December 6, 2025, 9:10 AM
26.8 C
Chennai

சசிகலா அறைக்கு அடுத்த அறை கொலைகாரக் கைதி சிறை மாற்றம்

பெங்களூரு :
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு அடுத்த அறையில் இருந்த பயங்கர கொலைக் குற்றவாளி சயனைடு மல்லிகா கர்நாடகாவின் ஹிண்டல்கா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சயனைடு மல்லிகா (52)வின் உண்மையான பெயர் கேம்பம்மா. பெங்களூரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கோயில்களுக்கு அடிக்கடி வரும் பணக்காரப் பெண்களைக் கண்டறிந்து, அவர்களிடம் பழகி, சயனைடு கொடுத்து அப்பெண்களைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடிப்பது இவர் தொழில். நகைக்காக 6 பெண்களை அடுத்தடுத்து கொலை செய்த இவர், பல்வேறு வழக்குகளின் கீழ் 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர். 
2008 முதல் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர், தற்போது கர்நாடகாவில் உள்ள ஹிண்டல்கா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிறை மாற்றம் குறித்து இவரிடம் சிறை அதிகாரிகள் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. அவரை வேறு அறைக்கு மாற்றப் போவதாகவும், அதனால் பொருள்களை எடுத்துக் கொள்ளுமாறும் கூறியுள்ளனர். 
சயனைடு மல்லிகாவின் அறைக்கு அடுத்த அறையில் சசிகலா அடைக்கப்பட்ட தகவல் வெளியானதும், சசிகலா உயிருக்கு ஆபத்து இருப்பதாக அதிமுக.,வினர் சிறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதனால் சசிகலா உணவு வாங்க வரிசையில் நிற்கும் போது, சயனைடு மல்லிகாவை அப்பகுதியில் அனுமதிக்காமல் இருந்தனர். 
இருப்பினும் பாதுகாப்பு கருதி சயனைடு மல்லிகாவை வேறு சிறைக்கு மாற்றி உள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories