Home Blog Page 309

ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டும் என்று கூறியவர் கருணாநிதி:

annamalai in rajapalayam - 2026
#image_title

ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டும் என்று கூறியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி… : திருவில்லிபுத்தூரில், பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு….!

திருவில்லிபுத்தூர் : ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டும் என்று தனது, நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் எழுதியிருப்பவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று, திருவில்லிபுத்தூர் பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர் பகுதிகளில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் நடை பயணத்தில் ஈடுபட்டார்.

முன்னதாக திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், ஸ்ரீசடகோபராமானுஜ ஜீயரை சந்தித்து ஆசி பெற்றார். இதனையடுத்து நடைபயணத்தை துவக்கிய அண்ணாமலை, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது,

தற்போது தமிழகத்தில் சனாதனத்திற்கு எதிராக குரல் எழுந்துள்ளது. சனாதனத்தை ஒழிப்பதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியாக இருந்தால் தான் தமிழகத்திலும், இந்தியாவிலும் மாற்றம் வரும். சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்றால் தமிழக அரசின் முத்திரை சின்னமாக உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தை முதலில் மாற்ற வேண்டும். முதல்வர் ஸ்டாலின் அதற்கு ஒத்துக்கொள்வாரா, முடிந்தால் அரசு முத்திரையை மாற்றிப் பாருங்கள்.

கோவில்களுக்கு செல்பவர்களை கேலி செய்யும் உதயநிதி ஸ்டாலின், அவரது குடும்பத்தில் இருப்பவர்கள் கோவில்களுக்கு செல்வதை மட்டும் ஏன் கூற மறுக்கிறார். இதே திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் திருப்பாவையின் 30 பாடல்களை பாடினார். இது தான் சனாதனம். அனைத்து மக்களையும், அனைத்து மதங்களையும் அரவணைத்து செல்வது தான் சனாதனம்.

ஆனால் இவர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு, பெருமை மிகுந்த கிருஸ்தவன் என்று கூறிய உதயநிதி ஸ்டாலினுக்கு சனாதன தர்மத்தை பேச தகுதியில்லை.

இந்து மதத்தை மட்டுமல்ல இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களை வேரறுப்போம் என்று உதயநிதி கூறியிருந்தாலும் அதனை கண்டிக்கும் முதல் குரல், கண்டன குரல் என்னிடமிருந்து வரும்.

ஜனாதிபதி தேர்தலில் பட்டியல் இனத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்தை இவர்கள் ஆதரிக்கவில்லை. தற்போது பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்முவையும் இவர்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் எல்லோரும் சமம் என்று பேசி வருகின்றனர்.

வரும் 18ம் தேதி சிறப்பு பாராளுமன்ற கூட்டத் தொடர் நடக்க இருக்கிறது. அதில் பாரதம் என்ற பெயர் மாற்றம் வருகிறதா, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அறிவிப்பு வரப்போகிறதா என்று எதுவும் தெரியாது. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய்வதற்கு மத்திய அரசு ஒரு குழுவை அமைத்திருக்கிறது. இதனை பாஜக கட்சி வரவேற்கிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியே, தான் எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என்று எழுதியுள்ளார். இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், திமுக கட்சியினரும் புரிந்துகொள்ள வேண்டும்.

தேர்தல் நேரத்தில், எங்கள் கட்சியில் 90 சதவீதம் இந்துக்கள் என்று கூறி ஒட்டுகளை வாங்கி விட்டு, தேர்தல் முடிந்த பின்பு சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று கூறுவது தான் திமுகவின் கொள்கை.

உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன், வரும் 2024 பாராளுமன்ற தேர்தல், 2026 சட்டப்பேரவை தேர்தல்களை சனாதன தர்மத்திற்கான தேர்தலாக வைத்து கொள்வோம். நீங்கள் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று வாக்குறுதி அளியுங்கள். நாங்கள் சனாதன தர்மத்தை காப்பாற்றுவோம் என்று வாக்குறுதி அளிக்கிறோம். மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்று பார்ப்போம் என்று அண்ணாமலை பேசினார்.

நடை பயணத்தில், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, பாஜக மாவட்ட தலைவர் ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. கோபால்சாமி உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூரில் இன்று… தங்க முத்துக்கிடா வாகனத்தில் ஸ்வாமி எழுந்தருளல்!

kamadenu 2022 10 b97366be bf2e 495d 8f19 72a4bde6d5c8 thiruchendur subramania swamy 1599201691 - 2026

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செப்.4 திங்கள் காலை ஆவணித் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கொடியேற்ற மகா தீபாராதனை நடைபெற்று திருவிழா தொடங்கியது.

ஆவணித் திருவிழா இரண்டாம் திருநாள் செப்.5 இரவு சுவாமி சிங்கக் கேடயச் சப்பரத்திலும், ஸ்ரீ வள்ளி அம்மன் மலர் கேடயச் சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

மூன்றாம் திருநாளான புதன்கிழமை இன்று இரவு சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

இக்காட்சிகளின் வீடியோ…

Stop abusive statements against the eternal Sanatan Dharma: VHP

0
vishwa hindu parishad vhp - 2026
#image_title

Vishva Hindu Parishad National Spokesperson Vinod Bansal Released this Press note.

Joint Press Statement of Pujya Mahant Ravendra Puri ji maharaj, President, Akhil Bharateey Akhara Parishad, pujya swami Jitendranand Saraswati ji maharaj, Secretary General, Akhil Bharateey Sant Samiti and the VHP Working President & Sr. advocate Shri Alok Kumar :

New Delhi. Sept. 6, 2023: It is a matter of concern that in the last few days, leaders of Congress, DMK and CPI have made abusive statements against the eternal Sanatan Dharma. It has been compared with mosquitos, dengue and malaria. The bravados have been made that they will not only oppose Sanatan Dharma but will eliminate it from the face of the earth.
This delirium has begun simultaneously and by leaders of three big constituents of I.N.D.I.A. Shri Uday Nidhi Stalin has reiterated that he stands by his statement. Surely this is a well thought out conspiracy.

These abusive statements are part of a unholy attempt to divide the society and increase hatred and enmity amongst its different sections for their petty political interests. These people can go to any extent to gain power by stooping down in vote bank politics.
This challenge is for all those who believe in the Constitution and democracy. This is a sick mentality which assumes that by attacking the beliefs of the majority religious community and creating an atmosphere of hatred and distrust towards it, the minority communities will gather behind I.N.D.I.A. with all their bulk votes.

We in India see an underlying unity in the apparent diversities. The Constitution provides for respect for all religious beliefs. We are of the firm belief that Indian society, which believes in democracy and purity, will give a befitting reply to such people.
We reiterate that Sanatan Dharma sees God in every living being. Our sanskriti believes in the divinity and equality of all human beings. Our prayers are for the well being of all, “Sarve Bhavantu Sukhinah”. This provides for a strong foundation of unity and peace in the society on the basis of dignity of human being.

Sanatan Dharma is eternal. Despite 800 years of Mughal invasions, unspeakable atrocities, 200 years of clever British rule and efforts of missionaries, even today the majority of the Indian society believes in Sanatan Dharma. Those who oppose it are found in the dustbin of history.

Tamil Nadu has always been the flag bearer of our eternal culture. The religious people of Tamil Nadu have always been worshipers of Rameshwaram, Mata Meenakshi, Durga, Lakshmi, Ganesha, Murugan, Rama and Krishna.

Thousands of years old temples are symbols of Tamil Nadu’s eternal devotion towards Sanatan. The immortal teachings of great saints like Alwars, Nayanmars, Saint Thiruvalluvar, Andal etc. have been guiding not only the religious people of Tamil Nadu but also crores of Sanatanis from time immemorial. This is our common heritage.

Today there is a need to strengthen this shared heritage to locate and stress upon the points which increase mutual unity and strengthen the solidarity of the Bharatiya Samaj. This message is the right path for the happiness and peace for all Humanity. We appeal to the countrymen for this.

ஸ்ரீவில்லிபுத்தூரில் அண்ணாமலை! சனாதனம் பேசி… உறியடித்து உற்சாகம்!

annamalai in rajapalayam - 2026
#image_title

சனாதன தர்மம் குறித்து உதயநிதி புரிந்து பேச வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் செப்டம்பர் 7 தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை நேற்று ஆறாம் தேதி மாலை 4 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் வைத்து துவங்கியது

இதில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் புதிய தமிழகம் கட்சி தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

பாதயாத்திரை தெக்கரதேவி கீழிறது வீதி பஸ் நிலையம் சின்ன கடை வீதி வழியாக ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை வந்து அடைந்தது அங்கு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றினார் முன்னதாக அவர் மதியம் 12 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்

தொடர்ந்து வட பத்திர செயலர் கோவிலிலும் சாமி தரிசனம் செய்துவிட்டு மணவாள மாமுனிகள் மடத்திற்கு சென்று அங்கு 24 வது பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ராமானுஜ ஜுயர் சுவாமிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடையே பேசும்போது…

உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்த பேச்சிலிருந்து பின் வாங்க மாட்டேன் என்ற கருத்திற்கு, பின்வாங்காமல் இருப்பது நல்லது. அப்பொழுதுதான் ஒரு மாற்றம் வரும்.

சனாதனத்தை வேர் அறுக்க வேண்டும் என்றால் தமிழக அரசின் சின்னத்தை மாற்ற வேண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தை மாற்றுவாரா என கேள்வி?அப்படியே மாற்றினாலும் மாற்றித்தான் பார்க்கட்டும்.

எதுவும் தெரியாமல் புரியாமல் படிப்பறிவு இல்லாமல், சொல் புத்தி, சுய புத்தி இல்லாமல் வாய்க்கு வந்ததெல்லாம் பேசிவிட்டு நான் பேசியது சரி எனக் கூறும் நபரிடம் நான் என்ன சொல்வது.

சனாதன தர்மம் என்பது உதயநிதி ஸ்டாலின் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆண்டாள் கோவிலில் வந்து 30 பிரசுரங்களை படித்துள்ளார்.இதும் ஒரு வகையான சனாதான தர்மம் தான்.

சனாதன தர்மம் என்றால் பிராமணர்கள் தான் என்று 1949 முதல் திமுக மற்றும் திராவிட கழகத்தினர் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களை அரவணைத்து செல்லக்கூடியது சனாதன தர்மம்.

2022-ல் தான் ஒரு கிறிஸ்தவர் எனக் கூறியவருக்கு சனாதனம் தர்மம் குறித்து பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது.

உதயநிதி கிறிஸ்தவ மதத்தையும் இஸ்லாமிய மதத்தையும் ஒழிக்க வேண்டும் என கூறியிருந்தால் முதல் கண்டன குரலாக எனது குரல்தான் இருக்கும். சனாதன தர்மத்தையும் அப்படித்தான் இருக்கும்.

குடியரசு தலைவர் தேர்தலின்போது பழங்குடியின இனத்தைச் சேர்ந்த திரெளபதி முர்முவிற்கு ஓட்டு போடாமல் , அவரை எதிர்த்து போட்டியிட்ட பிராமணருக்கு ஓட்டு போட்ட இவர்கள் எப்படி சானாதனம் குறித்து பேச முடியும்.

ஒரே நாடு ஒரே தேர்தலை 1971இல் கருணாநிதி ஆதரித்தார். கருணாநிதி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் ஆதரவாக எழுதியிருப்பார். அப்பா புத்தகத்தையே ஸ்டாலின் படிப்பதில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது காலத்தினுடைய கட்டாயம்.நிச்சயமாக நடந்தே தீரும்.

உதயநிதிக்கு ஒரு சவால் விடுகிறேன் 2024 மற்றும் 2026 தேர்தலில் சனாதன தேர்தலாக வைத்துக் கொள்ளலாமா?திமுக சனாதனத்தை ஒழிப்போம் என தேர்தலில் பிரச்சாரம் செய்யட்டும், பாஜக சனாதானத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் -மக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள் என பார்க்கலாம்.

தேர்தல் வந்தாலே அப்பாவும் மகனும் வேல் தூக்குவார்கள்.
சனாதனம் என்பது வாழைப்பழத்தின் தோல் மாதிரியும் இந்து மதம் என்பது வாழைப்பழம் மாதிரியும் வாழை பழத்தின் தோலை நீக்கிட்டு பழத்தை மட்டும் சாப்பிட வேண்டும் என்பது தான் இந்து மதம் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

இந்து அறநிலையத்துறையில் இருந்து சேகர்பாவிற்கு கொடுக்கப்படும் வாழைப்பழங்களில் தோலை நீக்கி விட்டு பழத்தை மட்டும் அனுப்பி வைக்க வேண்டும் என்று காட்டமாக கூறினார்.

பேட்டியின் போது பாரதிய ஜனதா கட்சி ஓபிசி அணி மாநிலத் துணைத் தலைவர் கோபால்சாமி மாவட்டத் தலைவர் சரவணன் துரை என்ற ராஜா மற்றும் ஏராளமான பாரதிய ஜனதா கட்சியினர் உடன் இருந்தனர்

அண்ணாமலையின் பாதயாத்திரியின் போது வழிநெடுக்க ஏராளமான பொதுமக்கள் இரண்டில் நின்று ஆர்வத்துடன் பார்த்தனர் கோவிலுக்கு முன்பு அண்ணாமலைக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது அப்பொழுது அவர் கிருஷ்ண ஜெயந்தி நினைவுபடுத்த வகையில் உறியடித்து உற்சாகமூட்டினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி முகேஷ் ஜெயக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் அண்ணாமலையின் பாதயாத்திரியின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கிருஷ்ண ஜயந்தியில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி! மதுரை அருகே விநோதம்!

chozhavanthan krishna jayanthi - 2026
#image_title

சோழவந்தான் அருகே கிருஷ்ணர் ஜெயந்தி விழா வில் கிருஷ்ணர் சிலை குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அருகே, நாச்சிகுளம் ஊராட்சிக்குட்பட்ட மேல்நாச்சிகுளம் கிராமத்தில் கிருஷ்ணன் கோவிலில் வருடம் தோறும் கிருஷ்ணன் ஜெயந்தி விழா நடந்து வருகிறது. இதே போல், இந்த ஆண்டு மூன்று நாட்கள் விழா நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு, பல்வேறு போட்டிகள் நடந்து பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், முக்கிய விழாவான உறியடி போட்டி மற்றும் இளவட்ட கல் தூக்கும் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் டிரைவர் கண்ணன் வயது 41 .
இளவட்டக் கல்லை தூக்கி போட்டியில் வெற்றி பெற்றார். இங்கு ,கிருஷ்ணன் ஜெயந்தியை முன்னிட்டு சுமார் 4 அடியில் கிருஷ்ணர் சிலை நிறுவப்பட்டு கிருஷ்ணர் ஜெயந்தி விழா நிறைவு பெற்றவுடன் இந்த சிலை குலுக்கல் முறையில் கிராமத்தில் உள்ள பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதே போல், இந்த ஆண்டு நேற்று இரவு கிருஷ்ணர் ஜெயந்திக்கு வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணர் சிலை பூஜைகள் நிறைவு பெற்று குலுக்கல் முறையில் மேல்நாச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவருக்கு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, மேல் நாச்சிகுளம் கிராமமக்கள் செய்திருந்தனர்.

சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.
மதுரை தாசில்தார் நகர், வரசித்தி விநாயகர், சித்தி விநாயகர் ஆலயங்களில், கோகுலாஷ்டமி முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பெருமாள், தாயார் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கோயில் நிர்வாகத்தின் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

alankanallur krishna jayanthi - 2026
#image_title

அலங்காநல்லூர் அருகே கோகுல கண்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரியஊர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள கோகுலகண்ணன் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவில் பூசாரி அழகர்சாமி ஏற்பாட்டில் சிறப்பு பூஜைகளும், விசேஷ அலங்காரமும் நடைபெற்றது.

முன்னதாக திருக்கோவில் ஆவரணபெட்டி அழைத்து வருதல், திருக்கண் திறப்பு வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள், குழந்தைகள் பலர் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு நடனமாடி வந்தனர்.

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர் தினம் சிறப்புச் சொற்பொழிவு!

thiruvedagam vivekananda college - 2026
#image_title

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், ஆசிரியர் தினம் மற்றும் அரசஞ்சண்முகனார் பிறந்தநாள் விழா சிறப்புச் சொற்பொழிவு!

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே,
திருவேடகம், விவேகானந்த கல்லூரியில், ஆசிரியர் தினம் மற்றும் அரசஞ்சண்முகனார் பிறந்தநாள் விழா சிறப்புச் சொற்பொழிவு கல்லூரி இறை வழிபாட்டுக் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.  இந்நிகழ்வைத், தமிழ்த்துறை ஏற்பாடு செய்திருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த ஆசி உரையாற்றினர். தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் வ.க.ராமகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமை உரையாற்றினார். 

தியாகராசர் கல்லூரியின் மேனாள் முதல்வரும் தலைசால் பேராசிரியருமான முனைவர் மு.அருணகிரி, ஆசிரியர் மாணவர் உறவு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மதுரை தியாகராசர்கல்லூரித் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் த.முத்தமிழ் , அரசஞ்சண்முகனாரின் பன்முக ஆளுமை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கு.இராமர் நன்றி கூறினார். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்கள் முனைவர் கோ.பாலமுருகன் சு.முத்தையா, முனைவர் ரெ.சுதாகர் வடிவேலு ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பேராசிரியர்கள் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

சாத்தூர் அருகே அகழாய்வில் சங்கு வளையல்கள், சுடுமண் அச்சு கண்டெடுப்பு!

sathur excacations - 2026
#image_title

சாத்தூர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் – வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம், மேட்டுக்காடு பகுதியில் 2ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்ற அகழாய்வில் 3 ஆயிரத்து 650க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது கருங்கல் சுவர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தப் பகுதியில் வசித்த முன்னோர்கள் கருங்கற்களினால் ஆன சுவர்களால் வீடுகள் கட்டி குடியிருந்திருந்ததை அறிய முடிகிறது. மேலும், வெள்ளை மற்றும் நீல நிறத்தினால் ஆன சங்கு வளையல்கள் மற்றும் சங்கு வளையல்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் சுடுமண் அச்சு ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இங்கு வாழ்ந்த மனிதர்கள், சங்கு வளையல் தயாரிப்பு கூடம் அமைத்திருப்பதற்கான சான்றுகளாக இவை கிடைத்துள்ளது.
அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

உதய் கண்ணு! நீ இன்னாத்துக்கு இதப் பத்தி பேசிக்கிற?

udayanidhi stalin - 2026

கட் அண்ட் ரைட்டு கோவிந்து: உதய் கண்ணு! நீ என்னாத்துக்கு சனாதனம் பத்தி பேசிக்கிற?

— ஆர். வி. ஆர்

உதய் கண்ணு! நீ என்னாத்துக்கு சனாதனம் பத்தி பேசிக்கிற? பெரிய விசயம்லாம் உன் தலைக்கு மேலதான் போவும் கண்ணு!

எதுக்குபா ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ன்ற கூட்டத்துக்குப் போயி, பெரிய பெரிய விசயம் பத்திப் பேசி, பேரை ரிப்பேர் பண்ணிக்கிற?

நாபகம் இருக்கா, நீ என்ன பேசினன்னு?

“சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும், எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா, இதை எல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழிக்கத்தான் வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும்.”

“நிலையானது, மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாதது அப்படிங்கறதுதான் சனாதனத்துக்கு அர்த்தம்.”

“எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது. எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவானதுதான் கம்யூனிஸ்ட் இயக்கமும் திராவிட முன்னேற்றக் கழகமும்.”

“திராவிட இயக்கமும் கம்யூனிஸ்ட் இயக்கமும் வந்த பின்னாடிதான் மக்களுக்கு திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் சொல்லப் பட்டது”

எப்பிடிப்பா? சனாதனம் பத்தி நீ பேசிக்கினே போக, உன் பேத்தலும் கூடிக்கினே போவுது?

கம்மூனிஸ்டு, திராவிட சிகாமணிங்க தமிள் நாட்ல வளந்துக்கினே இருக்க, அல்லாரும் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலைன்னு பட்சாங்க, தெரிஞ்சிகினாங்களா? இப்ப இருக்கற உன் கட்சி அமைச்சருங்க, மாவட்ட செயலருங்க எத்தினி பேருக்கு சிலப்பதிகாரம் மணிமேகலைல வர்ற ஒரு ஆளு பேர் தெரியும், சொல்லு?

இன்னும் கவனி. வள்ளுவருக்கு திமுக சிலை வெக்கிறதுக்கு முன்ன, ரண்டாயிரம் வருசமா திருக்குறள் எப்பிடி மக்கள் மத்தில இருந்திச்சு? அப்பலாம் கம்மூனிஸ்டு, திராவிடத் தலைவர் யாரும் இல்லியே? உ. வே சாமிநாத ஐயருன்னு ஒரு தமிள்த் தாத்தா ஊர் ஊரா ஓலைச்சுவடியைத் தேடி எடுத்து காப்பாத்தி மணிமேகலை, சிலப்பதிகாரம்னு பல காப்பியங்களை அச்சுல ஏத்துனாரு. அவுருக்கு தமிள் ஆசான் யாருன்ற? திருவாடுதுறை ஆதீனத்துல இருந்த மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. இவுங்க ரண்டு பேரும் கம்மூனிஸ்டா, இல்லை திராவிடக் கொளுந்தா?

உன் கட்சிக்காரவுங்க, தமிள்நாட்டுல உன் கூட்டணிக் கட்சி ஆளுங்க, இவுங்களுக்கு “நிலையானது, மாற்ற முடியாதது, கேள்வி கேட்க முடியாதது” அப்பிடின்றது எது? அம்பது வருசத்துக்கு உங்க தாத்தா கருணாநிதி, இப்ப உங்க அப்பா மு. க. ஸ்டாலின், அடுத்து லைன்ல நிக்கிற நீ, அடுத்தது திமுக போஸ்டர்ல இப்பவே போஸ் குடுக்கற உன் பையன், இவுங்கதான் கட்சியை கைக்குள்ள வச்சிருப்பாங்க, இவுங்கதான் நிலையானவுங்க, மாத்த முடியாதவுங்க, யாரும் கேள்வி கேக்க முடியாதவுங்க. நெசந்தான?

என்ன சொன்ன – எல்லாத்தயும் மாத்தணும், எதுவும் நிலையானது இல்லியா? கணவன் மனைவி அன்பா இருக்கறது, கொளந்தைங்களை பொறுப்பா வளக்கறது, பொய் பித்தலாட்டம் பண்ணாம அரசியல் பண்றது, இதுவும் நிலையானது இல்லை, இதையும் மாத்தணும் அப்பிடின்றயா?

பொதுவா இந்து மதத்துக்கு, அதோட வாள்வியல் முறைகளுக்கு, சனாதன தர்மம் அப்பிடின்னு ஒரு பேர் இருக்குபா. அது பெரிய கடல். அதைப் பத்தி தெரியணும்னா, நீ முதல்ல கம்பூட்டர் முன்னல உக்காரு. இன்டர்நெட் கனிக்சனை வைச்சு, கம்பூட்டர்ல நீ ஒண்ணு பாத்துக்கலாம். அதாவது, உலகத்துல எல்லா விசயம் பத்தி வண்டி வண்டியா எளுதிருக்கற ஒரு எடம் இருக்கே – அது பேர் என்ன, விக்கல் பீடாவா? இல்லை இல்லை, விக்கி பீடியா! – அதுல சனாதனம் பத்தியும் கொஞ்சம் படிச்சிக்க. புத்தகம் படிக்கிற பளக்கம் இருந்தா மேலயும் படி. விசயம் தெரிஞ்சவன் கிட்டயும் கேளு. அப்ப சனாதனம்னா என்னன்னு உனக்கு தம்மாத்தூண்டு வெளங்கும். அப்பிடியும் வெளங்காட்டி, அதெல்லாம் உனக்கு ஆவாதுன்னு விட்டுரு. அதான் உனக்கு பொருத்தம் கண்ணு.

சனாதனம்னா என்னன்னு பெரியவுங்க, படிச்சவுங்க சொல்லக் கேட்ருக்கேன். அதை உனக்கு சொல்லட்டா?

“சனாதனம்றது சம்ஸ்ருத வார்த்தை. சுருக்கமா, சனாதனம்னா நீடிச்சு நெலைச்சு நிக்கிற வாள்க்கைக் கோட்பாடுன்னு வச்சிக்கலாம். மனுசனோட நல்ல வாள்க்கைக்கு, நிம்மிதிக்கு, அது முக்கியம், அதுனால அந்த விசயம் நீடிச்சு நெலைச்சு நிக்கும், நிக்கணும் அப்பிடின்னு சொல்லிருக்கு. ‘உண்மையப் பேசு, பொய் பேசிக்காத, இதமாப் பேசு, தேவையில்லாததை பேசாத’ அப்பிடின்னு சனாதனம் எல்லாருக்கும் சொல்லுது”.

இதெல்லாம் எல்லா காலத்துக்கும் நமக்குத் தேவைதான கண்ணு? இதயே உள்ளார வச்சு, கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு திமுக சொல்லுது. காலா காலத்துக்கும் கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்றதை எல்லா மனுசனும் ஏத்துக்கணும். டெங்கு மாதிரி அதையும் அளிப்பேன், ஒளிப்பேன்னு பேசுவியா நீ?

பாத்துக்க – உன் உளறலைக் கேட்ட ஒரு படிச்சவரு, பெரிய மனுசன், சனாதனம்னா என்னன்னு இப்ப எடுத்து சொல்லிக்கிறாரு. சனாதனத்தோட பத்து அம்சங்கள் இதுன்னு சம்ஸ்ருதத்துல சுருக்கமா ஒரு இடத்துல சொல்லி வச்சிருக்குன்னு புட்டு புட்டு வெக்கிறாரு. நீ கூட வாட்ஸ்-அப்புல பாத்துக்க. அந்த பத்து அம்சம் இதான். இந்தா, எண்ணிக்க.

பொறுமை, சகிப்புத் தன்மை அல்லது பிறரை மன்னித்தல், கட்டுப்பாடு, திருடாமலும் பிறர் பொருளை அபகரிக்காமலும் இருத்தல், சமய ஒழுக்க வாழ்வு, புலனடக்கம், விவேகம், கல்வி, உண்மையைக் கடைப்பிடித்தல், கோபம் தவிர்த்தல்.

இதே பத்து விசயத்தை வள்ளுவரும் நீட்டமா சொல்லிக்கிறாரு. வள்ளுவர் சொன்னதையும் கொரோனா மாதிரி ஒளிச்சுக் கட்டணுமா?

நீ மேடைல பேசுனதுல காமன் சென்சு இடி இடின்னு இடிக்குது. அதை மொதல்ல தெரிஞ்சிக்க. சனாதனம்னு மட்டும் இல்லை, எல்லா மதங்கள்ளயும் நிலையான கொள்கை, கோட்பாடுன்னு சிலது சொல்லி வச்சிகிறாங்க. அதை எல்லாம் பத்து அம்பது வருசத்துக்கு ஒரு தபா மாத்தணும்னு அந்த மதத் தலைவருங்க யாரும் இப்பவும் சொல்றதில்ல. அந்த அந்த மதத்துல இருக்கவங்க காலத்தை ஒட்டி, அவுங்க விருப்பப்படி, சிலதை கடைப்பிடிக்கலாம், கடைப் பிடிக்காம இருக்கலாம். அந்த சுதந்திரம் நம்ம அரசியல் சட்டத்துல எல்லா மதத்துக் காரவுங்களுக்கும் இருக்கு. சனாதனம்ற இந்து மதமோ வேற மதமோ, யாருக்கும் கட்டாயம் இல்லை. அப்பறம் திமுக-க்கு என்னபா பிரச்சனை? நடத்துற வேலைய நடத்திக்கினு “வர்றது வரட்டும்”னு அதுல முனைப்பா இருந்தா போதுமே கண்ணு? சொகம்மா இருக்கலாமே?

நான் முன்னமே ஒண்ணு சொல்லிக்கிறேன் – அதாவது, சனாதனம் பத்தி நீ மேடைல பேசப் பேச நீ பெனாத்துறது ஏறிக்கினே போச்சு. அதுக்கு ப்ரூப் இருக்கு. பேசிப் பேசி கடசீல நீட் தேர்வு விசயத்தைக் கைல எட்துகினு நீ சொன்னது இதான்:

“நாமெல்லாம் படிச்சிரக் கூடாதுங்கறது சனாதனக் கொள்கை. அதுக்கு ஒரு சிறந்த உதாரணம் நீட் தேர்வு ……. தேர்தல் பிரசாரத்துல நான் வாக்குறுதி குடுத்தேன். கண்டிப்பா நீட் தேர்வு ரத்து செய்யப்படும், அதுக்கான முழு முயற்சி எடுக்கப்படும்னு சொன்னேன். இந்த நீட் தேர்வை ரத்து செய்யணும்னா இந்த ஒரு உதயநிதி பத்தாது. சமுதாயத்து மக்கள் நீங்க ஒவ்வொருவரும், மாணவர்கள் இளைஞர்கள் ஒவ்வொருவரும் உதயநிதியா மாறி நீங்க நீட் தேர்வு போராட்டத்தில் உங்களை ஈடுபடுத்திக்கணும். சனாதனம் வீழட்டும். திராவிடம் வெல்லட்டும்.”

உதய் கண்ணு! எங்க ஆரமிச்சி எங்க வந்துட்ட பாரு! ஆனாலும் நீட் மேட்டர்ல இத்தினி தமாஸ் கூடாதுபா!

உனக்கே தெரியும் – கடசீல சனாதனம் விளவே விளாது. திராவிடமும் ஜெயிக்காது. ஆனா கல்லா கட்றவன் கட்டிக்கினே இருப்பான். அவ்ளதான?

Author: R.Veera Raghavan,Advocate, Chennai

தென்காசியில்… திக்குமுக்காடிய அண்ணாமலை!

annamalai in tenkasi - 2026
#image_title

தென்காசியில் பாஜக., மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொண்டார். செப்.04 திங்கள் கிழமை தொடங்கி, இருநாட்கள் அவரது பாத யாத்திரை தென்காசி மாவட்டத்தில் இருந்தது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொடங்கி கீழப்புலியூர் வழியாக தென்காசியில் திங்கள் இரவு பயணம் மேற்கொண்டார்.

தொடர்ந்து மறுநாள் கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர் வழியாக புதன்கிழமை ராஜபாளையம் தொகுதியில் தனது சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்தார். தென்காசி எல்லையில் அவருக்கு வரவேற்பு பலமாக இருந்தது. தென்காசிக்கு இரவு வந்து சேர்ந்த போது வெகுநேரமானதால், தனியாக ஒரு நாள் தனது பயணத்தினிடையே இந்த மாதம் வந்து பொதுக்கூட்டத்தில் பேசுவதாகக் கூறினார் கே.அண்ணாமலை.

தான் தென்காசியில் திரண்ட மக்கள் கூட்டத்தில் திக்குமுக்காடிப் போனதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டபோது….


தமிழ் மொழியும் நம் தர்மமும் செழித்து வளர்ந்த இயற்கை எழில் கொஞ்சும் தென்காசியில், #EnMannEnMakkal பயணம் பெரும் திரளெனக் கூடியிருந்த பொதுமக்கள் சூழ சிறப்புடன் நடந்தேறியது. நமது புனித பூமியான காசி, முகலாயர் படையெடுப்புக்கு ஆளான போது, பாண்டிய மன்னர் கனவில் சிவபெருமானே தோன்றி, தக்ஷிண காசி திருக்கோவிலை நிர்மாணிக்கச் சொன்னதாக, ஜடாவர்மன் பராக்கிரம பாண்டிய மன்னர் கல்வெட்டே எழுதி வைத்துள்ளார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக, சேர நாட்டுடன் நம்மை இணைக்கும் பகுதியாக தென்காசி விளங்குகிறது. திருக்குற்றாலத்துக்கு நுழைவாயிலாக இருக்கும் இம்மண், உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிற ஊர் ஆகும். தொழில் செய்யும் சமூகங்கள் நிறைந்து வாழும் இப்பகுதியில், பணப்பயிர் விவசாயம் சிறப்பாக நடைபெறுகிறது. ஆனால், தொழில் வளத்தை பெருக்கும் வேலை வாய்ப்பையோ, வேளாண் வணிக உலகளாவிய சந்தைகளை உருவாக்கும் நோக்கமோ இந்த ஊழல் திமுக அரசிற்கு இல்லை.

தென்காசி ரயில் நிலையத்தின் தரத்தை உயர்த்திட அம்ரித் பாரத் ரயில் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு மட்டும் சுமார் 1650 கோடி ரூபாய் நமது மத்திய அரசு செலவிடுகிறது.

தென்காசி மாவட்டத்திற்கு திமுக கொடுத்த, ‘சங்கரன்கோவிலில் ஜவுளி பூங்கா, தென்காசியில் வேளாண்மையை அடிப்படையாக கொண்டு சிறப்பு பொருளாதார மண்டலம், தென்காசியில் அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி, தேங்காய் அடிப்படையிலான தொழிற்சாலை, ஆயிரப்பேரியில் வேளாண்மை கல்லூரி, புளியங்குடியில் எலுமிச்சையை அடிப்படையாக கொண்ட தொழிற்சாலை, கடையநல்லூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கால்நடை மருத்துவமனை ‘ என ஒரு தேர்தல் வாக்குறுதியையும் ஊழல் திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.

தென்காசி திமுகவில் பெண் நிர்வாகிகளுக்கே பாதுகாப்பில்லை. இதை மறைக்க திமுக எத்தனை வேஷம் போட்டாலும் இனிமேல் மக்கள் ஏமாற மாட்டார்கள். வரும் பாராளுமன்றத் தேர்தலில் சந்தர்ப்பவாத ஊழல் கூட்டணியான இந்தி கூட்டணியை மக்கள் மொத்தமாகப் புறக்கணித்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியைத் தொடரச் செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை, தமிழக முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்கள் எதிர்த்து கருத்துக்கள் கூறிக் கொண்டு இருக்கிறார்.

அவரது தந்தையார் மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது சுயசரிதையான நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரித்து எழுதியிருக்கிறார்.

தன் தந்தை எழுதிய சுயசரிதையையே முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் படித்ததில்லை என்பது எத்தனை பரிதாபம்?


புரிதல், சிந்தனை இல்லாமல் பேசுவதே தி.மு.க.,வின் வழக்கம்

செந்தமிழ் மொழியும்; நம் சனாதன தர்மமும் செழித்து வளர்ந்த, இயற்கை எழில் கொஞ்சும் தென்காசியில், ‘என் மண் என் மக்கள்’ பயணம், பெரும் திரளெனக் கூடியிருந்த மக்கள் சூழ சிறப்புடன் நடந்தேறியது. பா.ஜ., தடயமே தமிழகத்தில் இல்லை என்று சொன்னவர்களுக்கு எல்லாம் பதில் அளிக்கும் வகையில், தென்காசி கடையத்தில் கடல் போல் திரண்டு இருந்த மக்கள் கூட்டத்தில், அன்பில் திக்கு முக்காடி போனேன்.

ஆர்ப்பரிக்கும் மக்கள் கூட்டம் ஆவலுடன் முண்டி அடித்துக் கொண்டு அருகில் வர முயற்சிக்க, நடைபயணத்தை தொடர முடியவில்லை. மக்கள் வெள்ளத்தில் நீந்தி, மேடையிலே பேசுவதற்கு ஏறும்போது, எங்களுக்கு போலீஸ் வழங்கி இருந்த நேர அனுமதியை நெருங்கியிருந்தோம்.
ஆனாலும், மாலையில் இருந்து காத்திருந்த மக்கள் கூட்டம். அவர்களை ஏமாற்றவும் மனமில்லாமல், போலீஸ் அனுமதியையும் மீற மனமில்லாமல், உண்மையிலே தவித்துப் போனேன்

அங்கே கூடியிருந்த மக்களிடம், மன்னிப்பு கேட்டு, ‘இன்று நான் பேச முடியாத நிலையில் இருக்கிறேன். இன்னொரு நாள் உங்கள் ஊருக்கு வந்து, உங்கள் அனைவரையும் சந்தித்து பேசுவேன்’ என்று உறுதியளித்தேன். அப்போது தான், மனதுக்கு ஆறுதலாக இருந்தது. அதைப் புரிந்து, ஆதரவு நல்கிய தென்காசி மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  • திருக்குற்றாலத்துக்கு நுழைவாயிலாக இருக்கும் இம்மண், உலகம் முழுதும் இருந்து சுற்றுலா பயணியர் வருகிற ஊர். தொழில் செய்யும் சமூகங்கள் நிறைந்து வாழும் இப்பகுதியில், பணப்பயிர் விவசாயம் சிறப்பாக நடக்கிறது. ஆனால், தொழில் வளத்தை பெருக்கும் வேலை வாய்ப்பையோ, வேளாண் வணிக உலகளாவிய சந்தைகளை உருவாக்கும் நோக்கமோ, ஊழல் தி.மு.க., அரசுக்கு இல்லை.
  • தென்காசி ரயில் நிலையத்தின் தரம் உயர்த்த, ‘அம்ரித் பாரத்’ ரயில் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தென்காசி மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு மட்டும், 1,650 கோடி ரூபாயை மத்திய அரசு செலவிடுகிறது
  • சங்கரன்கோவில் ஜவுளி பூங்கா, தென்காசியில் வேளாண்மையை அடிப்படையாக கொண்டு சிறப்பு பொருளாதார மண்டலம், தென்காசியில் அரசு மருத்துவக் கல்லுாரி, சட்டக் கல்லூரி, தேங்காய் அடிப்படையிலான தொழிற்சாலை, ஆயிரப்பேரியில் வேளாண்மை கல்லுாரி, புளியங்குடியில் எலுமிச்சை தொழிற்சாலை, கடையநல்லூரில் அரசு பாலிடெக்னிக், கால்நடை மருத்துவமனை என, தேர்தல் வாக்குறுதி அளித்த எதையுமே தி.மு.க., அரசு செய்யவில்லை.

தென்காசி தி.மு.க.,வில் பெண் நிர்வாகிகளுக்கே பாதுகாப்பில்லை. இதை மறைக்க, அக்கட்சி எத்தனை வேஷம் போட்டாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள். வரும் லோக்சபா தேர்தலில், சந்தர்ப்பவாத ஊழல் ‘இண்டியா’ கூட்டணியை, மக்கள் மொத்தமாகப் புறக்கணித்து, பிரதமர் மோடியின் நல்லாட்சியைத் தொடரச் செயவர் என்பதில் சந்தேகமில்லை.

  • சனாதன தர்மத்தை பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல், அது குறித்த உண்மையை மற்றவர்களிடமிருந்தும் கேட்டும் அறியாமல், ‘கொசுவை, மலேரியாவை, டெங்குவை, கோவிட்டை ஓழிப்பதுபோல, சனாதன தர்மத்தை ஓழிப்பேன். இதற்காக எந்த கேஸ் போட்டாலும் பரவாயில்லை’ என்று பேசியிருக்கிறார், உதயநிதி.

கடந்த 5ம் தேதி வெளியான, ‘தினமலர்’ நாளிதழின், ‘சிந்தனைக்களம்’ பகுதியில், அதன் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் சனாதனம் பற்றிய கட்டுரையைப் படிக்க, அமைச்சர் உதயநிதி நேரம் ஒதுக்கலாம். அதே பக்கத்தில், சகோதரர் ரங்கராஜ் பாண்டே எழுதியுள்ள, ஒழிக்க முடியாத சனாதனத்தையும் ஊன்றிப் படிக்கலாம். ஒரு பொருளைப் பற்றிய புரிதலும், சிந்தனையும் இல்லாமல் பேசுவதை, தி.மு.க.,வினர் வழக்கமாக உள்ளது.

சிறுபான்மையினத்தவரின் ஓட்டு வங்கியை மனதில் வைத்து, தொடர்ந்து ஹிந்துக்களை அவமானப்படுத்தும் செயலை, தி.மு.க.,வினர் திட்டமிட்டு செய்து வருகின்றனர். சனாதன தர்மம் பேசும் ஹிந்து மதத்தை ஒழிப்போம் என்பதற்காக, கூட்டப்பட்ட மாநாட்டில் கலந்து கொண்டதன் வாயிலாக, அங்கு பேசப்பட்ட கருத்துக்களை ஆதரிப்பதன் வாயிலாக, இனி ஹிந்து சமய அறநிலையத் துறையை நிர்வகிக்கும் சேகர்பாபு, அமைச்சர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார். எனவே, வரும் செப., 10க்குள், அவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை எனில், தமிழகம் முழுதும் 11ம் தேதி முதல் போராட்டங்கள் நடத்தப்படும்.

இறை நம்பிக்கை இல்லாதவர்கள் கையிலிருக்கும் கோவில்களை, நம்முடைய பாரம்பர்யங்களை, மரபுகளை மீட்டெடுக்க இப்போராட்டம் மிக அவசியமாகிறது. பாத யாத்திரைக்கு மக்கள் தரும் ஆதரவை, தமிழ் மக்களின் மானம் காக்கும் இப்போராட்டத்திற்கும் நல்க வேண்டும்.


இன்றைய #EnMannEnMakkal பயணம், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில், இளைஞர்கள், சகோதரிகள் என பெரும் திரளெனக் கூடி, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை, மூன்றாவது முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுப்பதில், தமிழகமும் பெரும் பங்கு வகிக்கும் என்பதை உரக்கக் கூறியிருக்கிறார்கள்.

தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது. ஊழல் கட்சிகளுக்கும், குடும்ப அரசியலுக்கும் இனி இங்கு இடம் இல்லை என்பதை, வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் உணர்த்துவார்கள். சரித்திரச் சிறப்பாக நடந்து கொண்டிருக்கும் இந்த பயணம் அதைத் தெளிவாக உணர்த்துகிறது.

கடையநல்லூர் தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாத ஊழல் திமுக கூட்டணிக்கு, வரும் தேர்தல் ஒரு பாடமாக அமையும்.


கணவனும் மனைவியும் சரிசமம் என்பதை உலகுக்கு உணர்த்தும் அற்புதத் திருவடிவம் ஆசீர்வதிக்கும் தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர், புளியங்குடியில், இன்றைய #EnMannEnMakkal பயணம் பெரும் திரளெனக் கூடியிருந்த பொதுமக்கள் சூழ சிறப்புடன் நடந்தேறியது. பொதிகையை ஆண்ட சேர மன்னன் ரவிவர்மன் மகனின் தீரா நோயைக் குணப்படுத்திய சக்தி வாய்ந்த கடவுள் அர்த்தநாரீஸ்வரர். பூலித்தேவர், ஒண்டிவீரன், வெண்ணிக்காலாடி ஆகியவர்கள் வாழ்ந்த வீரம் செறிந்த மண் வாசுதேவநல்லூர். அவர்கள் வீரத்துக்கு நெற்கட்டும் செவல் நடுகல்லே சாட்சி.

ஒரு காலத்தில் ஒரு லட்சம் ஏக்கருக்கு அதிகமான பாசன நிலங்கள் இருந்த பகுதி, 2006 ஆம் ஆண்டு, கேரள அரசு இந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்ததால், இன்று, பாசன நிலங்கள் குறைந்துவிட்டன. அன்று ஆட்சியில் இருந்த திமுக அதைப் பற்றிக் கவலைப்படாமல் மெத்தனமாக இருந்துவிட்டது. முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை என தமிழக விவசாயிகள் நலனை மொத்தமாக கேரள கம்யூனிஸ்ட்டுகளிடம் அடகு வைத்திருக்கிறார் ஸ்டாலின்.

தமிழகம் கடந்த 9 ஆண்டுகளில் செய்த வரிபங்களிப்பு 5 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் தமிழகத்திற்குக் கிடைத்தது 2 லட்சத்து 8 ஆயிரம் கோடி என்று பொய் பேசியுள்ளார் திரு முக ஸ்டாலின் அவர்கள்.

தமிழகத்திற்கு கடந்த 9 ஆண்டுகளில் கிடைத்தது 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய். தமிழகம் செய்த வரி பங்களிப்பை விட இரண்டு மடங்கு அதிகம் திருப்பி கொடுத்துள்ளார் பிரதமர் மோடி.

#மோடியின்_முகவரி : வாசுதேவநல்லூர்

தமிழகத்திலுள்ள 4824 தென்னை வளர்ச்சி வாரியங்களில், மத்திய அரசின் நிதி பெற்று, தென்னை விவசாயம் செய்யும் திரு. கிருஷ்ணகுமார், முத்ரா திட்டம் மூலம் தொழில்முனைவோராகியிருக்கும் திரு கணேசன், கிஸான் கடனுதவி மூலம் பலனடைந்துள்ள திரு அழகப்பாண்டியன், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பலனடைந்த திருமதி. முத்துமாரி, உஜ்வாலா திட்டம் மூலம் இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற திருமதி அழகுரத்னம். இவர்கள்தான் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முகவரி.

ஒரே நாடு ஒரே தேர்தலைப் பற்றி தமிழக அரசியல் தலைவர் ஒருவர் எழுதியிருக்கிறார். “அடிக்கடி தேர்தலைச் சந்திக்கும் தொல்லையிலிருந்து மக்களைத் தவிர்ப்பதற்காகவும், நிர்வாகம் தடங்கலின்றி நடைபெற்று மக்களின் நன்மைகளில் நாட்டம் செலுத்தவும், பொதுப்பணம் விரயமாவதைத் தடுப்பதற்காகவும், நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சி, பஞ்சாயத்து ஆகியவைகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது சிறந்தது என்று நான் கருதுகிறேன்.” ஆண்டுதோறும் மக்கள் மாறி மாறி தேர்தல்களைச் சந்திக்கும் நிலையால் ஆட்சி இயந்திரம் சரிவரச் செயல்படாதிருக்கலாம். எடுத்த கொள்கை முடிவுகளை ஆட்சி இயந்திரத்தின் வாயிலாக நிறைவேற்ற முடியாத தேக்க நிலை ஏற்படவும் பொது மக்களுக்கு சங்கடங்களை உருவாக்கவும் வழிவகுக்கும் என்று கருதுகிறேன்” இதைச் சொன்னது கலைஞர் கருணாநிதி. நெஞ்சுக்கு நீதி – இரண்டாம் பாகம், பக்கம் 271,272,273ல் கலைஞர் கருணாநிதி தான் அன்று பத்திரிகையாளர்கள் மற்றும் திமுகவினரிடம் பேசியதை பற்றி எழுதியுள்ளார். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசின் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை, தமிழக முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் எதிர்த்து கருத்துக்கள் கூறிக் கொண்டு இருக்கிறார். தன் தந்தை எழுதிய சுயசரிதையையே முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் படித்ததில்லை என்பது எத்தனை பரிதாபம்?

தென்காசி மாவட்டத்திற்கு திமுக கொடுத்த, ‘சங்கரன்கோவிலில் ஜவுளி பூங்கா, தென்காசியில் வேளாண்மையை அடிப்படையாக கொண்டு சிறப்பு பொருளாதார மண்டலம், தென்காசியில் அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி, தேங்காய் அடிப்படையிலான தொழிற்சாலை, ஆயிரப்பேரியில் வேளாண்மை கல்லூரி, புளியங்குடியில் எலுமிச்சையை அடிப்படையாக கொண்ட தொழிற்சாலை, கடையநல்லூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கால்நடை மருத்துவமனை ‘ என ஒரு தேர்தல் வாக்குறுதியையும் ஊழல் திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. தென்காசி மாவட்டத்திற்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் திமுகவின் பட்டத்து இளவரசர் தென்காசி வருகிறார். இப்படி எந்த வாக்குறுதியும் நிறைவேற்றாமல் வருகிறீர்களே என்று மக்கள் கேட்பார்கள் இல்லையா? அதனால் தான் சனாதன ஒழிப்பு என்று முட்டாள்தனமாக பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இந்து மதத்தை ஒழிப்போம் என்று பேசிய ஒருத்தர் சிவபெருமானுக்காக தென்காசியை உருவாக்கிய பராக்கிரம பாண்டியனின் மண்ணில் வருவது வெட்கக்கேடு. இன்று இந்து மதத்தை ஒழிப்போம் என்று பேசுவார். நாளை கிறிஸ்துவ, இஸ்லாமிய மதத்தை ஒழிப்போம் என்று பேசுவாரா?

வரும் பாராளுமன்றத் தேர்தலில் சந்தர்ப்பவாத ஊழல் கூட்டணியான இந்தி கூட்டணியை மக்கள் மொத்தமாகப் புறக்கணித்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியைத் தொடரச் செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஜி20 மாநாட்டுக் கூட்டங்களை நாட்டில் பரவலாக நடத்தும் எண்ணம் வந்தது ஏன்?: பிரதமர் விளக்கம்!

pm modi speech in chandrayaan success - 2026
#image_title

பகுதி – 2

பிரஸ் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியாவின் தலைமை ஆசிரியர் விஜய் ஜோஷி அவர்கள் 03.09.2023 அன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்திய பிரத்யேக நேர்காணலின் தமிழாக்கம்.

–தமிழில் : முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்–

கேள்வி: நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு சோலார் கூட்டணியை தொடங்கினீர்கள். இப்போது நீங்கள் ஒரு உயிரி எரிபொருள் கூட்டணியை முன்மொழிகிறீர்கள், அதை நீங்கள் G-20இல் வெளியிடுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இதன் நோக்கம் என்ன, இந்தியா போன்ற இறக்குமதி சார்ந்த நாடுகளுக்கு எரிசக்தி பாதுகாப்பில் இது எவ்வாறு உதவும்?

பிரதமரின் பதில்: 20ஆம் நூற்றாண்டின் உலகத்திற்கும் 21ஆம் நூற்றாண்டிற்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. உலகம் மிகவும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒன்றுக்கொன்று சார்ந்துள்ளது, அது சரியாகவே உள்ளது. ஆனால், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மற்றும் ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் உலகில், உலகெங்கிலும் உள்ள நாடுகளின் திறன்கள் மற்றும் தனித்தன்மைகள் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக உலகளாவிய விரிதிறன் இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு சங்கிலியில் உள்ள இணைப்புகள் பலவீனமாக இருக்கும்போது, ஒவ்வொரு நெருக்கடியும் முழுமையான சங்கிலியை மேலும் பலவீனப்படுத்துகிறது. ஆனால் இணைப்புகள் வலுவாக இருக்கும்போது, உலகச் சங்கிலி எந்தவொரு நெருக்கடியையும் ஒருவர் மற்றொருவரின் பலத்தைப் பயனபடுத்திச் சமாளிக்க முடியும்.

ஒரு விதத்தில், இந்த எண்ணத்தை மகாத்மா காந்தியின் தன்னிறைவு பற்றிய பார்வையிலும் காணலாம், இது உலக அளவிலும் தொடர்கிறது.

மேலும், நமது வருங்கால சந்ததியினருக்காக நமது புவியின் பாதுகாப்பு என்பது ஒரு பகிரப்பட்ட பொறுப்பாகும், இது முதன்மையான முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

இந்தியாவிற்குள் காலநிலையை மையமாகக் கொண்ட முயற்சிகளில் நாங்கள் பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறோம்.

ஒரு சில ஆண்டுகளில் இந்தியா தனது சூரிய ஆற்றல் திறனை 20 மடங்கு அதிகரித்தது. காற்றாலை ஆற்றலில் உலகின் முதல் நான்கு நாடுகளில் இந்தியாவும் உள்ளது.

மின்சார வாகனப் புரட்சியில், புதுமை மற்றும் தத்தெடுப்பு ஆகிய இரண்டிலும் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.

திட்டமிடப்பட்ட தேதிக்கு 9 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நமது காலநிலை இலக்குகளை அடைந்த ஜி20 நாடுகளில் நாங்கள் முதல்வராக இருக்கலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு எதிரான எங்கள் நடவடிக்கை உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் தூய்மை ஆகியவற்றிலும் நாங்கள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளோம்.

இயற்கையாகவே, நாம் உலகளாவிய முயற்சிகளில் உறுப்பினராக இருந்து பல முயற்சிகளில் முன்னணிப் பாத்திரத்தை வகிக்க நகர்ந்துள்ளோம். சர்வதேச சோலார் கூட்டணி மற்றும் பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி போன்ற முயற்சிகள் நாடுகளை புவியைக் காக்க ஒன்றிணைக்கிறது. சோலார் கூட்டணி நூறுக்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது!

எங்கள் மிஷன் லைஃப் முன்முயற்சி சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறையில் கவனம் செலுத்துகிறது. இன்று ஒவ்வொரு சமூகத்திலும் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன வாங்குகிறார்கள், என்ன சாப்பிடுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று ஒவ்வொரு முடிவும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டது. அவர்களின் தேர்வுகள் இன்று அவர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதன் மூலம் மட்டுமல்ல, நீண்ட கால தாக்கத்தாலும் வழிநடத்தப்படுகின்றன. இதேபோல்,

உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒன்று கூடி இப்புவியைக் காக்கும் உணர்வுடன் இருக்க முடியும். ஒவ்வொரு வாழ்க்கை முறையும் நீண்ட காலத்திற்கு கிரகத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அடிப்படையாகக் கொண்டு எடுக்கலாம்.

இப்போது, உயிரி எரிபொருள் கூட்டணி இந்த திசையில் மற்றொரு படியாகும்.

இத்தகைய கூட்டணிகள் வளரும் நாடுகள் தங்கள் ஆற்றல் மாற்றங்களை முன்னேற்றுவதற்கான விருப்பங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஒரு வட்டப் பொருளாதாரத்தின் கண்ணோட்டத்தில் உயிரி எரிபொருள்களும் முக்கியமானவை. சந்தைகள், வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை போன்ற சர்வதேச ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களும் அத்தகைய வாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கியமானவை.

இத்தகைய மாற்றுகள் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தலாம், உள்நாட்டு தொழில்துறைக்கான வாய்ப்புகளை உருவாக்கலாம் மற்றும் பசுமையான வேலைகளை உருவாக்கலாம்.

கேள்வி: நீங்கள் ஜி-20இன் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது ஜி-20 ஐ ஒரு முக்கிய வார்த்தையாக மாற்றிய விதத்தை உங்கள் விமர்சகர்கள் கூட பாராட்டியுள்ளனர். இது முன்னோடியில்லாதது. ஜி-20 கூட்டங்களை இந்தியா முழுவதும் பரப்பும் இந்த கருத்தை நீங்கள் எப்படிக் கற்பனை செய்தீர்கள்? இந்த மூலோபாயத்தின் பின்னணி என்ன?

பிரதமரின் பதில்: சில நாடுகள், அளவில் சிறியதாக இருந்தாலும் கூட, ஒலிம்பிக் போன்ற உயர்மட்ட உலக சந்திப்புகளை ஏற்பாடு செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பல நிகழ்வுகளை நாம் கடந்த காலங்களில் அவதானித்துள்ளோம். இந்த மெகா சபைகள் நேர்மறையான மற்றும் மாற்றத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வளர்ச்சியைத் தூண்டியது. மற்றும் தங்களைப் பற்றிய அவர்களின் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள வைத்தது. மேலும் அவர்களின் திறன்களை உலகம் அங்கீகரிக்கத் தொடங்கியது. உண்மையில், இது அவர்களின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இந்தியா, அதன் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் நகரங்களில் உலகை வரவேற்பதற்கும், நடத்துவதற்கும், இணைப்பதற்கும் பல ஆற்றல்களைக் கொண்டுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, கடந்த காலங்களில், டெல்லியிலும், விக்யான் பவன் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் விஷயங்களைச் சரியாகச் செய்து முடிக்கும் மனோபாவம் இருந்தது. ஒருவேளை அது எளிதான வழி என்பதால். அல்லது அதிகாரத்தில் இருப்பவர்கள் இத்தகைய அளவிலான திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் மீது நம்பிக்கை இல்லாததால் இருக்கலாம்.

நம் மக்களின் திறமை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. நான் ஒரு நிறுவன பின்னணியில் இருந்து வருகிறேன், வாழ்க்கையின் அந்த கட்டத்தில் பல அனுபவங்கள் உள்ளன, அதில் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஒரு மேடையும் வாய்ப்பும் கிடைக்கும்போது சாதாரண குடிமக்கள் ஆற்றும் சாதனைகளை நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. எனவே, அணுகுமுறையை சீர்திருத்தினோம்.

நீங்கள் கூர்ந்து கவனித்தால், பல ஆண்டுகளாக, ஒவ்வொரு பகுதி மக்களையும் நாங்கள் நம்பினோம். இங்கே சில உதாரணங்கள். எட்டாவது பிரிக்ஸ் உச்சி மாநாடு கோவாவில் நடந்தது. பல பசிபிக் தீவு நாடுகள் பங்கேற்கும் இரண்டாவது FIPIC உச்சிமாநாடு ஜெய்ப்பூரில் நடந்தது. ஐதராபாத்தில் உலக தொழில் முனைவோர் மாநாடு நடந்தது.

இதேபோல், நம் நாட்டிற்கு வருகை தந்த பல வெளிநாட்டு தலைவர்களுக்கு டெல்லியில் அல்லாமல், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விருந்தளிக்கப்படுவதை உறுதி செய்தோம். அதே அணுகுமுறை G20யிலும் பெரிய அளவில் தொடர்கிறது.

எங்கள் G20 தலைவர் பதவிக்காலம் முடிவடையும் நேரத்தில், 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 60 நகரங்களில் 220 கூட்டங்கள் நடந்திருக்கும். சுமார் 125 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் இந்தியர்களின் திறமைகளைக் கண்டிருப்பார்கள். நம் நாட்டில் 1.5 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்தத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் அல்லது அவற்றில் சில அம்சங்களைத் தொடர்பு கொண்டுள்ளனர்.

இதுபோன்ற ஒவ்வொரு உலக அளவிலான பணிகளும் தளவாட மேலாண்மை, விருந்தோம்பல், சுற்றுலா, மென் திறன்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துதல் போன்ற பல களங்களில் திறன் மேம்பாட்டை உயர்த்தியுள்ளது. இது ஒவ்வொரு பகுதி மக்களின் தன்னம்பிக்கைக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. இப்போது, அவர்களால் உலகத் தரம் வாய்ந்த ஒன்றை வழங்க முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்தத் திறனும் நம்பிக்கையும் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு வழிவகுக்கும் பல்வேறு ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு வழிவகுக்கப்படும்.

மேலும், நாங்கள் அனைத்து மாநிலங்களிலும் கூட்டங்களை நடத்துவது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாநிலமும் தங்கள் தனித்துவமான கலாச்சார முத்திரையை பிரதிநிதிகளின் மனதில் பதிய வைப்பதை உறுதிசெய்கிறோம். இது இந்தியாவின் நம்பமுடியாத பன்முகத்தன்மையை உலகிற்கு உணர்த்துகிறது. G20 நாடுகளின் பிரதிநிதிகளுடனான தனது உறவை ஒவ்வொரு மாநிலமும் உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர்கள் சந்திப்பின் போது பல்வேறு மாநிலங்களுக்கும் நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன். இது எதிர்காலத்தில் மக்களுக்கு நிறைய வாய்ப்புகளைத் திறக்கும்.

எனவே, G20 தொடர்பான நடவடிக்கைகள் பரவலாக்கப்படுவதற்குப் பின்னால் ஒரு ஆழமான திட்டம் உள்ளது. எங்கள் மக்கள், எங்கள் நிறுவனங்கள் மற்றும் எங்கள் நகரங்களில் திறன் மேம்பாட்டில் நாங்கள் முதலீடு செய்கிறோம்.

கேள்வி: இந்தியாவில் 2023இல் சுற்றுலா முதல் சுகாதாரம், பருவநிலை மாற்றம் முதல் ஆரோக்கியம், பெண்கள் அதிகாரமளித்தல் முதல் ஆற்றல் மாற்றம் வரை 200க்கும் மேற்பட்ட துறைசார் கூட்டங்கள் நடைபெற்றன. அவற்றில் எத்தனை உங்கள் திருப்திக்கு உறுதியான விளைவுகளை உருவாக்கியுள்ளன. நீங்கள் பார்க்கும் சில பகுதிகளில் நாங்கள் இன்னும் அதிகமாக செய்திருக்க முடியும் என எண்ணுகிறீர்களா?

பிரதமரின் பதில்: இந்த பதிலில் இரண்டு அம்சங்கள் உள்ளன. முதலாவதாக, எங்கள் பதவிக் காலம் முடிவடைந்த பிறகு, டிசம்பரில் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்க வேண்டும். மேலும், வரவிருக்கும் உச்சிமாநாட்டின் புனிதத்தன்மையைக் கருத்தில் கொண்டு, நான் இப்போது விவரங்களை உச்சரிப்பது சரியாக இருக்காது.

ஆனால் நான் நிச்சயமாக பேச விரும்பும் மற்றொரு அம்சம் உள்ளது. கடந்த ஆண்டில் பல முக்கியப் பிரச்னைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நிலையான மற்றும் சமமான ஒரு எதிர்காலத்தை நோக்கி முழு ஒரு பூமியையும் ஒரே குடும்பமாக கொண்டு செல்லும் உணர்வில், பல பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டுள்ளன.

G20 இல் பல்வேறு நிலைகளில் சந்திப்புகள் நடந்துள்ளன.

ஒரு முக்கியமான வகை அமைச்சரிகள் நிலைச் சந்திப்பு, இது உயர்மட்டமானது மற்றும் உடனடி கொள்கை தாக்கத்திற்கு பெரும் வாய்ப்பு உள்ளது. அமைச்சர்கள் கூட்டத்திலிருந்து சில உதாரணங்களைத் தருகிறேன்.

13-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பல வெற்றிகரமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

நமது தலைமையின் முன்னுரிமைகளில் ஒன்று, காலநிலை நடவடிக்கையை ஜனநாயகப்படுத்துவதன் மூலம் விரைவுபடுத்துவதாகும். மிஷன் லைஃப் மூலம் காலநிலை மீதான வாழ்க்கைமுறை தாக்கத்தில் கவனம் செலுத்துவது, இந்தப் பிரச்சினையை உண்மையிலேயே ஜனநாயகப்படுத்துவதற்கான ஒரு வழியாகும், ஏனெனில் இப்புவியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி ஒவ்வொரு நபரிடமும் உள்ளது. வளர்ச்சி அமைச்சர்கள் கூட்டத்தில், நிலையான வளர்ச்சிக்கான SDGகள் மற்றும் வாழ்க்கை முறைகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான செயல் திட்டத்தை G20 ஏற்றுக்கொண்டது.

இதேபோல், வேளாண் அமைச்சர்கள் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த டெக்கான் உயர்மட்டக் கொள்கைகளை வெற்றிகரமாக ஏற்றுக்கொண்டனர். இவை உலகளாவிய பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க உதவும். நமது நிலையான சூப்பர்ஃபுட், ஸ்ரீ அன்னா மீதான எங்கள் ஆர்வத்தின் காரணமாக, வேளாண் அமைச்சர்கள் தினைகள் மற்றும் பிற பழங்கால தானியங்கள் பற்றிய ஆராய்ச்சிக்கான சர்வதேச முயற்சியையும் தொடங்கினர், அதே நேரத்தில் தட்பவெப்பநிலை மற்றும் விவசாயத்திற்கான டிஜிட்டல் அணுகுமுறையின் முக்கியத்துவத்திலும் கவனம் செலுத்தினர்.

பெண்களின் அதிகாரமளித்தல் தொடர்பான அமைச்சர்கள் மாநாடு, பாலின டிஜிட்டல் பிளவைக் குறைப்பது, தொழிலாளர் பங்கேற்பில் உள்ள இடைவெளிகளைக் குறைப்பது மற்றும் தலைமைப் பதவிகள் மற்றும் முடிவெடுக்கும் பதவிகளில் பெண்களுக்குப் பெரிய பங்கை வழங்குவது ஆகியவற்றில் ஒருமித்த கருத்தை உருவாக்கியது.

எரிசக்தி அமைச்சர்கள் ஹைட்ரஜனுக்கான உயர்மட்டக் கொள்கைகளில் ஒருமித்த கருத்தை வழங்கியுள்ளனர் மற்றும் பல விளைவுகளுடன் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியை நிறுவுவதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளனர்.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சர்கள், 2040ஆம் ஆண்டுக்குள் நிலச் சீரழிவை 50 சதவிகிதம் குறைக்க வேண்டும் என்ற லட்சிய இலக்கை நிர்ணயித்து, தொழில் சார்ந்த வளத் திறன் மற்றும் வட்டப் பொருளாதாரத் தொழில் கூட்டமைப்பைத் தொடங்குவதில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள், எல்லைகளுக்கு அப்பாற்பட்ட திறன்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்காக தொழில்களை வகைப்படுத்துவதற்கான சர்வதேச குறிப்பை உருவாக்குவதற்கு ஒருமித்த கருத்தை அடைந்தனர். இது தேவையை பூர்த்தி செய்ய உதவும், மேலும் தொழில்கள் மனித மூலதனத்தைக் கண்டறிய உதவும்.

வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் வர்த்தக ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கான உயர்மட்டக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர், இது வர்த்தகத்தை அதிகரிக்கும் மற்றும் எளிதாக வணிகம் செய்வதற்கு பங்களிக்கும்.

இவை முக்கியமான சில முன்னேற்றங்கள். களங்கள் முழுவதும், இன்னும் பல உள்ளன. வரவிருக்கும் ஆண்டுகளில், உலகம் எடுக்கும் திசையில் இவை முக்கிய பங்கு வகிக்கும்.

கேள்வி: சில கூட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு எங்கள் அண்டை நாட்டவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாகிஸ்தானும் சீனாவும் ஆட்சேபித்த போதிலும், காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் ஜி-20 மாநாட்டில் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு விருந்தளிப்பதன் மூலம் நாம் என்ன செய்தியை அனுப்பினோம்?

பிரதமரின் பதில்: PTI இப்படியொரு கேள்வியைக் கேட்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அந்த இடங்களில் கூட்டங்களை நடத்துவதைத் தவிர்த்திருந்தால் இப்படிப்பட்ட கேள்வி செல்லுபடியாகும்.

எங்களுடையது பரந்த, அழகான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாடு. ஜி20 மாநாடுகள் நடக்கும்போது, நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் கூட்டங்கள் நடைபெறுவது இயல்பு அல்லவா?

கேள்வி: பெரும்பாலான உறுப்பு நாடுகள் பொருளாதார மந்தநிலையின் அச்சுறுத்தலை எதிர்கொண்டபோது, ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்றுக்கொண்டது, அதே நேரத்தில் இந்தியா மட்டுமே பிரகாசமான இடமாக இருந்தது. கடன் ஓட்டம், பணவீக்கக் கட்டுப்பாடு மற்றும் உலகளாவிய வரி ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் ஒருமித்த கருத்தை உருவாக்க, வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா எவ்வாறு மேம்படுத்தியுள்ளது?

பிரதமரின் பதில்: 2014க்கு முந்தைய மூன்று தசாப்தங்களில், நமது நாடு பல அரசாங்கங்களைக் கண்டது, அவை நிலையற்றவை மற்றும் அதனால், பலவற்றைச் செய்ய முடியவில்லை.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில், மக்கள் ஒரு தீர்க்கமான ஆணையை வழங்கியுள்ளனர், இது ஒரு நிலையான அரசாங்கம், யூகிக்கக்கூடிய கொள்கைகள் மற்றும் ஒட்டுமொத்த திசையில் தெளிவுபடுத்துவதற்கு வழிவகுத்தது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டதற்கு இந்த ஸ்திரத்தன்மையே காரணம். பொருளாதாரம், கல்வி, நிதித்துறை, வங்கிகள், டிஜிட்டல் மயமாக்கல், நலன், உள்ளடக்கம் மற்றும் சமூகத் துறை தொடர்பான இந்த சீர்திருத்தங்கள் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளன. ஒரு இயற்கை துணை தயாரிப்பு.

இந்தியா அடைந்த விரைவான மற்றும் நீடித்த முன்னேற்றம் இயற்கையாகவே உலகம் முழுவதும் ஆர்வத்தைத் தூண்டியது மற்றும் பல நாடுகள் நமது வளர்ச்சிக் கதையை மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்த முன்னேற்றம் ஒரு விபத்து அல்ல, ஆனால் சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம்’ என்ற தெளிவான, செயல்-சார்ந்த சாலை வரைபடத்தின் விளைவாக நிகழ்கிறது என்று அவர்கள் நம்புகிறார்கள்.

நீண்ட காலமாக, இந்தியா 1 பில்லியனுக்கும் அதிகமான பசி வயிற்றைக் கொண்ட நாடாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது, இந்தியா 1 பில்லியனுக்கும் அதிகமான ஆர்வமுள்ள மனங்கள், 2 பில்லியனுக்கும் அதிகமான திறமையான கைகள் மற்றும் நூற்றுக்கணக்கான மில்லியன் இளைஞர்களைக் கொண்ட தேசமாக பார்க்கப்படுகிறது. உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு மட்டுமல்ல, அதிக இளைஞர்களை கொண்ட நாடும் நாம்தான். அதனால், இந்தியாவைப் பற்றிய கண்ணோட்டங்கள் மாறிவிட்டன.

மேலும், தொற்றுநோய்க்கான இந்தியாவின் அளவீடு மற்றும் அளவிடப்பட்ட நிதி மற்றும் பணவியல் பிரதிபலிப்பு மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் போது மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்தது. அதே நேரத்தில், எங்களின் ஈர்க்கக்கூடிய டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் காரணமாக, ஏழைகளுக்கான ஒவ்வொரு ரூபாயும், எந்தவித கசிவும் அல்லது தாமதமும் இல்லாமல், உடனடியாக அவர்களைச் சென்றடைந்தது.

இதுபோன்ற பல காரணிகள் ஒரு வலுவான நம்பகமான அடித்தளத்தை வழங்கின, அதன் அடிப்படையில் நமது G20 பிரசிடென்சி நிகழ்ச்சி நிரலை உருவாக்க முடியும். இதுவே உலக நாடுகளை ஒன்றிணைத்து பல்வேறு பிரச்சினைகளை விவாதிக்கவும், விவாதிக்கவும், வழங்கவும் முடிந்தது.

பணவீக்கம் உலகம் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சினை. எங்கள் G20 பிரசிடென்சி G20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களை ஈடுபடுத்தியது. மத்திய வங்கிகளின் கொள்கை நிலைப்பாடுகளை சரியான நேரத்தில் மற்றும் தெளிவாகத் தொடர்புகொள்வது முக்கியமானது என்று அங்கீகரிக்கப்பட்டது. பணவீக்கத்தை எதிர்த்துப் போராட ஒவ்வொரு நாடும் எடுக்கும் கொள்கைகள் மற்ற நாடுகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தாமல் இருப்பதை இது உறுதி செய்ய முடியும்.

உணவு மற்றும் எரிசக்தி சந்தைகள் நெருக்கமாக ஒன்றோடொன்று இணைந்திருப்பதால், உணவு மற்றும் எரிசக்தி விலை ஏற்ற இறக்கத்துடன் தொடர்புடைய சவால்களை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்த கொள்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

சர்வதேச வரிவிதிப்பைப் பொறுத்த வரையில், பலதரப்பு மாநாட்டின் உரையை வழங்குவது உட்பட, தூண் ஒன்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைவதற்கு வலுவான உத்வேகத்தை வழங்க இந்தியா G20 மன்றத்தைப் பயன்படுத்தியது. இந்த மாநாடு நாடுகளும் அதிகார வரம்புகளும் சர்வதேச வரி முறையின் வரலாற்று முக்கிய சீர்திருத்தத்துடன் முன்னேற அனுமதிக்கும். நீங்கள் பார்க்க முடியும் என, பல சிக்கல்களில் கணிசமான முன்னேற்றம் உள்ளது. இது மற்ற கூட்டாளி நாடுகள் இந்தியாவின் ஜனாதிபதி பதவியில் காட்டிய நம்பிக்கையின் விளைவாகும்.

Source: PTI’s Exclusive Interview with Prime Minister Narendra Modi