Home Blog Page 196

முதல் முறையாக செங்கோட்டையில் இருந்து மைசூருக்கு சிறப்பு ரயில்!

railway news - 2026
#image_title

செப்டம்பர் 4, 5, 7, 8 ஆகிய தேதிகளில் செங்கோட்டையிலிருந்து அருப்புக்கோட்டை மானாமதுரை, காரைக்குடி, பெங்களூர் வழியாக மைசூர் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மைசூரில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 4.50 மணிக்கு செங்கோட்டையைச் சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரவு 7:45க்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.20 மணிக்கு மைசூரை சென்றடைகிறது.

பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு ரயில்கள் மிகவும் குறைவு. பல லட்சம் பேர் ரயில்களில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் போதிய ரயில் வசதிகள் இல்லை. இதனால் முக்கியமான நாட்களில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும்.

அந்த வகையில்., விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினங்கள், விடுமுறை தினங்கள் மொத்தமாக வருவதால் மைசூருல் இருந்து பெங்களூர் வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், செப்டம்பர் 4, 5, 7, 8 ஆகிய தேதிகளில் செங்கோட்டையிலிருந்து மானாமதுரை, காரைக்குடி, பெங்களூர் வழியாக மைசூர் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இதன்படி செப்டம்பர் 4ம் தேதியான புதன்கிழமை மற்றும் செப்டம்பர் 8ம் தேதியான சனிக்கிழமை ஆகிய நாட்களில் மைசூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்திற்கு இரவு ஒரு மணிக்கு வருகிறது. அதன் பிறகு பாங்கருபேட் குப்பம் வழியாக தமிழ்நாட்டிற்குள் வந்து சேலம், கரூர் திருச்சி வழியாக கரைக்குடி சென்று அதன்பிறகு மானாமதுரை, அருப்புக்கோட்டை, ராஜபாளையம், தென்காசி வழியாக வழியாக செங்கோட்டைக்கு வியாழக்கிழமை மற்றும் ஞாயிறு அன்று மாலை 4.50க்கு செல்கிறது.

இதேபோல் மறுமார்க்கமாக செங்கோட்டையிலிருந்து 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரவு 7:45க்கு புறப்பட்டு செல்லும் ரயில தென்காசி, சிவகாசி, ராஜபாளையம், மானமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சேலம், குப்பம், பெங்களுர் வழியாக மைசூருக்கு வெள்ளிக்கிழமை மற்றும் திங்கள்கிழமை பிற்பகல் 2.20க்கு சென்றடைகிறது” இவ்வாறு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

செங்கோட்டைக்கு பெங்களூர் மார்க்கமாக மைசூரில் இருந்து இரு மார்கங்களிலும் சிறப்பு ரயில் இயக்கம் என்பது மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தி. ஆனால் இதில் இரண்டு குறைகள் உள்ளன. முதலாவது திருச்சி புதுக்கோட்டை வழியாகச் செல்வதால் பயண நேரம் மிகவும் அதிகமாக உள்ளது. இரண்டாவது இரு மார்க்கங்களிலும் பெங்களூரைக் கடப்பது நேரம் கெட்ட நேரத்தில். எனவே இது பயணிகளுக்கு சிரமத்தைத் தருவதே என்று கூறுகின்றனர் பயணிகள் சங்கத்தினர் சிலர். எனினும் இந்த ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு விறுவிறுவென நடந்து வருகிறது.

புண்ணியம் செய்த மாநிலம் தமிழ்நாடு!

Mudigonda Sivaprasad - 2026

ஹைதராபாத்தில் வசிக்கும் டாக்டர் ப்ரொபசர் முதிகொண்ட சிவபிரசாத் அவர்கள், ‘சாரித்ரிக நாவலா சக்கரவர்த்தி’ என்ற விருது பெற்றவர். இவர் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியாகப் பணிபுரிந்து பதவி ஓய்வு பெற்றவர். இவருக்கு எண்பத்து நான்கு வயதாகிறது. இதுவரை நூற்று நாற்பத்திரண்டு சரித்திர நாவல்கள் எழுதியுள்ளார். இன்னும் எழுதுகிறார். ஒரே நேரத்தில் மூன்று பேருக்கு வெவ்வேறு தலைப்புகளில் டிக்டேஷன் செய்து எழுதச் செய்யும் ஆற்றல் கொண்டவர். அது தவிர மிகப் பல ஆண்டுகளாக தினமும் காலை நான்கு மணிக்கே எழுந்து குறைந்தது இரண்டு பக்கங்களுக்குக் குறையாமல் எழுதும் பழக்கம் கொண்டவர். தற்போது சிறிது கண்பார்வை குறைந்திருந்தாலும், இன்று வரை அந்த வழக்கத்தைத் தொடர்வதாகக் கூறுகிறார்.

ப்ரொபசர் முதிகொண்ட சிவபிரசாத் அவர்களின் சில கட்டுரைகளை நான் தமிழில் மொழிபெயர்த்தேன். அவை நம் தினசரி தளத்தில் வெளிவந்து பலருக்கும் உபயோகமாக இருந்தது. அண்மையில் அயோத்தி ராமர் கோவில் அமைக்க, சுதந்திர பாரதத்தில் நடந்த போராட்டங்களைப் பற்றி அவர் எழுதிய கட்டுரையை மொழிபெயர்த்தேன்.  தினசரி தளத்தில் வெளிவந்த அந்த கட்டுரையையும் அதற்கும் முன் வெளிவந்த அவருடைய  கட்டுரைகளையும் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு, அவரைச் சென்று பார்த்து வந்தோம்.

அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் கூறிய ஆர்வம் மிகுந்த கருத்துகளை அவருடைய அனுமதியோடு பதிவு செய்தேன். அதையே இந்த கட்டுரையில் தமிழில் தருகிறேன். 

“தமிழ்நாடு மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த மாநிலம். ஆன்மீகச் செழிப்பு நிரம்பிய மாநிலம். ஏனென்றால் ஒரே காலத்தில் உலகப் புகழ்பெற்ற உயர்ந்த மகான்களின் அவதாரம் தமிழ்நாட்டில் நிகழ்ந்தது. அது தமிழ்நாட்டிற்குக் கிடைத்த அற்புதமான வரம்.

மகான்கள் அவதரித்த மாநிலம் –

அவர்களுள் ஒருவர் கும்பகோணம் சுவாமி. அவரை மாஸ்டர் ஸி.வி.வி. என்று அழைப்பார்கள். இவர் வாழ்ந்து வந்த காலத்திலேயே காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ. சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாசுவாமியும் வாழ்ந்து வந்தார். அவரை ‘நடமாடும் தெய்வம்’ என்று போற்றுகிறோம். அடுத்து ஸ்ரீ அரவிந்தர். அரவிந்தர் பூரணயோகத்தை நமக்கு அளித்தார். அடுத்து, மகான் ஸ்ரீ ரமண மகர்ஷி. இவ்விதம் ஒரே காலத்தில் நான்கு மகாத்மாக்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தது ஆச்சர்யத்தை அளிக்கிறது. இது தமிழ்நாடு செய்த புண்ணியம் எனபதில் எவ்வித ஐயமும் இல்லை.

ஸ்ரீ அரவிந்தரின் சித்தாந்தம் அமிர்தத்தைப் போன்றது. நான் அதனை நன்றாகப் படித்துப் பயின்றுள்ளேன். பாண்டிச்சேரிக்குப் பலமுறை சென்று வந்துள்ளேன். அடுத்து, திருவண்ணாமலை. துரதிருஷ்டவசமாக ஸ்ரீரமண மகரிஷியை அவர் தேகத்தோடு வாழ்ந்த காலத்தில் தரிசிக்க முடியவில்லை. ஆனால் ஸ்ரீ ரமணாஸ்ரமத்தோடு எனக்கு நல்ல பழக்கம் உள்ளது.

தமிழ்நாட்டில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் பிறந்தார்கள். திருக்குறளை இயற்றிய  மகான் திருவள்ளுவர் பிறந்தார். நாம் பாராயணம் செய்யும் திருப்பாவை பாசுரங்களை இயற்றிய ஆண்டாள் நாச்சியார் அவதரித்தார். திருவெம்பாவை இயற்றிய மாணிக்கவாசகர் அவதரித்தார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்த அவ்வையார்  அருளிய செய்யுட்கள் நமக்கு இன்றும் கிடைக்கின்றன. இன்னும் பலப்பல ஆன்மீக இலக்கியங்களை அருளிச் செய்த மகான்கள் அவதரித்த தலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

இவ்விதம் தமிழ்நாடு ஆன்மீகத்திலும் இலக்கியத்திலும் செழுமை நிறைந்த மாநிலமாகத் திகழ்கிறது. அதனால் என் மதிப்பில் தமிழ்நாடு வெறும் சுற்றுலாத் தலம் மட்டுமல்ல. உயர்ந்த தீர்த்த யாத்திரைத் தலமும் கூட. நான் அந்த சிறந்த ஆன்மீக பூமியை தலை வணங்கி சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன்.

இன்னுமொரு செய்தி. நம் பாரதத் தாய்நாடு கன்யாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை விரிந்து பரந்துள்ளது. இதில் எந்த ஒரு இடத்தையும் ஃபெடரலிசம் என்ற பெயரால் பிரிப்பதற்கு இடமில்லை. உடலில் இருந்து கால்களையும் கைகளையும் பிரிப்பதற்கு இடமில்லை அல்லவா? அனைத்தும் ஒன்றாக இணைந்திருந்தால்தானே மனித உடல் என்று ஆகிறது? அதே போல் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை உள்ள தேசம் எல்லாம் சேர்ந்தால்தான் அகண்ட பராத தேசமாகும். இது போன்ற பாரத உணர்வும் தேச பக்தியும்  உடையவரே பாரத தேசக் குடிமகன்.

சனாதனம் –

‘சனாதனம்’ என்ற சொல்லுக்கான பொருளை ஒரு முறை பார்ப்போம். சனாதனம் என்றால் புராதனம் என்று கூறுகிறார்கள். அது தவறல்ல என்றாலும் சனாதனம் என்றால் ‘எடர்னல்’. சாஸ்வதமானது என்று பொருள். சூரியன் கிழக்கே உதிக்கிறான். இது ஒரு ‘எடர்னல்’ சத்தியம். மா விதை நட்டால் மா மரம் முளைக்கும். இது என்றுமுள்ள  உலகளாவிய உண்மை. இதனை நாம் மாற்ற முடியாது. ‘சனாதனம்’ நேற்று, இன்று, நாளை, மூன்று காலங்களிலும் நித்தியமானது, நிலையானது. முக்காலங்களுக்கும் உரியது. சனாதனம் என்பது அனைத்துலும் வியாபித்துள்ள சத்தியம். நம் பண்டைய  ரிஷிகளின் சிந்தனை முறை அது. சனாதனம் என்பது வேதங்களும் உபனிஷத்துகளும் நமக்கு அளித்த உயர்ந்த தர்மம்.

ஆனால் குறுகிய மனப்பான்மை கொண்ட சிலரால் நேர்ந்த சில தீய வழக்கங்களையும் சிறு தவறுகளையும் சனாதன தர்மத்தின் மீது சுமத்துவது கூடாது. இவை இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ள வேண்டும். இந்த சிறு கருத்தை உங்களோடு பகிந்து கொண்டது குறித்து நான் மகிழ்கிறேன். வணக்கம்”.

ஐபிஎல்., போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்தார் ஷிகர் தவான்!

shikar dawan - 2026
#image_title

ஐபிஎல் உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் இருந்தும் கூட தான் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க வீரராக களம் கண்டு சிறப்பாக விளையாடி ரசிகர்களைக் கவர்ந்தவர் ஷிகர் தவான். 2010ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். தனது சிறப்பான ஆட்டத்தால் டி20 மற்றும் டெஸ்ட் அணிகளிலும் இடம் பிடித்தார்.

அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் இந்த ஷிகர் தவான், இந்திய அணிக்காக 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,793 ரன்கள் எடுத்துள்ளார். 68 டி20 போட்டிகளில் 1,759 ரன்னும், 34 டெஸ்ட் போட்டிகளில் 2,315 ரன்னும் குவித்துள்ளார். இவர் இந்திய அணிக்காக ஒட்டுமொத்தமாக 24 சதங்களை அடித்துள்ளார்.

இந்நிலையில் அண்மைக் காலமாக இளம் வீரர்களின் வருகையால் ஏற்பட்ட கடும் போட்டியின் காரணமாக தொடர்ந்து அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். கடைசியாக 2022ல் வங்கதேசத்திற்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியை விளையாடியிருந்தார்.

உள்ளூர் போட்டிகளான ஐ.பி.எல்.,லிலும் டில்லி, மும்பை, டெக்கான் சார்ஜர்ஸ், ஐதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ள தவான், கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.

இருப்பினும் இந்திய அணியில் இளைஞர்கள் பலரின் வரவால் சரியான வாய்ப்பு கிடைக்காத நிலையில், சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், இத்தனை ஆண்டுகளாக பக்கபலமாக இருந்து அன்பும், ஆதரவும் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்தவர் ஷிகர் தவான். 2015ல் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களைக் குவித்தவர். ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபியின் (2013,2017) இரு தொடர்களில் அதிக ரன்களைக் குவித்து கோல்டன் பேட் விருதை வென்ற ஒரே வீரர். 2021ல் விளையாட்டில் சிறந்து விளங்கியதற்காக, உயரிய விருதான அர்ஜுனா விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது.

ஷிகர் தவான் ஓய்வை அறிவித்த நிலையில், அவரது நெருங்கிய சகா விராட் கோலி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், “ஷிகர் தவான், நீங்கள் இந்தியாவின் மிகவும் நம்பகமான தொடக்க வீரர்களில் ஒருவராக இருந்தீர்கள். நீங்கள் எண்ணற்ற நினைவுகளை எங்களுக்கு கொடுத்துள்ளீர்கள். விளையாட்டின் மீதான உங்கள் ஆர்வம், உங்கள் விளையாட்டுத்திறன் மற்றும் உங்களது அற்புதமான புன்னகையை நாங்கள் தவற விடுவோம். ஆனால் உங்கள் கிரிக்கெட் பாரம்பரியம் எப்போதும் வாழும்.

நீங்கள் கொடுத்த நினைவுகள், மறக்க முடியாத நிகழ்ச்சிகள் மற்றும் எப்போதும் உங்கள் இதயத்திடம் இருந்து வழிநடத்தியதற்காக நன்றி. மைதானத்திற்கு வெளியே உங்களது அடுத்த இன்னிங்ஸ் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

ஷிகர் தவானுக்கு கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தினேஷ் கார்த்தி, பும்ரா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சச்சின் தனது எக்ஸ் பதிவில், “கிரிக்கெட் ஆடுகளம் நிச்சயம் உங்களது ஆரவாரத்தை இழக்கும். உங்கள் புன்னகை, உங்கள் ஸ்டைல் மற்றும் விளையாட்டின் மீதான உங்கள் அன்பு எப்போதும் மற்றவர்களை ஈர்க்கக் கூடியது. உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் பக்கங்களை நீங்கள் புரட்டிப் பார்த்தால் அதில் உங்கள் பாரம்பரியம் ரசிகர்கள் மற்றும் சக வீரர்களின் இதயங்களில் என்றென்றும் பொறிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் இனி நடக்கப்போவது அனைத்தும் சிறந்ததாக இருக்கும் என்று வாழ்த்துகிறேன். எப்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள் ஷிகர் தவான்” என்று பதிவிட்டுள்ளார்.

Pluti – the leap and Tāl Fry – A Rhythmic Celebration!

0
plut newsi - 2026
#image_title

The prestigious Bhavaarpanam festival returns with a celebration of Indian classical arts that blends tradition with innovation. This year, the festival is highlighted by two exceptional presentations: “Pluti,” a philosophical dance narrative, and “Tāl Fry,” an exploration of rhythmic traditions across classical and folk music.

The Bhavaarpanam festival, a tribute to the legacy of Guru Mangudi Dorairaja Iyer, has long been a platform for showcasing both traditional and contemporary expressions of Indian classical music and dance. It is hosted by Kala Sadhanalaya and curated by Revathi Ramachandran. With its roots firmly anchored in classical traditions, this year’s festival promises to push the boundaries of artistic expression while honoring the rich cultural heritage of India.

Pluti: the leap

On August 28th, 2024, at 6:15 PM, “Pluti” takes the stage with a captivating narrative that explores the evolution of human consciousness. Conceptualized and choreographed by Manasvini K.R., the solo- thematic dance performance is an allegorical journey depicted through the stories of five animals—the frog, deer, earthworm, parrot, and cow—each representing a phase of human consciousness.

Drawing inspiration from Advaita Vedanta, “Pluti” uses these animals as metaphors for different states of awareness: from ignorance and illusion to restraint, renunciation, and finally, spiritual realization. The performance is enhanced by a stirring musical score composed by violin Vidwan Lalgudi GJR Krishnan, creating a multisensory experience that delves deep into the quest for truth and happiness.

Through evocative choreography and symbolic storytelling, “Pluti” offers a unique blend of philosophical depth and artistic beauty, inviting the audience to reflect on the journey of self-discovery. Sri Madhusudhan Sai who is the founder of SSSUHE will be presiding over the event.

Tāl Fry: A Rhythmic Celebration

The following evening, on August 29th, 2024, at 6:30 PM, “Tāl Fry” brings rhythm to the forefront with a performance that fuses classical and folk traditions. This innovative ensemble consists of six artists—Varun Rajashekaran (Ghatam), Soumendra Goswami (Sitar), Saptak Sharma (Tabla), Ravindra Rajput (Cajon/Flute), Manohar Balachandirane (Mridangam), and Mahavir Chandrawal (Dhol/Naal)—each contributing their unique expertise.

“Tāl Fry” delves into the limitless possibilities of rhythm, creating a soundscape that ranges from the intricate patterns of Carnatic and Hindustani classical music to the spontaneous vibrancy of folk traditions. The ensemble’s eclectic mix of instruments, combined with visually engaging light design, offers an immersive experience that connects with the audience on a primal level.

Having debuted to acclaim in July 2024, “Tāl Fry” is a celebration of rhythm’s power to bridge the gap between tradition and modernity. The performance invites everyone—whether a classical music enthusiast or a curious newcomer—to enjoy the universal language of rhythm.

Bhavaarpanam

Over the years, Bhavaarpanam has honored the life and contributions of Guru Mangudi Dorairaja Iyer while providing a stage for evolving artistic expressions. From traditional Bharatanatyam recitals to contemporary dance-theatre productions, the festival has continually embraced both preservation and innovation. This year’s performances of “Pluti” and “Tāl Fry” embody that spirit of growth and transformation, offering audiences a chance to experience art that is both timeless and relevant. 

Event Details:

Pluti: August 28th, 2024, 6:15 PM

Tāl Fry: August 29th, 2024, 6:30 PM

Venue: Rasika Ranjani sabha, 30/1, Sundareswarar St, near Lady Sivaswamy School, Girija Garden, Mylapore, Chennai, Tamil Nadu 600004
Tickets available at : mdnd.in

Join us at Bhavaarpanam 2024 to witness this confluence of tradition, rhythm, music, dance, and storytelling in a festival that celebrates the legacy of legendary Guru, Mangudi Dorairaja Iyer

Link for ticket
https://www.mdnd.in/newevent/viewevent/OTg0NCMzNSMxMDEjMg==

உலகின் கவனம் பெற்ற பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம்!

pm modi with ukrain pres - 2026
#image_title

இன்று உலகில் கவனத்தை ஈர்த்திருக்கும் விஷயம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் உக்ரைன் பயணம்தான்! போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அவர் மேற்கொண்ட பயணம், இன்று உலக நாடுகளால் உன்னிப்பாகப் பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி வெளிநாடு சென்று வருவது குறிப்பிடப் பட வேண்டிய விஷயமல்ல என்றாலும், மிக மிக உக்கிரமான போர்ப் பதற்றமான சூழலில், தனது பாதுகாப்பையும் கருத்திற்கொள்ளாமல், அந்நாட்டின் நலனை நாடி அவர் உக்ரைன் செல்வதுதான் முக்கியமான விஷயம்!

சோவியத் யூனியன் பிளவுபட்டபோது, அதில் இருந்து பல நாடுகள் உருவாகின. அதில் மிகப் பெரும் பகுதி ரஷ்யா என்று மாறியது. இதைத் தவிர பல நாடுகளும் உருவாகின. இவ்வாறு ரஷ்யாவை ஒட்டியுள்ள பகுதி, உக்ரைனாக மாறியது.

கடந்த 1991, அக்., 24ல் அந்த நாடு சுதந்திரம் பெற்றது. ஆனாலும், அதை தன்னுடன் இணைப்பதற்கு ரஷ்யா தீவிரமாக முயற்சி மேற்கொண்டது. இதன்படி, 2014ல் முதல் முறையாக இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டது. அப்போது, உக்ரைனின் கிரீமியா உள்ளிட்ட சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. டான்பாஸ் போர் என்று அழைக்கப்படும் இந்தப் போர், 2022 வரை அடிக்கடி மோதல்களாகவே இருந்து வந்தது. ஆனால், 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா தீவிர போரைத் தொடங்கியது; அது தற்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த மூன்றாண்டுகளாக உக்கிரமான போர் நடக்கும் உக்ரைனில், ரஷ்யா உள்புகுந்த நிலையில், தற்போது ஒரு திருப்பமாக, ரஷ்யாவுக்குள் உக்ரைன் புகுந்துள்ளது. இப்போது ரஷ்யாவிடம் உக்ரைனின் அணு உலை ஒன்றும், உக்ரைனிடம் ரஷ்ய அணு உலை ஒன்றுமாக சிக்கி, சர்வதேச அணுசக்தி கமிஷன் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கிறது. இதனால், நிலைமை மோசமாகித்தான் போயிருக்கிறது. ரஷ்ய அதிபர் புடினுக்கும் வேறுவழி தெரியவில்லை! உக்ரைன் ரஷ்யாவை விட்டு விலகினால் ரஷ்யா உக்ரைனில் இருந்து வெளியேறும் என்றவாறு உலக நாடுகள் கணிக்கின்றன.

இருப்பினும் இன்றைய நிலையில், உக்ரைன், ரஷ்யா இரு நாடுகளுமே தங்களுக்கான நம்பகத்தன்மை வாய்ந்த நபர் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு நடுவுநிலையுடன் வரவேண்டும் என்று எதிர்பார்த்திருக்கின்றன. இந்த நடுவுநிலை வகித்தல், சமாதானம் பேசுதல் ஆகியவற்றில் சீனா எப்போதுமே உள்வரும். ஆனால், இந்த முறை உக்ரைனுக்கு அமெரிக்காவும் மேற்கு உலக நாடுகளும் அணி சேர்ந்துவிட்டதால், ரஷ்யாவிடம் சீனா, கொரியா உள்ளிட்ட கம்யூனிஸ நாடுகள் கைகோத்துவிட்டதால், இரு தரப்பிலுமே இந்த நாடுகளை சமாதானம் பேச நாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், உலக நாடுகளின் கவனம் எல்லாம், பாரதப் பிரதமர் மோடியின் மீதே குவிந்திருக்கின்றன. காரணம், பிரதமர் மோடி எவர் பக்கத்திலும் நின்று ஆதரவு கொடுக்காவிட்டாலும், இரு தரப்புக்கும் சமூக பொருளாதார, மருத்துவ உதவிகளைச் செய்து தன்னை நம்பிக்கைக்கு உரியவராக்கிக் கொண்டிருக்கிறார்.

இப்போது, மோடி உலக அரங்கில் மிக மிக வலுவானவரும் மதிக்கப் படுபவருமான தலைவராக உருவாகியிருக்கிறார். அவர் சொல்லுக்கு பெரும் மதிப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவால் தவிர்க்க முடியாத நாடு இந்தியா. புடின் புன்னகையுடன் ஆரத் தழுவ விரும்பும் ஒரே தலைவர் மோடி எனும் வகையில் ரஷ்யாவும் மோடியின் மத்தியஸ்தத்தை விரும்பியே நிற்கிறது. உக்ரைனைப் பொறுத்தவரை அதன் தேர்வும் இந்தியாவாகவே உள்ளது. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டுக்கும் அந்த சக்தியும், சந்தர்ப்பமும் இல்லை என்பதையும் அந்த நாடு உணர்ந்திருக்கின்றது!

கடந்த வருடம் முதலே இந்தியா தங்களுக்கு இடையிலான போரில் மத்தியஸ்தம் செய்யவேண்டும் என உக்ரைன் கேட்டுக்கொண்டது. உக்ரைனின் குரலை மேலும் பல நாடுகள் எதிரொலித்தன. இந்த நிலையில்தான் கடந்த மாதம் ரஷ்யா சென்றுவந்தார் மோடி. உலக நாடுகள் எதிர்பார்க்காத திடீர் பயணம் அது. அவ்வகையில் புடினிடம் அவர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் அவர் நேற்று உக்ரைன் பயணம் மேற்கொண்டார். முதலில் போலந்து சென்றுவிட்டு, அங்கிருந்து உக்ரைன் சென்று செலன்ஸ்கியினை சந்தித்துப் பேசினார்.

அவ்வகையில் உக்ரைனுக்குச் சென்ற முதல் சமாதானத் தலைவர் மோடி என்பதுதான் இன்றைய செய்தி! அது நாளைய வரலாறு! ஓர் இந்தியத் தலைவன் உலக அரங்கில் நடக்கும் போரில் சமாதானம் பேசச் செல்வதும் உலக வரலாற்றில் இதுதான் முதல்முறை!

சமாதானம் பேசுவது என்பது எளிதில் நடக்காதுதான்! சமாதானம் பேசச் செல்பவன் சண்டையிடும் இருவரை விட பலம் கொண்டவனாக, இருவரையும் அடக்கும் சக்தி கொண்டவனாக இருக்க வேண்டும். பலவானே இரு தரப்புக்கு இடையே சமாதானம் செய்துவைக்க முடியும்! அந்த வகையில் பாரதம் முழு பலத்தோடு இன்று உலக அரங்கில் தனிப்பெரும் சக்தியாக எழுந்து நிற்கிறது! மோடியின் உக்ரைன் பயணம் அதை அறுதியிட்டுச் சொல்கிறது.

இத்தகைய சூழலில், வரலாற்றின் ஒரு பக்கத்தை நாம் திருப்பிப் பார்க்க வேண்டியுள்ளது. 1965ல் உக்ரைனும் ரஷ்யாவும் சோவியத் என ஒன்றாக இருந்த போது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரில் இந்தியப் படைகள் லாகூரைக் கடந்து இஸ்லாமாபாத்தைக் கைபற்ற நெருங்கின‌. அதில், பாகிஸ்தானை முறியடித்து காஷ்மீரை முழுதாய்க் கைப்பற்றி கிழக்கு பாகிஸ்தானை உடைக்கும் திட்டமும் லால் பகதூர் சாஸ்திரிக்கு இருந்துள்ளது. ஆனால் சோவியத் யூனியன் அதை விரும்பவில்லை. காரணம் அது சீன நலனை விரும்பியது. சாஸ்திரியின் செயலால் சீனா பாதிக்கப்படும் என்று கருதியது. அதனால் சாஸ்திரி சோவியத்துக்கு அழைக்கப்பட்டார். பேச்சுவார்த்தைக்காகச் சென்ற அவர், தாஷ்கண்ட் நகரில் மர்மமாக இறந்தார். அப்போது சோவியத் அதிபராக இருந்த கோசிஜின் சாஸ்திரியின் மரணத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை!

அப்படி நம் நாட்டின் பிரதமர் சாஸ்திரி மர்மமாக மரணிக்க, இந்தியாவைப் பெரும் குழப்பத்தில் தள்ளியது ரஷ்யா!

இப்போது காலம் மாறியிருக்கிறது. அதே ரஷ்யாவின் சிக்கலைத் தீர்க்க, இந்தியா சமாதானத் தூது செல்ல வேண்டியிருக்கிறது. தர்மசக்கரம் சுழல்கின்றது! உக்ரைனும் ரஷ்யாவும் தங்களுக்குள் மோதிக் கொள்ள பாரதம் சமாதானம் செய்யத் தயார் என்கிறது! பாரதம் தர்மமும் அறமும் கொண்ட தேசம். பாரதத்தின் சநாதன தர்மம் தன் இனம், தன் மதம், தன் நாடு , தன் மொழி எனக் குறுகியது அல்ல! அது வானம் போல கடல் போல விரிவானது! “வசுதைவ குடும்பம், லோகா சமஸ்தாஸ் சுகினோ பவந்து, சர்வே ஜனா சுகினோ பவந்து என்பவை எல்லாம் சனாதனத்தின் அடிப்படைக் கருத்துகள். இப்படி, எல்லா உலக மக்களும் நன்றாக இருக்க‌ட்டும, எல்லா மக்களும் நன்றாக இருக்கட்டும், உலகம் வாசுதேவனாகிய இறைவனின் ஒரே குடும்பம் என்ற சிந்தையில் செயல்படும் சனாதனத்தின் வழிவந்த பிரதமர் மோடியால் இதனை சாதிக்க முடியும் என்பதால் தான், அவரை உலக நாடுகள் தங்கள் நாடுகளுக்கு வருமாறு விரும்பி அழைக்கின்றன.

இந்தியா மற்றும் ரஷ்யா இடையே, எண்ணெய், அணு மின்சக்தி, ராணுவம் உட்பட பல துறைகளில் மிக நீண்ட காலமாக நல்ல உறவு இருந்து வருகிறது. கொரோனா தொற்றின்போது, வளைகுடா நாடுகளை மட்டுமே எண்ணெய் தேவைக்காக சார்ந்திருக்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்நேரம், உக்ரைனுடனான போர் தீவிரமடைந்த நிலையில், ரஷ்யா பல சலுகைகளுடன் எண்ணெய் விற்பனைக்கு முன்வந்தது. இதை இந்தியா பயன்படுத்திக் கொண்டது. இதனால், ரஷ்யாவுக்கு ஆதரவும் தெரிவிக்காமல், எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்த அதே நேரத்தில், போரை நிறுத்தி, அமைதிக்கான பேச்சைத் துவங்கும்படி, இரு நாடுகளுக்கும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கடந்த ஜூலை மாதம், ரஷ்யாவுக்குச் சென்றபோதும், அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புடினிடம், பிரதமர் மோடி இதை வலியுறுத்தினார்.

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில், சமரசம் செய்ய இந்தியாவால் மட்டுமே முடியும் என, பல நாடுகள் கூறின. ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் சமநிலையில் நட்பு வைத்துள்ளதால், இந்தியா மீது அந்த நாடுகள் நம்பிக்கை தெரிவித்தன. 

முதலில், ஐரோப்பிய நாடான போலந்துக்குச் சென்ற அவர், அங்கிருந்து, 10 மணி நேர ரயில் பயணம் செய்து, உக்ரைனின் கீவ் நகரை நேற்று காலை சென்றடைந்தார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். கட்டித் தழுவி அவரை ஜெலன்ஸ்கி வரவேற்றார். உணர்ச்சி பெருக்கில் இருந்த ஜெலன்ஸ்கியின் தோளில் கைகளை போட்டு, பிரதமர் மோடி தேற்றினார். தொடர்ந்து, இருவரும், இரு தரப்பு உறவு உள்ளிட்டவை குறித்து பேசினர். குறிப்பாக இந்தப் பேச்சில், ரஷ்யா போர் குறித்தே அதிக நேரம் பேசப்பட்டது. 

உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை, வெறும் பார்வையாளராக ஒதுங்கிக் கொள்ளவும் இல்லை என்பதை மோடி சுட்டிக் காட்டினார். அமைதியின் பக்கமே இந்தியா உள்ளது என்று குறிப்பிட்டார். போர்க்களத்தில் தீர்வு காண முடியாது என்ற இந்தியாவின் நம்பிக்கையை அவர் மீண்டும் எடுத்துரைத்தார்.

தூதரக பேச்சு மற்றும் அமைதி பேச்சின் வாயிலாகவே, பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதை வலியுறுத்திய அவர், இரு நாடுகளும் இதற்கு முன் வர வேண்டும் என்பதை முன்மொழிந்தார். போரால், இளம் குழந்தைகள் உயிரிழப்பது மிகவும் துர்பார்க்கியம் என்பதை ரஷ்யா, உக்ரைன் தலைவர்களுக்கு கோடிட்டு காட்டினார்.

அமைதி திரும்புவதற்கு, இரு நாட்டுத் தலைவர்களும் முன்வந்தால், அதற்கு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்பதை தீர்க்கமாக குறிப்பிட்டார். பின்னர், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இந்தியா வரும்படி பிரதமர் அழைப்பு விடுத்தார்.

ஜெலன்ஸ்கியுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு, மிகவும் ஆக்கப்பூர்வமாகவும், தீர்வை நோக்கியதாகவும் இருந்தது என, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். புடினுடனான தன் சமீபத்தில் சந்திப்பின்போது பேசிய விபரங்களையும் ஜெலன்ஸ்கியுடன் மோடி பகிர்ந்து கொண்டார்.

தோளில் கை போட்டபடி…

pm modi with ukrain pres - 2026
#image_title

தோள்மீது கை போடவில்லை.- யுத்த
துயர்தீர உயிர்வாழ
மீள்பாதை உருவாக
மவுனத்தில் தைரியம் சொன்னாய்- நீ
தோள்மீது கை போடவில்லை. 01

தோள்மீது கை போடவில்லை- பேர்
அமைதியும் சாந்தமும்
வாள்முனையில். வாராது
உடன்பேசி தீர்த்திடச் சொன்னாய்- நீ
தோள்மீது கை போடவில்லை. 02

தோள்மீது கை போடவில்லை – ரஷ்ய
“புடினு”க்கும் “ஜெலன்ஸ்கி”க்கும்
ஆள் முகம் பார்க்காமல்
உயர்தீர்வை உன்தீர்வு என்றாய்- நீ
தோள்மீது கை போடவில்லை. 03

தோள்மீது கை போடவில்லை – என்றும்
மாறாத வெளிநாட்டு
கொள்கையை பறைசாற்றி
பாரத முகங்காட்டி. வந்தாய் – நீ
தோள்மீது கை போடவில்லை 04

தோள்மீது கை போடவில்லை – ஜெய
ராமனின்நல் வழிநின்று
தாளிலா உறவுக்கு
தூய்மையின் மனிதத்தை சொன்னாய் – நீ
தோள்மீது கை போடவில்லை. 05

தோள்மீது கை போடவில்லை – கடை
வெறுப்புக்கும் இழப்பிற்க்கும்
தெளிவற்ற கொள்கைக்கும்
மாமருந்து சனாதனம் என்றாய் -,நீ
தோள்மீது கை
போட்டு நின்றாய் 06.வ

விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் புதிய படம் இதுதான்!

nithyamenon vijay sethupathi - 2026
சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
வீனஸ் பிக்சர்ஸ் திரு கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் நான்கு தலைமுறைகளாக திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில், குடும்பத்துடன் ரசிக்கும் படங்களை இயக்குவதில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.

1950கள் முதல் மக்கள் திலகம் எம் ஜி ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், அஜித் குமார், தனுஷ் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்த வெற்றி படங்களை தயாரித்துள்ள பாரம்பரியமிக்க இந்த குடும்பம் முதல் முறையாக இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடன் கைகோர்ப்பதில் பெருமை கொள்கிறது. இத்திரைப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர்

கதைக்கு முக்கியத்துவம் கொண்ட, ஆறு முதல் அறுபது வரை அனைத்து தரப்பினரும் கண்டு களிக்கும் வகையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சமீபத்தில் தேசிய விருது வென்ற நித்யா மேனன் நாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் நித்யா மேனன் விரைவில் பங்கேற்கிறார்.

இந்த திரைப்படத்தின் பெயர், இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்கள் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் பிரதமர் மோடி! உலகை ஆச்சரியப்படுத்திய தருணம்!

pm modi with ukrain zelensky - 2026
#image_title

30 ஆண்டுகள் கழித்து உக்ரைன் சென்றுள்ள முதல் பாரதப் பிரமதர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்! இந்த முறை, தனது ஐரோப்பிய பயணத்தில், போலந்து, பின் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்தார் பிரதமர் மோடி. 

உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள அதிபர் மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் தோளில் கை போட்டபடி, தனது அன்பை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார். இது உலகின் கவனத்தைக் கவர்ந்திருந்தது.

அரசு முறை பயணமாக உக்ரைன் சென்றுள்ள பிரதமர் மோடி, கீவ் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முதலில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பிறகு, போரில் உயிரிழந்த குழந்தைகளுக்கு பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் போரினால் ஏற்பட்டுள்ள பேரழிவுகளைக் குறிப்பிட்டு, ரஷ்யாவுடனான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசியதாகத் தெரிகிறது.

உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணிப்பது எப்போதுமே அதிக முக்கியத்துவம் கொண்டு உன்னிப்பாகப் பார்க்கப்படும். அவர் தங்கள் நாடுகளுக்கு வர வேண்டும் என்ற ஆவலில், உலக நாடுகள் பலவும் ஆர்வமுடன் அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளன.

பிரதமர் மோடியின் முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டு பயணங்களில் தற்போது ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக, உலக நாடுகளின் பார்வையில் உற்று நோக்கப்படுவது உக்ரைன் பயணம்! போரினால் சகஜ நிலையில் இல்லாமல் தத்தளித்து வரும் அந்நாட்டுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் செய்தார். 

வழக்கமாக மேற்கொள்ளும் விமான பயணமாக இல்லாமல், இம்முறை ரயிலில் உக்ரைன் தலைநகர் கீவுக்கு பயணித்தார் பிரதமர் மோடி. இதற்காக அவருக்கு என சிறப்பு ரயில் ஒன்றும் தேர்வு செய்யப்பட்டிருந்தது. Force One எனப் பெயர் கொண்ட அந்த ரயிலில் பாதுகாப்பு வசதிகள் பல உண்டு. சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன்,  அதிக சொகுசு வசதிகளும் கொண்ட ரயிலாக Force One உள்ளது.  

Force One ரயிலில் பிரதமர் மோடிக்கு முன்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஷோல்ஸ் ஆகியோர் உக்ரைன் சென்றுள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு என்றே 10 ஆண்டுக்கு முன்பு இந்த ரயில் உருவாக்கப்பட்டது.  அதன் பின்னர் போர்க்கள பூமியாக உக்ரைன் நாடு மாறிய நிலையில், அங்கு வி.வி.ஐ.பி.க்கள் செல்வதற்காக பயன்படுத்தப்படும் ரயிலாக மாறிவிட்டது!

உக்ரைனில் இரு தரப்பு உறவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் இந்தியா சார்பில் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. இதனை பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் ஒப்படைத்தார்.

உக்ரைனில் கால் பதித்து இறங்கிய தொடக்கம் முதலே அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நெருக்கம் காட்டி தோளில் கைபோட்டபடி, வருத்தங்களையும் பகிர்ந்து கொண்டு, சமாதானப் பேச்சுகளைத் தொடங்கும்படி அவர் உக்ரைன் அதிபரிடம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அதனால் தான் காந்தி சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, அடுத்து போரினால் உயிரிழந்த குழந்தைகளின் நினைவு இடத்துக்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினார் மோடி.

பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நெருக்கம் காட்டியுள்ள படங்கள் சமூகத் தளங்களில் அதிகம் பகிரப்பட்டன. இதனிடையே பிரதமர் மோடி உக்ரைனில் இருப்பதால், ரஷ்யா தனது தாக்குதல்களை இன்று நிறுத்தி வைத்தது.

3 லட்சம் குடும்பங்கள் அவதி; ரேஷன் அட்டை உடனே வழங்குக: பாமக., ராமதாஸ்!

Ration card - 2026

ஒன்றரை ஆண்டுகளாக வழங்கப்படாததால் 3 லட்சம் குடும்பங்கள் அவதி அடைந்துள்ளன. எனவே நியாயவிலைக்கடை ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை உடனே வழங்கவேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது…

தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளில்  உணவுப் பொருட்களை வாங்குவதற்கான  ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்த  சுமார் 3 லட்சம் பேருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக  அவை வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள்  எழுந்துள்ளன.  ஆதாருக்கு அடுத்தபடியாக மிக முக்கிய ஆவணமான குடும்ப அட்டைகளை வழங்குவதில் தமிழக அரசின்  சார்பில் செய்யப்படும் காலதாமதம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் பன்முக பயன்பாடு கொண்டவை ஆகும். நியாயவிலைக்கடைகளில் பொருட்களை வாங்குவதற்காக மட்டும் அவை பயன்படுத்தப்படுவதில்லை. மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், 100 நாள் வேலைக்கான பணி அட்டை ஆகியவற்றை பெறுவதற்கும், வங்கிக் கணக்கு  தொடங்குவதற்கும் குடும்ப அட்டை கட்டாயமாகும்.  இவற்றுக்கெல்லாம் மேலாக மாதம் ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கும் குடும்ப அட்டை கட்டாயம். ஆனால், புதிய குடும்ப அட்டைகள்  வழங்கப்படாததால்  லட்சக்கணக்கான மக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளையும்,  உரிமைகளையும் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.  அவர்களின் தவிப்பை  தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

புதிய மின்னணு  குடும்ப அட்டைகளை வழங்குவதில் அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆதாரை அடிப்படையாக வைத்து தான் புதிய குடும்ப அட்டை கோருவோரின் விவரங்களை மிகவும் எளிதாக சரிபார்த்து வழங்கி விட முடியும்.  2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கு குடும்ப அட்டை எண்ணும் வழங்கப்பட்டு விட்டது. அதற்குப் பிறகும்  ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை  வழங்காமல் தமிழக அரசு காலதாமதம் செய்வது  ஏன்? என்பது தான் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்  ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.  அதைப் பெறும் நோக்குடன் ஒரு லட்சத்துக்கும் கூடுதலானவர்கள் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது. குடும்பத் தலைவிகளுக்கான மாத உரிமைத் தொகைக்கு  அதிக எண்ணிக்கையிலானவர்கள் விண்ணப்பம் செய்வதை தவிர்க்கவே புதிய குடும்ப அட்டைகள் வினியோகத்தை தமிழக அரசு தாமதிப்பதாகக் கூறப்படுகிறது. இது பெரும் தவறாகும்.

ஸ்மார்ட் குடும்ப அட்டைகளைப் பெறுவது தமிழ்நாட்டு மக்களின் உரிமை ஆகும். எந்தக் காரணத்தைக் கூறியும் அதை தமிழக அரசு தட்டிக்கழிக்க முடியாது. எனவே, புதிய குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்க  தமிழக  அரசு முன்வர வேண்டும்.

முக்கோண அரசியல்! முதற்கோணம் இங்கிருந்து!

putin modi meet - 2026

மீண்டும் டிராகனோடு தில்லி! : உலகமே உற்று நோக்கும் உக்ரைனுக்கு பாரதப் பிரதமர் மோடி விஜயம் செய்து இருக்கிறார். பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சுமார் பத்து மணிநேர பயணமாக ரயிலில் உக்ரைனை அடைய தற்போது என்ன அவசியம். எதனை முன்னிட்டு இந்த பயணம்? யார் நலனுக்காக?

இப்படி பலதரப்பட்ட விவாதத்தை இது எழுப்பி இருக்கிறது என்பதே நிஜம்.

உக்ரைன் ரஷ்யா மோதலில், உக்ரைன் கை ஓங்கி இருக்கிறது என்பது போன்ற ஒரு தோற்றம் கடந்த சில நாட்களாக ஏற்படுத்தப் பட்டிருக்கும் நிலையில், என்ன சமாதானம் பேச, ஜெலஸ்க்கியைப் பார்க்க பிரதமர் நரேந்திர மோடி சென்றிருக்கிறார்?

கொஞ்சம் நுட்பமான அரசியல் சாகசம் இது என்கிறார்கள் உலக அரசியல் பார்வையாளர்கள். எப்படி?

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதத்தில் நடக்க இருக்கிறது என்பது யாவரும் அறிந்ததே! இதில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்றதாக நம்பப்பட்டு வந்த நிலையில், யாருமே எதிர்பாராத வண்ணம் ஜோபைடன் பின் நகர கமலா ஹாரீஸ் முன்னிலை படுத்தப் பட்டார் அக்கட்சியினரால். அது அவர்கள் எதிர்பார்த்த பலனை தந்திருப்பதாக செய்திகள் உலா வருகின்றன.

எப்படியும் அடுத்த அதிபர் ட்ரம்ப் தான் என்கிற இடத்தில் இருந்து தற்போதைக்கு இருவரும் சம பலத்துடன் இருப்பதாக புள்ளி விவர புலிகள் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள். திரைமறைவு வித்தகர்களும் எப்பேர்ப்பட்ட தில்லாலங்கடி வேலைகளைஸ் செய்தாவது கமலாஹாரீஸை ஜெயிக்கவைக்கப் பார்க்கிறார்கள். இதற்காக மில்லியன் கணக்கான டாலர்களை வாரி இறைத்து வருகிறார்கள்.

சோரஸ் போன்ற மிஷனரி கைக்கூலிகள் ஏற்கெனவே தங்கள் கைவரிசை காட்ட ஆரம்பித்து விட்டதாகவும், அதன் ஒரு பகுதியாகத் தான் பங்களாதேஷ் ஆட்சி கவிழ்ப்பு முதற்கொண்டு உக்ரைனில் ஜெலன்ஸ்கியை கொண்டு ரஷ்ய எல்லையில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் அத்தனை வேலைகளையும் செய்து கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்!

ஜோபைடன் கட்சியினருக்கு ஜெலன்ஸ்கியின் வெற்றி மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அது தவிர மத்திய கிழக்கு நாடுகளில் ரஷ்யாவின் கை ஓங்கி விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

இஸ்ரேல் ஓரண்டை இழுத்து விடும் ஹமாஸ் ஹௌதி மற்றும் ஹூத்தி போராளி குழுக்களின் ஆக்காத்தியங்களை சமாளிக்க முன் எப்போதும் இல்லாத வகையில் தனது கடற்படை கப்பல்கள் தொகுதிகளை மத்திய கடல் பிராந்தியத்தில் கொண்டு வந்து நிறுத்தி வைத்திருக்கிறது அமெரிக்கா. இது ஆஃப்கானிஸ்தானில் செய்த செலவினங்களை காட்டிலும் கூடுதலாக தற்சமயம் செலவு செய்து வருகிறது அமெரிக்கா என்கிறார்கள்.

எல்லாம் இந்த ஆண்டு இறுதி வரையில் தான் என்பது அனைவருக்கும் நன்கு தெரிகிறது; அதிலும் குறிப்பாக ஜெலன்ஸ்கிக்கு! அதைத் தொடர்ந்துதான் கடந்த ஜூன் மாதம் இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவது உறுதியானதும் பம்ம ஆரம்பித்த ஜெலன்ஸ்கி, டிரம்ப் மற்றும் பைடன் நேருக்கு நேர் நின்று விவாதம் நிகழ்ச்சிக்கு பின் நேரிடையாகவே டரம்ப்பிடன் சரண் ஆனார்.

ஆனால் இதனை மேற்கு உலகம் ரசிக்கவில்லை! அவரையும் பின்வாங்க விடவுமில்லை. அப்போது தான், தான் யாருடைய வாலைப் பிடித்துக் கொண்டு இருக்கிறோம் என்பதையே முழுமையாக உணர்ந்து கொண்டு இருக்கிறார் ஜெலன்ஸ்கி!

இதனிடையே கடந்த மாதம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா விஜயம் செய்திருந்தார். இதோ இன்று உக்ரைன் பயணம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களுக்காக அரசியல் சதுரங்கத்தில் சடுகுடு ஆடிக் கொண்டு இருக்க, இந்தியாவும் தன் பங்கிற்கு காய்களை நகர்த்த ஆரம்பித்து விட்டது.

ஒரு பக்கம் சீனா தனது கச்சா எண்ணெய் வர்த்தகத்தை கொஞ்சம் கொஞ்சமாக ரஷ்யாவிடம் இருந்து நகர்த்தி மத்திய கிழக்கு நாடுகளில் நிலை கொள்ள ஆரம்பிக்க, தற்சமயம் முதல் இடத்திற்கு இந்தியா முன்னேற்றம் கண்டு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குகிறது.

அமெரிக்க – உக்ரைன் – ரஷ்யா என உள்ள முக்கோண அரசியல் சித்து விளையாட்டை இந்தியா முடிவுக்கு கொண்டு வரப் பார்க்கிறது. அதேசமயம் சீன ரஷ்யாவின் நீண்ட கால திட்டமிடலில் ஓர் பகுதியாக அமெரிக்காவை ஆசிய பிராந்தியத்தில் கால் வைக்க விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறது. இதில் இந்திய நலனும் இருப்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள் நம்மவர்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவைப் பிடித்தாட்டும் ஜெலன்ஸ்கியை ஏதோவொரு விதத்தில் கட்டுப்படுத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சென்றிருப்பதாகவே மேற்கு உலகம் நம்புகிறது. போதாக்குறைக்கு லண்டன் பற்றி எரியும் இத்தருணத்தில், மோடியை அவர்களால் பெரியதாக முறைத்துக் கொள்ளவும் முடியவில்லை.

சமய சந்தர்ப்பத்தை நன்கு உணர்ந்த நம்மவர்களுக்கும் அடுத்ததாக தேர்ந்தெடுக்கப்படும் அமெரிக்க அதிபர் யார் என்பதை விடவும் அவர்களின் அரசியல் ஆதாரங்களுக்கு நம் இந்திய தேசம் பலிகடா ஆகிவிடக்கூடாது என்பதில் முனைப்புடன் செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.

கடந்த நான்கு ஆண்டுகளாக இல்லாத வகையில் இந்திய சீன உறவில் சில பல ரஸாயன மாற்றங்கள் தென்படத் தொடங்கியிருக்கிறது. கொரனாவிற்கு பின்னான காலத்தில் தடை செய்யப்பட்டுள்ள சீனாவிற்கான நேரடி விமான சேவையை மீண்டும் புதுப்பிக்க ஆயத்தப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்க இருக்கிறார்கள். அது தவிர எல்லை பிரச்னைகளைத் தவிர்த்து மற்ற உறவுகளை ஏற்படுத்தவும், மின்னணுப் பொருட்களை மற்றும் அது சார்ந்த உபகரணங்களை மீண்டும் இறக்குமதி செய்யவும் முடிவு மேற்கொண்டு வருகிறார்கள்.

கடந்த நான்கு வருடங்களாக சுமார் 100 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகம் என இருந்தது, தற்போதைக்கு இந்தக் காலாண்டில் மட்டுமே 75 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகம் என மாறியிருப்பதை கொண்டே பலவற்றை யூகிக்கலாம் என்கிறார்கள் அவர்கள்.

இதனையும் தாண்டி, சீனா தனியாகவும் தைவான் தனியாகவும் இந்திய நிறுவனங்களின் முதலீடு மற்றும் மூலோபாய வர்த்தகப் பங்களிப்பை கொண்ட ஒரே நாடாக நம் இந்திய தேசம் மாறி வருகிறது என்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்கள் உலக வர்த்தக ஆய்வாளர்கள்.

பற்பல முரண்பாடு கொண்டவர்களையும் ஒரே நேரத்தில் கையாளும் பக்குவத்திற்கு நம் இந்திய தேசம் பரிமளித்து வருவதையே இது காட்டுகிறது. இதில் வித்தகர்களாக நம்மவர்கள் மாறி வருகிறார்கள். உதாரணத்திற்கு நம் தமிழக அரசியல் கள நிலவரமும் அதில் ஒன்று தான் போலிருக்கிறது.

என்ன நடக்கிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்!

– ஜெய் ஹிந்த் ‘ஸ்ரீராம்’