Home Blog Page 5771

சாதித்துக்காட்டிய கீழப்பாவூர் வட்டார அரசுப்பள்ளி மாணவ மாணவிகள்

சாதித்துக்காட்டிய அரசுப்பள்ளி மாணவ மாணவிகள்

அர்ப்பணிப்புடன் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

பாவூர்சத்திரத்தில் உள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு தேர்வில் 247 மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 237 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இந்த பள்ளியில் 96% தேர்ச்சி பெற்று மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். முதல் மதிப்பெண் 487 ஐ வ.ராஜகீர்த்தனா என்ற மாணவி பெற்றுள்ளார். வி.மதுமித்திரா என்ற மாணவி 484 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடமும், கே.சக்தி என்ற மாணவி 482 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடமும் பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களில் 400க்கு மேல் 85 மாணவிகளும் பெற்றுள்ளனர். சமூகஅறிவியல் பாடத்தில் 7 மாணவிகளும், அறிவியல் பாடத்தில் 2 மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவரர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சவுந்திரசேகரி, பெற்றோர் ஆசிரியர் குழு தலைவி தமிழரசி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
பாவூர்சத்திரம் ஆண்கள் பள்ளி
பாவூர்சத்திரம் த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 104 மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தனர். இதில் 97 பேர் தேர்ச்சி பெற்றனர்.இது இந்தபள்ளியின் 93% தேர்ச்சி ஆகும். பள்ளியின் முதல் மதிப்பெண் 458-ஐ ஜீவதுரை என்ற மாணவனும், இரண்டாம் மதிப்பெண் 434-ஐ சாம்ஜெபத்துரை, வசந்தகுமார் ஆகிய இருவரும் பெற்றள்ளனர். மூன்றாம் மதிப்பெண் 426-ஐ லிங்கராஜ் என்ற மாணவனும் பெற்றுள்ளனர்.

கீழப்பாவூர்

கீழப்பாவூர் ஏ.வி உயர்நிலைப்பள்ளி யில் திலகன் என்ற மாணவன் 482 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும் ,சிவவிஷ்ணு என்ற மாணவன் 479 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் ,கார்த்திகா என்ற மாணவி 477 மதிப்பெண்கள் பெற்று  மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்

மேலப்பாவூர்
மேலப்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி 10 வகுப்பு தேர்வில் 92% தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியின் முதல் மதிப்பெண் 482-ஐ ஆர்.புவனேஸ்வரி என்ற மாணவியும் 2-வது மதிப்பெண் 481-ஐ பி.மகேஸ்வரன் என்ற மாணவனனும், 3-வது மதிப்பெண் 460-ஐ டி.சுபாஷ்சந்திரபோஸ் என்ற மாணவனும் பெற்றுள்ளனர். மேலும் அறிவியலில் 2பேரும், சமூகஅறிவியலில் 1வரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 31 பேர் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். இவர்களை தலைமையாசிரியை அன்புமணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாரியப்பன், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் சங்கரபாண்டியன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.
பூலாங்குளம்
பூலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 68பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தனர். இதில் 67பேர் தேர்ச்சி பெற்றனர், இது இந்த பள்ளியில் 99% தேர்ச்சி ஆகும். முதல் மதிப்பெண் 471-ஐ ஆர்.நந்தினி, 2-வது மதிப்பெண் 464-ஐ கே.ராமர்களஞ்சியம் 3-வது மதிப்பெண் 456-ஐ வி.வேதவல்லி, ஜெ.செல்வக்குமாரும் பெற்றனர். 19பேர் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். இவர்களை தலைமையாசிரியை ஜீலியானாடெய்சிமேரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

ராஜ்யசபா தேர்தல்: அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு

Captureதமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதில் அ.தி.மு.க., சார்பில் ஆர். வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர் போட்டியிடுவார்கள் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

[wp_ad_camp_4]

AIADMK announces four candidates for Rajya Sabha polls

0

CaptureAIADMK general secretary and Tamil Nadu Chief Minister J.Jayalalithaa announced the party’s candidates for the June 11 Rajya Sabha polls.

AIADMK nominates R. Vaithilingam, Navaneethakrishnan, Vijayakumar and S. R. Balasubramaniam to Rajya Sabha.

அதிமுக., எம்.எல்.ஏ., சீனிவேல் காலமானார்

மதுரை :

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., சீனிவேல் மாரடைப்பால் இன்று அதிகாலை 6.20க்கு காலமானார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை மரணமடைந்தார்.
65 வயதாகும் எஸ்.எம். சீனிவேல், கடந்த 25 ஆண்டுகளாக அதிமுக ஒன்றியச் செயலாளராக இருந்து வந்தார். 2001 ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக., சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர்.,மன்ற மாவட்டச் செயலாளராக இவர் இருந்து வந்த இவருக்கு, 2016 தேர்தலில் கட்சித் தலைமை போட்டியிட வாய்ப்பளித்தது. மதுரை மேயர் உள்ளிட்ட பலருக்கும் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், மே 17ம் தேதி சீனிவேலுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் மதுரை சொக்கிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக, மதுரையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு சீனிவேல் மாற்றப்பட்டார். இங்கு கோமா நிலையில் இருந்து வந்த சீனிவேலுக்கு, இன்று காலை 5.30 மணிக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இவரை பரிசோதித்த டாக்டர்கள், 6.20 மணிக்கு அவர் உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.

இவர், நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் மணிமாறனை விட 22,992 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். தான் வெற்றி பெற்ற தகவல் கடைசி வரை தனக்குத் தெரியாமலும், வெற்றி பெற்றும் பதவி ஏற்காமலும் உயிரிழந்துவிட்டது பரிதாபம்.

சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது

தமிழக சட்டசபை முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்ட சபை கூட்ட அரங்கில், இன்று காலை, 11:00 மணிக்கு கூடுகிறது. கூட்டத்தில், தற்காலிக சபாநாயகர் செம்மலை, புதிய எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். முதலில், முதல்வர் ஜெயலலிதா, பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பதவி ஏற்பர். இன்றைய கூட்டம், பதவியேற்பு நிகழ்ச்சியுடன் நிறைவுபெறும். ஜூன், 3 காலை, 10:00 மணிக்கு, சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது

திருப்பரங்குன்றம் அதிமுக., எம்.எல்.ஏ., சீனிவேல் மாரடைப்பால் மரணம்

மதுரை :

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., சீனிவேல் மாரடைப்பால் இன்று அதிகாலை 6.20க்கு காலமானார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை மரணமடைந்தார்.
65 வயதாகும் எஸ்.எம். சீனிவேல், கடந்த 25 ஆண்டுகளாக அதிமுக ஒன்றியச் செயலாளராக இருந்து வந்தார். 2001 ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக., சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர்.,மன்ற மாவட்டச் செயலாளராக இவர் இருந்து வந்த இவருக்கு, 2016 தேர்தலில் கட்சித் தலைமை போட்டியிட வாய்ப்பளித்தது. மதுரை மேயர் உள்ளிட்ட பலருக்கும் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், மே 17ம் தேதி சீனிவேலுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் மதுரை சொக்கிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக, மதுரையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு சீனிவேல் மாற்றப்பட்டார். இங்கு கோமா நிலையில் இருந்து வந்த சீனிவேலுக்கு, இன்று காலை 5.30 மணிக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இவரை பரிசோதித்த டாக்டர்கள், 6.20 மணிக்கு அவர் உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.

இவர், நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் மணிமாறனை விட 22,992 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். தான் வெற்றி பெற்ற தகவல் கடைசி வரை தனக்குத் தெரியாமலும், வெற்றி பெற்றும் பதவி ஏற்காமலும் உயிரிழந்துவிட்டது பரிதாபம்.

மே 28க்குள் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியாகும்

சென்னை:
புதன்கிழமை இன்று காலை 9.31க்கு தமிழ்நாடு முழுதும் மாநில கல்வி வாரியத்தால் நடத்தப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே, 28ம் தேதிக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்.எஸ்.எல்.சி., பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை:
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 13 வரை நடைபெற்றது. இந்தத் தேர்வினை சுமார் 10.50 லட்சம் பேர் எழுதினர். இவர்களில், 7,000 பேர் தமிழ் அல்லாத பிறமொழியை தாய்மொழியாக கொண்டு தேர்வு எழுதியுள்ளனர்.
இந்நிலையில், தேர்வு முடிவுகள் இன்று காலை, 9:31 மணிக்கு வெளியாஇஉம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.
தேர்வு எழுதியவர்கள், தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் கொண்டு
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
ஆகிய இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்கள் மற்றும் பள்ளிகளிலும், மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம்.
தாற்காலிக சான்றிதழ்களை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், ஜூன், 1 முதல் மாணவர்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமும், பதிவிறக்கம் செய்த சான்றிதழ்கள் ஜூன் 1ஆம் தேதிமுதல் கிடைக்கும் என அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

கரூர் பரணி கார்டனில் உத்திரகாண்ட் மாநில எம்.பி தருண் விஜய் நலம்வேண்டி சர்வசமய பிரார்த்தனை நிகழ்ச்சி

23-05-16 Karur School Prayer News Intersting Photo 01 23-05-16 Karur School Prayer News Intersting Photo 02 23-05-16 Karur School Prayer News Intersting Photo 03

உத்தரகாண்ட் மாநிலத்தில் சமூக நீதிக்கான தனது பயணத்தின் போது கொடூர  தாக்குதலுக்கு உள்ளாகி டேராடூன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ் ஆர்வலரும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான தருண் விஜய் நலம் பெற வேண்டி கரூர் பரணி கார்டன்ஸில் திருக்குறள் முற்றோதல் மற்றும் சர்வசமய பிரார்த்தனை நடைபெற்றது.

திருவள்ளுவர் மாணவர் இளைஞர் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் இ திருவள்ளுவர் மாணவர் இளைஞர் அமைப்பின் (ளுலுகூ)இ தேசிய ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ராமசுப்ரமணியன்இ எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் சாந்திஇ பரணி வித்யாலயா முதல்வர் சு.சுதாதேவி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திருக்குறள் மாணவர்கள்இ ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாகஇ தமிழுக்காகவும் திருக்குறளுக்காகவும் தருண்விஜய்யின் வரலாற்று சிறப்பு மிக்க பாராளுமன்றத்தில் திருக்குறள்  நிகழ்வு,  திருக்குறள் கருத்துக்களை இந்தியாவில் உள்ள அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதற்காக தேசிய அளவில் திருவள்ளுவர் இளைஞர் இயக்கம் கண்டு –  அதன் மூலம் பல்வேறு நற்செயல்கள் செய்து வருவது; புது தில்லி குடியரசு தலைவர் மாளிகையில் 133 திருக்குறள் மாணவர்களை பாராட்டி கௌரவித்தமை; மாணவர்களுக்கு ஆயிரக்கணக்கிலான இலவச திருக்குறள் புத்தக விநியோகம்; திருவள்ளுவர் க்ஷ பாரதியார் பிறந்த தினங்களை நாடு முழுதும் உள்ள கல்வி நிறுவனங்களில் கொண்டாட  வழி செய்தமை;  பாராளுமன்றத்திலும் வட இந்தியாவிலும்இ உலக அரங்கிலும் திருக்குறள் பெருமையை தொடர்ந்து பேசி வருவது;  எத்தனையோ இன்னல்களுக்கு நடுவில் வட இந்தியாவில் உள்ள ஹரித்துவார் நகரில் கங்கைக் கரையில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவ பாடுபட்டு வருவது; உள்ளிட்ட திரு தருண்விஜய் அவர்களின் தமிழுக்கு ஆதரவான தேசிய அளவிலான பங்களிப்புகள்  பங்கேற்பாளர்களால் நெகிழ்வோடு நினைவு கூறப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் பரணி பார்க் மெட்ரிக் பள்ளி மற்றும் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளி மாணவ, மாணவிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.