இனி இளையராஜா பாடல்களைப் பாட மாட்டேன்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
தில்லியில் 7ஆவது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம்
ராஜா-பாலு: வாரிசுகளின் வடிவில் மல்லுக்கட்டும் மேதைகளின் பிரச்னை
இளையராஜா எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அனுப்பிய நோட்டீஸால் திரை உலகம் அதிர்ச்சி
சென்னை கன்டெய்னரில் இருப்பது என்ன? : பணமா ஆயுதமா? பரபரப்பு
நான் போட்டியிடுவதை தடுக்க சதி: ஜெ.தீபா புலம்பல்
யோகி ஆதித்யநாத் உ .பி., முதல்வராக தேர்வு
சென்னையில் சொகுசு கார் எரிந்து தம்பதி பலி: தொழில் போட்டி காரணமா என விசாரணை
ஆர்.கே.நகர் தொகுதி பாஜக வேட்பாளராக கங்கை அமரன் பெயர் அறிவிப்பு
ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் (டாக்டர்
ராதாகிருஷ்ணன் நகர்) தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்று
முதல்–அமைச்சர் ஆனார்.
உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் 5–ந்தேதி அவர் காலமானார். அவரது
மறைவால் காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் மாதம் 12–ந்தேதி
இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் 16–ந்தேதி முதல் 23–ந்தேதி
வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆர்.கே.நகர்
தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நேற்று
வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிட
உள்ளார். தி.மு.க. சார்பில் என்.மருதுகணேஷ் போட்டியிட இருக்கிறார்.
ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார்.
தேர்தல் குழு செயலாளர் ஜே.பி.நட்டா டெல்லியில் அறிவித்தார். இசையமைப்பாளர்
இளையாராஜாவின் சகோதரர் கங்கை அமரன் என்பது குறிப்பிடத்தக்கது.
சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடாதிபதியின் தமிழக விஜய யாத்திரை!
சென்னை”
சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குரு பாரதி தீர்த்த மகாசுவாமிகள் மற்றும் அவரது சீடர் விதுசேகர பாரதி சுவாமிகள் ஆகிய இருவரும் தமிழகத்தில் ஒருமாத காலம் விஜய யாத்திரை மேற்கொள்கின்றனர். பாரதி தீர்த்த மகாசுவாமிகளின் 67-வது பிறந்தநாள் விழா மதுரையில் கொண்டாடப்பட உள்ளது.
இது தொடர்பாக கர்நாடகாவில் உள்ள சிருங்கேரி சாரதா பீட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி:
சிருங்கேரி பீடத்தின் 36-வது பீடாதிபதியாக இருப்பவர் பாரதி தீர்த்த மகாசுவாமிகள். இவர் 2012-ல் தமிழகத்தில் நீண்டநாட்கள் விஜய யாத்திரை மேற்கொண்டார்.
கடந்த 2015-ல் விதுசேகர பாரதி சுவாமிகளை தனது சீடராக நியமித்தார். இந்நிலையில், தமிழக பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, இருவரும் சேர்ந்து முதல் முறையாக தமிழகத்துக்கு விஜய யாத்திரை மேற்கொள்கின்றனர்.
மார்ச் 9-ம் தேதி தொடங்கி கர்நாடகாவின் பல பகுதிகளுக்குச் செல்லும் அவர்கள் மார்ச் 14-ம் தேதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு வருகை தருகின்றனர்.
14, 15-ல் சத்திய மங்கலம்
16, 17-ல் கோபி செட்டிபாளையம்,
18-ல் ஈரோடு,
19, 20, 21-ல் சேலம்,
22-ல் நாமக்கல்,
23, 24-ல் திண்டுக்கல்,
25-ல் தென்கரை,
26-ல் கொடிமங்கலம் என்று பல்வேறு ஊர்களுக்கு விஜயம் செய்து,
27-ம் தேதி மதுரை வந்தடைகின்றனர். தங்கும் இடங்களில் ஸ்ரீசாரதா சந்திரமவுலீஸ்வர பூஜை நடத்து கின்றனர்.
மதுரையில் பிறந்தநாள் விழா:
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள சிருங்கேரி சங்கர மடத்தில் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை ஒருவார காலம் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகின்றனர்.
ஏப்ரல் 2-ம் தேதி பாரதி தீர்த்த சுவாமிகளின் 67-வது பிறந்தநாள் விழா மதுரையில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மகாருத்ரம், சதசண்டி யாகங்களும் நடக்க உள்ளன.
ஏப்ரல் 4-ம் தேதி புறப்பட்டு ராஜபாளையம் செல்லும் அவர்கள், அங்குள்ள ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த பாரதி வேத பாடசாலையில் 13-ம் தேதி வரை தங்கியிருந்து அருளாசி வழங்குகின்றனர்.
இந்த விஜய யாத்திரையின்போது மார்ச் 15-ல் சத்தியமங்கலம் ஆதிசங்கரர் கோயில் கும்பாபி ஷேகம், 18-ம் தேதி பவானி சிருங்கேரி மட பிரவசன மண்டப திறப்பு விழா, ஏப்ரல் 9-ம் தேதி ராஜபாளையம் சாரதாம்பாள் கோயில் கும்பாபிஷேகம் ஆகியவற்றையும் நடத்தி வைக்கின்ற னர்.

