February 22, 2026, 11:25 AM
29.6 C
Chennai

வங்கி ஊழியர்கள் இன்று ‘ஸ்டிரைக்’

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள் இன்று(பிப்.,28), 'ஸ்டிரைக்'கில் ஈடுபடுகின்றனர்; அதனால், வங்கி சேவைகள் முற்றிலும் பாதிக்கும்.
வாரத்தில் ஐந்து நாள் வேலை, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பின் போது, வேலை செய்த ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை, அப்போது உயிர் இழந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் உட்பட, பல கோரிக்கைகளை, வங்கி ஊழியர் சங்கங்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது.
*பேச்சு தோல்வி:*
இது தொடர்பாக, மத்திய அரசுடன் நடந்த பேச்சு தோல்வி அடைந்ததால், கூட்டமைப்பினர் இன்று(பிப்.,28) ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். இதில், பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பொது மற்றும் அரசுத் துறை வங்கிகள்; கூட்டுறவு வங்கிகள்; பழைய தனியார் வங்கிகள்; வெளிநாட்டு வங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
*கோரிக்கைகள்:*
இது குறித்து, இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலர், சி.பி.கிருஷ்ணன் கூறியதாவது: அரசு வங்கிகளின் பல பணிகளை, தனியாருக்கு தரவும், பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில், வங்கிகளை தனியார் மயமாக்கவும், மத்திய அரசு முயற்சித்து வருகிறது; இவற்றை கைவிட வேண்டும். ஓய்வூதிய பலன்களை அதிகரிக்க வேண்டும்; பல ஆயிரம் கோடி வராக்கடன்களை வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, இப்போராட்டம் நடக்கிறது.
இதில், தமிழகத்தில், 8 000 கிளைகளில் பணிபுரியும், 75 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்கின்றனர். சென்னையில், வள்ளுவர் கோட்டத்திலும், மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
*சில வங்கிகள் செயல்படும் :*
பழைய தனியார் வங்கிகளின் ஊழியர்கள், ஸ்டிரைக்கில் பங்கேற்கின்றனர். அதே நேரம், புதிய தனியார் வங்கிகளான, எச்.டி.எப்.சி., – ஐ.சி.ஐ.சி.ஐ., – கோட்டக் மஹிந்திரா மற்றும் ஆக்சிஸ் வங்கி ஊழியர்கள், ஸ்டிரைக்கில் பங்கேற்கவில்லை. இந்த வங்கிகள், வழக்கம் போல செயல்படும். மற்ற வங்கிகள் செயல்படாததால், வங்கிகளுக்கு இடையே நடைபெறும் காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories