இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
மதுரை அண்ணாநகர் பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி பாதுகாப்பு கருதி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதியிலேயே நிறுத்தம்.
5 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மதுரை அண்ணா நகர் பகுதியில் “WOW MADURAI” என்ற தலைப்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் வாரத்தின் முதல் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் கொண்டாடுவதற்காக மதுரை மாநகராட்சி ஏற்பாட்டின் படி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல்துறையில் உரிய அனுமதி பெற்று ஹேப்பி ஸ்டிரிட் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், மாநகராட்சி எதிர்பார்த்த பொது மக்களை விட ஏராளமான மதுரை மாநகர் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான இளைஞர் இளம் பெண்கள் மற்றும் குடும்பத்தினருடன் வந்த பொது மக்களால் மதுரை அண்ணா நகர் முதல் மேலமடை வரை 50,000 மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு இருந்தனர்.
மேலும், நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி, தமிழக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா மாநகராட்சி ஆணையாளர் , மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தளபதி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் இருந்ததால் மேடையின் முன்பு செல்வதற்கு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் முண்டியடித்துக் கொண்டனர்.
இதில், சிலர் பேரிக்கடை உடைந்து உள்ளே விழுந்ததால் பலருக்கும் காயம் ஏற்பட்டது. கூட்ட நெருச்சலில் சிலருக்கு மூச்சுமுட்டுதல் மற்றும் மயக்கம் அடைந்தனர். தொடர்ந்து, காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் வலியுறுத்தி வந்தனர்.
முறையான பாதுகாப்பு வசதிகள் எதுவும் ஏற்படுத்தித் தராமல், மதுரை மாநகராட்சி நிர்வாகத்தினர் ஹாப்பி ஸ்ட்ரீட் என்று நிகழ்ச்சி ஏற்படுத்தி இருந்தது. ஆனால், அவசரத்திற்காக பாதுகாப்பு கருதி 108 ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட எந்த ஒரு வசதியும் ஏற்படுத்தி தரவில்லை. காவல்துறையினர் கட்டுக்கடங்காத அளவு கூட்டம் நிறைந்து இருந்ததால், ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி ஆனது பாதிலேயே நிறுத்தப்பட்டது.
இதனால், பெரிய அளவு எதிர்பார்த்து வந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
X தளத்தில் ஆர்.எஸ்.எஸ்., குறித்து அவதூறு பிரசாரம் செய்து வரும் திமுக., ஐடி விங்., மன்னிப்பு கேட்டு பதிவை நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தென்பாரத செயலாளர் எஸ்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது…
ஆர். எஸ். எஸ் என்றழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் 1925ம் ஆண்டு துவங்கப்பட்டு கடந்த 98 ஆண்டுகளாக பாரத தேசத்தை மீண்டும் உன்னத நிலைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறது. சுய ஒழுக்கம் கட்டுப்பாடு, தேசபக்தி நிறைந்த இளைஞர்களை உருவாக்கி வருகிறது.
இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து நமது பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை காக்கும் பணியை ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தேசத்திற்கும், மக்களுக்கும் நெருக்கடி, துன்பம் வரும் போது தன்னலம், சுய விளம்பரம் இல்லாமல் ஓடிச்சென்று துயர் துடைப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் என்பதை மக்கள் அறிவார்கள்.
சீனா, பாகிஸ்தான் நாடுகள் நம் மீது படையெடுத்த போது ராணுவ வீரர்களுக்கு துணை நின்ற ஆர்எஸ்எஸ் தொண்டர்களை 1963 ம் ஆண்டு நடந்த குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் ராணுவத்தினருடன் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களையும் பங்கேற்கச் செய்தார் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு. நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு முதற்கொண்டு சுனாமி தாக்குதல் வரை மக்கள் உயிர், உடமைகளை இழந்த போது அவர்களை காப்பாற்ற ஓடி சென்றவர்களும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களே.
கொரோனா பெருந்தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்ட போது தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் மக்களின் மருத்துவம், உணவு தேவைகளை பூர்த்தி செய்ய ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் முன் களத்தில் நின்று பணியாற்றியதை நாடறியும். இதை தவிர நாடு முழுவதும் 1.50 லட்சம் நிரந்தர சேவைப் பணிகளை ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சுய விளம்பரமின்றி தாய்நாட்டு சேவை என கடமையாற்றி வருகின்றனர்..
இந்நிலையில் தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக கட்சியின் ஐடி விங்கன் அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு குறித்த உள்நோக்கத்துடனும், மக்கள் மத்தியில் கலவரத்தையும், அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையிலும் பதிவு ஒன்றை 22.9.2023 அன்று வெளியிட்டுள்ளனர்.
அந்தப் பதிவில், “சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாத செயலை செய்தவன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த நாதுராம் விநாயக் கோட்சே. இதன் மூலம் புல்புல் சாவர்க்கரின் சதித்திட்டத்தை செயல்படுத்தி அமைதியின் வடிவமான மகாத்மா காந்தியை படுகொலை செய்து நாட்டின் அமைதியை சீர்குலைக்க தொடங்கியது பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் ” என்ற தலைப்பில் ஆதாரமற்ற குறிப்புகளோடு வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
1948 ல் மகாத்மா காந்தியடிகள் கொலை செய்யப்பட்ட போது அரசியல் காரணங்களுக்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பை காங்கிரஸ் தடை செய்தது. ஆனால் மகாத்மா காந்தியடிகள் கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டு தடை விலக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்க 1966 ல் அமைக்கப்பட்ட நீதியரசர் ஜே.எல். கபூர் கமிஷன், 457 ஆவணங்கள் 101 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதில் மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப் பட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் இல்லை, இந்த கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் தொடர்பில்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப் பட்டிருந்தது.
ஆனால் இதை மறைத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2014ல் மும்பை தானேவில் நடந்த கூட்டத்தில் இதே குற்றச்சாட்டை கூறினார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 25.8.2016ல் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை காந்தி கொலை வழக்கில் தொடர்புபடுத்தி பேசவில்லை என்று கூறி பின்வாங்கினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சீதாராம் கேசரி, அர்ஜீன்சிங் ஆகியோரும் இதே போல பேசி, பின்னர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.
ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகி விடும் என்று நம்பும் திமுகவின் ஐடி விங்க் தற்போது விஷமத்தனத்தோடு மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆர் எஸ் எஸ் அமைப்பை தொடர்பு படுத்தியுள்ளதோடு, ஜனநாயக முறையில மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் ஆர் எஸ் எஸ் அமைப்பை. பயங்கரவாத அமைப்பு என்றும் குறிப்பிட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் தமிழக அமைச்சராக பதவி ஏற்றுள்ள ஒருவரின் தலைமையில் செயல்படும் திமுக ஐடி விங்கின் இந்த செயலை ஏற்றுக் கொள்ள முடியாது.
மக்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அவப்பெயரையும் களங்கத்தையும் ஏற்படுத்தும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் உள்ள இந்த பதிவை உடனே நீக்குவதோடு, திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இல்லையெனில் திமுக ஐடி விங்க் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்…
பெண்களுக்கு எம்.பி, எம்.எல்.ஏ இடங்கள் ஒதுக்கீடு. அவசியம் என்ன? அவசரம் என்ன?
— ஆர். வி. ஆர்
மக்களவையிலும் மாநில சட்டசபைகளிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யும் அரசியல் சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இதற்கு எம்.பி-க்களின் அதிக பட்ச அமோக ஆதரவும் கிடைத்தது. இந்த இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வர குறைந்தது ஐந்து ஆண்டுகள் ஆகும் – நிபந்தனையாக இதற்கு விதிக்கப்பட்ட சில நடவடிக்கைகள் நீண்ட காலம் பிடிக்கும் என்பதால்.
மத்திய மாநில சட்டசபைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் ஆவதை எல்லா அரசியல் கட்சிகளும் பேச்சுக்கு வரவேற்கின்றன, ஆனால் அந்த இட ஒதுக்கீட்டை எல்லாக் கட்சித் தலைவர்களும் உளமார வரவேற்பார்களா? நிச்சயமாக இல்லை. ஏன் என்று பார்க்கலாம்.
உலகெங்கும் அரசியல் என்பது ஒரு பொதுவெளி அதிகார ஆட்டம். ஆட்சியும் நிர்வாகமும் அதில் அடங்கும். திரைமறைவு வேலைகளும் அதில் உண்டு. ஒரு கட்சியின் தலைவன் என்பவன், அதிகாரத்தைப் பிரயோகித்து செயல்பட வேண்டியவன். அதிகார சக்தியிலும் யுக்தியிலும் கட்சிக்குள் அவனை விடக் குறைந்தவர்கள் அந்தத் தலைவனுக்குக் கட்டுப்பட்டு கட்சியில் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்டத் தலைவர்களாக இருப்பார்கள்.
அரசியல் என்னும் அதிகார ஆட்டத்தில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் ஆண்கள். பெண்களில் மிகக் மிகக் குறைவான சதவிகிதத்தினர் மட்டும் அத்தகைய ஆர்வம் கொண்டவர்கள். ஜெயலலிதா, மம்தா பானர்ஜி போன்றவர்கள் அரிது. ஆகையால் அரசியலுக்கும் சட்டசபைகளுக்கும் தாமாக வர நினைக்கும் பெண்கள் சுதந்திரமாக வரட்டும் என்ற அளவில் சட்டம் இருந்தால் போதுமானது. அப்படியான சட்டம் ஏற்கனவே நமக்கு இருக்கிறது. அதன்படி இப்போது நமது பாராளுமன்றத்தில் சுமார் 15 சதவிகிதம், மாநில சட்டசபைகளில் சுமார் 10 சதவிகிதம், என்ற சராசரி அளவில் பெண் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இப்படித்தான் எல்லா அரசியல் கட்சிகளின் உண்மையான எண்ணமும் இருக்கும் – அதில் தவறில்லை.
இயற்கையிலேயே பெண்களுக்கு இந்த அதிகார ஆட்டத்தில் ஆர்வம் இல்லை என்பதால் அவர்கள் மதிப்புக் குறைந்தவர்கள் அல்ல. அவர்களும் சமூகத்தில் ஆண்களின் அளவிற்கு முக்கியமானவர்கள்தான். இது ஒரு புறம். மற்றொரு புறத்தில், பெண்களுக்கே அந்த ஆர்வம் அதிகம் இல்லை என்றாலும் எல்லாக் கட்சிகளும் மத்திய மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதைக் கைதட்டி வரவேற்கிறார்கள் – மனம் விரும்பி அல்ல. இந்த விஷயத்தில் கட்சிகளின் எண்ணத்திற்கும் பேச்சுக்கும் இடையே உள்ள முரண்பாட்டிற்கு என்ன காரணம்?
“பெண்களுக்கும் தாய்மார்களுக்கும் நாங்கள் குறிப்பாகத் துணை நிற்போம்” என்று பேசி எல்லாக் கட்சிகளும் பெண்களின் ஓட்டிற்கு வலை வீசுகின்றன. பாஜக இந்தப் பேச்சை செயலிலும் காட்டி இருக்கிறது (உதாரணம்: தகுதியுள்ள பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு, வீடுகளில் டாய்லெட்டுகள் கட்ட உதவி) என்பதும் உண்மை.
பெண்களைக் கவரும் இந்தப் போட்டியில் முன்னேற, “மத்திய மாநில சட்ட சபைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்” என்று ஒரு கட்சி சிறிதாக மூச்சு விட்டாலும், மற்ற கட்சிகளும் “ஆஹா, நாங்களும் அதைத்தான் கேட்கிறோம்! முன்னரே கூட கேட்டோம்!” என்று வேறு வழி இல்லாமல் சொல்கிறார்கள் – அப்படியான இட ஒதுக்கீடு பெண்களுக்குக் கிடைத்து விடக் கூடாது என்ற வேண்டுதலோடு. அது உண்மையில் கிடைத்து விட்டால், தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளைப் பெண்களுக்கு அளித்துவிட்டு இதுவரை தங்கள் கட்சியில் ஆண்கள் போட்டியிட்ட தொகுதிகளை, அவற்றின் எண்ணிக்கையை, எந்தக் கட்சி மகிழ்வுடன் குறைத்துக் கொள்ளும்?
நினைத்துப் பாருங்கள். தமிழகத்தில் இப்போது உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு என்பது 13. எந்தப் பெரிய கட்சி, அல்லது அது தலைமை வகிக்கும் கூட்டணி, தமிழகத்தில் 13 இடங்களைப் பெண் வேட்பாளர்களுக்கு முழுமனதுடன் வழங்க விரும்பும்? ஆனாலும் பாராளுமன்றத்தில் அந்தக் கட்சிகள் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை ஆதரித்து ஓட்டளித்தன. இந்த இட ஒதுக்கீடு நடைமுறை ஆகும் போது, பெரிய கட்சிகள் தங்கள் கூட்டணியில் உள்ள சிறு சிறு கட்சிகளுக்குக் கூடியவரை பெண்கள் தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, தங்கள் கட்சியில் உள்ள ஆண் வேட்பாளர்களுக்கு அதிகமான பொதுத் தொகுதிகளைத் தர முயலும்!
பெண்களுக்கான இந்த இட ஒதுக்கீட்டிற்கு எல்லாக் கட்சிகளின் மனம் நிறைந்த ஆதரவு உண்டென்றால், மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு இதுநாள் வரை நடந்த தேர்தல்களில் அந்தக் கட்சிகள் தாங்களாகவே மூன்றில் ஒரு பங்கு இடங்களில் பெண் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கலாமே? அந்தப் பெண் வேட்பாளர்களில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்டவர்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்குத் தேவையான பங்கையும் அந்த அந்தக் கட்சிகளின் விருப்பப்படி அளித்திருக்கலாம். அதைச் செய்ய சட்டத்தின் அனுமதியோ நிர்பந்தமோ தேவையும் இல்லையே?
2024-ல் நடக்கப் போகும் மக்களவைத் தேர்தலிலும் அரசியல் கட்சிகள் பெண்களுக்கான மூன்றில்-ஒரு-பங்கு இட ஒதுக்கீட்டை அனேகமாகப் பின்பற்றப் போவதில்லை – சட்டத்தின் கட்டாயம் அப்போது வந்திருக்காது என்பதால். எல்லா அரசியல் கட்சிகளும் பெண்களின் வாக்குகளைக் குறி வைக்கப் பொதுவெளியில் பாசாங்கு செய்து, தங்கள் பாசாங்கிற்குத் தாங்களே இரை ஆகி, இந்த அரசியல் சட்ட திருத்தத்தை இப்போது செய்திருக்கிறார்கள்.
ஆண்கள் பலருக்கும் இந்த சட்டத்தினால் சாதாரணப் பெண்களுக்கு விளையும் நடைமுறைப் பயன்கள் பற்றிய சந்தேகம் இருக்கும். ஆனால் அதைப் பற்றிக் கேட்டால் தாங்கள் பெண்களின் முன்னேற்றத்தை எதிர்க்கும் பழமைவாதிகள் என்ற பெயர் வரலாம் என்று பெரும்பாலான ஆண்கள் பேசாமல் இருப்பார்கள். பெண்கள் பலரும் அவர்களுக்கான இந்த இட ஒதுக்கீட்டை வரவேற்பார்கள். தாங்கள் சார்ந்த நாடு, மொழி, மதம், ஜாதி, பாலினம் போன்ற வகைகளில் எல்லாருக்கும் ஒரு இனப் பற்றுதல் இருக்கும். அந்த இயற்கையான இனப் பற்றுதல் காரணமாக, இந்தப் புதிய இட ஒதுக்கீட்டைப் பலதரப்பட்ட பெண்களும் வரவேற்பார்கள்.
இதில் ஒரு முக்கியக் கேள்விக்கு இடம் உண்டு. பாஜக எதற்கு இந்த சட்ட திருத்தத்தை இப்போது படு அவசரமாகப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து, அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் – எல்லாரும் டி.வி-யில் பார்க்கிற மாதிரி – அவர்கள் முகத்தில் சுரத்தில்லாமல் அவர்களை உள்ளூர அழ வைத்தது? இந்த சட்டத்தையும் ஆதரிக்க வைத்தது? இந்த சட்ட திருத்தம் பாஜக-வின் தேர்தல் வாக்குறுதி என்பது ஒரு சிறிய காரணம் தான். இதன் உண்மையான காரணம் எதிர்க் கட்சிகள் அறிந்தது, ஆனால் அவர்களும் வெளியில் சொல்ல முடியாதது.
சாமர்த்திய அரசியல் செய்யாமல் ஒரு பெரிய தலைவன் தேர்தலில் ஜெயிக்க முடியாது, நாட்டுக்கு நல்லதும் செய்ய முடியாது. பிரதமர் நரேந்திர மோடியும் இந்த அடிப்படை உண்மையை நன்கு அறிந்தவர். 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் பாஜக-விடம் பெரிதாகத் தோற்ற எதிர்க் கட்சிகள் இப்போதும் ஒரு கூட்டணி அமைத்து, 2024 மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக-வைத் தோற்கடிக்க வழி தேடுகின்றன. அந்த எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் விபரீதமானவர்கள்.
ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, நீதீஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், அகிலேஷ் யாதவ், அரவிந்த் கேஜரிவால், பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, ஷரத் பவார், மு. க. ஸ்டாலின், கம்யூனிஸ்டுகள் போன்றவர்கள் மத்தியில் ஆட்சிக்கு வருவதை நினைத்தாலே நமக்கு சித்தம் கலங்கும், குலை நடுங்கும். அவர்கள் பாஜக-வைத் தோற்கடிக்க எடுக்கும் எந்த முயற்சியையும் பாஜக உதாசீனம் செய்ய முடியாது. இந்த எதிர்க் கட்சித் தலைவர்களை ஆட்சியில் இருந்து தள்ளிவைத்து மக்கள் அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும், நாட்டையும் முன்னேற்றி வலுவாக்க வேண்டும் என்பதற்காக, நரேந்திர மோடி ஒன்று நினைத்திருக்கலாம்.
எதிர்க் கட்சிகள் எதிர்ப்பே சொல்ல முடியாதபடி பாராளுமன்றத்தில் அவர்கள் வாயைக் கெட்டியாக அடைத்துவிட்டு, அனைத்துப் பெண் வாக்காளர்களையும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பரவலாக ஈர்ப்பதற்கு இன்னொரு யுக்தியாக இந்த அரசியல் சட்ட திருத்தத்தை மோடி எண்ணியிருப்பாரோ? அந்தத் தேர்தலில் இது பாஜக-வின் சக்தியை இன்னும் உறுதி செய்யும், அதிகப் படுத்தும். இந்த ஒரு காரணம் போதுமே – தேச நலனில் நாம் இந்தச் சட்டத்தை வரவேற்க?
தென்திருப்பதி எனப்படும் தான்தோன்றிமலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்:
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
புரட்டாசி மாதம் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், இன்று முதல் சனிக்கிழமை என்பதால் ஆன்மீக பக்தர்கள் இன்று முதல் தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் தான்தோன்றி மலை வெங்கடரமனன் ஆலயத்திற்கு சுவாமி தரிசனம் செய்ய கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர்.
ஆலயத்தை சுற்றியுள்ள பல்வேறு திருமண மண்டபங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
நீண்ட வரிசையில் இன்று சாமி தரிசனம் செய்து வரும் பக்தர்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
2024 ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்குமாறு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, உலக நாடுகளின் தலைவர்களை அழைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா அழைக்கப்பட்டிருந்தார்.
அதேபோல, இந்தாண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தாஹ் எல் சிசி பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, வரும் 2024 ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுகக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இத்தகவலை, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து எரிக் கார்செட்டி கூறுகையில், “இந்தியாவில் 2024 ஜனவரி மாதம் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்துகொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.
இதன் மூலம், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் நீடித்த கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார். 2023 ஜூன் மாதம் பிரதமர் மோடியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வாஷிங்டன் பயணத்தின் சாதனைகளை செயல்படுத்துவதற்கான கணிசமான முன்னேற்றத்திற்கு தலைவர்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்” என்று தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா தலைமையிலான ஜி20 உச்சிமாநாட்டில் ஜோ பைடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அப்போது, இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் இந்தியாவும் அமெரிக்காவும் 7ஆவது மற்றும் கடைசியாக நிலுவையில் இருந்த உலக வர்த்தக அமைப்பின் தகராறையும் தீர்த்துக் கொண்டன. பிரதமர் மோடியின் அமெரிக்க அரசு பயணத்தின்போது 6 பிரச்னைகள் தீர்க்கப்பட்டன.
மேலும், நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிதலின் அடிப்படையில் நமது பன்முக உலகளாவிய நிகழ்ச்சி நிரலின் அனைத்து பரிமாணங்களிலும் இந்தியா-அமெரிக்க மூலோபாய கூட்டாண்மையை மாற்றும் பணியைத் தொடர இரு தலைவர்களும் தங்கள் அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
Governor Ravi in a function at Raj Bhavan’s Bharathiar Mandapam emphasised the relevance of teachings of Ramanujacharya and Babasaheb for social equality and cohesion necessary for building a developed & capable Bharat under the all inclusive leadership of #PMModi in #AmritKaal.
5th Ambedkar – Ramanujacharya Awardees for 2023 & 4th P. Kakkan Lifetime Achievement Award
5th Ambedkar – Ramanujacharya Awardees
1.The Tamil Nadu Young Thinkers Forum confers the Ambedkar – Ramanujacharya Award to Thiru M.S. Saravanan in the field of education. He is currently the head of schools at Shrishti Schools (CBSE and Matric) in Vellore. He holds honorary positions as Chairperson of Thiruvannamalai-Vellore Sahodaya School Complex, City Co-ordinator for CBSE, Vellore District, City Co-ordinator for the national testing agency, Vellore, and Chief Commissioner, Vellore, for Hindustan Scouts and Guides. He has organized several cleanliness drives as part of Swachch Bharat Abhiyan, awareness programs to reduce child labor, and cultural education for downtrodden government students. He has authored several publications, such as Teaching and Learning in the 21st Century. I am a teacher at heart.
2.The Tamil Nadu Young Thinkers Forum confers the Ambedkar – Ramanujacharya Award to Thiru Vanumamalai Ramanujadasan in the field of spirituality and community leadership. He is currently the Managing Trustee of the Thirukulathar Sri Ramanuja Trust and the Nandanar Trust. He has 25 years of service to the downtrodden, especially Dalits and tribals. He is focused on enabling cultural awareness education for the downtrodden. His area of focus is also on empowering drop-out children and those affected by child labor through education, housing, and employment. He also works among HIV/AIDS-affected children by providing housing, education, and employment, including financial support. He works in places like Tenkasi, Tirunelveli, Tuticorin, Kanyakumari, Sriperumbudur, Vanarapettai, and Poonamallee, to name a few.
3. The Tamil Nadu Young Thinkers Forum confers the Ambedkar – Ramanujacharya Award to Thiru Devi Selvam in the field of physical education and sports. He is a dedicated physical education educator with three decades of experience in training sports players and helping them improve their game skills and lives through sports. He continues to work in several government schools and has assisted a sports-supporting NGO aimed at supporting underprivileged children. He is currently the President of the Tamil Nadu State PE (Physical Education) and PD (Physical Director) Association. He is currently working at the Government Madrasa Higher Secondary School. He has more than 75 championships in multiple tournaments to his name.
4.The Tamil Nadu Young Thinkers Forum confers the Ambedkar – Ramanujacharya Award to Dr. G. Raghuram in the field of Indian Knowledge System (Yoga). He is currently an Assistant Professor at the Meenakshi Academy of Higher Education and Research. He is also a Yoga teaching evaluator as part of the Yoga Certificate Board of Ministry of AYUSH, Government of India. He continues to take Yoga to cure mentally challenged problems, stress, and obesity. He has two decades of experience in Yoga practice. He is the Founder and Managing Trustee of Mahaveer Illam Charitable Trust, Chennai, a Residential Home for the Rehabilitation of the Mentally Ill, since 2008. He is known to have adopted several therapies from Yoga for curing inmates at his trust.
5.The Tamil Nadu Young Thinkers Forum confers the Ambedkar-Ramanujacharya Award to Kum. T. Thayabari for community leadership. Hailing from the Nilgiri district in Tamil Nadu, she is a tribal woman working to uplift and empower tribal communities for the last 20 years in over 12 districts of Tamil Nadu. She is the state head of Vanavasi Seva Kendram for Tamil Nadu and Kerala and previously served as district head for Nilgiri district. Some of her works have been tailored around imbibing patriotism, cultural education, community harmony, and indigenous sustainable living. Her work also focuses on spreading general knowledge and awareness through cultural art forms such as dance and drama and equipping tribal citizens through information technology. She also caters to empowering women through the profession of tailoring and helping them avail of scholarship opportunities, as well as through 150+ village education forums. She promotes yoga and martial arts in her community. She aims to prepare students for the Olympics. She also ensures the benefits of central government schemes reach tribal citizens. She works amongst six tribal communities in TN: Kota, Kuramba, Toda, Paniya, Irula, and Kattunayakan.
4th P. Kakkan Lifetime Achievement Awardee
The Tamil Nadu Young Thinkers Forum confers the P. Kakkan Lifetime Achievement Award to Thiru K. Murugaraj in the field of spirituality and social work. He is the Founder and Head of the Athma Sarana Alayam Thapovanam Trust and Athma Sarana Alayam Shelter Trust in Thiruvannamalai since 2004. A civil engineer and businessman, he has been committed to spirituality and social work for the last three decades. He hails from Tindivinam and lives in Selaiyur, Tambaram, in Chennai. Noticing caste inequities in society, he is fully committed to enabling social cohesion and has resolved to work towards eliminating every man-made division. The Trust is housed in Thiruvannamalai. He has worked relentlessly to renovate several temples in and near his home town of Selaiyur and in Somasipadi, near Thiruvannamalai. He has taken members of socially disadvantaged communities to the holy shrine of Sabaramalai every year. He has also organized several pada yatras (travels by foot) to Tirupati and Sabarimalai. He is also a certified Yoga teacher. His spiritual guru is Sadguru Subhirananda Swami. He has also gotten enlightened from Shri Yogi Ram Sarat Kumar, also known as Visiri Swamigal, Katpadi Ozhukuswami, Vallimalai Balananda, Karumarapatti Velayananda Swami, and Ulundhurpettai Sankaralingam Swami. He owes it to them to learn all the pranayama and yogic practices. His trust caters to empowering the socially disadvantaged through personal development, spirituality, self-discipline, and entrepreneurship, to name a few. During the festival seasons in Thiruvannamalai, through the Trust, he organizes free food distribution as well as plays his part in organizing security for all. He has been working with the motto ‘serve and motivate to serve’. Through his trust, they have ensured free books and facilitated fee payments for the socially disadvantaged for the purpose of education. Among the future plans of the trust is to build a 40-bed hospital for medical purposes. His spiritual motto is’ Be enlightened and enlighten others’. In the Trust’s temple, the 24-foot Rudrakasha lingam and Ardhanareeswara Sahasra lingam are standout highlights. The trust is also committed to training future priests and spreading spiritual knowledge.
ஆதியோகியில் நாளை பிரம்மாண்டமாக நடைபெறும் ‘ஈஷா கிராமோத்சவம்’ திருவிழா!மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
பாரதத்தின் மாபெரும் கிராமிய விளையாட்டு திருவிழா என்ற பெருமையை பெற்றுள்ள ‘ஈஷா கிராமோத்வசம்’ திருவிழா கோவை ஆதியோகி முன்பு நாளை (செப்.23) பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு சத்குரு மற்றும் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் திரு. அனுராக் தாகூர் அவர்கள் பரிசுகள் வழங்கி கெளரவிக்க உள்ளனர்.
ஆண்களுக்கான வாலிபால் போட்டி, பெண்களுக்கான த்ரோபால் போட்டி, இருபாலாருக்குமான கபடி போட்டிகள் என 4 பிரதான போட்டிகளின் இறுதிப் போட்டிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆதியோகி முன்பு நடைபெறும். இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்து தேர்வாகியுள்ள அணிகளின் வீரர், வீராங்கணைகள் மோத உள்ளனர்.
இதில் பங்கேற்கும் வீரர்கள் தொழில்முறை வீரர்கள் அல்ல. மூட்டை தூக்கும் கூலி தொழிலாளிகள், விவசாயம் மற்றும் மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்கள் என வித்தியாசமான பின்புலங்களில் இருந்து வந்து விளையாட்டு வீரர்களாக மாறியவர்கள் என்பது இத்திருவிழாவின் சிறப்பாகும்.
இப்போட்டிகளை காண்பதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நாளை ஈஷாவிற்கு வருகை தர உள்ளனர். பிரதான விளையாட்டு போட்டிகளை தவிர்த்து பார்வையாளர்கள் பங்கேற்பதற்காக வழுக்கு மரம், உறியடி, கயிறு இழுக்கும் போட்டி, சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், கோலப் போட்டி உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய போட்டிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும். மேலும், கரகாட்டம், ஒயிலாட்டம், பொய் கால் குதிரையாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். அத்துடன் கிராமிய உணவு திருவிழாவும் நடைபெற உள்ளது. கிராமியத்தை கொண்டாடும் இவ்விழாவில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம்.
இறுதிப் போட்டியில் முதலிடம் பெறும் வாலிபால் அணிக்கு ரூ. 5 லட்சம், த்ரோபால் அணிக்கு ரூ.2 லட்சம், ஆண்கள் கபடி அணிக்கு ரூ. 5 லட்சம், பெண்கள் கபடி அணிக்கு ரூ.2 லட்சம் என உற்சாகமூட்டும் பரிசு தொகைகளும், பாராட்டு கேடயங்களும் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சி தமிழின் முன்னணி தொலைக்காட்சிகள் மற்றும் ஈஷாவின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் சேனல்களில் நேரலை ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது.
ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கிய 15-வது ஈஷா கிராமோத்சவம் திருவிழாவில் சுமார் 60,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் சுமார் 10,000 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்கட்ட கிளெஸ்டர் போட்டிகள் 194 இடங்களில் நடத்தப்பட்டது.
கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வதை நுகா்வோா் விரும்பவில்லை என ஆவின் நிறுவனம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெகிழிப் பொருள்களுக்கான தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய வழக்குகளை விசாரித்து வரும் சென்னை உயா்நீதிமன்றம், ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பதற்கு பதில் கண்ணாடி பாட்டிலில் அடைத்து விற்றால் நெகிழியின் பயன்பாடு தவிா்க்கப்படும் என கூறியிருந்தது.
மேலும், பாட்டிலில் அடைத்து விற்க முடியுமா? என ‘சா்வே’ நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த சா்வேயில், சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள திருமங்கலம் சாலை, குமாரசாமி நகா், திருநகா் மற்றும் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளைச் சோ்ந்த நுகா்வோா், பாட்டிலில் பால் விற்பனை செய்யும்போது விலை அதிகமாக இருக்கும். எனவே, நெகிழி உறைகளிலேயே தொடர விரும்புவதாக மக்கள் தெரிவித்துள்ளனா்.
எனவே, நுகா்வோரின் விருப்பத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து, நீதிமன்றம் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
முன்னதாக, “கண்ணாடி பாட்டிலில் பால்”, உயர்நீதிமன்றத்தை ஏமாற்றுகிறதா..? ஆவின் நிர்வாகம்.” என்று கேள்வி எழுப்பி, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ பொன்னுசாமி அறிக்கை வெளியிட்டார். அவரது அறிக்கையில்,
“மதுபானங்களை பாட்டிலில் விற்பனை செய்யும் போது ஆவின் பாலினை பாட்டிலில் விற்பனை செய்ய முடியாதா..?”, “மது போதையில் பாட்டிலை கவனமாக கையாளும் போது, சுயநினைவு உள்ள மக்களால் பாட்டிலை கையாள முடியாதா..?” என கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் “ஆவின் பாலினை நெகிழி உறைகளுக்குப் பதிலாக கண்ணாடி குடுவையில் ஏன் விற்பனை செய்யக் கூடாது..?” எனவும் கேள்வி எழுப்பி அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில் நேற்றைய (21.09.2023) தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆவின் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் நகைப்பிற்குரியதாகவும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உள்ளபடியே கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆவின் நிர்வாகம் செயலாற்றியதா..? என்கிற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
ஏனெனில் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை கண்ணாடி பாட்டிலில் விற்பனை செய்வது தொடர்பாக தமிழகத்தில் சுமார் 7.5கோடி மக்கள் வாழும் 38மாவட்டங்களில் உள்ள மக்களிடமிருந்து கருத்துக்களை கேட்காமல், வெறும் 2மாவட்டங்களில் குறிப்பாக சென்னையில் ஒரே பகுதியில் (வில்லிவாக்கம்) 5இடங்களிலும், கோவை மாவட்டத்தில் 2இடங்களிலும் என மொத்தம் 7இடங்களில் மட்டும் அது தொடர்பாக “சர்வே என்கிற பெயரில் நாடகம்” நடத்தி விட்டு, அதனடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கும் ஆவின் நிர்வாகத்தை நினைத்து அழுவதா..? இல்லை தமிழக அரசின் செயலை நினைத்து சிரிப்பதா..? என தெரியவில்லை.
நெகிழி பயன்பாட்டை குறைக்க பால் உற்பத்தி, விநியோகம், விற்பனை என நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள ஒரு விசயத்திற்கு மாற்றம் கொண்டு வர வேண்டும் என்கிற “நல்லெண்ண (???) அடிப்படையில், மது விற்பனையை உதாரணமாக” கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் போது, 24மணி நேரமும் குளிர்சாதன பெட்டியில் வைக்காமல் விற்பனை செய்யும், “உயிருக்கு தீங்கிழைக்கும் மது விற்பனையோடு”, சில மணி நேரத்திற்குள் குளிர்சாதன பெட்டியில் வைத்து பராமரிக்காவிட்டாலும் கெட்டுப் போகும், “அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விற்பனையை ஒப்பிடுவது ஏற்புடையதல்ல” என்பதையும்,
தமிழகத்தில் தினசரி 84% விற்பனையாகும் தனியார் பால் நிறுவனங்களையுமா பாட்டிலில் பால் விற்பனை செய்ய குறிப்பிடாமல், 16% மட்டுமே விற்பனையாகும் “அரசின் கூட்டுறவு பால் நிறுவனத்தை மட்டும் பாட்டிலில் பால் விற்பனை செய்யச் சொல்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றோ அல்லது “தனியார் பால் நிறுவனங்களையும் இவ்வழக்கில் பிரதிவாதியாக சேர்க்க வேண்டும்” என்றோ நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யாதது ஆவின் நிர்வாகத்தின் மீது அவநம்பிக்கையையே ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நெகிழி உறைகளுக்குப் பதிலாக கண்ணாடி பாட்டிலில் பாலினை அடைத்து விற்பனை செய்வதில் உள்ள அனைத்து விதமான பிரச்சினைகள், அதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து அது தொடர்பான வல்லுனர்களின் கருத்துக்களோடு, பால் முகவர்கள், சில்லரை வணிகர்கள், நுகர்வோர் என அவரவர் தொடர்புடைய சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்பு குழு அமைத்து அவர்களிடம் இருந்தும் முழுமையான அறிக்கையை பெற்று அவற்றோடு, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி, அதில் பெறப்பட்ட மக்களின் கருத்துக்களோடு அனைத்தையும் இணைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தால் ஆவின் நிர்வாகத்தின் வாதம் ஏற்புடையதாக இருந்திருக்கும்.
குறிப்பாக கண்ணாடி பாட்டிலில் பாலினை அடைத்து விற்பனை செய்வதை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் தற்போதுள்ள தொழிற்சாலை கட்டமைப்புகளை மாற்றி விட்டு, கண்ணாடி குடுவையில் அடைத்து உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலை கட்டமைப்புகளை உருவாக்குதல், அதற்கான புதிய கட்டமைப்புகளை உருவாக்க அல்லது மாற்றியமைக்க இணையம் மற்றும் ஒன்றியங்களில் ஏற்படும் செலவுகள், பால் பண்ணைகளில் உற்பத்தி செய்து அதனை வாகனங்கள் மூலம் விநியோகத்திற்கு அனுப்புவதில் உள்ள சிரமங்கள்,
பால் முகவர்கள் வாயிலாக நுகர்வோருக்கு சென்று சேரும் வரை பால் கெட்டுப் போகாமல் இருக்க கூடிய வகையில் குளிர்நிலையை பராமரிப்பதிலும், விநியோகம் செய்த பின்னர் நுகர்வோர் பயன்படுத்திய காலி கண்ணாடி குடுவைகளை திரும்பப் பெற்று பால் பண்ணைகளுக்கு கொண்டு வந்து, மறு சுழற்சி முறையில், சுத்தம் செய்து அதனை பயன்படுத்துவதிலும், கண்ணாடி குடுவைகளை கையாள்வதிலும், அதிகாலை முதல் நள்ளிரவு வரை பால் தட்டுப்பாடின்றி கிடைக்க பால் முகவர்கள் மற்றும் சில்லரை வணிகர்கள் தங்களின் கடைகளில் குளிர்சாதன பெட்டிகளில் தேவையான அளவு இருப்பு வைப்பதிலும் உள்ள நடைமுறை சிக்கல்கள், பராமரிப்பு செலவினங்கள், கள யதார்த்தம் என இவற்றில் எதையுமே அந்த அறிக்கையில் குறிப்பிடாமல், வெறும் இரண்டு மாவட்டங்களில், 7இடங்களில் மக்களிடம் சர்வே நடத்தி விட்டு “நெகிழி உறைகளுக்குப் பதிலாக கண்ணாடி குடுவையில் அடைத்து விற்பனை செய்தால் விற்பனை விலை அதிகமாகும், அதனால் அது எங்களுக்கு வேண்டாம்” என பொதுமக்கள் கருத்துக்களை தெரிவித்திருப்பதாக கூறி, “பொதுமக்கள் மீது பழியை சுமத்தி”, பொதுமக்களின் கருத்துக்கள் அடிப்படையில் பரிசீலித்து உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை முன் வைத்து ஆவின் நிர்வாக இயக்குனர் அவர்கள் தரப்பில் இருந்து அறிக்கை தாக்கல் செய்திருப்பது சரியான அணுகுமுறையாக தெரியவில்லை.
எனவே தற்போது உயர்நீதிமன்றத்தில் ஆவின் நிர்வாக இயக்குனர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, கண்டிப்பதற்கு முன் பால் முகவர்கள் சங்கம், வணிகர்கள் சங்கம், நுகர்வோர் சங்கம் என முத்தரப்பு சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினை அமைத்து அவர்களிடம் இருந்தும், பால் உற்பத்தி, விநியோகம், விற்பனை சார்ந்த வல்லுனர்களிடமிருந்தும் நெகிழிக்கு மாற்றாக கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வது தொடர்பாக விரிவான அறிக்கை பெற்று அதனோடு, மேற்சொன்ன இதர விசயங்களோடும் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும் என ஆவின் நிர்வாகத்தையும், தமிழக அரசையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். – என்று தெரிவித்திருந்தார்.
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 48 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசல பிரதேசம், குஜராத், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து – மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.
அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 1,166 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் கிருமித் தொற்று, இரைப்பை அழற்சி, காய்ச்சல், சளி, பாக்டீரியா தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் 48 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அதன் விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
”தீவிரமான குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் உட்பட அத்தகைய பின்னணியில் உள்ள நபர்களின் அறிக்கைகள், செய்திக் குறிப்புகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு எந்தவொரு தளத்தையும் வழங்கக்கூடாது” – என செய்தி ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவிக்கை வழங்கி உள்ளது.
இந்திய சட்டத்தால் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தொலைக்காட்சியில் விவாதத்திற்கு அழைக்கப்பட்ட விவகாரம் மத்திய அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்ததை அடுத்து இது வந்துள்ளது. இந்த அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் (ஒழுங்குமுறை) சட்டம், 1995 இன் பிரிவு 20 க்கு கவனம் செலுத்தப்பட வேண்டும். மத்திய அரசு உத்தரவு மூலம், ஒழுங்குபடுத்தும் அல்லது பொது நலன் கருதி எந்த தொலைக்காட்சி சேனல் அல்லது நிகழ்ச்சியின் ஒலிபரப்பு/மறுஒலிபரப்பைத் தடை செய்யலாம்.
மேலும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநிலத்தின் பாதுகாப்பு, எந்தவொரு வெளிநாட்டு மாநிலத்துடனான இந்தியாவின் நட்புறவு, அல்லது பொது ஒழுங்கு அல்லது கண்ணியம் அல்லது ஒழுக்கம் ஆகியவற்றின் நலன்களுக்காக அத்தகைய உத்தரவுகளை வழங்குவது அவசியமானது மற்றும் பொருத்தமானது என்று கருதப்படும்.
இந்தியாவில் சட்டத்தால் தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதம் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் பின்னணியில் உள்ள வெளிநாட்டில் உள்ள நபர் ஒரு தொலைக்காட்சி சேனலில் விவாதத்திற்கு அழைக்கப்பட்டது கவனத்திற்கு வந்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்ட நபர், நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அயல்நாட்டுடனான இந்தியாவின் நட்புறவு மற்றும் நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சாத்தியக்கூறுகளைக் கொண்ட பல கருத்துக்களை கூறினார்.
அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்துகிறது மற்றும் அரசியலமைப்பின் கீழ் அதன் உரிமைகளை மதிக்கிறது. டிவி சேனல்களால் ஒளிபரப்பப்படும் உள்ளடக்கம் பிரிவு 20 இன் துணைப் பிரிவு (2) உட்பட CTN சட்டம், 1995 இன் விதிகளுக்கு இணங்க வேண்டும்.
தீவிரமான குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் உட்பட அத்தகைய பின்னணியில் உள்ள நபர்களின் அறிக்கைகள், செய்திக் குறிப்புகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு எந்தவொரு தளத்தையும் வழங்குவதைத் தவிர்க்குமாறு தொலைக்காட்சி சேனல்கள் அறிவுறுத்தப்படுகின்றன.