Home Blog Page 5661

இனி இளையராஜா பாடல்களைப் பாட மாட்டேன்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

அனுமதியில்லாமல் இளையராஜா பாடல்களை மேடைகளில் பாடுவதற்குத் தடை விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டதை அடுத்து இனி இளையராஜா இசையமைத்த பாடல்களைப் பாட மாட்டேன் என்று பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
திரையிசைப் பயணத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். கச்சேரியின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் அவரது இசைக் குழு பயணித்து வருகிறது. இந்த நிலையில் அங்கிருந்து தன்னுடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், தன் இசை ரசிகர்களுக்கு சனிக்கிழமை இரவு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தின் சாரம்:
ரசிகர்களுக்கு வணக்கம். சியாட்டிலிலும், லாஸ் ஏஞ்சலீஸிலும் நடைபெற்ற இசைக்கச்சேரியில் கலந்து கொண்டவர்களுக்கும், அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி.
சில நாட்களுக்கு முன், இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எனக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, உலகளவில் கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், இந்த மாதிரியான சட்ட திட்டங்கள் பற்றிய புரிதல் எனக்கு இல்லை.
என் மகன் சரண்தான், இந்த உலக கச்சேரியை ஏற்பாடு செய்தார். எஸ்.பி.பி. என்ற பெயரில் கடந்த வருடம் டொரன்டோவில் முதல் கச்சேரியைத் தொடங்கினோம். அதன்பிறகு ரஷியா, ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் நிகழ்ச்சி நடத்திவருகிறோம். அப்போதெல்லாம் இளையராஜா சார்பில் எந்த நோட்டீஸýம் வரவில்லை. ஆனால், அமெரிக்காவில் இசைக்கச்சேரி நடத்தும் போது மட்டும் ஏன் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. முதலில் சொன்னமாதிரி எனக்கு இந்தச் சட்டம் குறித்த அறிவு கிடையாது. ஆனாலும் இதுதான் சட்டம் என்றால் எற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
இந்தச் சூழ்நிலையில் நானும், எங்கள் அணியினரும், இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டோம். ஆனாலும் இந்தக் கச்சேரி நடக்கவேண்டும். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். 

தில்லியில் 7ஆவது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம்


7-ஆவது நாளாக தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் மேற்கொண்டனர். மேலும், மத்திய அரசு தங்கள் கோரிக்கைகளை செவிமடுக்க மறுப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

தங்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்துவதாகவும், மத்திய அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், கோரிக்கையை ஏற்கவும் மறுப்பதாக தமிழக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு கடும் வறட்சி நிலவுகின்ற நிலையில் தங்களுக்கு வறட்சி நிவாரணம் வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைக ளை வலியுறுத்தி டெல்லியில் தொடர்ந்து ஏழாவது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் போராட்டக் குழுத் தலைவர் அய்யாகண்ணு, கடந்த வருடம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தங்களுக்கு உதவுவதாக வாக்களித்தாகவும், ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை என்றும், இதுவரை 400 விவசாயிகள் உயிரிழந்துவிட்டதாகவும் ஆனால் யாருக்கும் எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் தெரிக்கின்றனர். தங்களுக்கு வறட்சி நிவாரணம் கிடைக்கும்வரையும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையும் தங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று உறுதியாக தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

ராஜா-பாலு: வாரிசுகளின் வடிவில் மல்லுக்கட்டும் மேதைகளின் பிரச்னை

இசை வியாபாரிகள்
இளையராஜா- எஸ்.பி.பிக்கு  இடையேயான பிரச்சினை அவர்களுக்கு இடையேயானது அல்ல. அவர்களின் வாரிசுகளுக்கு இடையேயான பிரச்சினையாகும்.
கலைத்துறையில் இசை சாம்ராஜ்யம் நடத்திய இரு மேதைகளும் தற்போது தங்கள் பயணத்திலிருந்து விலகி ஓய்வெடுக்கும் காலகட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களின் இசைவாரிசாக வந்தவர்கள் தந்தையைப் போல திறமை வாய்க்காததால் திரைத்துறையில் பெரும் தோல்வியை அடைந்து தற்போது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி பணம் ஈட்ட முயன்றதின் விளைவுதான் இதுபோன்ற பிரச்சினைக்கு காரணம்.
சினிமா வாய்ப்பு அறவே இல்லாமல் வீட்டில் நீண்டகாலமாக ஓய்வில் இருந்த கார்த்திக் ராஜா, தனது தந்தையை வைத்து இசைக்கச்சேரி நடத்துவது என முடிவு செய்து சில வருடங்களாக இசைக்குழுவோடு நாடு நாடாக சுற்றிவருகிறார். கடந்த வருடம் அமெரிக்காவில் நடத்தி பெரும் தொகையை ஈட்டினார் .
தற்போது அதே வழியில் இறங்கியிருக்கிறார் எஸ்.பி.பி சரண். ஆரம்பத்தில் இளையராஜா இசைக் கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்த எஸ்.பி.பி, சமீப காலங்களில் அதைத் தவிர்த்து வந்திருக்கிறார். காரணம், கார்த்திக் ராஜாவைப் போல தானும் தனது தந்தையை வைத்து நாடு நாடாக சுற்றி பணம் ஈட்டவேண்டும் என எஸ்.பி.பி சரண் ஆசைப்பட்டதால்.
இந்த இரண்டு வாரிசுகளுக்கிடையான போட்டிதான் இரண்டு மேதைகளை மோதிக்கொள்ளும் அளவுக்கு தற்போது கொண்டு சென்றிருக்கிறது. ஒருவரது இசைக்கச்சேரியில் இன்னொருவர் பாடவிரும்பவில்லை. அல்லது மறுக்கிறார். அப்படியெனில் அவர்களது இசைக்கச்சேரியில் இவர் இசையமைத்த பாடல்களை பாடக்கூடாது. இவ்வளவுதான் பிரச்சினை.
ஆக இருதரப்புக்கு இடையேயான இந்த பிரச்சினை இசை சம்பந்தப்பட்டது அல்ல. வியாபாரம் சம்பந்தப்பட்டது. இரண்டு இசை வியாபாரிகள் மோதிக்கொள்கிறார்கள்.
இசை உலகத்தில் இது முதல்தடவை அல்ல. ரசிகர்கள் அதிர்ச்சியடையும் அளவுக்கு பெரியவிஷயமும் அல்ல. முன்பு,  கே.ஜே.ஜேசுதாஸ் குரலை ஓரளவு ஒத்திருக்கிற பின்னணிப் பாடகர் உன்னிமேனன், சினிமாவில் வாய்ப்பு குறைந்த காலகட்டத்தில் இசைக்கச்சேரிகளில் ஜேசுதாஸ் பாடல்களைப் பாடி பிழைப்பை ஓட்டிக்கொண்டிருந்தார்.
உடனே கே.ஜே.ஜேசுதாசின் மகன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இனிமேல் தனது தந்தை பாடிய பாடல்களை உன்னிமேனன் மேடைகளில் பாடக்கூடாது என தடை வாங்கினார். ஒரு பாடகர் பாடிய பாடலை இன்னொரு பாடகர் பாடக்கூடாது என தடைவாங்கும்போது, அந்தப் பாடலை உருவாக்கியவர் என்கிற முறையில் வியாபார ரீதியாக அவரது பாடல்களை பயன்படுத்தக்கூடாது என தடை வாங்குவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. கண்டிக்கக்கூடிய விஷயமும் அல்ல.
சரி, பேஸ்புக்கில் இவ்வளவு பொங்கிய எஸ்.பி.பி, அந்த இசை நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் தொகையை நாட்டுக்காகவா  அர்ப்பணிக்கப் போகிறார்..? அல்லது அனாதை ஆசிரமங்களுக்கு தானமாக வழங்கப்போகிறாரா..?
அவர், அவர் பாக்கெட்டை நிரப்ப இசை நிகழ்ச்சி நடத்துகிறார். அதனால் என் பாக்கெட்டுக்கு வரும் வருமானம் குறைகிறது என இன்னொருவர் வக்கீல் நோட்டிஸ் அனுப்புகிறார். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு தீர்க்கவேண்டிய விஷயம் இது. இதில் நாம் ஏன் மோதிக்கொள்ளவேண்டும்..?

இளையராஜா எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அனுப்பிய நோட்டீஸால் திரை உலகம் அதிர்ச்சி

    
கடந்த சில மாதங்களாக உலகளவில் இசைக் கச்சேரிகளை நடத்திவருகிறார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். 
கச்சேரிக்காக இவரது அணி தற்போது அமெரிக்காவில் இருக்கிறது. அங்கிருந்து தன்னுடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், இசை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இளையராஜா சார்பில் இவருக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ் குறித்து குறிப்பிட்டுள்ளார்._
எஸ்.பி.பி பதிவில் கூறியது
ரசிகர்களுக்கு வணக்கம். சியாட்டிலிலும், லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடைபெற்ற இசைக்கச்சேரியில் கலந்துகொண்டவர்களுக்கும், அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி._
_சில நாட்களுக்கு முன்பு, இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர், எனக்கும், சரணுக்கும், பாடகி சித்ராவிற்கும், உலகளவில் கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் 'இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறி செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத்தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும்' என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் இந்த மாதிரியான சட்ட திட்டங்கள் பற்றிய புரிதல் எனக்கு இல்லை._
_என் மகன் சரண்தான், இந்த உலக கச்சேரியை ஏற்பாடு செய்தார். 'எஸ்.பி.பி.50' என்ற பெயரில் கடந்தவருடம் டொரன்டோவில் முதல் கச்சேரியைத் தொடங்கினோம். அதன்பிறகு ரஷ்யா, ஶ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் நிகழ்ச்சி நடத்திவருகிறோம். அப்போதெல்லாம் இளையராஜா சார்பில் எந்த நோட்டீஸும் வரவில்லை. ஆனால் அமெரிக்காவில் இசைக்கச்சேரி நடத்தும் போது மட்டும் ஏன் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பதுதான் தெரியவில்லை. முதலில் சொன்னமாதிரி எனக்கு இந்த சட்டம் குறித்த அறிவு கிடையாது. ஆனாலும் இதுதான் சட்டம் என்றால் எற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்._
_இந்த சூழ்நிலையில் நானும், எங்கள் அணியினரும், இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டோம். ஆனாலும் இந்த கச்சேரி நடக்கவேண்டும். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்த பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். இனிவரவிருக்கும் அனைத்து கச்சேரிகளுக்கும் உங்களின் ஆசீர்வாதம் இருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் அன்புக்கும், ஆதரவிற்கும் நான் எப்பொழுதும் கடமைப்பட்டிருக்கிறேன்._
_உங்கள் அனைவரிடமும் நான் கேட்கும் ஒரே கோரிக்கை, இந்த விஷயம் பற்றி எந்தவிதமான விவாதமோ, கருத்தோ சொல்ல வேண்டாம். கடவுளின் எண்ணம் இதுவென்றால் இதுவே நடக்கட்டும்."_

சென்னை கன்டெய்னரில் இருப்பது என்ன? : பணமா ஆயுதமா? பரபரப்பு

சென்னை: சென்னை துறைமுகத்தில், நான்கு கன்டெய்னர்களில் வருவாய் புலனாய்வு துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அந்த கன்டெய்னர்களில் இருப்பது, ‛ஹவாலா' பணமா, கள்ள நோட்டுகளா, தடை செய்யப்பட்ட ஆயுத பொருட்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.சென்னை துறைமுகத்தில், ஜீரோ கேட் மூலமே, வாகனங்கள் உள்ளே சென்று வர முடியும். இந்த கேட், நேற்று மாலை முதல் மூடப்பட்டு விட்டது. இதனால் சரக்கு கன்டெய்னர்கள் ஏற்றிய லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து கேட்ட போது தான் வருவாய் புலனாய்வு துறையினர் நடத்தி வரும் சோதனை குறித்து தகவல் கிடைத்தது.
*நான்கு கன்டெய்னர்கள்*
துறைமுகம் உள்ளே, நான்கு கன்டெய்னர்கள் மீது, அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவற்றை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். அந்த கன்டெய்னர்களில், கள்ள நோட்டுகள் இருக்கலாம் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. 
இத்துடன், ‛ஹவாலா' பணமாக கூட இருக்க கூடும், தடை செய்யப்பட்ட ஆயுத பொருட்களும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சென்னை துறை முகத்தை சுற்றி, 32 இடங்களில், சரக்கு பெட்டக நிலையங்கள் உள்ளன. இங்கு தான் கன்டெய்னர்கள் வைக்கப்பட்டு இருக்கும். அந்த இடங்களிலும் தீவிர சோதனை நடந்து வருகிறது. மார்ச் 1ம் தேதிக்குப் பிறகு சென்னைக்கு வந்துள்ள கன்டெய்னர்களில் தான் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
*ஆர்.கே.நகர் தொகுதி*
இடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில், விம்கோ நகர் என்ற பகுதி உள்ளது. இங்கும் ஒரு சரக்கு பெட்டக நிலையம் உள்ளது. அங்குள்ள கன்டெய்னர்களில், பணம் உள்ளதாகவும், தொகுதி மக்களுக்கு வழங்க வைத்துள்ளதாகவும் உறுதி செய்யப்படாத தகவல் ஒன்று உலா வருகிறது. அந்த இடத்தில் ஏராளமான மக்கள் குவிந்து இருப்பதும் சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது.

நான் போட்டியிடுவதை தடுக்க சதி: ஜெ.தீபா புலம்பல்

இன்று தீபா அளித்த பேட்டி
எனக்கு எந்த குழப்பமும் கிடையாது. தேவையற்ற வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.
ஆர்.கே நகரில் போட்டியிடுவதை தடுக்க சதி.
திடீரென என் கணவர் அறிவிப்பு வெளியிட்டது தவறு
பேரவை நடவடிக்கைகளில் எனது கணவர் ஈடுபட்டதே இல்லை.
என்னுடைய சொந்த குடும்பத்தையே எனக்கு எதிராக தூண்டிவிடுகிறார்கள்
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தொடர்பாக வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

யோகி ஆதித்யநாத் உ .பி., முதல்வராக தேர்வு

உத்தரபிரதேச பாஜ முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டார் .
சட்டசபை தேர்தலில் 325 தொகுதிகளில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமரவுள்ளது. இங்கு யாரை முதல்வராக தேர்வு செய்வது என்பதில் பா.ஜ., முழுக்கவனம் செலுத்தி வருகிறது . இது தொடர்பாக டில்லி பா.ஜ., மூத்த நிர்வாகிகள், பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசித்தனர்.*
*அம்மாநில பா.ஜ., தலைவர் கேசவ் மவுரியாவுக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது உ.பி.,யை சேர்ந்த ஆதித்யாநாத்தை முதல்வராக்க பா.ஜ., முடிவு செய்துள்ளது. மவுரியா, மற்றும் தினேஷ்சர்மா ஆகிய இருவருக்கும் துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது.*
*அனல் பறக்கும் பேச்சு:*
*யோகி ஆதித்யாநாத் உ .பி., மாநிலம் கோரக்பூர் பகுதியில் இருந்து லோக்சபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். கோர்காநாத் மடத்தின் சாமியாராக இருந்து வரும் இவர் சிறந்த பார்லிமென்டேரியன் என பெயர் பெற்றவர். இவரது பேச்சு அனல் பறக்கும் விதமாக இருக்கும்.*
*நாளை(மார்ச்-19ல்) பதவியேற்பு*
*உ.பி., முதல்வராக தேர்வான யோகி ஆதித்யநாத், நாளை(மார்ச்-19ல்) பதவி ஏற்கிறார்.*

சென்னையில் சொகுசு கார் எரிந்து தம்பதி பலி: தொழில் போட்டி காரணமா என விசாரணை

சென்னை: பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய சொகுசு கார் தீப்பற்றியதன் பின்னணியில் தொழில் போட்டி அல்லது முன்விரோதம் இருக்கலாமோ என்று சந்தேகிக்கப்படுகிறது
சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர் அருகே வேகமாக வந்த சொகுசு கார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தரும், அவரது மனைவி நிவேதாவும் மரணமடைந்தனர்.
2 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற அஸ்வின் சுந்தருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி திருமணம் ஆனது. தொழில் முறை கார் பந்தய வீரரான அஸ்வின் நேற்றிரவு இரவு உணவுக்காக சொகுசு காரான பிஎம்டபியூ காரில் தன் மனைவியுடன் சென்றார்.
அப்போது எம்.ஆர்.சி.நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் தீப்பிடித்து எரிந்தது. 3 மணி நேரமாக கார் முழுவதும் எரிந்ததில் அஸ்வினும் அவரது மனைவியும் இறந்தனர்.
இந்த சம்பவம் அனைவரையும் பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு பின்னணியில் என்ன உள்ளது. கார் ரேசரான அஸ்வினுக்கு தறிகெட்டு ஓடும் காரை கட்டுப்படுத்த தெரியாதா என்ன?
மேலும் அவரது மனைவி கடந்த ஆண்டுதான் மருத்துவப் படிப்பில் பட்டம் பெற்றார். இந்நிலையில் மருத்துவம் பயின்ற அவருக்கு தன்னையும், தன் கணவரையும் காப்பாற்றிக் கொள்ள தெரியாதா? இல்லை முயன்றிருக்க மாட்டாரா?
லாரி, பஸ், கார் என எதுவாக இருந்தாலும் விபத்து ஏற்படும் போது அனுபவம் வாய்ந்த டிரைவர்கள் தப்பும் போது மிகவும் தாறுமாறாக ஓடும் ரேஸ் கார்கள் ஓட்டி அதில் சாம்பியன் பட்டம் பெற்ற அஸ்வின் அத்தகைய முயற்சியை எடுக்காமலா இருந்திருப்பார்.
அஸ்வின் சுந்தர் பயணித்த காரானது பிஎம்டபிள்யூ இசட் 4 வகையாகும். இதன் விலை சுமார் ரூ.78 லட்சமாகும். இருவர் மட்டுமே பயணிக்க முடியும் (2 சீட்) இந்த காரில் 4 ஏர்பேக்குகள் உள்ளன. கார் தீப்பிடிக்காமல் இருப்பதற்காக இவை பயன்படுத்தப்படுகின்றன. கார் எதனுடனாவது மோதியதும் இந்த ஏர் பேக்குகள் விரிந்து கார் ஸ்டியரிங்கும் , டிரைவர் சீட்டுக்கு அருகில் அமர்ந்திருப்பவரும் முன்னோக்கி செல்லாமலும், கார் எரியாமலும் பார்த்துக் கொள்ளும்.
பிஎம்டபிள்யூ கார்களில் டீபால்டாகவே இந்த ஏர்பேக்குகள் வருகின்றன. இதன் மதிப்பே லட்சங்களாகும். இந்நிலையில் அஸ்வினுக்கு குடிபழக்கம் இல்லை என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் காரை தாறுமாறாக ஓட்டியதற்கும் வாய்ப்பில்லை.
கார் நிச்சயம் தானாக தீப்பிடித்ததற்கான வாய்ப்பு இல்லை என்கிறார்கள். 2 முறை சாம்பியன் பட்டம் பெற்ற அஸ்வினுக்கு ஏதேனும தொழில் போட்டி இருந்திருக்குமா? அல்லது அவருக்கோ அவரது மனைவிக்கோ விரோதிகள் யாரேனும் இருந்திருக்கலாமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை தொடங்கியது.

ஆர்.கே.நகர் தொகுதி பாஜக வேட்பாளராக கங்கை அமரன் பெயர் அறிவிப்பு


ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக கங்கை அமரன் அறிவிக்கபட்டுள்ளார்.

கடந்த 2016–ம்
ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் (டாக்டர்
ராதாகிருஷ்ணன் நகர்) தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்று
முதல்–அமைச்சர் ஆனார்.
இந்தநிலையில்
உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் 5–ந்தேதி அவர் காலமானார். அவரது
மறைவால் காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் மாதம் 12–ந்தேதி
இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது.
இந்த
தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் 16–ந்தேதி முதல் 23–ந்தேதி
வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆர்.கே.நகர்
தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நேற்று
வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 
அ.தி.மு.க.
சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிட
உள்ளார். தி.மு.க. சார்பில் என்.மருதுகணேஷ் போட்டியிட இருக்கிறார்.
ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் பாஜக சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக கங்கை அமரன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிகாராபூர்வ அறிவிப்பை  பாஜக
தேர்தல் குழு செயலாளர் ஜே.பி.நட்டா டெல்லியில் அறிவித்தார். இசையமைப்பாளர்
இளையாராஜாவின் சகோதரர் கங்கை அமரன் என்பது குறிப்பிடத்தக்கது.

சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடாதிபதியின் தமிழக விஜய யாத்திரை!

சென்னை”

சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குரு பாரதி தீர்த்த மகாசுவாமிகள் மற்றும் அவரது சீடர் விதுசேகர பாரதி சுவாமிகள் ஆகிய இருவரும் தமிழகத்தில் ஒருமாத காலம் விஜய யாத்திரை மேற்கொள்கின்றனர். பாரதி தீர்த்த மகாசுவாமிகளின் 67-வது பிறந்தநாள் விழா மதுரையில் கொண்டாடப்பட உள்ளது.

இது தொடர்பாக கர்நாடகாவில் உள்ள சிருங்கேரி சாரதா பீட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி:

சிருங்கேரி பீடத்தின் 36-வது பீடாதிபதியாக இருப்பவர் பாரதி தீர்த்த மகாசுவாமிகள். இவர் 2012-ல் தமிழகத்தில் நீண்டநாட்கள் விஜய யாத்திரை மேற்கொண்டார்.

கடந்த 2015-ல் விதுசேகர பாரதி சுவாமிகளை தனது சீடராக நியமித்தார். இந்நிலையில், தமிழக பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, இருவரும் சேர்ந்து முதல் முறையாக தமிழகத்துக்கு விஜய யாத்திரை மேற்கொள்கின்றனர்.

மார்ச் 9-ம் தேதி தொடங்கி கர்நாடகாவின் பல பகுதிகளுக்குச் செல்லும் அவர்கள் மார்ச் 14-ம் தேதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு வருகை தருகின்றனர்.
14, 15-ல் சத்திய மங்கலம்
16, 17-ல் கோபி செட்டிபாளையம்,
18-ல் ஈரோடு,
19, 20, 21-ல் சேலம்,
22-ல் நாமக்கல்,
23, 24-ல் திண்டுக்கல்,
25-ல் தென்கரை,
26-ல் கொடிமங்கலம் என்று பல்வேறு ஊர்களுக்கு விஜயம் செய்து,
27-ம் தேதி மதுரை வந்தடைகின்றனர். தங்கும் இடங்களில் ஸ்ரீசாரதா சந்திரமவுலீஸ்வர பூஜை நடத்து கின்றனர்.

மதுரையில் பிறந்தநாள் விழா:

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள சிருங்கேரி சங்கர மடத்தில் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை ஒருவார காலம் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகின்றனர்.
ஏப்ரல் 2-ம் தேதி பாரதி தீர்த்த சுவாமிகளின் 67-வது பிறந்தநாள் விழா மதுரையில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மகாருத்ரம், சதசண்டி யாகங்களும் நடக்க உள்ளன.

ஏப்ரல் 4-ம் தேதி புறப்பட்டு ராஜபாளையம் செல்லும் அவர்கள், அங்குள்ள ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த பாரதி வேத பாடசாலையில் 13-ம் தேதி வரை தங்கியிருந்து அருளாசி வழங்குகின்றனர்.

இந்த விஜய யாத்திரையின்போது மார்ச் 15-ல் சத்தியமங்கலம் ஆதிசங்கரர் கோயில் கும்பாபி ஷேகம், 18-ம் தேதி பவானி சிருங்கேரி மட பிரவசன மண்டப திறப்பு விழா, ஏப்ரல் 9-ம் தேதி ராஜபாளையம் சாரதாம்பாள் கோயில் கும்பாபிஷேகம் ஆகியவற்றையும் நடத்தி வைக்கின்ற னர்.