December 6, 2025, 12:23 PM
29 C
Chennai

நெல்லை மாவட்டத்தில் 359 வங்கிகள் மூடல் 5 ஆயிரம் கோடி பணவர்தனை முடக்கம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 359 வங்கிக் கிளைகள் இயங்கவில்லை. ரூ. 5 ஆயிரம் கோடிக்கு பணப் பரிவர்த்தனை முடங்கின. பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். குடும்ப ஓய்வூதியத் திட்டத்தில் கூடுதல் பலன்களை வழங்க வேண்டும். வங்கி ஊழியர் சங்கங்களின் செயல்பாட்டை கட்டுபடுத்த முயன்று வரும் மத்திய அரசை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை வங்கித் தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு

சார்பில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் 36 கூட்டுறவு வங்கிகள், 61 கிராமப்புற வங்கிகள் உள்பட மொத்தம் 359 வங்கிக் கிளைகள் இயங்கவில்லை. ஊழியர்கள் பணிக்கு வராததால் வங்கிகள் வெறிச்சோடின. பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

பிப். 28 மாத இறுதிநாளாக என்பதால் சிறிய மற்றும் பெரும் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துவது போன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. சுமார் ரூ. 5 ஆயிரம் கோடி அளவுக்கு பணப் பரிவர்த்தனை முடங்கியதாக வங்கித் தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம்: கோரிக்கையை வலியுறுத்தி பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் கனரா வங்கி கிளை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க மாவட்டப்பொதுச்செயலர் ரெங்கன் தலைமை வகித்தார். வங்கி ஊழியர் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகி கில்பர்ட்ராஜ், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத் தலைவர் நம்பிராஜன், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி செளந்தர்யா, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் நிர்வாகி முத்தையா உள்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories