Home Blog Page 5814

சட்டமன்றத்தில் கவர்னர் உரையை வாசிக்க விடாமல் எதிர்க்கட்சிகள் அமளி !

 
சோலார் பேனல் ஊழல், மது பார்கள் உரிம ஊழல் ஆகியவை அரசியல் சூறாவளியை கிளப்பி விட்டுள்ளதால் கேரளமாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி பதவி விலக கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில் கேரள சட்டமன்ற கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது.சட்டமன்ற கூட்டம் கூடியதும் கவர்னர் பி.சதாசிவம் மாநில அரசின் கொள்கைகள் அடங்கிய உரையை வாசிக்கத் தொடங்கினார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் எழுந்து,இந்த அரசு ஊழலில் திளைக்கிறது. கவர்னர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.
அதற்கு கவர்னர் பி.சதாசிவம், ‘‘ஜனநாயக ரீதியில் அரசுக்கு எதிராக உங்களது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறீர்கள். இதுவே போதும். அரசியல் சாசனத்தின்படி எனது கடமைகளையும் செய்யவிடுங்கள்’’ என்று கூறிவிட்டு உரையை தொடர்ந்தார்.
ஆனால், அவர் உரையை வாசிக்க முடியாதவாறு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக எழுந்து அமளியில் ஈடுபட்டனர். அவர்கள், லஞ்ச குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று உம்மன்சாண்டியும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் ராஜினாமா செய்யவேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் காண்பித்தனர். அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் பேச முயன்றார்.
எதிர்க்கட்சிகளின் செயலால் அதிருப்தி அடைந்த கவர்னர் பி.சதாசிவம், கொடியேரி பாலகிருஷ்ணனிடம், ‘‘இது நாளை உங்களுக்கும் நடைபெறலாம். உங்களுக்கு எதிர்ப்பை காட்ட உரிமை இருக்கிறது என்றால் எனக்கு ஜனநாயக கடமைப்படி உரையை வாசிக்கும் பொறுப்பு உள்ளது. அமைதியாக உட்காருங்கள் அல்லது சபையைவிட்டு வெளியேறுங்கள்’’ என்று கூறினார்
தொடர்ந்து கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ‘கறைபடிந்த அமைச்சகத்தின் கொள்கைகள் எங்களுக்கு தேவையில்லை’ என்று வாசகங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறு சபையில் இருந்து ஒட்டுமொத்தமாக வெளியேறினர்.

அரசுப் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து 37 பேர் பலி

 
அரசுப் பேருந்து ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 37 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர்.
குஜராத் மாநிலம், நவ்சாரி நவ்சாரியில் இருந்து உகாய் பகுதிக்கு அந்தப் பேருந்து பயணிகளுடன் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. சுபா கிராமம் அருகே பூர்ணா ஆற்றின் மீதுள்ள பாலத்தில் பேருந்து வந்தபோது, எதிர்பாராதவிதமாக 20 அடி உயரத்தில் இருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 37 பேர் பலியாகினர். 24 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் 4 பேரின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து இருக்கலாம் என உயிர் தப்பிய பயணிகளில் சிலர் தெரிவித்துள்ளனர்.
 

இந்தியாவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கு மேலும் 7 நாட்கள் போலீஸ் காவல்

 
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் 11 பேருக்கு மேலும் 7 நாட்கள் தேசிய புலனாய்வு பிரிவு காவலில் வைத்து விசாரிக்கநீதிமன்றம் அனுமதி அளித்தள்ளது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக சிலர் செயல்படுவதாக புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி இந்தியா முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை தேசிய புலனாய்வு பிரிவினர் காவலில் எடுத்து விசாரணை நடத்திவந்தனர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த முகமது அப்துல் அஹத் (வயது 46), கோவை உக்கடத்தை சேர்ந்த ஆசிப் அலி (21) ஆகியோர் கடந்த 23–ந்தேதி பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர்.
இந்த 15 பேரில் 11 பேரின் போலீஸ் காவல் நேற்றுடன் முடிந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் டெல்லி மாவட்ட நீதிபதி அமர்நாத் முன்பு தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அவர்கள் 11 பேரையும் மேலும் 10 நாட்களுக்கு காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அவர்கள் தங்கள் மனுவில், விசாரணையின்போது குற்றவாளிகள் சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர விரும்புபவர்களுக்கு நிதி உதவிகள் வழங்கியதாகவும், ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆட்களை சேர்த்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களில் சிலர் ஐ.எஸ். இயக்கத்தின் தீவிரமான உறுப்பினர்களுடன் ‘ஸ்கைப்’, ‘சிக்னல்’, ‘டிரில்லியன்’ போன்ற பல்வேறு கைப்பேசி அப்ளிகேஷன்கள், இணையதளங்கள் வழியாக தொடர்பு கொண்டு இருந்ததும் தெரியவந்துள்ளது.
அவர்களின் அடையாளங்கள், ஐ.எஸ். இயக்கத்துக்கு அவர்கள் ஆற்றிய பங்கு போன்றவை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
அவர்களில் 9 பேர் சார்பாக ஆஜரானவழக்கறிஞர் எம்.எஸ்.கான் தேசிய புலனாய்வு பிரிவின் கோரிக்கையை எதிர்த்தார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிரியாவில் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என அவர்கள் மனுவில் குறிப்பிடவில்லை. கடந்த 10 நாட்களாக அவர்கள் காவலில் வைத்து இந்த வழக்கு தொடர்பாக விசாரித்துள்ளனர். எனவே மேலும் காவலை நீட்டிக்க தேவையில்லை என்றார்.
மாவட்ட நீதிபதி அமர்நாத் 11 பேருக்கும் மேலும் 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தேசிய புலனாய்வு பிரிவுக்கு அனுமதி அளித்தார். அதனைத் தொடர்ந்து முகமது அலீம், முகமது உபைதுல்லா கான், நபீஸ்கான், முகமது ஷெரீப் மொய்னுதீன்கான், ஆசிப் அலி, நஜ்முல் ஹூடா, முடாபிர் முஷ்டாக் சேக், முகமது அப்துல் அஹாத், சுஹைல் அகமது, சையன் முஜாஹித், மொகமது ஹுசைன்கான் ஆகிய 11 பேரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த 11 பேர் தவிர முகமது அப்சல், இம்ரான், அபு அனாஸ், நசீர் பக்கீர் ஆகிய மேலும் 4 பேரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். மொத்தம் 15 பேரில் நசீர் தவிர மற்ற 14 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மாநில அரசுக்கு எதிரான போராட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்: கேரள சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக கவர்னர் பேச்சு

கேரள சட்டப்பேரவையில் பஜ்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் சதாசிவம் உரையாற்றினார். அப்போது சோலார் மின் திட்ட முறைகேடு புகாருக்கு பொறுப்பேற்று கேரளா முதலமைச்சர் உம்மன் சாண்டி பதவி விலக கோரி மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சி எம்.எல்.ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆளுநர் உரையை படிக்க விடாமல் தொடர்ந்து முழக்கம் எழுப்பப்பட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

அமளிக்கு நடுவே பேசிய ஆளுநர் சதாசிவம் எதிர்க்கட்சி உறுப்பினர்களை சமாதானபடுத்தும் வகையில் பேசிய ஆளுநர் சதாசிவம் உங்களது போராட்டம் அரசுக்கு எதிரான என்பது தெரியும் அதனை மக்களிடம் தான் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார். மாநில அரசுக்கு எதிரான போராட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று சட்டப் பேரவையில் ஒரு ஆளுநர் கூறியிருப்பது கேரள சட்டப் பேரவை வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என கருதப்படுகிறது.

12-வது தெற்காசிய விளையாட்டு போட்டி கவுகாத்தியில் தொடங்கியது

தெற்காசிய 12 வது விளையாடி போட்டி சற்று முன்னதாக கவுகாத்தியில் தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.

இன்று முதல் 16-ம் தேதி வரை நடக்கிறது. கவுகாத்தியில் 16 வகையான போட்டிகளும், ஷில்லாங்கில் 7 வகையான போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம், மாலத்தீவு, பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகளை 2,500-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த போட்டியில் தடகளம், குத்துச்சண்டை, பேட்மிண்டன், கால்பந்து, கைப்பந்து, ஆக்கி, நீச்சல், மல்யுத்தம், கபடி, ஸ்குவாஷ், டென்னிஸ், ஹேண்ட்பால், வில்வித்தை உள்பட 23 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 228 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. தெற்காசிய போட்டியில் இருபாலருக்கும் சரிசமமான அளவில் போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த போட்டிக்கான இந்திய அணியில் 245 வீராங்கனைகள் உள்பட 521 பேர் இடம் பிடித்துள்ளனர்.

தங்கம் விலை ரூ.112 உயர்வு

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.112 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,603-க்கும், சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.20,824-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.27,835-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.38.80-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.36,275-க்கும் விற்பனையாகிறது.

ஊழல் தடுப்பு மேற்பார்வை குழுவில் ராகுல் டிராவிட்

ஐ.சி.சி. ஊழல் தடுப்பு மேற்பார்வை குழுவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய கிரிக்கெட் வாரியங்களுக்கு அதிக வருவாய் மற்றும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய விதிமுறையை நீக்க, ஷசாங் மனோகர் தலைமையில் நேற்று நடந்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தெற்காசிய விளையாட்டு போட்டியில் சாய்னா, காஷ்ய்ப், தீபிகா பல்லிக்கல் விலகல்

கவுகாத்தி, ஷில்லாங்கில் இன்று தொடங்கும் 12-வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் ஒலிம்பி போட்டிக்காக இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் விலகியுள்ளார். காயம் காரணமாக் காயம் இந்திய பேட்மிண்டன் வீரர் காஷ்ய்ப் பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தோள்பட்டை காயம் காரணமாக இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் ஒற்றையர் பிரிவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். ஆனலும் இவர் அணிகள் பிரிவில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை டி20 தொடர் மற்றும் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை டி20 தொடர் மற்றும் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம் இன்று வெளியிடப்பட்டது. இந்த இரு தொடர்களிலும் ஷமிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மணீஷ் பாண்டேவும் புவனேஸ்வர் குமாரும் இடம்பெறவில்லை. டி20 உலகக் கோப்பை, ஆசிய கோப்பை டி20 தொடருக்கான அணியில, தோனி, ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி, ரஹானே, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பும்ரா, ஆஷிஷ் நேஹ்ரா, ஹர்பஜன் சிங், முகமது சமி, பவன் நேகி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணி இலங்கைக்கு எதிராக மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளது. இதன் முதல் ஆட்டம் வரும் 9ம் தேதி புனேவில் நடக்கிறது. ஆசிய கோப்பை தொடர் டி 20 வடிவில் நடத்தப்படுவது இதுவே முதன்முறை. வழக்கமாக 50 ஓவர்களை கொண்ட போட்டியாகவே நடத்தப்படும். இம்முறை டி 20 உலககோப்பையை கருத்தில் கொண்டு தொடரின் வடிவம் மாற்றப்பட்டுள்ளது.

காகபுசுண்டர் வணங்கிய ஷோடச லிங்கம்

கா கபுசுண்டரும் அவர் மனைவி ஸ்ரீபகுளாதேவியும் ஜீவசமாதி அடைந்த இடம், கள்ளக்குறிச்சி வட்டம் தென் பொன்பரப்பு கிராமத்தில் ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் திருக்கோயிலின் ஈசானியத்தில் அமைந்துள்ளது. 

இந்தத் திருக்கோயிலில் இருக் கும் ஷோடசலிங்கம் தனிச் சிறப்பு பெற்றது. சித்தர்களுக்கெல்லாம் தலைமை குருவாகக் கருதப்படும் ஸ்ரீகாகபுசுண்டர் 16 ஆண்டுகளுக்கு மேலாகக் கடும் தவமிருந்து, 16 முகங்களுடன் கூடிய சிவதரிசனம் பெற்றாராம். அதுபோல் உலக மக்களும் சிவதரிசனம் பெற்றுச் சிறப்படையும் வகையில் ஏறக் குறைய 1,300 ஆண்டுகளுக்கு முன் தென் பொன்பரப்பை ஆட்சி செய்த வானகோவராயன் என்ற மன்னன், 16 முகங்கள் கொண்ட ஷோடச லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, மற்ற சிவாலயங்களில் இல்லாத தனிச் சிறப்புகள் பலவற்றை உள்ளடக்கியதாக இந்தக் கோயிலை உருவாக்கினார் என்பது வரலாறு.
www.vikatan.com sakthi 2006 01 ywqmdd images p17 - 2026
இந்த ஷோடச லிங்கம் நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்தத் தன்மையுடன், சுமார் ஐந்தரை அடி உயரத்துக்கு, பிரம்மா மற்றும் விஷ்ணு பீடங்கள் மீது ஒரே கல்லால் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. உலகைக் கட்டியாளும் மும்மூர்த்தியரும் இவ்வாறு ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது இங்குள்ள சிறப்பம் சம். இந்தத் திருவடிவைக் கைகளால் தட்டிப் பார்த்தால் வெண்கலச் சத்தம் எழுவது கூடுதல் சிறப்பு.
ஸ்ரீகாகபுஜண்டர் இந்தக் கோயிலின் அருகில் சமாதி அடைந்ததையட்டி, பீடம் அமைக்கப்பட்டு திருவிளக்கு ஏற்றி இன்றும் பராமரிக்கப்பட்டு வருவது மற்றொரு சிறப்பு.
www.vikatan.com sakthi 2006 01 ywqmdd images p17b - 2026
www.vikatan.com sakthi 2006 01 ywqmdd images p17a - 2026எல்லா சிவாலயங்களிலும் பிரதோஷ காலத்தில் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே சிவதரிசனம் செய்வது வழக்கம். ஆனால், இங்கு நந்தியெம்பெருமான் பால நந்தியாக வீற்றிருப்பதால், பிரதோஷத்தின்போது கொம்புகளுக்கிடையே தரிசனம் செய் யும் அவசியம் இன்றி, நேரடியாகவே சிவ தரிசனம் செய்யலாம். இது ஒரு சிறப்பம்சம்.
விவசாயம் செழிக்க, கடன் தொல்லை நீங்க, திருமணம் நடைபெற, ஜாதகத்தில் உள்ள ராகு-கேது பாதிப்புகள் நீங்க, களத்திர தோஷம், கால சர்ப்ப தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாக – பக்தர்கள் தங்கள் பிறந்த நட்சத்திரத்தன்று ராகு கால வேளையில் ஸ்ரீபால நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்வித்து பலனடையலாம். இங்கு பால், சந்தனம், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது அவை நீல நிறமாக மாறுவதைக் காணலாம்.
கோயில் வெளிப் பிராகாரத்தில் வள்ளி- தெய் வானையுடன் பறக்கும் மயிலில் ஆசனமிட்டு, சுமார் 8 அடி உயரத்துடன் ஆறுமுகங்களோடு முருகப் பெருமான் காட்சி தருகிறார். தவிர குரு பகவான், துர்க்கை அம்மன் சந்நிதிகளும் எளிமையாகக் காட்சி தருகின்றன.
இந்தக் கோயிலின் சுற்றுச் சுவரில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் ஆதி கிரந்தம் மற்றும் தமிழ் எழுத்துகள் உள்ளன. ‘கங்கைக் கரை போன்ற புண்ணிய இடங்களுக்குச் சென்று ஆயிரம் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வணங்குவதால் கிடைக்கும் பலனை, இந்தக் கோயில் ஈசனின் ஆத்ம தரிசனத்தின் மூலம் பெறலாம்’ என்பது போன்ற தகவல்கள் அவற்றில் அடங்கியுள்ளன.
www.vikatan.com sakthi 2006 01 ywqmdd images p16b - 2026
‘இந்தக் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களுக்கு இணையாக இருப்பதால் கருவறை மிகவும் உக்கிரமானதாக இருக்கும். இங்கு ஏற்றப்படும் தீபமானது துடித்துக் கொண்டே இருக்கும்’ என்று ஸ்ரீகாகபுஜண்டர் நாடிச்சுவடியில் குறிப்பிடப் பட்டுள்ளது. இன்றும் கருவறையின் மையத்தில் அமைந்துள்ள தீபம் துடிப் புடன் எரிந்து கொண்டிருப் பது, நாடி சுவடி கூற்றை மெய்ப்பிப்பதாக உள்ளது.
தேன், பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், விபூதி, சந்தனம், திருமஞ்சனம், கரும்புச்சாறு, எலுமிச்சம்பழச் சாறு, பஞ்சாமிர்தம், நெய், அரிசிமாவு, நல்லெண்ணெய், புனித நீர் போன்ற 16 வகைப் பொருட்களை சிவலிங்கத்தின் உச்சியில் அபிஷேகம் செய்ய ஆரம்பித் ததும் அவை தானாகவே சிறிதும் பிசிறு இல்லாமல் தனித் தனியாக 16 கோடுகளாக லிங்கத்தின் அடிப்பகுதி வரை வந்து பீடத்தில் ஐக்கியமாவதை தரிசிக்கலாம். ராகு கால வேளையில் இங்குள்ள சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வதால், நமது அனைத்துப் பிரச்னைகளும் தீரும் என்பது ஐதீகம்.
www.vikatan.com sakthi 2006 01 ywqmdd images p16a - 2026
ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் பௌர்ணமி தினத்தன்று காலை 6 முதல் 7.30-மணிக்குள்ளும், பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று காலை 6 முதல் 7.30 மணிக்குள்ளும் பால நந்தியின் இரு கொம்புகளில் இருந்து தோன்றும் சூரிய ஒளி இரு கோடுகளாக கர்ப்பக்கிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படிந்து மீண்டும் பாலநந்தி சிலையில் ஐக்கியமாவது கண்கொள்ளாக் காட்சியா கும். பால நந்திக்கும் கரு வறைக்கும் உள்ள தூரம் சுமார் 70 அடி!
– கே.பி.ஷண்முகம், திருச்செங்கோடு
கோயிலுக்குச் செல்லும் வழி
சே லம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் _ கள்ளக்குறிச்சி செல்லும் வழியில் அம்மையகரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து மேற்கே 1 கி.மீ. தூரத்தில் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
கிருத கம்பளம்!
ஒ வ்வொரு பௌர்ணமி பூஜையும் சிவ பெருமானுக்கு சிறப்பானது ஆகும். இதில் மாசி மாத பௌர்ணமி பூஜை இறைவனுக் குச் செய்யும் அபிஷேகங்களில் மிகவும் முக்கியமானது.
அபிஷேகம் நடைபெற்று முடிந்ததும் ‘கிருத கம்பளம்’ சாத்துவார்கள். கம்பளி ஒன்றை நெய்யில் நனைத்து சாத்துவதை ‘கிருத கம்பளம்’ என்பர். இந்த வழிபாட்டை தரிசித்தால் தேக ஆரோக்கியம் சிறக்கும் என்று நூல்கள் கூறுகின்றன. ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் போல கிருத கம்பளம் சாற்று தல் மாசி மாத பூஜையாய் திருவையாற்றில் நடைபெறும்.