தில்லி ஏடிஎம்.,ல் போலி ரூ.2000 நோட்டு
கோக் பெப்ஸி விற்பனை தமிழகத்தில் 75% சரிவு
சசிகலா அறைக்கு அடுத்த அறை கொலைகாரக் கைதி சிறை மாற்றம்
சட்டமன்ற விவகார ஆளுநரின் அறிக்கை குடியரசுத்தலைவருக்கு அனுப்பிவைப்பு
புது தில்லி:
பிப்ரவரி 18ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. அப்போது திமுக எம்.எல்.ஏ.,க்கள் தாக்கப்பட்டதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து, சட்டசபை நிகழ்வுகள் தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என சட்டசபை செயலாளருக்கு ஆளுநர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் பிப்ரவரி 20 ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று அறிக்கையை அளித்தார்.
இந்த அறிக்கையை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு, ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பி வைத்துள்ளார். சட்டசபை நிழக்வுகள் தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குடியரசுத் தலைவரைச் சந்திக்க நாளை நேரம் கேட்டுள்ளார். அவர் குடியரசுத் தலைவரிடம் நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ள நிலையில், இந்த அறிக்கை அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின் மனு மீதான விசாரணை பிப்.27க்கு ஒத்திவைப்பு
சென்னை :
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு விவகாரத்தில், சபாநாயகரின் முடிவு செல்லாது என அறிவிக்கக் கோரி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று( புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கு பிப்ரவரி 27 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது நடந்த ஓட்டெடுப்பில், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக, 122 ஓட்டுகளும் எதிராக, 11 ஓட்டுகளும் விழுந்ததாக அறிவிக்கப் பட்டது.
‘சபாநாயகரின் அறிவிப்பு, சட்டவிரோதமானது; நம்பிக்கைத் தீர்மானத்தின் மீதான, சபாநாயகரின் முடிவு செல்லாது; ஆளுநரின் செயலர், தலைமைச் செயலர், தேர்தல் ஆணைய அதிகாரியின் மேற்பார்வையில், ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தில், ஸ்டாலின் மனுத் தாக்கல் செய்தார்.
விசாரணைக்கான வழக்குகள் பட்டியலில், ஸ்டாலினின் மனு நேற்று இடம் பெறவில்லை. இதையடுத்து, தாற்காலிக தலைமை நீதிபதி ரமேஷ், நீதிபதி மகாதேவன் அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், பிப்ரவரி 27 ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்தனர். மேலும், சட்டசபை நிகழ்வுகள் தொடர்பான வீடியோ பதிவுகளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம்
சிறையில் தமிழக முதல்வருக்கு அனுமதி மறுப்பு?
ஜெ. சமாதியில் விரைவில் தியானம் செய்யப் போகிறாரா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி?
மே 14க்குள் உள்ளாட்சித் தேர்தல் : நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலை வரும் மே 14க்குள் இரண்டு கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டது. பிறகு, 2016 டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கும் படி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. மனு, நீதிமன்ற விசாரணைக்கு வந்த போது, ‘உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும்?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘எப்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த போகிறீர்கள்?’ என நீதிபதிகள் கேட்டனர்.
மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ”சில பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது; மே, 15ல் நடத்த உத்தேசிக்கிறோம்” என்றார். இதையடுத்து, உறுதியான தேர்தல் தேதியை தெரிவிக்கும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு, டிவிஷன் பெஞ்ச் தள்ளிவைத்தது.
இன்று விசாரணைக்கு வந்த போது, மே 15க்கு முன்பு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் தேர்தல் நடவடிக்கைகளை ஏப்ரல் 15ம் தேதிக்குள் துவங்கி, மே 14க்குள் முடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை மே14ம் தேதிக்குள் இரண்டு கட்டமாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

