Home Blog Page 55

மலையாள புத்தாண்டு, மாத பூஜை சபரிமலையில் கோலாகலம்..

1000890602 - 2026

மலையாள புத்தாண்டு சிம்மம் முதல்நாள் மற்றும் ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை சனிக்கிழமை மாலை திறந்து புதிய திதந்திரி பொறுப்பேற்ற இன்று ஞாயிற்றுக்கிழமை மலையாள புத்தாண்டு வழிபாடுகள் சன்னிதானத்தில் கோலாகலமாக துவங்கியது.பல்லாயினக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே இருமுடி செலுத்தி சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.இவர்களுக்கு புதிய தந்திரி பிரசாதம் வழங்கினார்.

மலையாள புத்தாண்டு மற்றும் ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் ஓராண்டு காலத்துக்கான தந்திரியாக கண்டரரு மகேஷ் மோகனரரு பொறுப்பேற்றார்.

சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். வேறு பூஜைகள் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடையடைக்கப்பட்டது.

1000890601 - 2026

இன்று அதிகாலை 4:00 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை திறந்ததும் கணபதி ஹோமம் அபிஷேகத்தை தொடர்ந்து நெய்யபிஷேகம் தொடங்ககயது.பின்னர் உஷ பூஜை, மதியம் கலசாபிஷேகம், உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை நடக்கும்.

21- ம் தேதி வரை எல்லா நாட்களிலும் காலை 11:00 மணி வரை நெய்யபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு படி பூஜையும் நடைபெறும். 21 இரவு 10:00 மணிக்கு நடையடைக்கப்படும். இன்று முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான தந்திரியாக மகேஷ் மோகனரரு நேற்று பொறுப்பேற்றார். தாழமன் தந்திரி குடும்பத்தைச் சேர்ந்த கண்டரரு ராஜீவரரு மற்றும் மகேஷ் மோகனரரு சுழற்சி முறையில் சபரிமலையில் பூஜைகளுக்கு தலைமை வகிக்கின்றனர்.

ஆவணி ஒன்றாம் தேதி கேரளாவில் வருடப்பிறப்பாக உள்ளதால் இன்று காலையில் ஐயப்பனை வழிபட நேற்று மாலையே பக்தர்கள் கூட்டம் பம்பை சபரிமலையில் நிரம்பி வழிந்தது.

1000890603 - 2026

இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை, களபாபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமன பூஜை, படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகள் இன்று தந்திரி மகேஷ் மோகனர் தலைமையில் லட்சார்ச்சனை நடைபெறும். வரும் 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். 21ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஆவணி மாத பூஜைகள் நிறைவடையும். சபரிமலையில் பலத்த மழை பெய்வதால் பக்தர்கள் பம்பையில் குளிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மலையாள புத்தாண்டு சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு..

கேரளாவில் பிரசித்தி பெற்ற மலையாள புத்தாண்டு சிம்மம் ஆவணி மாத பூஜைக்காக கோவில் நடை இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.ஞாயிற்றுக்கிழமை மலையாள புத்தாண்டு வழிபாடுகள் பூஜைகள் அபிஷேகம் ஆராதனை விமர்சையாக நடைபெறும்.சபரிமலை புதிய தந்திரியாக கண்டரரு மகேஸ்வரரு இன்று பொறுப்பேற்கிறார்.இவர் ஒரு ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதான பூஜை வழிபாடுகள் நடத்துவார்.

sabarimala aiyappa concluding pooja - 2026

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். தமிழகத்தில் தமிழ்ப்புத்தாண்டு தை முதல் நாள் கொண்டாடப்படுகிறது.இது போல் மலையாள புத்தாண்டு கேரளாவில் ஆவணி சிம்மம் முதல்நாள் அதி விமர்சையாக கொண்டாடப்படும்.அதன்படி மலையாள புத்தாண்டு மற்றும் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஸ்வரரு இன்று பொறுப்பேற்கிறார். அவரது முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். பக்தர்களுக்கு பஷ்ப பிரசாதம் வழங்கப்படும்.தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். நடை திறப்பையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் மட்டும் நடைபெறும்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 21 -ந் தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும். மேலும் 21-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளை ஞாயிற்றுக்கிழமை ஆவணி முதல் நாள் மலையாளிகள் மலையாள புத்தாண்டாக கொண்டாடுவார்கள் இதற்காக சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஏராளமான மலையாளிகள் இருமுடி கட்டி சபரிமலைக்கு அதிகளவில் வந்து ஐயப்பனுக்கு பல்வேறு முயற்சிகள் செலுத்தி பூஜை வழிபாடுகள் நடத்தி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்

வம்பன் கழகம் ஆக்கிய வய்யிறமுத்து!

write thoughts - 2026
#image_title

ராமனின் புத்தி சுவாதீனம் பற்றி வைரமுத்து உளறல்!

— ஆர். வி. ஆர்

சென்னையில் கம்பன் கழகத்தின் பொன்விழா சமீபத்தில் நடந்தது. அப்போது கவிஞர் வைரமுத்துவுக்குக் ‘கவிச்சக்கரவர்த்தி கம்பர்’ விருது வழங்கப் பட்டது. விருது வாங்கிய விழா மேடையிலிருந்து ஒரு பைத்தியக்காரப் பேச்சைப் பேசினார் வைரமுத்து.

கம்பராமாயணத்தில் வரும் பாடல் சொல் ஒன்றுக்கு ஏடாகூடமான விளக்கம் கொடுத்தார் வைரமுத்து. அதன் மூலம் ராமன் புத்தி சுவாதீனம் அற்றவனாக இருந்தான், அப்படித்தான் கம்பன் சொல்ல வருகிறான் என்கிற ரீதியில் வைரமுத்து உளறிக் கொட்டினார்.

ராமாயண காவியத்தில், வாலி-சுக்ரீவன் யுத்தத்தின் போது, வாலி சுக்ரீவனைப் பிடித்துத் தரையில் வீசிக் கொல்ல இருந்த தருணம் வருகிறது. அந்த நேரத்தில், மறைந்து நின்றிருந்த ராமன் எய்த அம்பு வாலியின் மார்பில் தைக்க, சுக்ரீவன் மீதிருந்த வாலியின் பிடி நழுவுகிறது. சுக்ரீவன் தப்பிக்கிறான். வீழ்த்தப்பட்ட வாலி, தன் மார்பிலிருந்த அம்பைச் சிரமத்துடன் உருவிப் பார்த்து அது ராமபாணம் என்று தெரிந்து கொள்ள, ராமனும் வாலியின் முன் வருகிறான்.

ராமன் தன்னைக் கொல்ல அம்பு விடுத்தான், அதையும் மறைந்து நின்று செய்தான், என்பதை ஏற்க முடியாத வாலி கோபத்தில் ராமனிடம் பல கேள்விகள் கேட்கிறான். அதில் ஒரு கேள்வியின் சாரம் இது: ‘சீதையைப் பிரிந்ததால், அந்தப் பிரிவில் திகைத்துப் போய், தன்னிலை மறந்து, என்னைக் கொல்ல முயன்றாயா ராமா?’ இதை வெளிப்படுத்தக் கம்பன் வாலியின் வாயிலிருந்து வருவதாகத் தனது பாடலை இப்படி முடிக்கிறான்: “….. தேவியைப் பிரிந்த பின்னை, திகைத்தனை போலும் செய்கை?”

இந்தப் பாடலில் வரும் “திகைத்தனை” என்ற சொல்லின் அர்த்தத்தை, வைரமுத்து விபரீதமாக வளைத்து முறுக்குகிறார். அவர் பேசிய வார்த்தைகள் இவை:

“திகைத்தல் என்றால் பிரமித்தல். இன்னொரு சொல், மயங்குதல். மதி மயங்கி விட்டான். சீதையைப் பிரிந்த ராமன் செய்வதறியாமல் புத்தி சுவாதீனம் இழந்து விட்டான். புத்தி சுவாதீனம் இழந்தவன் செய்கிற குற்றம் குற்றமாகாது என்று இந்திய தண்டனைச் சட்டம், 84-ஆம் பிரிவு சொல்கிறது. இது கம்பனுக்குத் தெரியுமோ தெரியாதோ. கம்பனுக்குச் சட்டம் தெரியாது, ஆனால் அவனுக்குச் சமூகம் தெரியும், உளவியல் தெரியும், இந்த மண்ணைத் தெரியும். ராமன் என்ற ஒரு குற்றவாளி கம்பனால் முற்றிலும் விடுவிக்கப் படுகிறான். ராமனை மன்னித்து ராமனை மனிதன் ஆக்குகிறான், கம்பன். ராமன் அந்த இடத்தில் மனிதன் ஆகிறான். கம்பன் கடவுளாகிறான்.”

வைரமுத்து இப்படிக் கூச்சமில்லாமல் பிதற்றியதன் காரணம், அவரது இந்த எண்ணம்: ‘இந்து என்றால் திருடன் என்று அர்த்தம் சொன்ன கலைஞர் கருணாநிதி கோலோச்சிய திமுக-வின் இன்றையத் தலைவர் மு. க. ஸ்டாலினையும், அவர் மகன் உதயநிதி ஸ்டாலினையும் நமது கோணங்கிப் பேச்சு மகிழ்விக்கும். அதனால் அவர்களிடம் நம் மதிப்பு உயர்ந்து நமக்கு வருகிற பலன்கள் வருக வருகவே!’

ராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற தினம் முதல், ராவணனை வதம் செய்து ராமன் சீதையை மீட்ட நாள் வரை, ராமன் தன் மனைவியைப் பிரிந்திருந்தான். அந்த எல்லா நாட்களிலும் ராமன் புத்தி சுவாதீனம் இழக்காமல், வாலியைக் கொன்ற நேரம் மட்டும் ராமன் புத்தி சுவாதீனத்தை இழந்திருந்தானா? என்ன சொல்கிறார் வைரமுத்து?

இன்னொன்று. வாலி-சுக்ரீவன் யுத்தத்திற்கு முன்னரே, ராமனும் சுக்ரீவனும் தம்முள் பேசி வாலி வதத்தைத் திட்டமிட்டிருந்தார்கள். அதன்படி சுக்ரீவன் வாலியை யுத்தத்திற்கு அழைத்தான், வாலியும் சண்டைக்கு வந்தான், வாலி வதம் அப்படியாக நடந்தது என்று கம்பராமயணத்தில் வருகிறது. ஆகையால் ராமன் புத்தி சுவாதீனம் இழந்ததால் வாலியைக் கொன்றான் என்ற பேச்சுக்கு இடமில்லை. அப்படிப் பேசுபவர்களின் புத்தியைப் பற்றி யார் என்ன சொல்ல?

ராமபாணத்தால் வீழ்ந்து முடங்கி இருந்த வாலி, ஆத்திரத்தில் ராமனிடம் ஒவ்வொன்றாகக் கேள்விகள் கேட்க, அந்தக் கேள்விகளுக்கு ராமன் பொறுமையாகப் பதிலளிக்கிறான். தான் வாலியைக் கொல்ல வந்தது ஏன் என்றும் விளக்குகிறான். ராமன் ஏன் மறைந்திருந்து அம்பு வீசினான் என்பதை லக்ஷ்மணன் விளக்குகிறான். முடிவில் ராமன் மற்றும் லக்ஷ்மணனின் விளக்கங்களால் வாலி திருப்தி அடைகிறான், அதை வாலியே ராமனிடம் சொல்கிறான். இவையும் கம்பராமாயணத்தில் அடுத்து வரும் பாடல்களில் உள்ளன.

முடிவாக, ‘ராமன் அறத்தின்படி நடந்திருக்கிறான், அவன்மீது தவறில்லை. நான்தான் என் வாழ்வில் தவறான செய்கைகள் செய்துவிட்டேன்’ என்று வாலி உணர்ந்தான். தான் செய்த தீதை, கெட்ட செயல்களை, ராமன் பொறுத்தருள வேண்டும் என்றும் வாலி ராமனிடம் வேண்டினான் என்றெல்லாம் கம்பரே விவரிக்கிறார். ஆகையால், ‘சீதையைப் பிரிந்ததால் மனக் கலக்கம் கொண்டிருந்த ராமன், அவன் என்ன காரியம் செய்கிறான் என்பது தெரியாமலேயே என்னைக் கொல்ல முயற்சித்தானோ?’ என்று ஆரம்பத்தில் எண்ணிய வாலி அந்த எண்ணத்தைப் பின்னர் மாற்றிக் கொள்கிறான் என்பது தெளிவாகிறது.

ஒரு கட்டத்தில், வாலி ராமனைப் பார்த்துத் “தந்தை போன்றவனே!” என்றும் அழைத்துப் பேசுவதாகக் கம்பன் சொல்கிறான். அடுத்து, ராமன் பேசிய பேச்சை உள்வாங்கி உணர்ந்த வாலி, “என் உயிர் போகும் முன்னர் எனக்கு மெய்யறிவைத் தந்து அருள் செய்தாய்” என்றும் ராமன் மீது நன்றி கொண்டவனாகப் பேசுகிறான் (வாலி வதைப் படலம், பாடல் 130).

ராமனின் மீது வாலிக்கு ஏற்பட்ட மதிப்பு எப்படி உயர்கிறது என்றால், தன்னருகே தன் மகன் அங்கதன் வந்து வருந்தி அழுதபோது அவனைத் தேற்றிவிட்டு, ராமனின் பெருமையையும் அங்கதனுக்கு எடுத்துச் சொல்கிறான் வாலி. பின்னர், எவர் மனதையும் தொடும் ஒரு காரியத்தை வாலியும் ராமனும் செய்கிறார்கள். வாலி ராமனிடம் அங்கதனை அடைக்கலமாக ஒப்படைக்கிறான். ராமனும் அங்கதனை ஏற்று, தன்னுடைய உடைவாளை அங்கதனிடம் கொடுக்க, அதை அங்கதனும் பெற்றுக் கொள்கிறான். அச் சமயம் வாலியின் உயிர் பிரிகிறது (வாலி வதைப் படலம், பாடல்கள் 159, 160)

இறுதியாக ராமன் மீது வாலி குறை காணவில்லை, மாறாக அவன் ராமன் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவன் ஆனான் என்பது கம்பர் மூலமாகவே நமக்கு விளங்குகிறது. கம்பராமாயணத்தின் இந்த மற்ற பாடல்களைப் பற்றி வைரமுத்து மேடையில் மூச்சு விடாததன் காரணம் என்ன? அவற்றுக்கு விரோதமான கண்ணோட்டத்தில் ஏன் அன்று பேசினார்? நேர்மையின்மை, உள்நோக்கம் தானே?

ஆரம்பத்தில் வாலி ராமனைப் பார்த்துக் கேட்ட ஒரு கேள்வியை ஏதோ கம்பனே அப்படிக் கேட்டு ராமனைப் புத்தி சுவாதீனம் இழந்தவன் என்று கம்பனே தீர்ப்பும் கொடுத்த மாதிரிப் பேசி இருக்கிறர் வைரமுத்து.

தனது பேச்சில் வைரமுத்து கடைசியாகச் சொல்ல வருவது இது: ‘புத்தி சுவாதீனம் இழந்த ராமன் ஒரு கொலையைச் செய்துவிட்டான். ஆகவே ராமன் கடவுள் அல்ல, வெறும் மனிதன். இன்னொரு பக்கத்தில், வெறும் மனிதனான கம்பன், கொலைபாதகக் குற்றம் செய்த ராமனைச் சாமர்த்தியமாக புத்தி சுவாதீனம் இழந்தவன் என்று காண்பித்து, அதன் காரணமாக இ.பி.கோ சட்டப் பிரிவு 84 போன்ற சட்ட அடிப்படையில் ராமனை – அதாவது ஒரு அவதாரக் கடவுளையே – குற்றம் செய்யாதவனாக ஆக்கிக் காப்பாற்றுகிறான். ஆகையால் கம்பன், கடவுளாக உயர்கிறான்.’

வைரமுத்துவின் இந்த எண்ணம், இந்த வியாக்கியானம், அசல் மாய்மாலம், ஏமாற்று வேலை, பிராடுத்தனம்!

வைரமுத்து குறிப்பிட்ட இ.பி.கோ சட்டம் நீக்கப் பட்டு அதற்குப் பதில் வேறு பெயரில் ஒரு புதுச் சட்டம் அமலில் இருக்கிறது. அதிலும் வைரமுத்து சொன்ன சட்டப் பிரிவின் அம்சம் உண்டு. இந்த சட்டப் பிரிவைப் பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர் மீதான குற்றச் சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப் படவேண்டும் என்றால், அந்த நபர்தான் அகற்கான கோரிக்கையை முன்வைக்க வேண்டும். அவர்தான் குற்றம் நடந்த தருணத்தில் தான் புத்தி சுவாதீனம் இழந்து இருந்ததாக நிரூபிக்க வேண்டும்.

தொடக்கத்தில் வாலி ராமன் மீது ஒரு சந்தேகம் கொண்டிருந்தாலும் – அதாவது சீதையைப் பிரிந்த காரணத்தால் ராமன் தன் மீது அம்பு எய்தபோது அவன் திகைப்பில் இருந்தானோ என்று சந்தேகம் கொண்டிருந்தாலும் – ராமன் வாலியிடம் பேசப் பேச, தன்மீது ராமன் குற்றம் இழைக்கவில்லை என்று வாலி உணர்கிறான், மேலும் ராமனை வாலி புகழ்கிறான், போற்றுகிறான் என்று கம்பர் விவரிக்கிறார். முடிவில் ராமன் குற்றம் செய்ததாக அவன் மீது கம்பராமாயணத்தில் குற்றச்சாட்டே வைக்கப் படவில்லை – கடைசியில் வாலியின் பார்வையில் கூட அந்தக் குற்றச்சாட்டு இல்லை. ஆகையால் ராமனின் பெயரைக் கம்பன் காப்பாற்றித் தர ஒரு சட்டப் பிரிவு கை கொடுக்கிறது என்று வைரமுத்து சொல்கிறாரே, அந்தச் சட்டப் பிரிவுக்கு இங்கு தேவையும் இல்லை, வேலையும் இல்லை. வைரமுத்துவின் சட்ட வாதமும் புஸ்வாணம் தான்.

தன்மீது விழும் உளறல் குற்றச்சாட்டிலிருந்து இப்போது யாராலும் காப்பாற்றப் பட முடியாமல் இருப்பவர் ஒருவர்தான். வேறு யார்? வைரமுத்துதான்!

Author: R. Veera Raghavan Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com

இன்றைய இந்தியாவுக்கு ஔரங்கசீப்பின் சமாதி கூட தேவையில்லை!

aurangazeb - 2026

— எம். ஜெ. அக்பர்

ஔரங்கசீப் பாகிஸ்தானின் கருத்தியல் தந்தை. அதை பாதுகாக்கும் புரவலர். முஸ்லிம்கள் மீதான அன்பினால் பிறந்தது அல்ல பாகிஸ்தான். இந்துக்கள் மீதான வெறுப்பில் உருவானது. பிரிட்டிஷாரின் கூட்டாளியான நவநாகரீக உடை அணிந்த முகமது அலி ஜின்னா பிரசவகால தாதியாக இருந்து வெளிக்கொணர்ந்தது.

ஔரங்கசீப் வழியில் பிரிட்டிஷார்

ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் இடைவெளி இருக்க வேண்டும் என்பதை அரசின் கொள்கையாற்றியவர் ஔவுரங்கசீப் . திலகம் அணிவது, ஹோலி பண்டிகை கொண்டாடுவது என இரு மதத்தினர் இடையே தினசரி வாழ்வில் வெளிப்பட்ட கலாச்சார ஒற்றுமை, மொழி ஒற்றுமை என நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இருந்த சமூக ஒருமைப்பாட்டை உடைத்து நேரெதிராக இரு மதத்தினரையும் நிறுத்தியவர். பிரிட்டிஷார் இந்த இடைவெளியை தனக்கு சாதகமாக்கி கொண்டனர் . ரயில் நிலையங்களில் முஸ்லிம்களுக்கான தனி தண்ணீர் குடம் இந்துக்களுக்கான தண்ணீர் தொட்டி என்பன போன்ற திட்டங்களால் வேற்றுமையை நீரூற்றி வளர்த்தனர்.

இரு மதத்தினருக்கும் தனித்தனி தொகுதி, ஒரு சார்பாக தேர்தல் முறைகேடுகளை கண்டு கொள்ளாமல் இருத்தல் போன்றவற்றால் ஹிந்து முஸ்லிம்களிடையே மோதலை வழமையாக்கினர். தனித் தொகுதி தான் பிறகு தனி நாடாக வடிவெடுத்தது. அவர்களின் செயல்கள் மற்றும் நோக்கங்கள் இடையே இருந்த தொடர்பு வெளிப்படையானது.

இந்தியாவும் பாகிஸ்தானும்

மதவெறி என்னும் நச்சு அடித்தளத்தின் மீது எதிர்கால இந்தியாவை கட்டி எழுப்ப முடியாது. கடந்த காலத்தை பார்த்து கழுத்து விரைத்து நோவுபடாமல், எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் இந்தியா என்பதே நம் நாட்டின் அறிவாற்றலை வெளிப்படுத்துகிறது. 21 ஆம் நூற்றாண்டின் எழுச்சியுடன் மின்னும் விண்மீன் இந்தியா. 19 ஆம் நூற்றாண்டு சகதியில் சரிந்து விட்டது பாகிஸ்தான். வேறுபட்ட மக்கள் என்பது காரணமல்ல. வேற்றுமையை, வெறுப்பை மையமாகக் கொண்டதுதான் காரணம்.

ஆர் எஸ் எஸ் கலாச்சாரம்

ஆர் எஸ் எஸ் சார்பாக பேசுபவர்கள், அவர்கள் உயர்ந்த தலைவர்களாக இருந்தாலும் கூட , தன் விருப்பம் போல் பேசி விட முடியாது. அவர்களுக்கு நம்முடைய அரசியல் கலாச்சாரம் ஒத்து வருவதில்லை. நடைமுறைக்கு ஏற்ற முடிவுகளை கூட கட்டுப்பாடுடனே முன்னெடுத்துச் செல்லும் பழக்கம் கொண்டவர்கள். அரசியல் கட்சிகளின் பேச்சாளர்களை போல் விருப்பம் போல பேசவோ, சூழ்நிலைக்கு ஏற்ப வார்த்தை பிரயோகங்களுக்கோ, உதறல் எடுத்தது போல் உடனடியாக மாற்றிக் கொள்ளும் சுதந்திரமோ ஆர்எஸ்எஸ் பேச்சாளர்களுக்கு இல்லை. விஷயம் எவ்வளவு தீவிரமானதோ அதற்கேற்ப தீவிர சிந்தனைக்கும் விவாதங்களுக்கும் பிறகு ஒரு நிலைப்பாடு எடுக்கப்படும். இந்த விஷயத்தில் ஏற்ப மறுப்பு என்ற வாய்ப்பு உங்களுக்கு கிடையாது.

ஆர் எஸ் எஸ் ஸின் கொள்கை பரப்பு செயலாளரான சுனில் அம்பேத்கர், ஆறாவது முகலாய அரசரின் சமாதி தொடர்பாக எழுந்த வன்முறையை ஒட்டி பேசும்போது, 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கு ஔவுரங்கசீப் தேவையற்றவர், என்று சொன்னார். அந்த அமைப்பின் அதிகாரமிக்க பொதுச்செயலாளராக இருக்கும் தத்தாத்ரேயா ஹெசாபோலே, இந்திய கலாச்சார பண்புகளின் அடிப்படையிலேயே ‘நல்லிணக்கம் கொண்ட ஒன்றுபட்ட பாரதம் கட்டமைக்கப்படுகிறது’ என்று உறுதிப்பட தெரிவித்தார். அமைப்புக்குள் நடந்த சீரிய விவாதங்களுக்கும் சிந்தனை கடைசலுக்கும் பிறகே உருவான நிலைப்பாட்டை தான் இருவரும் வெளிப்படுத்தினர்.

கலாச்சாரமும் மதநம்பிக்கையும்

கலாச்சாரமும் மத நம்பிக்கையும் ஒன்றுதான் என்று நிறுவ மத அடிப்படைவாதிகள் எவ்வளவுதான் முயன்றாலும், அவை இரண்டும் ஒன்றல்ல.

இந்தோனேசியர்களும் அரேபியர்களும் ஒரே மதத்தை பின்பற்றினாலும் ஒரே கலாச்சாரம் கொண்டவர்கள் அல்லர் . இந்தோனேசியாவில் உள்ள ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே மொழியை பேசுகிறார்கள். அரேபிய கிறிஸ்தவர்கள் அரபு மொழி பேசுகிறார்கள்.

குரான் சொல்கிறது

ஒவ்வொரு மொழியிலும் இறைதூதரை அனுப்பி உள்ளதாக குரான் சொல்கிறது. ஏனெனில் படைப்பில் வேறுபாட்டை பார்க்க இறைவனால் முடியாது. நமக்கு மத நம்பிக்கை இருக்குமானால் நாம் எல்லோரும் இறைவனின் படைப்பு என்று ஏற்றுக் கொள்வோம். ஔவுரங்கசீப் மனப்பாடமாக குரானை சொல்லக்கூடியவர் என்பதால் அவருக்கு, லா கும் தீன் ஓ கும் வா இல் யா தீன் – உங்கள் நம்பிக்கை உங்களுக்கு என்னுடைய நம்பிக்கை எனக்கு என்ற குரானின் வசனம் தெரியும். ஆனால் அதை புரிந்து கொள்ள விடாமல் அவருடைய முன்முடிவான கருத்துக்கள் தடுத்தன.

ஏராளமான கசடுகள் நம்முடைய கதையாடலில் கலந்து விட்டதால் அவற்றை கலைந்து விரிவான தளத்தில் புரிந்து கொள்ள மீள்சீரமைப்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக, நம்மிடையே நடக்கும் விவாதங்கள் வெறுப்பைதான் வளர்க்கின்றனவே தவிர இணக்கத்தை அல்ல.

ஜிசியா

1669 ல் ஔரங்கசீப் ஜிசியா வரியை விதித்தார். அந்த அநியாயமான வரி விதிப்பு கடும் கண்டனத்தையும் எதிர்வினையையும் கிளப்பியது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இரண்டு மதத்தினரிடையே பெரும் இடைவெளியையும் உருவாக்கியது. முகலாயர்களுக்கும் ரஜபுத்திரர்களுக்கும் இடையே இருந்த உறவை மோசமாக பாதித்தது.

அதற்கு நூற்றாண்டுக்கு முன்பு அக்பரும் அவருக்கு பின் வந்த முகலாய பேரரசர்களும் இந்த நாட்டு கலாச்சாரத்துடன் முரண்படும், மக்களின் இயல்புக்கு மாறான மத அடிப்படையிலான (ஜிஸியா) வரியை நீக்கிவிட்டார்கள் என்பது இங்கு நினைவு கூருவது பொருத்தமாக இருக்கும் . அக்பர் மத நம்பிக்கைகளில் இருந்து விலகி விட்டதாக குற்றம் சாட்டி அவரது தம்பி முகமது ஹக்கீம் இஸ்லாமிய மத பழமைவாதிகளை திரட்டி அக்பருக்கு எதிராக கிளர்ச்சி செய்தான். கிளர்ச்சியாளர்களை ஓட ஓட விரட்டி காபூலில் ராஜா மான்சிங் தோற்கடித்தார்.

ஜிசியா வரியை அரசுக்கு வருமானத்தை சேர்க்காமல் தோல்வி அடைந்தது ஒரு முரண்நகை. மத ரீதியான முன் முடிவுகளை விட ஊழலை வென்றது. ஔவுரங்கசீப்புக்கு முட்டுக் கொடுக்கும் வரலாற்றாளர் ஆட்ரி ட்ருஷ்கே , ‘ ஜிசியா வரி விதிப்பை கொண்டு வந்ததன் மூலம் வலிமையான உலாமாக்களின் இடையே (முஸ்லிம் மத அறிஞர்கள்) ஔவுரங்கசீப்புக்கு செல்வாக்கு அதிகரிக்கவில்லை. ஜிஸியா வரி வசூலில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக ஔவுரங்கசீப்பின் சகாக்கள் திரண்டனர். வரி வசூல் செய்பவரின் பைக்கு பணம் சென்றதே தவிர கஜானாவுக்கு வரவில்லை. இது போன்ற திருடுகளை தடுக்கும் ஆண்மை ஔவுரங்கசீப்புக்கு இல்லை’, என்று எழுதியுள்ளார் (ஔவுரங்கசீப்: உண்மையும் கட்டுக்கதையும்)

ஹிந்து விரோதம்

1679 ல் அதுவரை நடைமுறையில் இருந்த ஜாரோகா தரிசன முறையை ஔவுரங்கசீப் ரத்து செய்தார். அந்த தரிசன முறையில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை நெற்றியில் திலகம் இட்டுக்கொண்டு ஹிந்துக்களுக்கு மொகலாய மன்னர்கள் தரிசனம் கொடுப்பது வழக்கம் . இது ஹிந்து சமய பழக்கம் எனக் கூறி அதை நிறுத்திவிட்டார். அவரது மதவெறிக்கு பாலின வேறுபாடும் தப்பவில்லை. முஸ்லிம் மகான்களின் கோவில்களுக்கு பெண்கள் செல்லக்கூடாது என தடை விதித்தார்.

அவர் எதையெல்லாம் தடை செய்தார் என்று பார்த்தால் அவையெல்லாம் நூற்றாண்டுகளுக்கும் மேலாக மொகலாயர்களின் ஆட்சியில் நடைமுறையில் இருந்ததை காணலாம்.

ஔவுரங்கசீப்புக்கு வக்காலத்து வாங்கும் ட்ருஷ்கே போன்றோர், 21 ஆம் நூற்றாண்டு நடைமுறைகளைக் கொண்டு அவரை மதிப்பிடக் கூடாது என்கிறார்கள். அது சரியான விஷயம்தான். ஔவுரங்கசீப் தன் சொந்த குடும்பத்தின் பண்புகளின்படி, தந்தை ,பாட்டன், முப்பாட்டன் போன்றோர் பின்பற்றிய நன்னெறிகளின்படி, பார்த்தால் கூட குற்றவாளிதான்.

ஷாஜகான்

அவரது தந்தை ஷாஜகான் ஹோலி பண்டிகையை ஈத்- இ- குலாபி என்ற பெயரில் கொண்டாடினார். ஆப்-இ-பாஸி, மலர் தூவுதல் விழா கொண்டாடினார். ஷாஜகானின் அவையில் இருந்தவர்கள் பன்னீரை சொம்பில் எடுத்து பிறர் மீது தெளிப்பார்கள். அப்போது முரசுகளும் நகராக்களும் ஒலிக்கும் அந்த இசைக்கு ஏற்ப அவர்கள் பன்னீரை தெளிப்பார்கள். பிறகு அரசரின் நெற்றியில் வண்ணத் திலகம் இடுவார்கள். இதை திஜீப் -இ-அக்லாக் , நல்லிணக்கத்தின் நெறி என்பார்கள்.

நட்டாற்றில் நாட்காட்டி

ஔவுரங்கசீப் தன்னுடைய குறுகிய கண்ணோட்டத்திற்கு ஒத்து வராத எல்லாவற்றையும் ஒழித்து கட்டி விடுவார். 12 மாதங்களைக் கொண்ட பாரசீக நாட்காட்டி முறையை விடுத்து சந்திரனின் போக்கை அடிப்படையாகக் கொண்ட அரபிக் நாள்காட்டி முறைக்கு மாறினார். இதனால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும் என்று ஆலோசனை சொல்லப்பட்ட போதிலும் நாட்காட்டியை முறைமையை மாற்றினார். அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டது.

உண்மையும் பிம்பமும்

அவரைப் பற்றிய விளம்பரத்திற்கும் உண்மைக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. ஔவுரங்கசீப்பின் ஆதரவாளர்கள், அவர் எளிய வழக்கங்களை கொண்டிருந்தார். குரானை பிரதி செய்து விற்பது, பிரார்த்தனைநேர குல்லாக்களை நெய்து விற்பது ஆகியவற்றின் மூலம் கிடைத்த வருமானத்தில்தான் வாழ்ந்தார், என்கிறார்கள். இது போன்ற முட்டாள்தனம் வேறு ஏதும் இல்லை.

ஔவுரங்கசீப் பேரரசன். அதற்கு தகுந்தாற்போல் வாழ்ந்தார். ஆடைகளை அணிந்து கொண்டார். அவருடன் காஷ்மீருக்கு பயணம் செய்த பர்னியர், ஔவுரங்கசீப் பகட்டான ஆடைகளை அணிந்து கொண்டிருந்தார். மஸ்லின் துணியில் தைத்த சட்டை. அது பட்டு மற்றும் தங்க சரிகையால் செய்யப்பட்ட வேலைபாடுகளுடன் இருந்தது. தங்க சரிகைகளால் ஜொலிக்கும் தலைப்பாகை அணிந்திருந்தார். அதில் பெரிய வைரங்கள் மதிக்கப்பட்டு ஒளி வீசி கொண்டிருந்தன. மார்பில் அணிந்திருந்த கோமேதக மாலை சூரிய ஒளியின் பிரகாசித்தது. கழுத்தில் போட்டிருந்த முத்துமாலை வயிறு வரை நீண்டிருந்தது .

அவரைப் பார்க்க வந்த பிரபுக்கள் கொடுத்த பரிசுகள் தங்கள் செல்வ செழிப்பை வெளிப்படுத்துவதாக கொடுக்கப்பட்டதாக இருந்தது. சில பரிசுகளை தனிப்பட்ட அல்லது அரசு பணியில் அவர்கள் செய்த தவறுகளை மன்னிப்பதற்காக கொடுக்கப்பட்டன. மற்ற சில பிரபுக்கள் கொடுத்த பரிசுகள் மன்னரின் கருணையால் ஆதாயம் தேட கொடுக்கப்பட்டன, என்று எழுதியுள்ளார்.

அரியணையில் உட்கார்ந்திருந்தது துறவி அல்ல. அரசு வியாபாரம் எங்கும் இருக்கும் வழக்கம் போல் இங்கும் சிறப்பாக நடந்தது.

ஔவுரங்கசீப்பும் ஷியாகளும்

பாகிஸ்தானில் உள்ள ஔவுரங்கசீப்பின் பக்தர்கள் , இருபதாம் நூற்றாண்டின் நாயகராக கொண்டாடும் ஜின்னா ஒரு ஷியா என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.

ஔவுரங்கசீப் ஷியாக்களை வெறுத்தார் . அவர்களை குல்- இ- பயாபானி (பிணம் தின்னும் பிசாசுகள்) , பட்டில் மஷாபான் (இறைநம்பிக்கை இல்லாதவர்கள்) என்று இழிந்துரைத்தார்.

பீஜப்பூர், கோல்கொண்டா மீது படையெடுத்த போது, அதை ஆட்சி செய்த சுல்தான்கள் ஷியாக்கள் என்பதால் அதை ‘புனித போர்’ (ஜிகாத்) என்று சொன்னார். ஔரங்கசீப்பின் ஷைக்-உல்- இஸ்லாம் (தலைமை மதகுரு)வாக இருந்தவர் அவருடைய குறுகிய மதவெறியை சகித்துக் கொள்ள முடியாமல் பதவியை விட்டு விலகினர்.

பாரசீகத்தைச் சேர்ந்த ஷியாக்களை ஔவுரங்கசீப் தன் படையில் சேர்த்துக்கொண்டார். காரணம் அவர்கள் நன்றாக போரிடக் கூடியவர்கள். படையில் சேர்ந்த பிறகு அவர்கள் சன்னி முறைப்படி தான் நமாஸ் (தொழுகை) செய்ய வேண்டுமென கட்டளையிட்டார்.

ஔரங்கசீப்பும் தாராவும்

மக்கள், தாராளமாத சிந்தனைகளை கொண்டவரும் எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் தாராவை நேசித்தனர். குறுகிய மனமும் கடுமையாக நடந்து கொள்ளும் ஔரங்கசீப்பை அல்ல ஔவுரங்கசீப் அரியணையை வென்றார். ஆனால் மக்கள் மனங்களை வெல்ல முடியாமல் தோற்றுப் போனார்.

தாரா தோற்கடிக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட போது மக்கள் என்ன செய்தனர் என்பதை பர்னியர் பதிவு செய்துள்ளார். மக்கள் கண்ணீர் விட்டனர். கதறி அழுதனர். வெட்டப்பட்டு தன் முன் வைக்கப்பட்ட தாராவின் தலையைப் பார்த்து ஔவுரங்கசீப் கூட தான் தவறிழைத்து விட்டதை உணர்ந்து பரிதாபமாக கதறி அழுதார்.

தாரா யார் ?

ஷாஜகான் தனக்கு பிறகு தன் மூத்த மகன் தாரா சுக்கே அரியணை ஏற வேண்டுமென விரும்பினார். அவரை அரியணை வாரிசாக அறிவித்தார். தாரா வக்த் -அல்-உஜித், எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். ஹிந்து அறிஞர்கள் ஞானிகளுடன் அவர் உணர்வு பூர்வமாக இணைந்து இருந்தார்.

மத நல்லிணக்கம்

கோசைன் விட்டல்ராய் என்ற கோகுல (வைணவ- யாதவ) சமயத் தலைவருக்கு 1643 ல் நில மானியங்களை வழங்கினார். பஞ்சாப்பை சேர்ந்த பாபா லால் என்ற ஆன்மீக தலைவருடன் விரிவான கருத்து பரிமாற்றம் செய்தார் .அதை ஆவணப்படுத்தினர். சந்திப்பை ஓவியமாக வரைந்து வைத்திருந்தார்.

பாபா லாலுடன் நடந்த கருத்து பரிமாற்றத்தின் ஆழத்தையும் விரிவையும் இரண்டு எடுத்துக்காட்டுகளில் இருந்து புரிந்து கொள்ள முடியும். ஒரு பக்கிரியின் அரசாட்சி எது? என்று தாரா கேட்டார். தன்னை உணர்ந்து கொண்டு, எதை பற்றியும் கவலையற்று இருப்பது தான் என்று அந்த துறவி பதிலளித்தார்.

சமஸ்கிருதமும் பாரசீக மொழியும்

அறிவின் ஆதாரமாக சமஸ்கிருத மொழியை தாரா கருதினார். பான்வாலி தாஸ் என்ற சமஸ்கிருத அறிஞரை ஆதரித்தார். அந்த அறிஞர் பதினோராம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பிரபோத சந்திரோதயம் (ஞான நிலவொளி )என்ற சமஸ்கிருத நாடகத்தை பாரசீக மொழிக்கு பிரதிபெயர்த்தார். அது சூபியசத்தின் நூலாக அறியப்படுகிறது.

வேதாந்த நூல்களான அஷ்டவக்ர கீதை, ஆத்ம விலாசம், பகவத் கீதை ஆகியவற்றை பாரசீக மொழிபெயர்ப்பு செய்ய நிதி உதவி அளித்தார்.

1656 ல் குளிர் காலத்தில் காசியில் சமஸ்கிருத அறிஞர்களின் மாநாட்டை கூட்டினார். அதில் உபநிஷதங்களை பாரசீக மொழிக்கு மாற்ற வேண்டுமென கோரினார் . அதற்கு நிதி உதவி அளித்தார். அவர் கேட்டுக்கொண்டதன்படி அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் அவை பாரசீக மொழியில் வெளிவந்தன.

முன்னுரையில்

அதற்கு ஷிர்- ஐ -அக்பர் (மகத்தான ரகசியம்) என்று தலைப்பிட்டு ஒரு விரிவான முன்னுரையையும் தாரா எழுதினார். அதில், இஸ்லாமிய கருத்தான தவூஷித் – இறை ஒற்றுமை உபநிஷதங்களில் இருக்கிறது என்றும் அதனால் உபநிஷதங்களை புனித குரானின் விளக்க உரையாக கருதலாம் என்றும் எழுதியுள்ளார்.

ஞானத் தேடல்

தாரா பல்வேறு ஞானதளங்களில் இருந்து அறிவை சேகரித்தது மத பழமைவாதிகளுக்கு சவால் விடுவதாக இருந்தது. ஷா ஷார்மத் என்ற பாரசீக மொழி பேசும் ஆர்மீனிய அறிஞர் ஒருவர் இந்தியாவை தாய் நாடாக ஏற்று வாழ்ந்து வந்தார். எல்லா மதங்களும் இறைவனை அடையும் வெவ்வேறு பாதைகள் என்று போதித்து வந்தார். தான் குரானை ஏற்று பின்பற்றுவதாகவும் அதே வேளையில் ஒரு ஹிந்து குரு சொல்வதையும் கிறிஸ்துவ பாதிரியார் கூறுவதையும் யூத ரபி (மத தலைவர் ) யின் மொழியையும் முஸ்லீமின் வார்த்தைகளையும் ஏற்பதாக ஷா ஷார்மத் கூறினார்.

தாரா அவரை தத்துவவாதியாகவும் தனது வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டார். அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நல்வாய்ப்பாக அந்த கடிதம் மட்டும் தப்பி பிழைத்து ஆவணம் ஆகியுள்ளது. ஔவுரங்கசீப் அரியணை ஏறிய மூன்றாம் ஆண்டு 1661 இல் ஷா ஷார்மத் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். டில்லியில் அவர் உடல் புதைக்கப்பட்டது.

மதச்சார்பின்மை விளக்கம்

இஸ்லாமிய மதகுருவான ஷேக் முஹிபுல்லா (1587-1648) அலகாபாத்தில் இருந்தார். சக்கரவர்த்தி அவரிடம் ஒரு கேள்வி கேட்க விரும்பினார். தன் மகன் தாராவிடம் அதைச் சொல்லி அவரிடம் இருந்து பதில் வாங்கி வர அனுப்பினார். ஷேக் முஹிபுல்லா கொடுத்த பதில் 17ஆம் நூற்றாண்டில் மதசார்பின்மையை வரையறை செய்வதாக இருந்தது.

‘…… மக்கள் (இறை) நம்பிக்கை உள்ளவர்களோ அல்லாதவர்களாகவோ இருக்கலாம். ஆனால் அவர்கள் இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்களது நலனில் அக்கறை கொண்டு செயல்படுவதே ஆட்சியாளர்களின் , நிர்வாக அதிகாரிகளின் கடமை. எல்லா மக்களையும் சமமாக நடத்த வேண்டும். அப்படி செயல்படுவதுதான் நீதி. இறைத்தூதர் முஹம்மது நபி நல்லவர்கள் மீதும் தீமை செய்தவர்கள் மீதும் கருணை காட்டினார். நம்பிக்கை கொண்டோரிடமும் நம்பிக்கை அற்றவர்களிடமும் தயையோடு இருந்தார்.’
( நூல் – இந்திய முஸ்லிம்கள் , மக்துபாத் -ஐ-ஷா முஹிபுல்லா இலஹாபாதி – மேற்கோள். ஆஸாத் நூலகம், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம்)

கேள்வி இதுதான் : ராஜ விசுவாசத்தை வலியுறுத்திய 17 ஆம் நூற்றாண்டு மன்னராட்சி முறைமைகளை, முடிவுகளை 21 ஆம் நூற்றாண்டில் சம உரிமை கொண்ட, ஜனநாயக நாட்டின் வாரிசுகள் ஏன் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் ?

ஔவுரங்கசீப்பின் வாழ்க்கை சொர்க்கத்துக்கு செல்லும் தூய மனிதரின் வாழ்க்கையாக இல்லை. மாறாக தோல்வியுற்று, குழப்பத்தில், வெறுப்பில் வாழ்ந்து ஒரு பேரரசின் வீழ்ச்சிக்கு வித்திட்ட மனிதரின் வாழ்க்கை. இதை விரைவில் வெளிவர இருக்கும் எனது முகலாயர் காலத்தில் வானவியல் என்ற நூலில் விரிவாக எழுதி உள்ளேன்.

தமிழில் – ரவிக்குமார்

கட்டுரையாளர் முன்னாள் வெளியுறவு துறை இணை அமைச்சர்

ஆவணி அவிட்டம்; செங்கோட்டையில் விஸ்வகர்மா சமுதாயத்தினர் பூணூல் மாற்றல்!

avani avittam in sengottai - 2026

செங்கோட்டையில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு விஸ்வகர்மா சமுதாயத்தினர் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கோட்டையில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பூணூல் மாற்றிக் கொண்டனர்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை குண்டாற்றங் கரையில் உள்ள விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ அக்கசாலை விநாயகர் கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் வைத்து, விஸ்வகர்மா சமுதாயம் சார்பில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

விஸ்வகர்மா சமுதாயத் தலைவர் சுப்ரமணியன் தலைமையில், செயலாளர் பேச்சிமுத்து, பொருளாளர் ஐயப்பன் முன்னிலையில் நடந்த பூணூல் மாற்றும் நிகழ்ச்சியில் மகேஸ்வர சர்மா கலந்து கொண்டு நடத்தி வைத்தார்.

இந்த பூணூல் மாற்றும் நிகழ்ச்சியில் ஏராளமான விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, வேதமந்திரங்களை பாராயணத்துடன் பின்பற்றி பூணூல் மாற்றிக்கொண்டனர்.

வேத கணிதம்: காலத்தின் தேவை!

vedic mathematics - 2026

தெலுங்கில்: பி எஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்.

“கணக்கிடுவது எப்படி என்று கற்றுக் கொடுத்த பாரத தேசதாருக்கு உலகம் கடன் பட்டுள்ளது. இல்லாவிடில் எந்த அறிவியல் ஆராய்ச்சியும் முன்னேறி இருக்காது” என்றார் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின்.

சுலோகம்:

யதாசிகா மயூராணாம் நாகானாம் மணயோயதா
ததா வேதாங்க சாஸ்த்ராணாம் கணிதம் மூர்தனி ஸ்திதம்”
என்ற சுலோகம் கணிதத்திற்கு இருக்கும் சிறப்பைக் கூறுகிறது.

பொருள்: மயிலுக்குத் தோகையைப் போல, சில நாகங்களுக்கு நெற்றியில் இருக்கும் மாணிக்கத்தைப் போல, வேதாங்க சாஸ்திரத்திற்கு கணிதம் முக்கியமானது.

நட்சத்திர, கிரக, கோளங்களின் நகர்வுகள், வானியல் தொடர்பான ஆய்வுகள் போன்றவற்றுக்கு கணிதம் இன்றியமையாதது. வேத மந்திரங்களில் இருக்கும் கணிதத்தை வெளியில் எடுத்து வந்து அளித்ததே வேத கணிதம். கணிதத்தை எளிமையாகவும், விரைவாகவும் லாகவமாகவும் செய்யும் வழிகளைத் தேடுவதே கணித அறிஞர்களின் பணி. இந்த வகையில் பாரத தேச விஞ்ஞானிகள் செய்த முயற்சிகள் கவனத்தில் கொள்ளத்தக்கவை. பண்டைய வழி முறைகளில் சில, இன்று பள்ளிகளில் கற்றுத் தருபவற்றை விட எளிமையாகவும் விரைவாகவும் செய்யக் கூடியவையாக இருப்பதால், பள்ளிகளுக்கு அப்பாற்பட்டு சில அமைப்புகள் ஏற்பட்டு, வேத கணிதத்தைப் பிரசாரம் செய்யத் தொடங்கின. மாணவ, மாணவிகள் இதனால் பயனடைந்து வருகிறார்கள்.

வேத கணிதத்தை நடைமுறையில் எடுத்து வந்த மகநீயர் ‘ஸ்ரீ பாரதி கிருஷ்ண தீர்த்த மகராஜ்’ என்பவர். இவர் ‘வேதிக் மேத்தமெடிக்ஸ்’ என்ற பெயரில் நூல் எழுதியுள்ளார். அதில் பதினாறு சமஸ்கிருத சூத்திரங்களைக் குறிப்பிடுகிறார். அவற்றைக் கொண்டு கணக்குகளைக் குறைந்த நேரத்தில், குறைந்த முயற்சியோடு செய்வது எப்படி என்று விளக்கியுள்ளார். இவர் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று ரிஷிகளின் ஞானத்தை உலகறியச் செய்தார். அனைவரும் இதனை ’மேஜிக் மேத்தமெடிக்ஸ்’ என்று பாராட்டினர்.

‘அற்புதக் கணிதம்’ என்ற பெயரில் ‘திரு கண்டவல்லி அப்பல ராம்மூர்த்தி’ என்ற அறிஞர் 1986 ல் ‘ஆந்திர பிரபா’ வாரப் பத்திரிகையில் வேத கணிதம் பற்றித் தொடர் எழுதினார். பண்டிட் ராம்மூர்த்தி சமஸ்கிருதம், ரசாயனம், பௌதிகம், அர்த்த சாஸ்திரம் ஆகியவற்றில் நிபுணராக விளங்கினார். அவரை ’நடமாடும் கலைக்களஞ்சியம்’ என்றழைத்தனர்.

நிகழ்காலத்தில் டாக்டர் ‘ரேமெள்ள அவதானி’ என்பவர் சமூக ஊடகங்கள் மூலம் வேத கணிதத்தை போதித்துப் புகழ் பெற்றுள்ளார். இவர் செய்த சேவைகளுக்கு இவருக்கு ‘நந்தி அவார்டு’ கொடுத்து கௌரவித்தனர். இவர் பாரதிய கணித விஞ்ஞானத்தைப் பற்றி சிறந்த நூல்களை இயற்றியுள்ளார்.

திரு அடல்பிஹாரி வாஜ்பாயி பாரதப் பிரதமராக இருந்தபோது, அப்போதைய மனித வள மேலாண்மைத் துறை அமைச்சராக இருந்த திரு முரளிமனோகர் ஜோஷி மூலம் வேத கணிதத்தை பள்ளிகளில் கற்றுத் தரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தேசதுரோக இடது சாரிகள் அதனை ‘காவி மயமாக்கல்’ என்று திரித்துக் கூறி அதனை முளையிலேயே தடுத்து நிறுத்தியது நம் துரதிருஷ்டம்.  

எவ்விதமாவது மாணவர்களுக்கு கணிதப் பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டுமல்லவா? வேத கணிதம் அந்தப் பயனை நூற்றுக்கு நூறு சதவிகிதம் ஈடேற்றக் கூடியது. “எனக்கு கணக்குப் பாடம் பிடிக்காது” என்று கூறும் மாணவர்கள் கூட “கணக்கு எனக்குப் பிடிக்கும்” என்று கூறும் நிலைக்கு வருவார்கள்.

வேத கணிதத்தால் பல நன்மைகள் உண்டு. பெரியவர்கள் வாய்க் கணக்காகப் போடும் வழிமுறையைக் கற்றுத் தருவது, ரிஷிகளின் முயற்சி, மேதைமை போன்றவற்றோடு பரிச்சயம் ஏற்படுத்துவது. பாரத தேசத்தின் பழம்பெரும் ஞானத்தின் மீது மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்துவது போன்றவை, அதன் மூலம் தேச பக்தி மிகுந்த புதிய தலைமுறை உருவாகும்.

கால்குலேட்டரும், கம்ப்யூட்டரும் புழங்கும் நவீன யுகத்தில் இதன் தேவை என்ன என்று கேட்பவர்கள் உள்ளனர். நுழைவுத் தேர்வுகளிலும், நேர்முகத் தேர்வுகளிலும் வெற்றி பெறுவதற்கு வேத கணிதம் நிச்சயம் உதவும் என்பதில் ஐயமில்லை.

“India Needs Listeners, Not Saviours”: Shashi Tharoor at TechHR’25

0
sashi tharoor - 2026
  • Ritik Pandey

As organisations recalibrate for an AI-enabled future, the question isn’t just about technology, it’s also about the people leading that change. At TechHR India 2025, Dr. Shashi Tharoor made a compelling case for leadership styles and skilling models that keep pace with a changing world of work.

Addressing an audience of business leaders, HR heads, and technology thinkers at Yashobhoomi, Dr. Tharoor called on India to outgrow its fixation with heroic, centralized leadership and instead focus on collaborative models that empower people.

“India needs a leader who is less demanding. Someone who listens, collaborates, and uplifts,” he said, framing listening, not commanding, as the true currency of effective leadership.

Rethinking Leadership for a New Era

Referencing Ajinkya Rahane’s quiet yet decisive leadership during India’s 2021 Test series in Australia, Tharoor argued that the country must embrace leaders who prioritise collective wins over personal glory. This, he suggested, applies equally to politics and to the boardroom.

In a corporate environment still catching up with new workforce expectations, Tharoor urged HR and business heads to adopt inclusive leadership styles, ones that “make everyone feel included” and help employees see themselves in the organisation’s success.

According to a recent report, leadership development was identified as one of the top talent challenges with business impact, and nearly 1 in 5 HR leaders expressed dissatisfaction with their efforts to upskill mid-level managers for managing multigenerational teams. This underscores Tharoor’s call for rethinking who gets developed and how.

Skilling as India’s Competitive Edge

The conversation moved from leadership to India’s bigger bet, its people. “We have 10 million people entering the job market every year. And we’re not ready,” Tharoor said, pointing to the urgent need for structured, scalable skilling models.

He proposed that companies above a certain size be legally required to operate skilling centres for rural youth and school dropouts. “They could hire the best, and others would leave with a diploma that opens up real opportunity.”

The industry seems to be recognising the gap. According to People Matters’ SHRPA 2025 study, talent development and upskilling ranks among the top three areas where HR leaders plan to increase investment. However, Tharoor noted that investment alone isn’t enough, execution must match ambition.

Beyond Optics: Rebuilding Brand India from Within

On India’s emerging digital identity, Tharoor acknowledged the shift in perception: from snake charmers to UPI. But he warned against relying solely on infrastructure and tech visibility.

“We’ve done a great job with the hardware—airports, convention centres, tech stacks—but we need to fix the software: education, sanitation, drinking water, poverty.”

He urged leaders to think beyond brand optics and invest in long-term capabilities, adding:

“Soft power without hard power is weakness. And hard power without soft power is bullying. India must develop smart power—investing in its people and projecting its values.”

The Real AI Challenge: Enabling People

As AI reshapes industries, Tharoor cautioned against building a future where a few innovate while many are left behind. He emphasised that India’s true edge lies not just in tech adoption, but in people who can drive that change.

“Leadership in India must become less about control and more about enablement,” he concluded. “Our challenge isn’t just infrastructure or AI or branding, it’s making sure the people building this country feel seen, heard, and skilled.”

திருவெள்ளறையில் சிறப்பாக நடைபெற்ற ஜேஷ்டாபிஷேகம்

thiruvellarai pundariga perumal temple pavithrotsavam - 2026

108 திவ்ய தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலின் உப கோவிலான திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் திருக்கோயிலின் ஜேஸ்டாபிஷேகம் நடைபெற்றது.

ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை 5ம் தேதி வட திருகாவிரியிலிருந்து ( கொள்ளிடம் ஆறு) தங்கம், வெள்ளிக் குடங்களில் புனித நீர் சுமார் 12 கிமீ எடுத்து செல்லப்பட்டது.

நொச்சியம் பகுதி காவிரிக் கரையில் இருந்து காவிரி புனித தீர்த்தம் எடுத்து வந்து, மண்ணச்சநல்லூர் வழியாக வெள்ளிக் குடத்தை வழியில் எங்கும் கீழே வைக்காமலும் , நிற்காமல் ஓடிக்கொண்டே, குடங்களை மாற்றி மாற்றி சுமந்து வந்து, காலை 9.00 மணி அளவில் திருவெள்ளறையை தீர்த்தம் அடைந்தது.

அங்கிருந்து ஆண்டாள் யானை மீது தங்கக் குடத்தில் புனித தீர்த்தம் எடுத்துச் செல்லப்பட்டு, மங்கள இசையுடன் புண்டரீகாட்சப் பெருமாள் சன்னதி சென்றடைந்தது.

பின்னர் ஜேஸ்டாஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

பேச்சுரிமை தான் உண்டு; பொய் பேசி பிதற்றுவதற்கு உரிமையில்லை!

1854358 rahulgandhi1 1 - 2026

‘ தமிழக வாக்காளர் பட்டியலில் 6.5 லட்சம் பிஹாரிகளைச் சேர்க்க, பாஜக தூண்டுதலில் தேர்தல் கமிஷன் சதி செய்கிறது ‘ என்று எதிர்க்கட்சிகள் கூறுவது அபத்தமான குற்றச்சாட்டு.

‘ தேர்தல் கமிஷன் வாக்குகளைத் திருடுகிறது ‘ என்ற ராகுலின் குற்றச்சாட்டைப் பின்பற்றி, ப. சிதம்பரம், திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இப்படி புகார் கூறுகின்றனர்.

பிஹாரிலிருந்து வந்து இங்கே வேலை தேடிக்கொண்டு இங்கேயே செட்டில் ஆனவர்களை இம்மாநில வாக்காளர்களாகத்தான் கருத முடியும். அப்படி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

அவர்களுக்கு பிஹாரில் சொந்த வீடு இருந்தாலும், இங்கே வாக்குரிமை பெற தடையில்லை.

இந்திய வாக்காளர்கள் இந்தியாவில் எங்கும் வாக்களிக்கலாம். இரண்டு இடத்தில் வாக்களிக்க முடியாது . அவ்வளவுதான்.

தமிழக மக்களும் இதே போல பிற மாநிலங்களில் வாக்களிக்க முடியும்.

குடியுரிமை பெறாத அயல் நாட்டவர்களின் பெயர்களைச் சேர்க்க வேண்டும், இந்தியாவில் ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர் இன்னொரு மாநில வாக்காளர் பட்டியலில் இடம் பெறக்கூடாது- என்றெல்லாம் இஷ்டம் போல பேசுவது முற்றிலும் அரசியலுக்காக மட்டுமே.

தமிழக வாக்காளர் பட்டியலில் பிற மாநிலத்தவர் இடம் பெறுவது, தமிழக வாக்காளர்களின் உரிமையைப் பாதிக்கும், இது மாநில உரிமைக்கு எதிரானது – என்ற வாதம் பொருளற்றது.

மாநில உரிமை என்ற கோஷமே ஒரு மாயை. எல்லா மாநிலங்களும் சமமே தவிர, எந்த மாநிலத்துக்கும் தனி உரிமைகள் இல்லை. அதனால்தான் காஷ்மீரின் சிறப்பு உரிமையும் பறிக்கப்பட்டது.

மாநில உரிமை என்பது சரியென்றால், மாவட்ட உரிமை, தாலுகா உரிமை, வார்டு உரிமைகளும் சரியாகி விடும்.

உண்மையில் முக்கியத்துவம் பெறுவது மக்கள் உரிமை மட்டுமே.

விவரம் தெரிந்தவர் என்று கருதப்படும் ப. சிதம்பரம் கூட வேண்டுமென்றே திருமாவளவன் வைகோ லெவலுக்கு இறங்கிப் பேசுவது பரிதாபத்திற்குரியது.

தேர்தல் மோசடி மூலம் மோடி பிரதமராகி விட்டார் என்ற ராகுலின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது.

தேர்தல் பணியில் இருப்பவர்கள் அனைவரும் அரசு ஊழியர்கள். இப்படியொரு பெரும் மோசடி நடத்துவது சாத்தியமற்றது. அப்படி நடந்திருந்தால், தேர்தல் நடக்கும்போதே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும்.

இந்திய பகுதியில் 2000 சதுர கிலோ மீட்டர் தூரம் சீனா ஆக்கிரமித்து விட்டது என்ற ராகுலின் பொறுப்பற்ற குற்றச்சாட்டை சுப்ரீம் கோர்ட்டும் கண்டித்துள்ளது.

தோல்வி பயம் வந்தால், முன் எச்சரிக்கையாக தாறுமாறாகப் பேசுவது அரசியல்வாதிகளுக்கே உரிய இலக்கணம்.

நம் நாட்டில் பேச்சுரிமை பிதற்றல் உரிமையாகி விட்டது.

  • — துக்ளக் சத்யா

ஆடி பெருக்கு நாளில் 2026 ஆங்கில காலண்டர் ஆல்பம் பணிகள் சுறுசுறுப்பு!

calender printing in sivakasi - 2026

‘ஆடி 18’ம் பெருக்கு நாளில், ‘2026’ ஆங்கில புத்தாண்டு காலண்டர் ஆல்பம் வெளியிடும் பணிகளில், சிவகாசி காலண்டர் நிறுவனங்கள் சுறுசுறுப்பு…..

வரும் ‘2026’ ஆங்கில புத்தாண்டிற்கான தினசரி காலண்டர்களுக்கான ஆல்பம் தயாரிக்கும் இறுதிகட்ட பணிகளில்,சிவகாசி காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றன.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தினசரி காலண்டர்கள் தயாரிக்கும் பணிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது ரகங்களில் காலண்டர்கள் அச்சிடுவதால் சிவகாசியில் தயாராகும் காலண்டர்களுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான ஆர்டர்கள் வருகின்றன.

காலண்டர்களின் வகைகள்,ரகங்கள், புதிய டிசைன்கள், விலை விவரங்கள் உள்ளிட்டவைகளை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒன்றினைத்து முதலில் ஆல்பங்களாக தயாரிப்பார்கள். தயாரிக்கப்பட்ட ஆல்பங்களை ஒவ்வொரு ஆண்டும் ‘ஆடி 18’ம் பெருக்கு நாளில் சிறப்பு பூஜைகள் செய்து வெளியிடுவது வழக்கம்.

காலண்டர் ஆல்பங்களை முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். ஆடி பெருக்கு நாளில் இருந்து ஆங்கிலப் புத்தாண்டிற்கான தினசரி காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்படையத் தொடங்கும்.

இந்தாண்டிற்க்கான புதுவரவான பொற்காலம், புதுயுகம், வழிகாட்டி,VIP காலண்டர் என அறிமுகப்படுத்தப்பட்டது.மேலும் இது குறித்து காலண்டர் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ஜெயசங்கர் கூறும் போது, ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டிற்கான தினசரி காலண்டர் ஆல்பம் தயாரிக்கும் பணிகள் சித்திரை மாதம் பிறந்து, பஞ்சாங்கம் வெளியிடப்பட்டவுடன் தொடங்கப்படும்.

வழக்கமான காலண்டர்களுடன் புதிய ரகங்களும் அறிமுகம் செய்யப்படும். அனைத்தையும் வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் புத்தாண்டு காலண்டர் ஆல்பங்கள் தயாரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ‘ஆடி 18’ம் பெருக்கு நாளான இன்று சிறப்பு பூஜைகளுடன் காலண்டர் ஆல்பங்கள் வெளியிடப்பட உள்ளன.

மூலப் பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்களின் கூலி,மின் கட்டண உயர்வு உள்ளிட்ட வகைகளால், புத்தாண்டு தினசரி காலண்டர்களின் விலை கடந்தாண்டை விட இந்தாண்டு 7 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் உயரும் நிலை உள்ளது என்று கூறினார்.