுத்தும் அத்தனை அம்சங்களும் நிறைந்த ஆட்டம் இது. ஆட்டம் மழையால் இரண்டாவதாக ஆஸ்திரேலிய அணி ஆடும்போது 11.2 ஓவரில் நிறுத்தப்பட்டது. அதற்குள் அந்த அணியின் டேவிட் வார்னர் (35 பந்துகளில் 53 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) ட்ராவிஸ் ஹெட் (21 பந்துகளில் 31 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) கிளன் மேக்ஸ்வெல் (6 பந்துகளில் 14 ரன், ஒரு ஃபோர், ஒரு சிக்சர்) ஆகியோர் ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடினர். அதற்கு முன்னர் வங்கதேச இன்னிங்க்ஸின்போது பேட் கம்மின்ஸ் 18ஆவது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு விக்கட்டுகளையும் 20ஆவது ஓவரின் முதல் பந்தில் ஒரு விக்கட்டையும் எடுத்து ஹாட்ரிக் அடித்தார்.
மேற்கு இந்தியத் தீவுகள் vs அமெரிக்கா
21ஆம் தேதி மேற்கு இந்தியத் தீவுகள் (130/1) அமெரிக்க (128) அணிகளுக்கு இடையே ப்ரிட்ஜ்டவுனில் ஆட்டம் நடந்தது. லீக் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக ஆடிவந்த அமெரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் உண்மையான ஒரு கிரிக்கட் அணியைச் சந்தித்தது. டாஸ் வென்று முதலில் அமெரிக்க அணியை முதலில் மட்டையாடச் சொன்னது மேற்கு இந்தியத்தீவுகள் அணி. அமெரிக்க அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 128 ரன்கள் எடுத்தது. ஆனால் மேற்கு இந்தியத்தீவுகள் அணி 10.5 ஓவரில் ஒரு விக்கட் இழப்பிற்கு 130 ரன் அடித்தி ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றது.
இந்தியா vs வங்கதேசம்
இன்று 22.06.2024 அன்று நார்த் சவுண்ட் மைதானத்தில் இந்தியா (195/6) வங்கதேச (146/8) அணிகள் விளையாடின. டாஸ் வென்ற வங்கதேச அணி விநோதமாக முதலில் இந்திய அணியை மட்டையாடச் சொன்னது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் 2 பந்துகளில் 6 ரன் என குறைவான ரன் எடுத்தார். மற்ற வீரகளான ரோஹித் ஷர்மா (11 பந்துகளில் 23 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), விராட் கோலி (28 பந்துகளில் 37 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்) ரிஷப் பந்த் (24 பந்துகளில் 36 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்), ஷிவம் துபே (24 பந்துகளில் 34 ரன், 3 சிக்சர்), ஹார்திக் பாண்ட்யா (27 பந்துகளில் 50 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) சிறப்பாக ஆடி 20 ஓவரில் இந்திய அணி 5 விக்கட் இழப்பிற்கு 196 ரன் எடுக்க வைத்தனர்.
அதன் பின்னர் ஆடவந்த வங்கதேச அணி பும்ராவையும் (4 ஓவர், 13 ரன், 2 விக்கட்) குல்தீப் யாதவையும் (4 ஓவர், 19 ரன், 3 விக்கட்) சமாளிக்க முடியாமல் 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 146 ரன் எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றனர்.
போட்டி எதிர்பார்த்த முறையில் போய்க்கொண்டிருக்கிறது. சூப்பர் 8 குரூப் 1 பிரிவில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தேர்ச்சிபெறும்; குரூப் 2இல் தென் ஆப்பிரிக்காவும் மேற்கு இந்தியத் தீவுகளும் தேர்வாக வாய்ப்பிருக்கிறது.
It is 22nd June,2024. Saturday. 15.40 hrs. Venue: Narada Gana Sabha, Alwarpet,Chennai. The huge hall is filled to the brim for a 16.00 hour start to the programme. And the aisles are occupied by squatters. There are cameras in every direction ready to shoot. What the hell ( why use this expression- for nothing else would capture the occasion, you see). Is going on?
It is a sight for sore eyes. As a writer, yours truly is stunned into silence and meditative writing. The occasion: Release of the book- Ramayana Vol.1- Harper Collin’s- Rs.699/-378 pp. Author: Dushyant Sridhar. And a queue to buy books, at the entrance. Bharat Ratna M S Subbulakshmi is playing. Ramayana songs, in her mellifluous voice. And the gathering to listen/watch a galaxy of speakers. It does not happen everyday. Not even once in a blue moon. Surely , not in Chennai.
In this WhatsApp, Facebook, Instagram, Teldgram, Twitter age, reading is no longer cool. WhatsApp forwards make the faculty and syllabus, as if an University. Old, middle aged and young are in attendance. There is a sense of devotion as MS sings her iconic bajans. Prayers on the lips. Above all else, as a writer one is moved by just the event. To release a BOOK. Just a BOOK. Such a huge gathering in Chennai. And on a Saturday afternoon.
What brings them all? The author? The speakers? Subject? A mix of all of them. I pick up a copy. Sold at a discount for Rs.600/-.First look at the cover. Breathtaking. Stunning. Colorful and caltivating. A work of art. The dexterous drawings are from the mighty pen, pencil, painting of the non pareil V Keshav. He, of the cartoonist fame. This is different. Uniquely distinct for a spiritual journey of a well known epic of thousands of years vintage!
Even as one is instantly drawn to reading the book, aware of the storyline, characters et al, the show begins on the dot. Time to sit back, relax and drink the event. One is used to book releases, where friends and family make the numbers. Even a 50 seater would be too big to fill. The sense of anticipation from an eager beaver audience was unusual and fit to absorb and remember.
Well, surely I shall review the book, later. For now, just the occasion is overwhelming for a book lover, whose passion is writing. It is lovely to see such a huge crowd of all ages, for a book release! Genuinely moved? Jai Shri Ram!
In Tamil Nadu it is also albeit any official orders, Christian and government schools Hindu students have been denied not sport kum kum, sandan , sacred ashe, gopi or other spiritual signs on their forehead, do not wear bangles, no Tulasi or Rudrksha Mala, should not bedeck flowers on their plaits, no black or saffron dhoties during Iyyappa yatra penance period and son. If the government accepts the recommendations of retired High Court Judge known for his Communist leanings and atheist ideologies, the above restrictions on hindu students will become official. The report, it is learnt, silent on wearing hijab, skull cap, chain with cross or rosary.
Justice Chandru’s committee was formed after the disturbing Nanguneri incident in Tirunelveli district where two Scheduled Caste students were attacked by students from an intermediate caste.
Tamil Nadu DMK government had set up a committee to suggest measures to prevent caste-based discrimination and violence in education institutions which submitted its report to Chief Minister MK Stalin. on Tuesday (18th June). The committee was constituted in August 2023 after a brother-sister duo, belonging to the Scheduled Caste community in Tirunelveli’s Nanguneri , were assaulted by their schoolmates over caste differences.
A Class 12 Scheduled Caste student Chinnadurai, aged 17, and his younger sister, aged 14, were viciously attacked with sickles within the confines of their home on the night of 9 August 2023. The assault, carried out by three of Chinnadurai’s schoolmates, came just hours after he had lodged a complaint against them with the school headmaster, detailing their persistent harassment. The assailants belonged to a dominant caste, were apprehended by the police and charges were filed under the Scheduled Caste and Scheduled Tribes (Prevention of Atrocities) Act. It is alleged that Chinnadurai had been subjected to caste-based harassment at the government-aided school in Valliyoor. The perpetrators, belonging to the Maravar community, reportedly subjected him to humiliation, coercing him to procure cigarettes and snacks for them and subjecting him to bullying. The situation reached a stage where Chinnadurai felt compelled to share his torment with his parents and even stopped attending school a week before the horrifying attack.
After getting details from his parents, the school authorities warned the harassers and urged the victim to resume his studies, events took a sinister turn when the gang confronted Chinnadurai within the school premises, warning him of dire consequences for having reported them. Later that night, around 10:30 pm, the six accused students reportedly reached the victim’s residence, wielding sickles, and launched a brutal assault. In an attempt to shield her brother, Chinnadurai’s sister also suffered injuries.
In this background, the committee has given its report suggesting “significant” changes to eliminate caste indicators in Tamil Nadu schools. It includes banning coloured wrist threads, rings, and forehead marks – tilak that signify caste, and removing caste-related names from schools. Point 8B
states, “Students should be prohibited from wearing any coloured wristbands, rings, or forehead marks (Tilaka). They must also refrain from coming to school on bicycles painted with reference to their caste or exhibiting any caste-related sentiments. Failure to comply with these rules must result in appropriate action being taken, in addition to advising their parents or guardians.”
Interestingly, the committee suggested that an expert body or agency be appointed by the government to investigate allegations of saffronisation of education and activities that infiltrate educational institutions, hampering caste and communal harmony.
The report advises that students must not display any caste-related sentiments, including using bicycles marked with caste references. Non-compliance should result in appropriate actions and parental advisement.
State-run schools should remove terms like ‘Kallar Reclamation’ and ‘Adi Dravidar Welfare’ from their names. Private schools should be requested to drop caste appellations, with legal action considered for non-compliance, potentially through legislative changes.
The committee also recommended that students refrain from using bicycles painted with references to their caste or exhibiting any caste-related sentiments. Importantly, the committee proposed that seating arrangements of students in every classroom in all schools and colleges should be strictly based on alphabetical order.
The committee also recommends that student attendance registers omit any caste-related details. Teachers should avoid calling students by their caste or making derogatory remarks linked to caste.
To enforce these changes, the report suggests amending the Tamil Nadu Societies Registration Act, 1975, to prevent societies intending to start educational institutions from using caste-based names.
The report also calls for new legislation to promote social inclusion and eradicate caste discrimination, imposing responsibilities on students, staff, and school management, with mechanisms for supervision and penalties for non-compliance.
It says “Regarding the posting of officers from the cadre of CEOs, DEOs, BEOs, and Headmasters of high schools and higher secondary schools, guidelines must be issued concerning the non-posting of persons belonging to the dominant caste of that area”.
At the time of recruitment of teachers, it proposed that the aptitude of the teachers, as well as their attitude towards social justice issues, must be ascertained. Additionally, teachers and staff of schools and colleges must undergo compulsory orientation programs relating to social issues, caste discrimination, sexual violence, and offenses against SC/ST.”
Critics view this move as a method to divide the Hindus further based on caste and also ensure that Hindus lose their identities forever. Instead of creating awareness and empathy in children about various castes and fostering harmony, recommending such drastic and Hindu phobic measures will only lead to dividing the society further and deepening the Dravidianist ideologies in the minds of the people and destroying society.
It is pertinent to note that this retired judge also had hurled casteist slurs at Union Finance Minister Nirmala Sitharaman. In this tweet, Justice Chandru appeared to make a veiled remark about a BJP
leader, presumably Annamalai, by stating, “Like Pickle Lady (a derogatory term targeting Tamil Brahmin women), he is attempting to become a Rajya Sabha member from Karnataka.” He implied that Annamalai’s aspirations mirror those of Nirmala Sitharaman, referred to as ‘Oorka Ammaiyaar.’
Another critics says “ it is shocking. It is an Anti Hindu move as advised by Dravidar Kazhagam. Will they ban Black hijab and skull cap in TN schools? Will they ban sunnat and other religious ceremonies? Will they ban wearing Christian cross in neck chains or Rosary beads?.
In school text books, there are pictures with Muslims boys in Skull cap, girls with hizab and burka, Christian boys wearing cross on his next. But hindu boys and girls are seen without any identifications. https://newsmeter.in/h-upload/2024/06/16/374080-1000160121.webp
In the recent TNPSC group IV exam, unrelated questions like (the first two) on Christianity have kicked off controversy. What was the need for govt. job aspirants?. Will the government set its house in order first then ordering others?
Theni panchayat ward member tears the retd.hc Chandru panel report saying in 3rd std.
3 ஆம் வகுப்பு பள்ளி பாடப்புத்தகத்திலேயே மத அடையாளங்கள் இருக்கும் நிலையில், பள்ளியில் சாதிய அடையாளங்கள் இருக்கக்கூடாது என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது? தேனி ஊராட்சி குழு கூட்டத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கையை கிழித்தெரிந்த ஊராட்சி குழு துணை தலைவர்#Theni |… pic.twitter.com/AWrgbP2EH0
சர்வதேச யோகா தினம்: ஈஷா சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இலவச யோக வகுப்புகள்!
கோவையில் நடைப்பெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 21) ஈஷா சார்பில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இலவச யோக வகுப்புகள் நடைப்பெற்றது. கோவை வேளாண் பல்கலைகழக வளாகத்தில் நடைப்பெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். தமிழ்நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களும், பொதுமக்களும் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு யோகப் பயிற்சிகளை கற்றுக் கொண்டனர்.
நம் பாரத தேசத்தின் பெருமையான அம்சங்களில் ஒன்றாக விளங்கும் யோக அறிவியலை சாதி, மத, இன பேதம் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியில், தளராமல் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈஷா யோகா மையம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் மிகப்பெரிய அளவில் இலவச யோக வகுப்புகளை ஈஷா யோகா மையம் நடத்தி வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இலவச யோகா வகுப்புகளை ஈஷா யோகா மையம் நடத்தியது. இதில் கோவையில் ஆதியோகி முன்பு நடைப்பெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான CRPF வீரர்கள் கலந்து கொண்டு யோகப் பயிற்சிகளை கற்றுக் கொண்டனர். மேலும் TNAU வளாகத்தில் நடைப்பெற்ற விழாவில தமிழக ஆளுநர் திரு. R.N. ரவி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஈஷா சார்பில் சென்னையில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன. நுங்கம்பாக்கம் ரயில்வே ஆபிசர்ஸ் கிளப்பில் நடைபெற்ற விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் சென்னையில் ஆவடி விமானப்படை நிலையம், ஐஐடி மெட்ராஸ், அப்பலோ மருத்துவமனை, எஸ்.ஆர்.எம் மருந்தியல் கல்லூரி, வேல்ஸ் வித்யாஸ்ரம் உள்ளிட்ட இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன.
திருச்சி BHEL மற்றும் மதுரை யாதவா கல்லூரியிலும் இவ்வகுப்புகள் நடைப்பெற்றது. மேலும் கடலூர், புதுச்சேரி, வேலூர், சேலம், விழுப்புரம், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய பல்வேறு இடங்களில் ஈஷா சார்பில் சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு இலவச யோக வகுப்புகள் நடைப்பெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் பங்கேற்று யோகப் பயிற்சிகளை கற்றுக் கொண்டனர்.
மேலும் ஈஷாவுடன் இணைந்து PVR சினிமாஸ் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் தனது 25 திரைகளில் ஆன்லைன் மூலம் இலவச யோக வகுப்புகளை வழங்கியது. இந்த இலவச யோக வகுப்புகளில் எளிமையான அதே நேரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த உப-யோக பயிற்சிகளான யோக நமஸ்காரம், நாடி சுத்தி, சாம்பவி முத்ரா போன்ற பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டன.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 11ஆம் நாள் மண்டகப்படி விழா
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 11ஆம் நாள் மண்டக படி விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு மண்டக படிக்கு வந்து. அங்கு பால், தயிர் உள்பட 21 அபிஷேகங்கள் நடைபெற்றது.இதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கு சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.
மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சத்தியபிரகாஷ், தெற்குரதவீதி மேலரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்க தலைவர் தங்கராஜ் பிள்ளை,செயலாளர் அருணாசலம்,முன்னாள் சேர்மன் எம்கேமுருகேசன், ஆர்எம்எஸ் காலனி இன்ஜினியர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி தலைவர் அன்பு வரவேற்றார்.
மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் 500 பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். விழா குழு பொருளாளர் பாஸ்கர் என்ற ராஜசேகரன், சங்க துணை செயலாளர் பெரியசாமி, சங்க பொருளாளர், பாலசுப்பிரமணியன், முன்னாள் பொருளாளர் மணிகண்டன், நாகேந்திரன், விவசாய த்துறை மாணிக்கம், வார்டு கவுன்சிலர் ரேகா ராமச்சந்திரன், தெற்கு ரத வீதி இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் பாலு, பொருளாளர் கார்த்திக், துணைத் தலைவர் சிவா, துணைச் செயலாளர் விஜயகோபால், துணைச் செயலாளர் கருந்தேஸ்வரன், விழா குழு உறுப்பினர்கள் பார்த்திபன், காளிதாஸ், சரவணன், சண்முகம், சசிகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள், சிறப்பு நன்கொடையாளர்கள் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
முன்னாள் கவுன்சிலர்கள் தண்டபாணி, சௌந்தரபாண்டியன் ஆகியோர் நன்றி கூறினர். இரவு அம்மன் யானை வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. கேரளா இசை கலைஞர்கள் செண்டை மேளம் மற்றும்மதுரை கே ஆர் கே வழங்கும் ஸ்ரீ சப்தகிரி தெய்வீக சாமி ஆட்டம் நடந்தது.
சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் உட்பட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.
பாலமேட்டில் ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் உற்சவ விழா – பால்குடம், தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
மதுரை மாவட்டம் பாலமேடு தெற்கூர் நாயுடு உறவின்முறைக்கு தனித்து பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மூன்று நாட்கள் நடந்த இந்த திருவிழாவில் முதல் நாளில் மறவபட்டி சென்று அம்மனை அழைத்து வருதல், பூசாரி வீட்டிலிருந்து நகைப்பெட்டி தூக்கி சென்று அம்மனுக்கு கண்திறந்து நகை அலங்காரத்துடன் அம்மன் ஆலயத்திற்கு அழைத்து வருதல் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இரண்டாம் நாளில் முத்தாலம்மனுக்கு பொங்கல் வைத்து கிடாய் வெட்டி பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மூன்றாம் நாளில் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
இந்த திருவிழா ஏற்பாடுகளை தெற்கூர் நாயுடு உறவின்முறை சங்கம், இளைஞர் சங்கம் செய்திருந்தனர்.
மதுரை, எல்கேபி நகர் அரசுநடுநிலைப் பள்ளியில், சர்வதேச யோகா தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. உடற்கல்வி ஆசிரியர் சுகுமாறன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ராஜ வடிவேல் வரவேற்றார்.
யோகா பயிற்றுநர்கள் கௌஸ் பாட்ஷா, மீனாட்சி, சாந்தி, ஜெயப்பிரியா, செந்தில் ஆகியோர் யோகா செய்யும் முறை, வகைகள், கிடைக்கும் பலன் ஆகியவை குறித்து எடுத்துரைத்தனர். மேலும், தடாசனம், உட்கட்டாசனம், திரிகோண ஆசனம், பச்சிமுத்து ஆசனம், யோக முத்திரை ஆசனம், சூரிய நமஸ்காரம் முதலிய ஆசனங்களை செய்து காட்டி அதன் பலன்களை விளக்கினர்.
ஆசிரியை அனுசியா 2024 ஆம் ஆண்டின் கருப்பொருள் ‘சுய மற்றும் சமூகத்திற்கான யோகா’ எனக் கூறி நலவாழ்வு மற்றும் சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதில் யோகாவின் பங்கினை விளக்கி கூறினார்.
மாணவி பைரோஸ்பானு நன்றி கூறினார். விழாவில், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, ஆசிரியைகள் விஜயலட்சுமி, மனோன்மணி, சித்ரா, அகிலா, அம்பிகா, சாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.
காரியாபட்டியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு இலவச பயிற்சி முகாம்
உலக யோகா தினத்தை முன்னிட்டு காரியாபட்டியில் யோக பயிற்சி முகாம் நடை பெற்றது. உலக யோகா தினம் ஜூன் 21ந்தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சிவானந்தா யோகாலயம் சார்பில் ,உலக யோகா தினத்தை முன்னிட்டு, இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமினை, எஸ்.பி. எம். நிறுவன தலைவர் அழகர்சாமி தொடங்கி வைத்து பயிற்சி சாதனங்களை வழங்கினார்.
முகாமில், ஆசனம், பிரணாயாமம், தியானப் பயிற்சி போன்ற வகுப்புகள் நடைபெற்றது. முகாமில் , யோகா ஆசிரியர் ராமலிங்கம் பயிற்சி அளித்தார்.
நெல்லையப்பர் திருக்கோவில் தேரோட்டம் நான்கு வடங்களும் அறுந்து போன சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்து முன்னணி, இதற்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அலட்சியமே காரணம் என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்துமுன்னணி அமைப்பின்ன்மாநில தலைவர் காடேஸ்வரா. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆசியாவில் மிகப்பெரிய தேர்களில் ஒன்றாக கருதப்படும் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் ஆனி தேரோட்டம் இன்று காலை துவங்கியது. கலெக்டர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் தேர் வடத்தை தூக்கி இழுக்க துவங்கிய அடுத்த நொடியே மூன்று தேர் வடங்களும் அறுந்து போய் உள்ளது. அடுத்த சில நிமிடங்களில் பெண்கள் இழுத்து வந்த நான்காவது வடமும் அறுந்து போயுள்ளது.
தேர் இருப்பிடத்தை விட்டு ஒரு அடி கூட நகரும் முன்பே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நெல்லையப்பர் கோவில் தேர் வடம் 20 வருடங்கள் பழமையானதாகும். இதனை மாற்ற சொல்லி பக்தர்களும் சிவனடியார்களும் இந்துமுன்னணியும் பல வருடங்களாக நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் திருக்கோவில் நிர்வாகம் அதனை பொருட்படுத்தாமல் அலட்சியமாக செயல்பட்டுள்ளதே இந்த சம்பவத்திற்கு காரணம்.
தேர் வடம் அறுந்து விழுந்து பலர் சிறுசிறு காயங்களுடன் வீட்டுக்கு சென்றுள்ளனர். இறைவன் திருவருளால் தேர் நகரும் முன்பே வடம் அறுந்துள்ளது. தேர் ஓடிக்கொண்டிருக்கும் போது வடம் அறுந்து இருந்தால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு பல திருக்கோவில் தேரோட்டங்களில் பல்வேறு விபத்து சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதன் பின்பு தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகள் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் நெல்லையப்பர் கோவில் தேரோட்ட நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை பொறியாளர்களின் ஆய்வு நடைபெற்றதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. நடந்த சம்பவத்தை பார்க்கும்போது மாவட்ட நிர்வாகம் இதில் மிகப்பெரிய கவனக்குறைவோடு செயல்பட்டுள்ளது தெரிய வருகிறது.
தேர் செல்லும் நான்கு ரத வீதிகளும் பூமிக்கு அடியில் மின் இணைப்பு பணிகளுக்காக தோண்டப்பட்டு ஒரு வாரத்திற்கு முன்பு தான் அந்த குழிகள் மூடப்பட்டு சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த சிமெண்ட் தளங்கள் உறுதியானதாக முறையானதாக அமைக்கப்படாததால் பல இடங்களில் தேர்ச்சக்கரம் பதிந்து நெல்லையப்பர் தேரோட்டம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் தேரோட்டத்தின் போது கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வுகூட்டம் என நடத்தி கூடி பேசி தேரோட்ட ஆலோசனை செய்ததாக கணக்கு காட்டி டீ சம்சாவோடு முடித்துக் கொள்கின்றனரா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பொதுமக்களிடமோ, பக்தர்களிடமோ, இந்து அமைப்புகளிடமோ எந்த கருத்துக்களையும் கேட்பதில்லை. அதன் விளைவே நெல்லையப்பர் தேரோட்டத்தில் இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது.
கோயில் உண்டியல், வாடகை, குத்தகை, கட்டண தரிசன கட்டணம் என கோவிலிலிருந்து வருமானத்தை, பணத்தை கொண்டு செல்வதில் தான் தமிழக அரசும், இந்து சமய அறநிலைத்துறையும் முனைப்பாக உள்ளதே தவிர, கோவிலுக்குரிய எந்த வசதிகளும் பராமரிப்பு பணிகளும் செய்யாமல் அலட்சியப்படுத்தி உள்ளதே, இந்த சம்பவத்திற்கு காரணம்.
நெல்லையப்பர் திருத்தேர் வடம் அறுந்து பக்தர்கள் காயமான சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராஜினாமா செய்வதே மாண்புடையதாக இருக்கும்.
நெல்லையப்பர் தேர் திருவிழா ஏற்பாட்டில் அலட்சியமாக செயல்பட்ட நெல்லை மாவட்ட ஆட்சியர் உட்பட அத்தனை அதிகாரிகள் மீதும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து, இனி இதுபோல் சம்பவங்கள் நிகழாமல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது.
யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார்.
அப்போது, ”10வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 2014ல், நான் ஐ.நா., சபையில் சர்வதேச யோகா தினத்தை முன்மொழிந்தேன். இந்தியாவின் இந்த முன்மொழிவை 177 நாடுகள் ஆதரித்தன; இதுவே சாதனையாக இருந்தது” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியபோது, யோகா மூலம் நாம் பெறும் ஆற்றலை இங்கே உணர முடியும். யோகா தினத்தில் நாட்டு மக்களுக்கும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் யோகா செய்து வரும் மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்வதேச யோகா தினம் 10 வருட வரலாற்று பயணத்தை நிறைவு செய்துள்ளது. 2014ல், நான் ஐ.நா., சபையில் சர்வதேச யோகா தினத்தை முன்மொழிந்தேன். இந்தியாவின் இந்த முன்மொழிவை 177 நாடுகள் ஆதரித்தன; இதுவே சாதனையாக இருந்தது.
அதன்பிறகு, யோகா தினம் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. இந்த ஆண்டு இந்தியாவில், பிரான்சை சேர்ந்த 101 வயது பெண் யோகா ஆசிரியைக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அவர் இந்தியாவுக்கு வரவில்லை, ஆனால் யோகா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார்.
இன்று, உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் யோகா பற்றிய ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன; ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன.. என்றார் அவர்.
ஸ்ரீநகரில் யோகா பயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அதைத் தன் சமூகத் தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
மதுரை -பெங்களூரு வந்தே பாரத் திருச்சியை சுற்றிச் செல்லும் ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயில் பயண நேரம், கட்டணம் அதிகம் என்பதால் தற்போது இந்த ரயிலுக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பி வருகிறது.இந்த பதிய வந்தே பாரத் ரயிலை திருநெல்வேலி மில் இருந்து நேர்வழியில் பெங்களூர் க்கு இயக்க தென்மாவட்ட பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மதுரை – பெங்களூரு இடையே இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரயில் திருச்சியை சுற்றிச் செல்வதால் பயண நேரம், கட்டணம் அதிகம் உள்ளதாக பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு ஆரஞ்ச் வண்ணத்தில் வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. மதுரையில் அதிகாலை 5:15 மணிக்கு புறப்படும் வந்தேபாரத் ரயில் திருச்சிக்கு காலை 7:15க்கு செல்கிறது.
அங்கிருந்து 7:20 மணிக்கு புறப்பட்டு காலை 9:55 மணிக்கு சேலம் செல்கிறது. அங்கு 10:00 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:15 மணிக்கு பெங்களூரு எஸ்.எம்.வி., ஸ்டேஷனுக்கு சேருகிறது.
மறுமார்க்கத்தில் பெங்களூரு எஸ்.எம்.வி., ஸ்டேஷனில் மதியம் 1:45 மணிக்கு கிளம்பும் ரயில் இரவு 10:25 மணிக்கு மதுரை வருகிறது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் ஜூன் 17 ல் நடைபெற்றது
இந்த வந்தே பாரத் ரயிலுக்கு திண்டுக்கல்லில்நிறுத்தம் இல்லை. மேலும் திருச்சியை சுற்றிச் செல்வதால் துாரம் 145 கி.மீ., அதிகரிக்கிறது. 2 மணி நேரம் பயணமும்,கட்டணமும் அதிகம் உள்ளது.
எனவே திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு தனியாக வந்தே பாரத் ரயிலை இயக்கலாம்.
மதுரை-பெங்களூரு வந்தேபாரத் ரயிலை திருநெல்வேலி யில் இருந்து மதுரை விருதுநகர் திண்டுக்கல், கரூர் வழியாக இயக்க வேண்டும்.
இத்தடத்தில் உள்ள முக்கிய வர்த்தக நகரங்களான விருதுநகர் திண்டுக்கல், வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மீட்டர் கேஜ் காலத்தில் பகலில் இயக்கப்பட்ட நெல்லை – கொல்லம் – நெல்லை ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
வியாழன் நேற்று (20/06/24) செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே வாரிய தலைவர், தெற்கு ரயில்வே பொது மேலாளர், பிற உயர் அதிகாரிகள், மதுரை கோட்ட மேலாளர் மற்றும் அதிகாரிகள் தென்காசி நெல்லை கொல்லம் மாவேலிக்கரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இன்று அனுப்பிய ஈ-மெயில் கடிதத்தில் கூறியிருப்பதாவது-
*மீட்டர் கேஜ் ரயில்கள் ஓடிய நேரத்தில் நெல்லை – கொல்லம் இடையே அம்பை பாவூர்சத்திரம் தென்காசி செங்கோட்டை ஆரியங்காவு தென்மலை புனலூர் கொட்டாரக்கரை வழியாக காலையிலும் மாலையிலும் கொல்லம் நெல்லை இரு இடங்களிலிருந்தும் ரயில்கள் இயக்கப்பட்டன.இப்பாதை 2018ம் ஆண்டு பிராட் கேஜ் ஆன பிறகு இந்த ரயில்கள் இயக்கப்படவில்லை.
இதனால் திருநெல்வேலிக்கு மருத்துவ சிகிச்சைக்காக வரும் கேரள மக்கள், இரு மாநில மாணவர்கள்,வணிகர்கள் தனியார் மற்றும் அரசு , வங்கி ஊழியர்கள் ,பால் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் குற்றாலம் அருவிகள், குண்டாறு ,அடவிநயனார் அணைகள்,பாபனாசம் மணிமுத்தாறு அணைகள் மாஞ்சோலை எஸ்டேட் அகத்தியர் அருவி ஆரியங்காவு பாலருவி தென்மலை ஈக்கோ சுற்றுலா தலம், கல்லடா அணை ,அம்பநாடு எஸ்டேட் இவ்விடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் இந்த ரயில்களால் பயன் பெறுவர்.
மேலும் கோவில் தலங்களான திருநெல்வேலி பாபநாசம் தென்காசி திருமலைக்கோவில் ஆரியங்காவு அச்சன்கோவில் கொட்டாரக்கரை செல்வோரும் இந்த ரயில்களால் பயனடைவார்கள்.
எனவே இந்த ரயில்களை விரைவில் இயக்கிட ஆணை பிறப்பிக்க வேண்டுகிறோம். மேலும் இந்த ரயில்களில் பயணிகள் செங்கோட்டை – புனலூர் பாதையிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளின் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்திட மேற் கண்ணாடி கூரை வசதி உள்ள விஸ்டாடோம் பெட்டி ஒன்றும் இணைக்கப்பட வேண்டும்.