Home Blog Page 302

ஆளவந்தார் நிலம் இறைப் பணிக்காக மட்டுமே! ‘கலைஞர்’ பன்னாட்டு அரங்கம் இறைப்பணி அல்ல!

pmk ramadoss - 2026

ஆளவந்தார் நிலத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கமா? உடனடியாக கைவிட வேண்டும்! – என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு கிராமத்தில் கட்டப்பட இருப்பதாகவும், கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டப்படவுள்ள 60 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் பெரும்பகுதி  ஆயிரம் காணி ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான  நிலம் என்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்த செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.  இந்த செய்தி உண்மையாக இருந்தால் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்ற கண்காட்சி அரங்கம், ஊடக அரங்கங்கள், நட்சத்திர விடுதிகள், ஊர்தி நிறுத்தங்கள் உள்ளிட்ட வசதிகளுடன்  பன்னாட்டு அரங்கம் கட்டப்பட வேண்டியது கட்டாயத் தேவை தான்.  ஆனால், அதற்காக கையகப்படுத்தப்படும் நிலம் இன்னொரு உன்னத நோக்கத்தை சீர்குலைப்பதாக இருக்கக் கூடாது.  கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் அமைக்க சென்னையிலும், சென்னைக்கு வெளியிலும் அரசுக்கு சொந்தமாக   ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. அவற்றில் பன்னாட்டு அரங்கத்தை கட்டுவதை விடுத்து  ஆயிரம்காணி ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் கட்டக்கூடாது.

செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் வன்னிய குலத்தில் பிறந்த ஆளவந்தார் நாயகர், அவரது கடுமையான உழைப்பால் சேர்த்த 1550 ஏக்கர் நிலங்களை இறைபணிக்காக வழங்கினார்.  அவரது பெயரில் செயல்பட்டு வரும் அருள்மிகு ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமாக இப்போது 1054 ஏக்கர் நிலம் உள்ளது. ஆளவந்தார் எழுதி வைத்த நிலங்கள், அவரால் குறிப்பிடப்பட்ட இறைபணிக்கான தேவையை விட பல மடங்கு அதிகம் என்பதால், அவற்றை வேறு பணிகளுக்காக பயன்படுத்தலாமா? என்ற வினா எழுந்த போது, அவற்றைக் கல்விப் பணிக்காக பயன்படுத்தலாம்  என்று நீதியரசர் சேஷாத்ரி அய்யர் தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற அமர்வு கடந்த 1918-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் நாள் தீர்ப்பளித்தது. அதற்கு எதிரான செயல்பாடுகளை அனுமதிக்க முடியாது. கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு அரங்கம் என்பது இறைபணியோ, கல்விப் பணியோ சார்ந்தது அல்ல. அதற்காக ஆளவந்தார் நிலங்களை  ஒரு போதும் பயன்படுத்தக்கூடாது.

சென்னைக்கு வெளியே கிழக்குக் கடற்கரைச் சாலையில் மிகவும் முக்கியமான இடத்தில் அமைந்துள்ள ஆளவந்தார் அறக்கட்டளை நிலம்  ஆட்சியாளர்கள் உள்ளிட்ட பலரின் கண்களை உறுத்திக் கொண்டே இருக்கிறது. ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் திரைப்பட நகரம்,  564 ஏக்கர்  நிலத்தில்  சூரிய ஒளி மின்திட்டம்,  இன்னும் பல ஏக்கர் பரப்பளவில் தனியார் வீட்டு வசதித் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. அதைக் கண்டித்தும், அத்திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த ஜூலை மாதம் 12-ஆம் நாளும், 16-ஆம் நாளும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விரிவான கடிதங்களை எழுதியிருந்தேன்.

அதனைத் தொடர்ந்து திரைப்பட நகரம் அமைக்கும் திட்டம்  பூந்தமல்லிக்கு அருகில் மாற்றப்பட்டதாக அறிகிறேன். ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டிருந்த  பிற திட்டங்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. அதற்கு முன்பாகவே கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைப்பதற்காக 60 ஏக்கர் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக பறிக்க அரசு முயல்வது நியாயமல்ல. இது ஆளவந்தாரின் நோக்கங்களுக்கு எதிரானது. ஆளவந்தார் அறக்கட்டளையையும்,  அது அமைக்கப்பட்டதன் நோக்கத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஆளவந்தாரின் நிலங்களை காக்க வேண்டிய அரசே, அவற்றை பறிக்கத் துடிக்கக் கூடாது.

எனவே, முட்டுக்காடு கிராமத்தில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்., சூரிய ஒளி மின்திட்டங்களை செயல்படுத்துதல், வீடுகளைக் கட்டுதல் போன்ற பணிகளுக்காகவும் ஆளவந்தார் நிலங்கள் பயன்படுத்தப்படக் கூடாது. எந்தக் காலத்திலும்,  எதற்காகவும் ஆளவந்தாரின் நிலங்கள், அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதை தவிர்த்து வேறு  எந்தப் பணிகளுக்கும் வழங்கப்படாது என்பதை அரசு பொது அறிவிப்பாக வெளியிட வேண்டும்; அதன் மூலம் வன்னிய மக்களிடம் நிலவும் ஐயங்களைப் போக்க வேண்டும்.

மகளிர் சக்தியை மையப்படுத்திய வளர்ச்சி: பிரதமர் மோடி பேசியது என்ன?!

modi in g20 - 2026
#image_title

இந்தியாவின் மகள்களைக் கைதூக்கிவிட பணியாற்றி வருகிறோம்: பிரதமர் நரேந்திர மோடி!

மாதராய் பிறந்திட நல் மாதவம் செய்திடல் வேண்டும்மா என்றார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. பெண் என்பவள் அளவு கடந்து நேசிக்கப்பட வேண்டியவள், அதுமட்டுமல்ல போற்றுதலுக்கும் உரியவளும் கூட.

ஏன், இந்த மனித சமுதாயம் இயங்கிக் கொண்டிருப்பதற்கு மிகவும் முக்கிய சக்தியாக இருப்பதே இந்த பெண் சக்திதான். இப்படி எண்ணிலடங்காத பல சிறப்புக்களைக் கொண்டவள் பெண். அப்படிப்பட்ட பெண்ணுக்கு, நிஜ சக்தி கொடுத்துள்ளது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு.

பாரதத்தின் பெருமைகளில் ஒன்றாகப் போற்றப்பட உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில், மக்களவை, மாநிலங்களவையில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டு மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால், பிரதமர் மோடிக்கு நன்றி சொல்ல பெண் எம்பிக்கள் ஒன்று கூடி, பிரதமருக்கு பூச்செண்டு கொடுத்தும், பொன்னாடை போர்த்தியும், இனிப்புகள் வழங்கியும் தங்களது நன்றியை வெளிப்படுத்தினர்.

மகளிர் சக்தி மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டில் உள்ள அனைத்து பெண்களையும் பாராட்டுகிறேன். நேற்றும், அதற்கு முந்தைய நாளும், நாம் புதிய வரலாற்றை படைத்துள்ளோம். இந்த சாதனையை படைக்க கோடிக் கணக்கான மக்கள் எங்களுக்கு வாய்ப்பு அளித்தது பெருமை அளிக்கிறது.

இந்த தருணம் வரலாற்றில் என்றும் நினைவில் கொள்ளப்படும். மசோதா பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது பெருமை அளிக்கிறது. ஆதரவு அளித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி. பெரும்பான்மை பலத்துடன் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன் மூலம். இந்தியாவின் எதிர்காலத்திற்கு புதிய சகாப்தம் படைக்கப்பட்டு உள்ளது.

Dhinasari News WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சாதாரண மசோதா அல்ல. புதிய இந்தியாவின் புதிய ஜனநாயக உறுதிப்பாட்டிற்கான அறிவிப்பு. மசோதா நிறைவேற்றப்பட்டது, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் புதிய சகாப்தத்திற்கு நான் அளித்த உத்தரவாதத்தை நிறைவேற்றியதற்கான சான்று.

இந்தச் சட்டத்தின் மூலம், ஜனநாயகத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்ய கடந்த 3 தசாப்தங்களாக பாஜ., அனைத்து முயற்சிகளை மேற்கொண்டது. இது எங்களது உறுதிமொழி. இன்று அதை நிறைவேற்றி உள்ளது.

சில முடிவுகள் நாட்டின் எதிர்காலத்தை மாற்றும் திறனைக் கொண்டுள்ளன. அத்தகைய ஒரு முடிவுக்கு நாங்கள் சாட்சியாக இருக்கிறோம். கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கான கட்டுப்பாடுகளை உடைக்க முயற்சி செய்கிறோம்.

பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, செழிப்பு ஆகியவற்றுக்கான திட்டங்களைக் கொண்டு அவர்களை முன்னேற்ற பா.ஜ.க., அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. பெண்களுக்காக ஏராளமான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் மகள்களை கைதூக்கிவிட பணியாற்றி வருகிறோம். பெண்களை கைதூக்கிவிட முத்தலாக் சட்டம் ரத்து செய்யப்பட்டது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் 9 கோடி பெண்கள் பலனடைந்துள்ளனர்.

மக்கள் முழுப் பெரும்பான்மையுடன் நிலையான வலிமையான அரசைத் தேர்வு செய்ததால் தான், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கான சட்டம் சாத்தியமானது. நாட்டை முன்னெடுத்துச் செல்ல பெரும்பான்மையுடன் கூடிய உறுதியான அரசு தேவை என்பதை மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிரூபிக்கிறது.

யாருடைய அரசியல் சுயநலன்களும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு தடையாக இருக்க விட மாட்டோம். இதற்கு முன்னர் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பார்லிமென்டில் விவாதத்திற்கு வந்த போது, அதனை நிறைவேற்ற எந்த முயற்சியும் அளிக்கவில்லை. ஆண்டாண்டு காலமாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்காக நாடு காத்திருந்தது;

அந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் நிறைவேற்றியதன் மூலம் நாங்கள் கொடுத்த வாக்குறுதியை செய்து காட்டி விட்டோம்” எனத் தெரிவித்தார்.

ரூடோவால் ஆட்டம் காணும் கனடா! ஆனால்… எதிரில் இருப்பது இந்தியா அல்ல, ‘பாரத்’!

khalistan singh nijjar - 2026
#image_title

கனேடியப் பிரச்சினை நாளுக்கு நாள் சூடுபிடித்துக் கொண்டே போகிறது. காலிஸ்தான் தீவிரவாதிகள் இந்துக்களைக் கொலை செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலைமை அங்கே உருவாகியிருக்கிறது. இந்திய அரசாங்கம் கனடாவில் குடியிருக்கும் தனது குடிமக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறது.

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என இரண்டு நாடுகளும் தாக்கிக் கொள்வதால் நிலைமை அத்தனை சீக்கிரம் சரியாவதற்கான முகாந்திரம் தெரியவில்லை. மறு அறிவுப்பு வரும்வரையில் கனடா குடிமக்களுக்கு இந்திய விசா கிடைப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு நாட்டுத் தூதரக முக்கியஸ்தர்களை பரஸ்பரம் விரட்டியடித்திருக்கிறார்கள் என நிலைம கோலாகலமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

இந்த நிலைமைக்கு அடிப்படைக் காரணம் ஜஸ்டின் ட்ரூடோ என்கிற மாங்காய் மடையன்தான். அவனுக்குப் பின்னனியில் காலிஸ்தானிய தீவிரவாதிகளும், பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ. போன்ற அமைப்புகளும் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. சீக்கியர்களின் கட்சி ஆதரவை விலக்கினால் ஜஸ்டின் ட்ரூடோவின் மைனாரிடி அரசு கவிழ்ந்துவிடும் என்கிற நிலைமையில் காலிஸ்தானிய தீவிரவாதிகள் ட்ரூடோவின் கழுத்தைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். இந்தியாவின் இந்தக் கடுமையான எதிர்வினையை எதிர்பார்த்திராத ட்ரூடோ கொஞ்சம் ஆடிப்போயிருக்கிறார். இன்றைய இந்தியா பழைய இந்தியா இல்லை என்பதால் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற அவரது நட்பு நாடுகளும் வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள்.

1970-களில் கனடாவில் குடியேறிய சீக்கியர்கள் தங்களின் கடுமையான உழைப்பினால் மண்ணைப் பொன்னாக்கினார்கள். கோதுமையையும், பருப்பு வகைகளையும் ஏராளமாக விளைவித்து கனடாவின் பொருளாதாரத்தையும் உயர்த்தினார்கள். அதில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு தொழில்களையும், வியாபாரங்களையும் துவங்கினார்கள். இதன் காரணமாக இன்றைய கனேடிய சீக்கியர்கள் பெரும் செல்வந்தர்கள். இவர்களைக் கண்ட சாதாரண பஞ்சாபின் சீக்கியர்களுக்கு எப்பாடுபட்டாவது கனடாவில் சென்று குடியேறுவது என்பது ஒரு இலட்சியமானது. இருந்தாலும் விசா வாங்குவது அத்தனை எளிதாக இருந்துவிடவில்லை.

அதிர்ஷ்டவசமாக அல்லது துரதிருஷ்டவசமாக இந்திராகாந்தியின் மரணத்திற்குப் பின்னர் இந்தியாவெங்கும் பல ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். இதனைக் காரணம் காட்டி பல சீக்கியர்கள் பிரிட்டன், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு அகதிகளாகப் போனார்கள். பின்னர் நிலைமை இந்தியாவில் சீரடைந்த பிறகும் சீக்கியர்கள் இன்றைக்கும் அகதி என்கிற போர்வையில் மேற்கத்திய நாடுகளுக்குள் நுழைகிறார்கள். இந்தியாவின் பஞ்சாபில் அமைதி நிலவினால் அவர்களால் அகதிகளாகச் செல்லமுடியாது என்பதால் பஞ்சாபில் தீவிரவாதத்தை மீண்டும் துவக்கியே ஆகவேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு.

எப்படியாவது ஒரு கலவரத்தை சீக்கியர்களுக்கு எதிராக உருவாக்கும் எண்ணத்துடன் டெல்லியில் விவசாய மசோதாவுக்கு எதிராகப் பெரும் பணம் செலவழித்தார்கள் காலிஸ்தானிய தீவிரவாதிகள். ஆனால் அதனை மோடி மிக அழகாகச் சமாளித்தார். அங்கு நடந்த கலவரங்களில் ஒரே ஒரு சீக்கியன் கொல்லப்பட்டிருந்தாலும் உலகமெங்கும் காலிஸ்தானிகளுக்கு ஆதரவு பெருகியிருக்கும். மோடி அதனைத் தவிர்த்தார். விவசாய மசோதாவைக் கொண்டுவராமல் தவிர்த்தார். இதன் காரணமாக அவர்கள் செலவழித்த பணம் அத்தனையும் வீணானது.

அடிப்படையில் சீக்கிய மதமே ஹிந்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது மறுக்கவியலாத உண்மை. இன்றைக்கும் ஹிந்துக் குடும்பத்தில் பிறந்த மூத்தமகனை சீக்கியனாக்குவதனை பெருமையாகக் கருதும் பஞ்சாபி ஹிந்துக் குடும்பங்கள் இருக்கின்றன. சீக்கிய புனித நூலான குரு கிரந்த் சாஹிபில் ராமனும், கிருஷ்ணனும் மூன்றாயிரம் முறைகள் குறிப்பிடப்படுகிறார்கள். ஆனால் சீக்கியர்களை ஹிந்துக்களிடமிருந்து பிரிப்பதில் மேற்கத்திய நாடுகள் வெற்றியடைந்திருக்கின்றன.

பிரிட்டிஷ்காரர்கள் குரு கிரந்தத்தை மாற்றி எழுதினார்கள். எங்கெல்லாம் ராமனும், கிருஷ்ணனும் குறிப்பிடப்படுகிறார்களோ அதனை நீக்கிவிட்டு அந்த இடத்தில் “God” என மாற்றி எழுதினார்கள். ஹிந்துவும், சீக்கியனும் வெவ்வேறானவர்கள் எனத் தொடர்ச்சியான மூளைச்சலவைகள் நடந்தன. இன்றைக்குப் பல சீக்கியர்கள் புதிய குரு கிரந்தத்தை நம்புகிறவர்களாக மாறிவிட்டார்கள். ஒரு சீக்கியனுக்கு பிரிட்டன் அல்லது கனேடிய விசா தேவையென்றால் அவன் கிறிஸ்தவனாக மதம் மாறினால் போதும் என்கிற நிலைமையை உருவாக்கினார்கள். இதன் விளைவாக பஞ்சாபின் சீக்கியர்கள் பலர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டார்கள். இன்றைய பஞ்சாபில் ஏறக்குறைய 20 சதவீதம் பேர்கள் கிறிஸ்தவர்கள்.

கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாலும் ஊரை ஏமாற்றுவதற்காக இன்றைக்கும் தலைப்பாகை அணிவதனை அவர்கள் நிறுத்தவில்லை. அந்த மதம்மாறிய கிறிஸ்தவர்களே பெரும்பாலான காலிஸ்தானிய ஆதரவாளர்கள். எல்லைக்கு இரண்டுபக்கமும் இருக்கிற பஞ்சாபிகளை பாகிஸ்தானி ஐ.எஸ்.ஐ. மிக எளிதாக மூளைச்சலவை செய்து அவர்களை ஹிந்துக்களுக்கு எதிராக மாற்றி வைத்திருக்கிறார்கள். கனடாவில் ஏராளமான ரிடையர்ட் பாகிஸ்தானிய ஜெனரல்களும், ராணுவ முக்கியஸ்தர்களும் குடியேறி இருக்கிறார்கள். அவர்களும் இந்தப் பிரச்சினையைத் தூண்டுவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.

இன்றைய கனடாவில் ரவுடித்தனம் பண்ணுபவர்கள், போதை மருந்து கடத்துபவர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தானிகளும், காலிஸ்தானிகளும்தான். பெரும்பாலான சீக்கியர்கள் டிரக் ட்ரைவர்களாக வேலை செய்வதால் அந்தத் ட்ரக்குகள் மூலம் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு போதை மருந்துகளும், ஆட் கடத்தல்களும் நடக்கின்றன. அரசியல் ரீதியாக கனடாவில் காலிஸ்தானிகள் பலமுடன் இருப்பதால் கனேடிய அரசால் அவர்களை ஒன்று செய்ய இயல்வதில்லை.

கனடாவிலும் போதை மருந்துக் கலாச்சாரம் பெருமளவில் இருக்கிறது. எல்லாவிதமான போதை மருந்துகளையும் அங்கு தாரளமாக வாங்கலாம். டோரோண்ட்டோவின் வீதியோரங்களில் இந்த போதை மருந்து அடிமைகள் வீழ்ந்து கிடப்பதனை நானே கண்டிருக்கிறேன். எனக்குப் பெரும் அதிர்ச்சியளித்த விஷயம் அது.

கனடாவில் ஏறக்குறைய 8 இலட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். கடின உழைப்பாளிகளான அவர்கள் கனேடியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டால் கனேடியப் பொருளாதாரம் பெரும் அழிவுக்கு உள்ளாகும் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனென்றால் எங்கு சென்றாலும் இந்திய ஹிந்து அந்த நாட்டின் சட்டங்களை மதித்துக் கடினமாக உழைக்கக்கூடியவன். அவர்களின் பொருளாதார வளர்ச்சி நிச்சயமாகப் பலரின் கண்களை உறுத்துகிறது.

எந்த இந்திய ஹிந்துவும் அகதியாக கனடாவுக்குச் செல்லுவதில்லை. தனது தகுதி, திறமையின் அடிப்படையில், சரியான வழிகளில் விசா வாங்கி கனடாவுக்குச் செல்லுகிறான். வந்திறங்கிய நாள் முதல் உழைக்க ஆரம்பிக்கிறான். ஆனால் கனடாவிற்குள் அகதிகளாக வந்திறங்கும் சீக்கியர்கள், முஸ்லிம்கள் போன்றவர்களுக்கு ஏராளமான சலுகைகளும், இலவசங்களும் கிடைக்கின்றன. ஒருவன் அகதியாக கண்டாவில் வந்திறங்கினால் ஒரு வேலையும் செய்யாமல் ராஜ வாழ்க்கை வாழலாம் என்கிற கசப்பான உண்மையே அங்கு அகதிகளை சாரி, சாரியாக செல்லவைக்கிறது. அவர்களுக்கும் சேர்த்து ஹிந்துக்கள் உழைத்து வரி கொடுக்கிறார்கள். அவர்களை விரட்டியடித்தால் என்ன நடக்கும் என்பது ட்ரூடோவுக்கும் தெரியும்.

எது எப்படி இருந்தாலும் பாதிப்பு கனடாவுக்குத்தானே தவிர, இந்தியாவுக்கு அல்ல.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியா மாறிவிட்டது. இனி அதனுடன் விளையாடுவது நெருப்புடன் விளையாடுவது மாதிரிதான்.

  • பி.எஸ். நரேந்திரன்

செப்.24ல் நெல்லை- சென்னை ‘வந்தேபாரத்’ ரயில்! கட்டணம் எவ்வளவு தெரியுமா?

500x300 1790007 vandhe b1 - 2026

நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 24-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் சென்னை – மைசூரு, சென்னை – கோவை வழியில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,  மூன்றாவதாக சென்னை எழும்பூர் – திருநெல்வேலி வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

நாள்தோறும் காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் இந்த ரயில், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரத்தில் நின்று பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு இரவு 10.40 மணிக்கு சென்றடையும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் இருந்து சென்னைக்கு மொத்தம் 652 கி.மீ. தொலைவை வெறும் 7.50 மணிநேரத்தில் பயணிக்கு இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படவுள்ளன.

சென்னை-திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் கட்டணம் வெளியீடு.

இதனிடையே, சென்னை-திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் கட்டணங்களை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே.

சாதாரண ஏசி வகுப்பு கட்டணம் ஜிஎஸ்டி உட்பட ரூ.1,620 என நிர்ணயம்; ஏசி சொகுசு வகுப்பு கட்டணம் ரூ.3,025ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆப்பசைத்த குரங்காக… ஜஸ்டின் ரூடோ!

khalistan singh nijjar - 2026
#image_title

— லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் —

ட்ரூடோ எனும் ஒரு அடி முட்டாள் அமெரிக்க எடுபிடி கனடாவில் பிரதமராகப் புடுங்கி வருவது தெரிந்ததே!

மகா அசடன், பொடியன், பேக்கு, ப்ளேபாய், ஆல்கஹாலிக் மெண்டல் என்றெல்லாம் பலரும்- குறிப்பாக வெள்ளை கனேடியர்களே- அவனுக்கு அர்ச்சனை செய்தும் அவன் திருந்தப் போவதில்லை.

சமீப காலமாக அந்த பேக்கு பேவகூஃப் பஞ்சாபிலிருந்து ஓடிப்போன காலிஸ்தானி கிரிமினல் + போதை மருந்து + ஆயுத வியாபாரக் கும்பல்களுடன் கும்மி அடித்துக் கும்மாளம் போடுவது கனடாவின் பெரும் துரதிர்ஷ்டம். ராகூழ் காந்தி இஸ்டைலில் ட்ரூடோவும் அங்கே வோட்டு அரசியல் செய்கிறானாம்!

கனேடிய காலிஸ்தானி கும்பல் கட்டுங்கடங்காமல் போய் ஒவ்வொரு வருஷமும் இந்திய சுதந்திர / குடியரசு தின விழாக்களின் போது அங்கே அடாவடி அராஜகங்கள், அடிதடி செய்வது வழக்கமாகவே போய் விட்டது.

இவர்களை ஒன்றும் செய்யாமல் விஷப் பாம்புகளுக்கு பால் வார்த்து வளர்த்தெடுப்பதில் உள்ள பிந்த்ரன்வாலே பயங்கரங்கள் புரியாத ட்ரூடோவுக்கு ஜெய்ஷங்கர் குழுவினர் ஹிதோபதேசம் செய்து செய்து அலுத்து விட்டனர். பன்னாட்டு அரசியல், உலக அரசியல் புரியாத ட்ரூடோ ஒரு செவிடனும் கூட என்பது நிதர்சனம்.

முட்டாபீஸ்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் பிரயோசனம் இல்லை என்பதை நன்குணர்ந்த மோடி, அஜீத் தோவலை முடுக்கி விட்டார்.

உடனே காலிஸ்தானி பெருந்தலைகள் சில பல ஆங்காங்கே கனடாவில் சீவப்பட்டன. இஸ்ரேல் மொஸாத் ஸ்டைலில் ‘ரா’வும் தன் வேலையை செவ்வனே செய்து முடித்தது. அஃபிஷியலாக நாலு, அன்அஃபிஷியலாக எட்டு சிரசுகள் சீவப்பட்டன என்பது அமெரிக்க CIA வே ஒப்புக்கொள்ளும் அண்டர்கிரௌண்ட் தகவல்.

பயந்து நடுங்கிப்போன காலி(ஸ்தான்) கும்பல் ட்ரூடோவிடம் “குய்யோ முய்யோ, கொன்னுட்டான் சார், கிள்ளிட்டான் சார்” என்று முறையிட, ட்ரூடோ அமெரிக்கப் பெரியண்ணன் பைடனிடம் போய் ஒரு பாட்டம் அழ, பைடன் “டேய் பொடியா, உன்னை யார்ரா பாம்பு புற்றுக்குள்ள கைய விடச் சொன்னது? படு மவனே, படு, என்னால மோடிய பகைச்சுக்க முடியாது, நானே அவருடைய பயங்கர ஃபேன் தெரியுமில்லையா?” என்று கையை விரித்து விட்டார்.

இது இவ்வாறிருக்க, சமீபத்திய டெல்லி G20 மாநாட்டில் கலந்துகொள்ள வந்த ட்ரூடோவை MEA அதிகாரிகள், RAW ஆட்கள், பிரதமரின் தனிச்செயலர்கள் என்று எல்லோரும் போட்டுக் கும்மி எடுத்து ஒரு வழி பண்ணி விட்டார்கள்.

48″ மார்பழகன் மோடி தனியறையில் போட்டு குல்லுகபட்ட குள்ளன் ட்ரூடோவை கும்மாங்குத்து குத்தி எடுத்துக் கொட்டையைப் பிசைந்து விட்டார் என்று நம் டெல்லி ராஜகோபாலர்கள் சூடம் அணைத்து சத்தியம் செய்கிறார்கள்.

சரி, எப்படியாவது டெல்லியிலிருந்து எஸ்கேப் ஆகி விடலாம் என்று பார்த்தால் சொல்லி வைத்தாற்போல் ட்ரூடோவின் கனேடிய விமானமும் ரிப்பேர்! தோவல் யாரையாவது ஏவி விட்டு விமானத்தில் ஃப்யூசைப் பிடுங்கி விட்டாரோ, டயரில் ஸ்க்ரூடிரைவரால் பங்க்ச்சர் செய்து விட்டாரோ என்று கனேடிய காமெடி பீஸ் உளவுத் துறை கையைப் பிசைந்துகொண்டு இரண்டு நாட்கள் காரணம் தேடி நின்றதுதான் மிச்சம்.

Langley, VA வில் CIA போனையே எடுக்கவில்லையாம்.

ஒருவழியாக கனடா திரும்பிய லூசாண்டி ட்ரூடோ, இல்லாத மீசையில் மண் ஒட்டலை என்று சொல்ல நினைத்து, சமீபத்திய கனேடிய காலிஸ்தானி தோஸ்துகளின் அகால மரணங்களின் பின்னால் இந்தியா இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகச் சொல்லி இந்திய தூதரை அங்கேயிருந்து கிளம்பச் சொன்னான்.

யாருகிட்ட?!

உடனே கனேடிய தூதரும் டெல்லியிலிருந்து மோடியால் விரட்டி அடிக்கப்பட்டார்.

அது மட்டுமல்ல. அத்தனை கனேடியக் குடியுரிமை பெற்ற காவாலி காலிஸ்தானிகளின் இந்திய விசாக்கள், PIO, OCI கார்ட்கள் ஒட்டுமொத்தமாக கேன்சல் செய்யப்பட வேலை முடுக்கி விடப்பட்டுள்ளது.

அவர்களது இந்திய சொத்துகள், வீடுகள், வங்கிக் கணக்குகள், வியாபார கேந்திரங்கள் மூடப்படவும், ஜப்தி செய்யப்படவும் உத்தரவுகள் பறந்திருக்கின்றன.

சிம்ம வாகனத்தில் யோக நரசிம்ம அலங்காரத்தில் மாட வீதிகளில் வலம் வந்த மலையப்பசாமி!

tirupathi perumal in simma vahanam - 2026
#image_title

திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவம் சிறப்பு கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது

பிரம்மசாத்தை ஒட்டி பல்வேறு வாகன சேவைகள் திருமலை மாட வீதிகளில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மூன்றாம் நாள் காலை மலையப்ப சுவாமி யோக நரசிம்ம அலங்காரத்தில் வாகன மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு கற்பூர ஆரத்தி அளித்து வாகன சேவையைத் துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து தேவஸ்தான ஜீயர் சுவாமிகள் தலைமையில் கோஷ்டி பிரபந்த பாசுரங்கள் சொல்லியபடி முன் செல்ல உயர் அதிகாரிகள் ஆங்காங்கே ஆரத்தி அளித்து சுவாமி அருள் பெற்றனர் தொடர்ந்து மாடவீதி முழுவதும் பல்வேறு கலைஞர்கள் தங்களது கலையை சுவாமிக்கு சமர்ப்பித்துச் சென்றது கண்ணுக்கு விருந்தாக அமைந்தது மாட வீதி முழுவதும் கோவிந்த நாமம் சொல்லியபடி பக்தர்கள் ஆரத்தி அளித்து மலையப்ப சுவாமியை வணங்கினர்.

வீடியோ பதிவு:

திருமலை பிரம்மோற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தவும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் அன்ன பிரசாதம் அளிக்கவும் தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி தெரிவித்தார்.

மாட வீதிகளை வாகன சேவைக்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு அனைத்து விதமான வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாக தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டி குறிப்பிட்டார்

பிரம்மோற்சவத்தை ஒட்டி அதிக அளவில் பங்கேற்பதால் ஆலயத்தில் அன்றாடம் நடைபெறும் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன மேலும் முக்கிய பிரமுகர்கள் தரிசன வசதி நன்கொடையாளர்கள் தரிசன வசதி ஆகியவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்தார்

முக்கிய பிரமுகர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இதனைக் கருத்தில் கொண்டு தேவஸ்தானத்திற்கு ஒத்துழைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்

சவர்மா சாப்பிட்டு குழந்தை இறந்த விவகாரம்: மதுரை கடைகளில் சோதனை!

madurai shavarma shop inspection - 2026
#image_title

சவர்மா சாப்பிட்டு குழந்தை உயிரிழந்த விவகாரம் எதிரொலி, மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

70 கிலோ இறைச்சிகள் பறிமுதல் இரண்டு உணவகங்களுக்கு சீல் -ஒரு வாரத்திற்கு தொடர்ந்து சோதனை நடத்தப்படும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் பேட்டி அளித்தார்.

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள உணவகங்களில் பயன்படுத்தப்படும் இறைச்சி மற்றும் சவர்மா ப்ஃரைட் ரைஸ் , சிக்கன் உள்ளிட்டவைகள் குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஜெகவீரபாண்டியன் தலைமையில் பல்வேறு குழுக்களாக சென்று திடீர் சோதனை நடத்தினர்.

மதுரை மாநகரின் பைபாஸ் சாலை , டவுண்ஹால் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டு சோதனை நடத்தியபோது அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சுவையூட்டும் வண்ணங்கள் மசாலாக்களை சேர்த்த இறைச்சிகள் 70 கிலோ அளவிற்கு பறிமுதல் செய்யப்பட்டன
இதேபோன்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடைகள் மீது அபராதம் விதிக்கப்பட்டு பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ச்சியாக ஒவ்வொரு உணவகங்களுக்கும் முறையான சுகாதாரமான உணவுகளை தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுரை வழங்கி சென்றனர்.

ஆய்வின்போது வண்ணங்கள் சேர்த்த இறைச்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை குப்பைத் தொட்டியில் கொட்டி சென்றனர்.

இது குறித்து பேசிய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்
மதுரையில் ஆய்வின்போது உணவகங்கள் சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டதால் இரண்டு உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது, குழந்தைகளுக்கான சாக்லெட், மிட்டாய் குறித்து சோதனை நடந்திவருகிறோம், தொடர்ச்சியாக இந்த சோதனை நடைபெறும் என்றார்.

காரமடை அருகே விநாயகர் சதுர்த்தி, திருவிளக்கு பூஜை!

karamadai thiruvilakku pooja - 2026
#image_title

காரமடை அருகேயுள்ள சென்னிவீரம்பாளையம் கிராமத்தில் இந்து முன்னணி சார்பில் 23 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா, இந்து ஒற்றுமை பெருவிழா மற்றும் 108 திருவிளக்கு பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காலை 6 மணிக்கு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.மாலை 6 மணிக்கு  தொப்பம்பட்டி இறையருள் செல்வி தனுஷ் ராமச்சந்திரன்   அவர்கள்  மந்திரங்கள் உபதேசம் செய்ய 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்த திருவிளக்கு பூஜையையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் டி.பாண்டுரங்கன், பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ராமச்சந்திரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், விவேகானந்தர் பேரவையினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல் உள்ளிட்ட பிரசாதங்கள் மற்றும்  அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வாட்ஸ்அப் சேனலில் பிரதமர் மோடி; புதிய நாடாளுமன்றத்தின் படத்துடன் முதல் பகிர்வு!

pm modi on whatsapp channel - 2026
#image_title

வாட்ஸ்அப் சேனல்களில் இணைந்த பிரதமர் மோடி, புதிய நாடாளுமன்றத்தின் படத்தை முதல் பதிவில் பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக தளத்தில், வாட்ஸ் அப்பால் சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘சேனல்’ அம்சத்தில் பிரதமர் இப்போது இணைந்திருப்பதால், வாட்ஸ்அப் பயனர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து அனைத்து புதுப்பிப்புகளையும் பெறலாம். வாட்ஸ்அப் சேனல்கள் அம்சத்தை வாட்ஸ் அப் கடந்த செப்.13ம் தேதி அறிமுகப்படுத்தியது. இதன் சில நாட்களுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (செப்.19) இன்று வாட்ஸ்அப் சேனல்களில் இணைந்தார்.

“வாட்ஸ்அப் சமூகத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி! தொடர்ச்சியான தொடர்புகளின் பயணத்தில் இது இன்னும் ஒரு படி நெருக்கமாக உள்ளது. இங்கே இணைந்திருப்போம்! புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து ஒரு படம் இதோ…” என்று வாட்ஸ்அப் சேனல்களில் தனது முதல் பதிவில் கூறியுள்ளார்.

இதில் பின் தொடர்பவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்களை பகிரவும் அனுப்ப முடியும். நமது மொபைல் எண் அடையாளம் தெரியாத நபர்களிடம் செல்வதை தடுக்கும் வசதியும் வாட்ஸ் ஆப் சேனலில் உள்ளது.

சமீபத்தில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது முதல்வர் அலுவலகத்தை வாட்ஸ் சேனலில் இணைந்து பொதுமக்களின் குறைகளை நேரடியாக அறிந்து வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடியும் வாட்ஸ் ஆப் சேனலில் இணைந்துள்ளார்.

இன்று (19 ம் தேதி) துவங்கிய புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில், தனது அலுவலக அறை, பார்வையாளர்கள் அறை உள்ளிட்ட புகைபடங்களை வாட்ஸ்ஆப் சேனலில் பதிவேற்றியுள்ளார்.

மெட்டா செப்டம்பர் 13 அன்று இந்தியாவிலும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் புதுப்பிப்புகளைப் பெறுவதற்கான தனிப்பட்ட வழியை வழங்குவதற்காக WhatsApp சேனல்களை அறிமுகப்படுத்தியது. மெட்டாவின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் ஒரு இடுகையைப் பகிர்ந்துகொண்டு, “இன்று உலகளவில் வாட்ஸ்அப் சேனல்களை வெளியிடத் தொடங்குகிறோம், மேலும் மக்கள் வாட்ஸ்அப்பில் பின்தொடரக்கூடிய ஆயிரக்கணக்கான புதிய சேனல்களைச் சேர்க்கிறோம். புதிய ‘புதுப்பிப்புகள்’ தாவலில் சேனல்களைக் காணலாம்.

வாட்ஸ்அப் சேனல்கள் ஒரு வழி ஒளிபரப்பு கருவியாகும், மேலும் வாட்ஸ்அப்பிலேயே உங்களுக்கு முக்கியமான நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து புதுப்பிப்புகளைப் பெறுவதற்கான தனிப்பட்ட வழியை வழங்குகிறது.

சேனல்களுடன், வாட்ஸ்அப்பின் குறிக்கோள், கிடைக்கக்கூடிய மிகவும் தனிப்பட்ட ஒளிபரப்பு சேவையை உருவாக்குவதாகும். சேனல்கள் அரட்டைகளிலிருந்து தனித்தனியாக உள்ளன, மேலும் நீங்கள் யாரைப் பின்தொடர விரும்புகிறீர்கள் என்பது பிற பின்தொடர்பவர்களுக்குத் தெரியாது.

உலகளவில் சேனல்களை விரிவுபடுத்தும்போது, பின்வரும் புதுப்பிப்புகளை அறிமுகப்படுத்துகிறோம்:

மேம்படுத்தப்பட்ட டைரக்டரி Enhanced Directory – வாட்ஸ்அப் பயனர்கள் உங்கள் நாட்டின் அடிப்படையில் தானாக வடிகட்டப்படும் சேனல்களைப் பின்தொடரலாம். பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் புதிய, மிகவும் செயலில் உள்ள மற்றும் பிரபலமான சேனல்களையும் நீங்கள் பார்க்கலாம்.

எதிர்வினைகள் –Reactions – ஒருவர் எமோஜிகளைப் பயன்படுத்தி கருத்துத் தெரிவிக்கலாம் மற்றும் மொத்த எதிர்வினைகளின் எண்ணிக்கையைப் பார்க்கலாம். நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பது பின்தொடர்பவர்களுக்கு காட்டப்படாது.

திருத்துதல் – Editing – விரைவில் நிர்வாகிகள் தங்கள் புதுப்பிப்புகளை 30 நாட்கள் வரை மாற்றங்களைச் செய்ய முடியும்.

முன்னனுப்புதல்-Forwarding – நீங்கள் அரட்டைகள் அல்லது குழுக்களுக்கு ஒரு புதுப்பிப்பை அனுப்பும் போதெல்லாம், சேனலுக்கான இணைப்பை மீண்டும் சேர்க்கும்… என்று தெரிவித்தார் மார்க் ஜூகர்பர்க்.

ஆய்வுப் பணியைத் தொடங்கியது ஆதித்யா எல்-1

aditya l1 launched - 2026
#image_title

ஆதித்யா எல்-1’ விண்கலம் தனது ஆய்வுப் பணியை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ இன்று திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம், ‘பிஎஸ்எல்வி சி-57’ ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்.2-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

குறைந்தபட்சம் 235 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 19,500 கி.மீ. தொலைவும் கொண்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. தொடா்ந்து, பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப்பாதையை நீட்டிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அதாவது, விண்கலம் புவிக்கு அருகே வரும்போது அதிலுள்ள உந்து விசை இயக்கப்பட்டு சுற்றுப்பாதை தொலைவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. அதன்படி, விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை இதுவரை 4 முறை மாற்றியமைக்கப் பட்டுள்ளது.

அதற்கு அடுத்தகட்டமாக ஆதித்யா விண்கலம் செப்.19-ஆம் தேதி புவிவட்டப் பாதையில் இருந்து விலக்கப்பட்டு சூரியனை நோக்கி பயணிக்க தொடங்க உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே, பூமியில் இருந்து 50,000 கி.மீ. தொலைவில் ‘ஸ்டெப்ஸ்’ என்ற கருவி செயல்படத் தொடங்கியுள்ள தாகவும், அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.