Home Blog Page 5926

நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 கோடி மழைவெள்ள நிவாரண நிதியாக ஜெயலலிதாவிடம் வழங்கினார் ?

 
சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மழைவெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து இடங்களிலும் அதிகபட்ச உடனடியாக உதவி செய்ய ஜாதி, மத, வேறுபாடுகள் இன்றி பொது நல நோக்கத்தில் தமிழக பொது மக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் முன்வந்துள்ளன.
 
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயலலிதாவிடம் நிவாரண நிதியாக ரூ.10கோடி வழங்கியுள்ளதாக புகைப்படத்துடன் பொய்யான தகவல் ஒன்றை எவரோ கூறி வாட்ஸ்ஆப்பில் பரப்பியுள்ளனர். மேலும் ரஜினிகாந்த் ஜெயலலிதாவிடம் நிதி அளிப்பது போன்ற புகைப்படம் போட்டோ ஷாப் மூலம் பழையபடத்தை வெட்டி ஒட்டப்பட்ட புகைப்படம் ஆகும் .
 
வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த செய்தியில் கூறியுள்ளதாவது :-.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
# பத்து_கோடிரூபாய் நிவாரண நிதியை
முதல்வரிடம் வழங்கினார் !
அதுமட்டுமல்ல மருத்துவமனையில்
பிரசவம் ஆனா அனைவரது செலவையும்
தானே ஏற்றுக்கொள்வதாகஅறிவித்தார் !
எல்லோருக்கும் ஒரு படி மேலே ! என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 
நடிகர் ரஜினிகாந்த் தற்பொழுது எந்திரன்- 2 திரைப்பட விசயமாக அமெரிக்கா சென்று இருப்பது குறிப்பிடதக்கது.

ஜெயலலிதா படத்தை ஒட்டி விளம்பரம் தேவடுது மிகவும் மட்டமான அரசியல் : ராமதாஸ்

 
 
சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மழைவெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்களில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை ஒட்டி விளம்பரம் தேட முயல்வது மிகவும் மட்டமான அரசியல் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்
 
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-
 
சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான இராதாகிருஷ்ணன் நகரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக சென்ற அமைச்சர்களை விரட்டியடித்து பொதுமக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் பெயரளவுக்குக் கூட மேற்கொள்ளப்படாதது தான் இதற்குக் காரணம் ஆகும்.
 
வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அலட்சியம் காட்டும் அரசும், ஆளுங்கட்சியும் விளம்பரம் தேடுவதில் மட்டும் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுத் தரப்பில் உணவு, குடிநீர், பால், பாய், போர்வை போன்றவை வழங்கப்படவில்லை. தொண்டு நிறுவனங்கள்தான் இவற்றை வழங்கி வருகின்றன. ஆனால், ஆளுங்கட்சியினரோ இதிலும் விளம்பரம் தேடும் நோக்குடன் அனைத்து பொருட்கள் மீதும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் ஒட்டப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.
 
உதவிப் பொருட்களுடன் சென்னைக்கு வரும் அனைத்து வாகனங்களையும் மாநகர எல்லையில் தடுத்து நிறுத்தும் ஆளுங்கட்சியினர், உதவிப் பொருட்கள் மீது ஜெயலலிதாவின் உருவப்படங்களை ஒட்டி அனுப்புகின்றனர். ஜெயலலிதாவின் உருவப்படம் ஒட்டப்படாத உணவுப் பொட்டலங்களை பொதுமக்களுக்கு வினியோகிக்க ஆளுங்கட்சியினர் அனுமதிக்கவில்லை. இதனால் ஏராளமான உணவுப் பொட்டலங்கள் குப்பையில் கொட்டப்பட்டன. குறிப்பாக ஜெயலலிதாவின் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் மற்ற கட்சிகளின் சார்பில் உதவி வழங்க அனுமதிக்கப்படவில்லை.
 
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு துப்பில்லாத அரசும், ஆளுங்கட்சியினரும் மற்றவர்கள் வழங்கும் உதவிப் பொருட்கள் மீதும் ஜெயலலிதாவின் படத்தை ஒட்டி விளம்பரம் தேட முயல்வது மிகவும் மட்டமான அரசியல் ஆகும். மனிதநேயமுள்ள எந்த அரசும் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ளாது. இனியாவது இத்தகைய போக்கை கைவிட்டு, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு சார்பில் உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்குவதுடன், மற்றவர்களும் உதவி செய்ய அனுமதிக்க வேண்டும்.
 
வெள்ளம் தேங்கிய பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் உள்ளூர் பேரூந்துகள் மட்டும் இலவசமாக இயக்கப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக தொலைதூர பேரூந்துகளும் இலவசமாக இயக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் மேலாக நிவாரணப் பணிகளுக்கும், மக்களுக்கும் இடையூறாக இருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை குறைந்தபட்சம் அடுத்த இரு வாரங்களுக்கு மூட தமிழக அரசு ஆணையிட வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்

ஜெயலலிதாவின் படம் எவரேனும் ஓட்ட வலியுறுத்தினால் காவல்துறையில் புகார் கொடுங்க : அதிமுக

 
 
சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மழைவெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதாவின் படம் எவரேனும் ஓட்ட வலியுறுத்தினால் காவல்துறையில் புகார் கொடுக்க கூறி அதிமுகவின் முகனூல் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
 
மேலும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது :-
 
நிவாரணப் பொருட்களில் முதல்வர் ஜெயலலிதாவின் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படங்களை ஒட்டுமாறு யாருக்கும் அறிவுறுத்தவில்லை.தனியார்கள் வழங்கும் வெள்ள நிவாரணப் பொருட்களில் கூட தமிழ்நாடு முதலமைச்சரின் புகைப்படத்தை ஒட்ட வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுவதாக சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
 
 
மாண்புமிகு அம்மாவிடமிருந்தோ அல்லது தலைமைக் கழகத்திலிருந்தோ அப்படிப்பட்ட எந்த அறிவுறுத்தலும் கொடுக்கப்படவில்லை.அது முதலமைச்சரின் ஆணையோ அரசின் ஆணையோ அல்ல. உண்மை நிலவரம் இப்படியிருக்க, சில தனிநபர்களின் இச்செயலை அதிமுக அரசோடு தொடர்புபடுத்தி ஊதிப்பெருக்கும் முதிர்ச்சியற்ற விளம்பரவாத அரசியலில் எதிர்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதுபோன்ற அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பின் வரும் அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது :
 
தனியார் உதவிகளில் முதலமைச்சரின் புகைப்படத்தை ஒட்ட வேண்டும் என்று எவரேனும் வலியுறுத்தினால் அதை மறுக்கவும். தேவைப்பட்டால் அருகில் உள்ள காவல்துறையில் புகார் அளிக்கவும் அறிவுத்தப்பட்டுள்ளது. அல்லது பின் வரும் எண்களிலும், மின்னஞ்சலுக்கும் புகார்களை தெரிவிக்கலாம்.
 
Ph: 91-44-28130787, 28132266, 28133510 or info@aiadmk.com.
 
சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படம் மற்றும் தொலைபேசி எண்களை அதிமுகவின் அதிகாரப்பூர்வ முகப்பத்தகத் தளத்திலும் தெரிவிக்கலாம் என அதிமுகவின் முகனூல் பக்க பதிவில் கூறப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரணப் பணிகளில் அதிமுக அரசியல் ஆதாயம் தேடும் பிழைப்பு தேவைதானா?’ : விஜயகாந்த் !

 
 
சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மழைவெள்ள நிவாரணப் பணிகளில் அதிமுகவினர் அரசியல் ஆதாயம் தேடும் பிழைப்பு தேவைதானா?’ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளார்.
 
மேலும் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.
 
அரசியல் ஆதாயமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக அரசு உண்மையாக உதவவேண்டும்.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின்கோரதாண்டவத்தால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகிவெள்ளக்காடாக மிதக்கின்ற நிலையில், தற்போதைய முக்கிய தேவை மழைநீரை வடியச்செய்வதும், செய்வதறியாது திகைத்து நிற்கின்ற பொதுமக்களுக்கு குடிநீர், உணவு, உடை வழங்கவேண்டியது மிக அவசியமான ஒன்றாகும்.
 
தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், தன்னார்வ அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் நிவாரண பணிகளை தங்களால் முடிந்த அளவிற்கு செய்துவருகிறார்கள்.
 
ஆனால் அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் இன்றி, பல்வேறு கெடுபிடிகள் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்வதற்குகூட வழியில்லாமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
 
நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சியினரோ, தொண்டு நிறுவனமோ யாரும் தங்களுடைய அடையாளங்களை வெளிப்படுத்தி கொள்ளவில்லை. மனிதாபிமான அடிப்படையில் அனைத்தையும் செய்துவருகிறார்கள்.
 
ஆனால் வில்லிவாக்கம் சிட்கோ பகுதியில் நான் வெள்ளப்பகுதிகளை பார்வையிட்டு வரும்போது, அதிமுகவை சேர்ந்தவர்கள் கும்பலாக நின்றுகொண்டு சென்னை மாநகராட்சியின் ஜெ.சி.பி. இயந்திரம், டிப்பர் மற்றும் குப்பை அள்ளும் லாரிகளை வைத்துக்கொண்டு, ஜெயலலிதாவின் படத்துடன்கூடிய பேனர்,அதிமுக கட்சிக்கொடியுடன் அப்பகுதியில் நிவாரண பணிகளை மேற்கொள்வதுபோல் பாவலா காட்டிக்கொண்டு, ஊடகங்களை வரவழைத்து காட்சிப்பதிவை செய்துகொண்டிருந்தார்கள்.
 
அதிமுகவினரின் பாணியில் சொல்லவேண்டும் என்றால் வெள்ள நிவாரண பணியில் அரசியல் ஆதாயம் தேடி, சீன் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இப்படி ஒரு பிழைப்பு தேவைதானா?
 
தலைமை செயலகத்திலிருந்து தமிழக அரசின் பல்வேறு துறை செயலாளர்கள் இன்று தொலைக்காட்சியில் அதிமுக அரசை காப்பாற்றும் விதமாக பல்வேறு கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு அரசு துறையின் செயலாளர்கள், ஒரே சமயத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மாபெரும் அதிசயம் நிகழ்ந்துள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் கூறும்போது சென்னை மியாட் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்ற 17 பேர் பல்வேறு காரணங்களால் இறந்துபோனார்கள் என கூறியுள்ளார்.
 
மின்சாரம் துண்டிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் செலுத்தமுடியாமல் அனைவரும் இறந்துள்ளார்கள் என அவர்களின் உறவினர்கள்பகிரங்கமாக குற்றம்சாட்டும்போது, “முழு பூசணியை, இலைச்சோற்றில் மறைக்கப்பார்த்து” தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை காப்பாற்றுவதற்காக சுகாரத்துறை செயலாளர் இதுபோன்ற தவறான தகவல்களை மக்களுக்கு தெரிவிக்கிறார். பொறுப்புள்ள அதிகாரியான
அவரே இதுபோன்று கூறலாமா? அவர் மட்டுமல்ல பிற அரசுத்துறை செயலாளர்களும், தமிழக முதலமைச்சர் ஜெயலிதாவிற்கு ஜால்ரா அடிக்கும் விதமாகவே பேட்டியளித்தனர்.
 
இதையெல்லாம் தமிழக மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை. இதுநாள் வரையிலும் தமிழகமுதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களை தவிர வேறு யாரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கருத்து கூறியதில்லை. ஆனால் மக்களின் கோபத்திற்கு அதிமுக அரசு ஆளாகியுள்ள இந்த நேரத்தில், அமைச்சர்கள் அருகில் அமர்ந்துகொண்டு துறையின் செயலாளர்களை பேட்டியளிக்க சொல்லியிருக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் என்ன? எல்லாவற்றிற்கும் நான், நான் என உரிமை கொண்டாடி பதிலளிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும், பிற அமைச்சர்களும், அவர்களே பதில் கூறியிருக்கலாம் அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் இதைப்பார்த்த பிறகாவது புரிந்துகொள்ளுங்கள்.
 
பிரச்னை என்று வரும்போது அதிகாரிகள் மீது பழியை சுமத்தும், அதிமுகவின் போக்கை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். அதிமுகவினர் நிவாரணப்பணி செய்வதுபோன்று சீன்போடுவதை நிறுத்திவிட்டு, அரசியல் ஆதாயம் தேடாமல், மனிதாபிமானத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட வேண்டும்.
 
சென்னை மேயரையும், அமைச்சர்களையும், அதிகாரிகளையும் பார்த்து மக்கள் கேட்கும் ஒரே கேள்வி, உங்கள் ஆறுதல் எங்களுக்கு தேவை இல்லை, ஜெயலலிதா அவர்கள் ஹெலிகாப்டரில் இருந்து பார்ப்பதால் எங்கள் பிரச்னை தீர்ந்துவிடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உணவு கொடுங்கள், தேவையானஉதவிகளை செய்யுங்கள் என்றுதான் பாதிக்கப்பட்ட மக்கள் கேட்கிறார்கள். இதற்கு மாறாகநேரடியாக சென்று உதவுவதுபோல், அதிமுகவினர் பேனர்கள் மற்றும் நோட்டீஸ்கள் மூலம்
விளம்பரப்படுத்துவது, பாதிக்கப்பட்ட மக்களின் வயிற்று எரிச்சலை இன்னும் அதிகமாக்குமேதவிர, எந்த விதத்திலும் உதவாது. இதை கருத்தில் கொண்டு அதிமுக அரசு நடவடிக்கை
எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்வதாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளார்.

 

வெளுத்துப்போன “மூளைச் சலவை!” உதவிக்கரம் கொடுத்த மத மற்றும் தொண்டு அமைப்புகள்  

வெளுத்துப்போன “மூளைச் சலவை!” உதவிக்கரம் கொடுத்த மத மற்றும் தொண்டு அமைப்புகள்  

சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழை வெள்ளத்தால் கொடுரமாக பெரும்பாலானோர் பாதிப்படைந்துள்ளனர்.

மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த அனைத்து இடங்களிலும் அதிகபட்ச உடனடியாக உதவி செய்ய ஜாதி, மத, வேறுபாடுகள் இன்றி பொது நல நோக்கத்தில் தமிழக பொது மக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் முன்வந்துள்ளன.

இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகளின் தன்னலம் கருதாத மீட்புப் பணிகள் ஏராளமான முஸ்லிமல்லாத சகோதரர்களின் கண்களையும் மனங்களையும் திறக்க வைத்துள்ளன.

“இப்படிப்பட்ட முஸ்லிம்களையா அர்ஜுனும் விஜயகாந்தும் தங்கள் திரைப்படங்களில் தீவிரவாதிகளாய் காட்டினார்கள்?” என்றெல்லாம் அந்த சகோதரர்கள் மனம் நெகிழ்ந்து பதிவிடும்போது, திரைப்படங்களும் ஊடகங்களும் அப்பாவி மக்களை எப்படி மூளைச் சலவை செய்து வைத்துள்ளன என்பது தெரிகிறது. அவர்களின் “மூளைச் சலவையை” வெளுக்கச் செய்து விட்டது இந்தப் பெருமழை.

இதில் இன்னொரு முக்கிய செய்தியும் உண்டு. சில அறிவுஜீவிகளும் முற்போக்குவாதிகளும் யாரை “வஹ்ஹாபிகள்… வஹ்ஹாபிகள்” என்று நாளும் பொழுதும்முகநூலில் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார்களோ அவர்கள்தாம் மீட்புப் பணியில் முன்வரிசையில் நின்றார்கள்..! 

இன, மத, மொழி, நிற வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவை முஸ்லிம்கள் ஆற்றும் மனிதநேய மீட்புப் பணிகள்..! இன்று பார்த்தசாரதி கோயிலில் முஸ்லீம்கள் உணவு தயாரிக்க, அதை கிறிஸ்துவர்கள் அனைவருக்கும் விநியோகிக்கும் காட்சியை பார்த்தபோது “இதுதான் எம் மக்கள். இன்னும் எத்தனை இடர் வந்தாலும் சமாளிப்போம்” என்ற தெம்பு வந்தது.

மக்களின் வரிப்பணத்தில் தமிழக அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் அணைத்து நலதிட்டங்கள் மற்றும் அரசாங்க விளம்பரங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா இலவச சுய விளம்பரம் தேடிகொள்வதாக மக்களால் பரவலாக பேசப்படுகிறது. மிக கொடுரமாக மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளவர்களின் துயர் துடைக்க பொதுமக்கள் வழங்கிய நிவாரணப்பொருட்கள் மீதும் கூட முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படத்தை ஓட்டி இலவச சுய விளம்பரம் தேடிகொள்வதற்க்கு என்ன உரிமையுள்ளது என  பொதுமக்கள் கேள்வி எழுப்பி குமுறி வருகின்றனர். 

இந்த நிலையில் அரசியல் போன்று  எவ்விதமான  இலவச சுய விளம்பரமும் தேடி கொள்ள ஆசைப்படாமல்  இன, மத, மொழி, நிற வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு மனித நேயத்துடன் உதவிக்கரம் கொடுத்த  அமைப்புகள்  மற்றும்  தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு  வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்.! 

இனியாவது மக்களின் வரிப்பணத்தில் இலவச சுய விளம்பரம் தேடிகொ(ல்)ள்ளும் அரசியல்வாதிகள்  திருந்தினால் சரி.!  திருந்துவார்களா என்ன .? 

– மாலதி ராணி –

தமிழக அரசு வெள்ள நிவாரணப் பணிகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை : ராமதாஸ்

 
 
சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழை பெய்துள்ளது.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சொல்லிக் கொள்ளும்படியாக எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
 
லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து, உண்ண உணவின்றித் தவித்து வருகிறார்கள். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களில் பெரும்பான்மையானோர், இன்னும் மீட்கப்படவில்லை.
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரண உதவிகளை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் வழங்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார் .

இந்திய தெற்கு பெருங்கடலில் பயங்கர நிலநடுக்கம்

 
 
சென்னையில் மீ்ண்டும் கனமழை கனமழை பெய்து வருவதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
இந்த நிலையில் தெற்கு இந்திய பெருங்கடலில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது.

சென்னையில் மீ்ண்டும் கனமழை : மக்கள் அதிர்ச்சி

 
 
சென்னையில் மீ்ண்டும் கனமழை கனமழை பெய்து வருவதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
கடந்த 2 தினங்களாக மழை விட்டுள்ளதால் சென்னையில் தேங்கிய வெள்ளம் வடசென்னை, மத்திய சென்னை பகுதிகளில் உட்பகுதி சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கி நின்ற வெள்ளம் வடிந்து விட்டது.கூவம் கரையோரம் மற்றும் அடையார், பகுதிகளில் வீடுகள் மற்றும் தெருக்களில் புகுந்த வெள்ளம் வடிந்து வருகிறது. ஓரிரு நாட்களில் அந்த பகுதியில் வெள்ளம் வடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சென்னையில் பல பகுதிகளுக்கு வழக்கமான மாநகர பேருந்து சேவை இயக்கப்பட்டது.
 
சென்னை மாநகரில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வரும் நிலையில் மைலாப்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, தாம்பரம், ஈக்காட்டுதாங்கல், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சற்று வடிந்திருந்த நிலையில் மீ்ண்டும் மழை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு

 
சென்னை மாநகர புறநகர் பகுதிகளில் ஆவின் பாலுக்கு 4-ஆவது நாளாக கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.அம்பத்தூர், சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் பாலை பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைக்கும் பணிகள் நடைபெறும்.
 
அங்கு மழைநீர் புகுந்துள்ளதால், பாலை பாக்கெட்டுகளில் அடைத்து எடுத்துச் செல்லும் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அரை லிட்டர் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி தடைபட்டதால், சென்னை, புறநகர்ப் பகுதிகளில் ஆவின் பால் கிடைக்கவில்லை.இன்று அதிகாலையில் இருந்து பொது மக்கள் பல மணி நேரம் காத்திருந்தும், பெருத்த ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.
 
 
சூளைமேடு.வட பழனி, உள்ளிட்ட இடங்களுக்கு குறைந்த அளவிலேயே பால் பாக்கெட்டுகள் நேற்று கொண்டு வரப்பட்டன. சில முகவர்கள் அவற்றை மொத்தமாகப் பெற்றுக் கொண்டு, அரை லிட்டர் பாக்கெட்டை சுமார் ரூ.60 வரை விற்பனை செய்தனர்.
 
இந்த நிலையில் ஆரோக்கியா, ஹெரிடேஜ் போன்ற தனியார் பால் வழக்கம் போல் விநியோகம் செய்யப்பட்டது. இதனால், தனியார் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யும் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து, மக்கள் பெற்று சென்றனர். சில கடைகளில் தகராறும் ஏற்பட்டது . இதனால், லிட்டருக்கு ரூ.20 வரை கூடுதலாக விற்கப்பட்டது.
 
முகவர்கள் பால் பாக்கெட்டுகளைமொத்தமாக வாங்கிச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஒரு வீட்டுக்கு ஒரு லிட்டர் முதல் இரண்டு லிட்டர் வரையில் ரேஷன்முறையில் பால் விநியோகிக்க வேண்டும் என்றும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 

அரசு வேண்டுகோள் விடுக்கவில்லை : அமெரிக்கா தமிழக வெள்ள சேத பணிகளுக்கு உதவ தயார்

 
 
தமிழகத்தில் அண்மையில் பெய்த கனமழையால் சென்னை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் மற்றும் நிவாரணப் பணிகளில் ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினர்
தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் அமெரிக்கா தமிழக வெள்ள சேத பணிகளுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக அறிவித்து உள்ளது. 
 
இதுகுறித்து வாஷிங்டன் நகரில் அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:-
 
பல ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத மழை தமிழ்நாட்டில் பெய்து உள்ளது. இதன்காரணமாக மிக மோசமாக சென்னை நகரை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது.இந்த வெள்ளத்தில் ஏராளமானோர் பலியாகிவிட்டனர். அவர்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். எங்களுடைய சிந்தனையெல்லாம், இன்னும் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களைப் பற்றியே உள்ளது.
 
எனவே வெள்ளசேத பணிகளுக்கு தமிழக மக்களுக்கு உதவிசெய்ய அமெரிக்கா தயாராக இருக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் உதவிட இந்திய அரசுடன் தொடர்பு கொண்டு வெள்ள நிலைமை குறித்து அமெரிக்கா விவாதித்தது.எனினும், இதுவரை இந்திய அரசிடம் இருந்து எங்களிடம் உதவிகோரி எந்த வேண்டுகோளும் வரவில்லை. நிச்சயமாக, தனது உள்நாட்டு தேவைகளையும் அல்லது அவசர உதவிகளையும் தன்னால் சுயமாக நிவர்த்தி செய்துகொள்ளும் அளவிற்கு இந்திய அரசாங்கம் வளர்ச்சி கொண்டதாக உள்ளதையும் குறிப்பிடவேண்டும்.
 
பொதுவாக இதுபோன்ற இயற்கை பேரழிவுகளின்போது, இந்தியா போன்ற கூட்டாளி நாடுகளுக்கு எங்களால் எந்த விதத்தில் உதவி அளிக்க முடியுமோ அதை நாங்கள் செய்வது வழக்கம்.சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம், கடந்த 3-ந்தேதி எங்களுக்கு ஒரு குறிப்பை அனுப்பியது. அதன்படி தமிழ்நாட்டில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்க்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது என மார்க் டோனர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்