ஜெயலலிதா ஆவி என்னுடன் பேசியது: திகில் கிளப்பும் திருவாரூர் சாமியார்!
பொ.செ. பதவியை ராஜினாமா செய்கிறாரா சசிகலா?! அமைச்சர்கள் சிறை சந்திப்பின் பின்னணி
ஜெ. மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதிவிசாரணை கோரி 8-ம் தேதி ஓ.பி.எஸ். உண்ணாவிரதம்
நெல்லை மாவட்டத்தில் 359 வங்கிகள் மூடல் 5 ஆயிரம் கோடி பணவர்தனை முடக்கம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 359 வங்கிக் கிளைகள் இயங்கவில்லை. ரூ. 5 ஆயிரம் கோடிக்கு பணப் பரிவர்த்தனை முடங்கின. பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். குடும்ப ஓய்வூதியத் திட்டத்தில் கூடுதல் பலன்களை வழங்க வேண்டும். வங்கி ஊழியர் சங்கங்களின் செயல்பாட்டை கட்டுபடுத்த முயன்று வரும் மத்திய அரசை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை வங்கித் தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு
சார்பில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் 36 கூட்டுறவு வங்கிகள், 61 கிராமப்புற வங்கிகள் உள்பட மொத்தம் 359 வங்கிக் கிளைகள் இயங்கவில்லை. ஊழியர்கள் பணிக்கு வராததால் வங்கிகள் வெறிச்சோடின. பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
பிப். 28 மாத இறுதிநாளாக என்பதால் சிறிய மற்றும் பெரும் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துவது போன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. சுமார் ரூ. 5 ஆயிரம் கோடி அளவுக்கு பணப் பரிவர்த்தனை முடங்கியதாக வங்கித் தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம்: கோரிக்கையை வலியுறுத்தி பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் கனரா வங்கி கிளை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க மாவட்டப்பொதுச்செயலர் ரெங்கன் தலைமை வகித்தார். வங்கி ஊழியர் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகி கில்பர்ட்ராஜ், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத் தலைவர் நம்பிராஜன், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி செளந்தர்யா, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் நிர்வாகி முத்தையா உள்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பாவூர்சத்திரம் மருத்துவருக்கு பாராட்டு
மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குடல் இறக்கத்திற்கு (Hernia)
அறுவை சிகிச்சை , லேப்ராஸ்கோபிக் சிகிச்சை இதில் எது சிறந்தது என அது
குறித்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் கருத்தரங்கு நடைபெற்றது.
பாவூர்சத்திரம் சுசிலா ஆஸ்பத்திரி மருத்துவர் எஸ்.குணசேகரன் கலந்து கொண்டு
லேப்பராஸ்கோபிக் சிகிச்சையே சிறந்தது என்று அறுவை சிகிச்சை மருத்துவர்கள்
மற்றும் மாணவர்களுக்கும் செயல் விளக்கம் மற்றும் வீடியோ காட்சிகள் மூலம்
விளக்கம் அளித்தார். முடிவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் ,
மருத்துவர்
எஸ்.குணசேகரனுக்கு நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள் .
கீழப்பாவூரில் தொடரும் திருட்டு சம்பவங்கள் விழித்துக் கொள்ளுமா ?காவல்துறை
தூங்கும் அறையில் தூங்காமல் வேறு அறையில் தூங்கியுள்ளார் ,இந்நிலையில் மாடி
வழியாக வீட்டிற்குள் வந்த திருடன் வீட்டில் பீரோ சாவியை தேடி எடுத்து இரண்டு
பீரோக்களை திறந்து பீரோவில் இருந்த பணம் ரூ 1.86 லட்சம் மற்றும் நகை 60 கிராம் நகையை
கொள்ளையடித்துள்ளான் சத்தம் கேட்டு பக்கத்துக்கு அறையில் இருந்து எழுந்து
வந்த கருப்பசாமி சத்தம் போட சுதாரித்த திருடன் வீட்டை விட்டு ஓடி விட்டான்
இது குறித்து பாவூர்சத்திரம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர், அண்மைக்காலமாக கீழப்பவூரில் தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் ,பொது இடங்களில் கண்காணிப்பு காமிரா ,மற்றும் இரவு நேரங்கள் முக்கிய இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கை செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களளின் கோரிக்கையாகும்

