Home Blog Page 5927

தமிழக அரசே ! வெள்ள நிவாரணம் எங்கே?  நாங்க செத்துக்கிட்டு இருக்கோம் : கடலூர் மக்கள் போராட்டம்

 
 
கடலூர் மாவட்ட பொது மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் தங்களுக்கு நிவாரணம் தமிழக அரசு வழங்கவில்லையென கூறி போராட்டத்தில் குதித்துள்ளனர்.
 
சென்னை வெள்ளதால் மிதக்கிறது மிதக்கிறது என்கிறீர்களே எங்களின் நிலைமை அதை விட மோசமாக உள்ளது என்று கடலூர் மாவட்ட மக்கள் அலறிக் குமுறி கொண்டிருக்கின்றனர்.
 
கனமழையால் கடலூர் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பொருட்கள் அளிப்பவர்களால் பாதிக்கப்பட்ட மக்களை அடைய முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.
 
இந்நிலையில் பண்ருட்டி அருகே இருக்கும் பேர்பெரியான்குப்பம், முத்தாண்டிக்குப்பம் கிராமங்களைச் சேர்ந்த 1,500 பேர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கொட்டும் மழையில் நனைந்தபடி போராட்டம் நடத்தினர்.
 
போராட்டம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் அங்கு வந்து மக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
 
அதே போல் பரங்கிப்பேட்டை அருகே இருக்கும் பூண்டியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி கடலூர் சிதம்பரம் சாலையில்
போராட்டத்தில் ஈடுபட்டனர். கே.ஆடுர், ஆடுர்அகரம் கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர், அவர்களையும் காவல் துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்துவிட்டனர்.
 

 

இது யாருடைய குழந்தை ? : உங்களுக்கு தெரியுமா ?

 
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழை வெள்ளத்தால் கொடுரமாக பெரும்பாலானோர் பாதிப்படைந்துள்ளனர்.
 
பல மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து, உண்ண உணவின்றித் தவித்து வருகிறார்கள்.
 
இந்த நிலையில் வெள்ள பாதிப்பால் ஒரு சில பெற்றோர்கள் பச்சிளங்குழந்தைகளையும் தவறவிட்டுள்ளனர்.
 
அவ்வாறு இரு குழந்தைகள் தவறியுள்ளதாகவும் குழந்தைகள் எங்கு தற்போது உள்ளன என்ற விபரம் தெரிவிக்கப்படாமல் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு‬ தகவல் தெரிவிக்க கூறி புகைப்படங்கள் வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவருகிறது.
 
எவருக்காவது இரு குழந்தைகள் அல்லது அவர்களின் பெற்றோர்கள் பற்றிய தகவல் தாங்களுக்கு தெரிந்தால் பெற்றோர்களிடமோ அல்லது உங்களுக்கு அருகமையில் உள்ள காவல் நிலையத்திலோ மேற்ப்படி குழந்தைகள் குறித்தான  விபரத்தை தெரிவிக்கவும்.

 

ஜெயலலிதா புகைப்படத்தை ஓட்டி இலவச சுய விளம்பரம் தேடிகொள்வதற்க்கு என்ன உரிமையுள்ளது ? : பொதுமக்கள் குமுறல்

 
 
பொது மக்கள் வழங்கிய நிவாரணப்பொருட்கள் மீது ஜெயலலிதா புகைப்படத்தை ஓட்டி இலவச சுய விளம்பரம் தேடிகொள்வதற்க்கு என்ன உரிமையுள்ளது  ? என திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் கேள்வி எழுப்பி குமுறி வருகின்றனர்.

 
சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழை வெள்ளத்தால் கொடுரமாக பெரும்பாலானோர் பாதிப்படைந்துள்ளனர்.
 
மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த அனைத்து இடங்களிலும் அதிகபட்ச உடனடியாக உதவி செய்ய ஜாதி, மத, வேறுபாடுகள் இன்றி பொது நல நோக்கத்தில் தமிழக பொது மக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் முன்வந்துள்ளன.
 
வெளி மாவட்டங்களில் இருந்தும் உணவு மற்றும் தேவையான அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து கொண்டு சென்று பலர் அந்த அந்த மாவட்ட நிர்வாகத்திடம் இலவசமாக வழங்கி மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு அனுப்ப கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.
 
தமிழக அரசை நம்பி தங்களால் முடிந்த உதவிகளை தாங்களாக முன்வந்து வீடிழந்து, பசி, பட்டினியால், நிம்மதியிழந்து திக்கற்று தவிக்கும் தொப்புள்கொடி உறவுகளின் துயர் துடைக்க கொடுக்கும் பொது மக்கள் வழங்கிய நிவாரணப்பொருட்கள் மீது திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தினர் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஓட்டி அயோக்கியதனம் செய்து வருவதாக பொதுமக்களால் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
மக்களின் வரிப்பணத்தில் தமிழக அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் அணைத்து நலதிட்டங்கள் மற்றும் அரசாங்க விளம்பரங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா இலவச சுய விளம்பரம் தேடிகொள்வதாக மக்களால் பரவலாக பேசப்படுகிறது.
 
இந்த நிலையில் மிக கொடுரமாக மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளவர்களின் துயர் துடைக்க பொதுமக்கள் வழங்கிய நிவாரணப்பொருட்கள் மீதும் கூட முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படத்தை ஓட்டி இலவச சுய விளம்பரம் தேடிகொள்வதற்க்கு என்ன உரிமையுள்ளது என திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் கேள்வி எழுப்பி குமுறி வருகின்றனர்.
 
 

 

92,476 ஹெக்டேர் விவசாய நிலங்கள் தமிழகத்தில் பாதிப்பு : ஜெயலலிதா ஆளுநரிடம் விளக்கம்

 

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளசேதங்கள் குறித்து, தமிழக ஆளுநர் ரோசய்யாவிடம் முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் ரோசய்யாவின் முதன்மைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் 3 ஆயிரத்து 548 வருவாய் கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், 22 ஆயிர்தது 394 குடிசை வீடுகளும், 92 ஆயிரத்து 476 ஹெக்டேர் விவசாய நிலங்களும் முழுமையாக சேதம் அடைந்துள்ளன.

மேலும், நெடுஞ்சாலைத் துறை, சென்னை மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகளுக்குச் சொந்தமான 14 ஆயிரத்து 410 கிலோமீட்டர் நீளச் சாலைகள் கடுமையாகச் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் மின்சார இணைப்புகளும், மின்பகிர்மான கருவிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று ஆளுநரிடம் முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் தெரிவித்துள்ளதாக ரமேஷ் சந்த் மீனா, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .

ரூ.4 ஆயிரம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக முதலமைச்சர் அறிவிப்பு

 
கனமழை காரணமாக எங்கு பார்த்தாலும் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கிறது. கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக புதுவை மாநிலம் பாதிக்கபட்டு உள்ளது.
 
மழை வெள்ளநிவாரணத்தை பார்வையிட்ட பின் புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.4 ஆயிரம் நிவாரண நிதி வழங்க உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். முற்றிலும் சேதம் அடைந்த கல்வீடுகளுக்கு ரூ.35 ஆயிரம் வழங்கப்படும் என்று செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார்.
 
மேலும் குடிசை வீடுகளுக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிரிவித்துள்ளார். நிவாரண பணிக்கு கூடுதலாக ரூ.200 கோடி மத்திய அரசிடம் கேட்க உள்ளதாக புதுவை மாநில முதலமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

தமிழக மக்கள் தவிப்பால் வேதனை என் கண்கள் குளமாகி போகும் அளவுக்கு வாட்டுகிறது : கருணாநிதி

 
 
தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து,பச்சிளங்குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கும் தவிப்பை பார்க்கும் போது என் கண்கள் குளமாகி போகும் அளவுக்கு என்னை வேதனை வாட்டுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
 
கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.
 
சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழை பெய்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து, உண்ண உணவின்றித் தவித்து வருகிறார்கள். பச்சிளங்குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கும் தவிப்பை பார்க்கும் போது என் கண்கள் குளமாகி போகும் அளவுக்கு வேதனை என்னை வாட்டுகிறது.
 
இந்தநிலையில், பிரதமர் மோடி சென்னைக்கு வந்து வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளை நேரடியாக கண்டதோடு, ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்த நிவாரண உதவி தொகை ரூ.940 கோடியுடன் மேலும் ரூ.1,000 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதுடன், மழை, வெள்ளத்தால் பாதிப்புக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு முழு நிவாரணம் கிடைக்கக்கூடிய அளவுக்கு பாதிப்புகளை ஆய்வு செய்து மேலும் தேவையான நிதியை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
 
நான் ஏற்கனவே தெரிவித்திருந்தவாறு அனைத்துக்கட்சி குழு ஒன்றை அமைத்து கண்காணித்தால் தான் மத்திய அரசு வழங்கும் நிவாரண நிதி முழுமையும் முறையாக பாதிப்புக்கும், இழப்புக்கும் ஆளாகியுள்ள மக்களுக்குச் சேர்வதை உறுதி செய்ய முடியும். எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக அனைத்துக்கட்சி குழுவை அமைத்து நிவாரண உதவிகளை கண்காணிக்க வேண்டும் என்று கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .

சென்னை மியாட் மருத்துவமனையில் மின்தடையால் 18 நோயாளிகள் பலி

 
சென்னை மாநகரில் உள்ள மணப்பாக்கத்தில் இயங்கி வரும் மியாட்’ மருத்துவமனையில் மின்தடையால் 18 நோயாளிகள் பலியாகி உள்ளனர். அங்கு தினந்தோறும் உள்நோயாளிகளாகவும், புற நோயாளிகளாகவும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதில் 40-க்கும் மேற்பட்டவர்கள் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டுசிகிச்சை பெற்று வந்தனர்.
 
சென்னை மாநகரில் தொடர் மழை காரணமாக பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால்,ஜெனரேட்டர் உதவியின் மூலம் மருத்துவமனை இயக்கப்பட்டு வந்ததால், செயற்கை சுவாசம் பெறும் நோயாளிகள் எவ்வித சிரமமின்றி சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் கனமழை பெய்ததால் நேற்றுமுன்தினம் மருத்துவமனைக்குள் மழைநீர் ஜெனரேட்டர் அறையிலும் மழைநீர் சூழ்ந்ததால்ஜெனரேட்டர் பழுதாகி நின்றது.
 
இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் கொடுக்க பயன்பட்டு வரும் அனைத்து மின்சாதன உபகரணங்களும் செயல்படதால் மூச்சுத்திணறல் ஏற்ப்பட்டு நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் அடுத்தடுத்து நோயாளிகள் ஒவ்வொருவராக உயிரிழந்தனர்.
இன்று காலை வரை சுவாசிக்க முடியாமல் 18 நோயாளிகள் இறந்தனர்.
 
மியாட் மருத்துவமனையில் பலியான 15 பேரின் உடல்கள் இன்று காலை 11 மணி முதல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. 15 பேரின் உடல்களும் ராயப்பேட்டைஅரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டன.இறந்தவர்களின் உறவினர்கள் ஏராளமானோர் பிரேத பரிசோதனை கூடத்தின் வெளியே கூடி இருந்தனர்.
 
அவசர தேவையை கருத்தில்கொண்டு புதிதாக கட்டப்பட்டுள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு எடுத்து செல்லப்பட்டு உடனடியாக இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

தமிழக மக்கள் செலுத்திய வரிப்பணம் எங்கே போனது? : கமல்ஹாசன்

 
தமிழக மக்கள் செலுத்திய வரிப்பணம் எங்கே போனது? என்றும் வெள்ள சேத பாதிப்பால் மக்கள் படும் கஷ்டங்கள் தன்னை கவலையில் ஆழ்த்தி உள்ளதாகவும், சென்னைக்கே இந்த நிலைமையா? என்று வியப்படைவதாகவும் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
 
மேலும் நடிகர் கமல்ஹாசன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது :-
 
மழை வெள்ளத்தால் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை, இயற்கை பேரிடர் என்பது குறைத்து மதிப்பிடும் வார்த்தை. சென்னைக்கே இந்த நிலைமை ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளையும் கற்பனை செய்து பாருங்கள்?.
 
மக்கள் செலுத்திய வரிப்பணம் எங்கே போனது? நான் கருப்பு பணம் வைத்திருக்கவில்லை. என்னுடைய வரியை ஒழுங்காக செலுத்தி வருகிறேன். கடுமையாக நான் உழைத்து சம்பாதித்த அந்த பணத்தை வைத்து எனக்கும் என் மக்களுக்கும் நிர்வாகம் என்ன செய்து இருக்கிறது? எனக்கு கடவுள் கிடையாது. கடவுளாக பாவித்துக்கொள்பவர்களின் முடிவுகளையும் ஏற்க மாட்டேன்.
 
ஆளும் அரசாங்கமானது, அது எந்த கட்சியாக இருந்தாலும் கார்ப்பரேட் திட்டத்துக்கு ரூ.4,000 கோடி வரை செலவிட முடிகிறது. நாட்டில் நாம் 120 கோடி மக்கள் இருக்கிறோம். இந்த மக்களுக்கு ரூ.4,000 கோடியை ஏன் பிரித்துக் கொடுக்க கூடாது? அப்படி கொடுத்து இருந்தால் இந்தியர்கள் கோடீஸ்வரர்கள் ஆகி இருப்பார்கள்.
 
ஏழைகளும் நடுத்தர மக்களும் வெள்ள பாதிப்பினால் அச்சத்தில் இருக்கிறார்கள். இதற்காக வசதி படைத்தவர்கள் வெட்கப்பட வேண்டும். நான் பெரிய பணக்காரன் இல்லை. ஆனாலும் என் ஜன்னலை திறந்து வெளியே மக்கள் படும் கஷ்டங்களை பார்த்து வெட்கப்படுகிறேன். எனக்கு கடவுள் கிடையாது நிர்வாகம் சீர்குலைந்து இருக்கிறது. மழை நின்ற பிறகும் கூட பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு சென்னை திரும்புவதற்கு பல மாதங்கள் ஆகும்.
 
மக்கள் படும் துன்பங்கள் என்னை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது. நான் வசதியான வீட்டில் இருப்பதற்காக வெட்கப்படுகிறேன். அரசாங்கத்துடன் ஒப்பிடும்போது எனது வருமானம் மிகவும் சொற்பமானது. ஆனால் வெள்ள நிவாரணத்துக்கு அரசு நம்மிடம் பணம் கேட்கிறது. ஆனாலும் நான் பணம் கொடுப்பேன். ஏனென்றால் அரசு நிர்வாகத்தை நான் மதிக்கிறேன். வசதி படைத்தவனாக என்னை நினைத்துக்கொண்டு கொடுக்கப்போவது இல்லை. நான் எனது தமிழக மக்களை உண்மையாகவே நேசிக்கிறேன் என கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

 

தலைமறைவான சுயநல அரசியல் வாதிகள் :  குமுறும்  தமிழக பொதுமக்கள்

சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழையால் ஏற்பட்ட பெருத்த  வெள்ளத்தால்  269 பேர் உயிரிழந்துள்ள தாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். 

மேலும்  மழை வெள்ளத்தால் சென்னை மிகவும் மோசமான அளவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளது. தேசிய மற்றும் மாநில சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு சென்னை நகரம் ஒரு தீவாக மாறியுள்ளது என்றால் மிகையல்ல.

 நிலைமை மிக அபாயகரமான சூழ்நிலையில் உள்ளது. சாலை, ரெயில் மற்றும் விமான போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டு உள்ளதால், நிவாரண பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தொலைதொடர்பு வசதிகளைப் பொறுத்தவரை தரைவழி தொலைபேசி இணைப்புகள் 60 சதவீதம் வரையும், 40 சதவீதம் அளவுக்கு செல்போன் சேவைகளும் துண்டிக்கப்பட்டு உள்ளன என்றும் ராஜ்நாத் சிங் பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்.

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில்  பெருத்த சேதத்தால் லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து, உண்ண உணவின்றித் தவித்து வருகிறார்கள். பச்சிளங்குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நிலையே தற்போது நிலவுகிறது.

இந்த நிலை  ஏற்பட்டதிற்கு முக்கிய காரணமே பொதுநல நோக்கம்  இன்றி  லஞ்சம் பெற்றும்  ஊழல் செய்தும், பொதுமக்களின் வரிப் பணத்தை அரசாங்க பொதுநல திட்டங்களுக்கு முறையாக செலவிடாமல்  கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் பேராசையில் தொடர்ந்து சுற்றி திரிந் து வரும் சுயநல அரசியல்வாதி கரைவேட்டி  கொள்ளையர்களே என பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுகிறது.

 அரசியல்வாதிகள் பதவி அதிகாரத்தை  துஷ்பிரயோகம் செய்து பணத்தை கொள்ளை அடித்து சொத்து  சேர்க்க செய்த அட்டகாசத்தில் ஒன்றுதான் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு. தண்ணீர் செல்லும்  பாதைகளையெல்லாம் அடைத்தும், குளங்கள், கண்மாய்களையெல்லாம் அழித்தும் பெரும் பணம் கொண்ட கூட்டத்திடம் வசூல் வேட்டை நடத்தி அந்த இடத்தை  குடியிருப்பு பகுதிகளாக ஆக்க அரசாங்கத்தை ஆண்ட அதிகார வர்க்கத்தினர் அனுமதி அளித்தது முதல் தவறு. இதை விட பெரிய கொடுமை அரசாங்கமே கண்மாய்களையெல்லாம் குடியிருப்பு பகுதிகளாக ஆக்கி பொதுமக்களிடம்  விற்றது. 

தண்ணீர் செல்லும் பாதைகளையெல்லாம் ஆக்கிரமிக்காமல் இருந்திருந்தால் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கடும் மழையால் ஏற்பட்ட பெருத்த  வெள்ள விபத்தால் லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து வருவதையும்  269 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் உயிர் பலி யையு ம் தவிர்த்து  இருக்க முடியு ம்.

 மேலும்  தண்ணீர் செல் லும், தேங்கும் இடங்களையெல்லாம் ஆக்கிரமித்துவிட்டு  இன்று குய்யோ முறையோ என்று இயற்கையின்மீது   குறைசொல்வது என்ன நியாயம்? மேலும் மிகவும் திறமை வாய்ந்த பெரும்பாலான எழுத்தாளர்கள் மற்றும் பல ஊடக நிர்வாக ங்களும் பொதுநல நோக்கத்தைக் கருத்தில் கொள்ளாமல் கொள்ளையடிக்க சுற்றி திரியும் அரசியல்வாதி களுக்கு  ஆ தரவாக  அவர்களிடம் வாங்க வேண்டியதை வாங்கி கொண்டு  கரைவேட்டி கொள்ளையர்களின் புகழை ஊடகங்களின் வாயிலாக பரப்பி வருவதாகவும் பலரால் கூறப்படுகிறது.

 மேலும் தற்போது மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த அனைத்து இடங்களிலும் அதிகபட்ச உடனடியாக உதவி செய்தது யார் என்றால் ஜாதி, மத, வேறுபாடுகள் இன்றி பொது நல நோக்கத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள் வெளி மாவட்டங்களில் இருந்தும் உணவு மற்றும் தேவையான அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து கொண்டு சென்று இலவசமாக வழங்கி சேவை வருகின்றனர்.

 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தமிழக அரசாங்கமும் அரசியல் கட்சியினரும் எந்த உதவியும் செய்யவில்லை என்பதுதான் பொதுமக்களின் குற்றச் சாட்டு. தற்போதுள்ள ஆளும் கட்சியை சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பெயர் அளவில் பொதுமக்களுக்கு உதவி செய்வதாக கூறி ஊடகங்கள் வாயிலாக தலையை காட்டிவிட்டு அவர்களும் தலைமறைவு ஆகிவிட்டனர். மேலும் முதன்முதலில் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகு மூலம் காக்க முயற்சி செய்ததும் தனியார் அமைப்புதான்.

வானிலை ஆராய்ச்சி மையம் அடிக்கடி கனமமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்தும் மத்திய அரசிடம் உடனடியாக ராணுவ உதவியை கேட்க அரசாங்கம் தயக்கம் காட்டியது ஏன்? மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசாங்கம் ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றக் கூட முடியாதா? பேரிடர் படையினர் முன்கூட்டியே வருகை தந்து இருந்தால் மழை நின்ற மூன்று நாட்களில் நடைபெற்ற சில அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டு இருக்கும். தற்போது கூட பேரிடர் ராணுவ படையினர் கொண்டு வந்த உணவு பொருட்களைத்தான் ஹெலிகாப்டர் மூலம் கொடுத்துள்ளது. அதிகமான மழை காலங்களில் மின்சார இணைப்பைக்கூட துண்டிக்க உத்தரவிடாமல் அரசு மெத்தனமாக செயல் பட்டதால் தமிழக மக்களை பலி கொடுத்ததுதான் மிச்சம் என்றும்  மக்களால் பரவலாக பேசப்படுகிறது.

வெளி மாவட்டங்களில் இருந்துகூட வந்து தேர்தல் நேரத்தில் முகாமிட்டு பொதுமக்களிடம் வாக்குகளை பெற தமிழகத்தில் சுற்றி திரிந்த அனைத்து அரசியல் கட்சியினரும் தற்போது எங்கே போனார்கள்? வாக்குகளை பெற சுற்றி திரியும் அரசியல் கட்சியினர் அனைவரும் தற்போது வெள்ளத்தால் பாதிப்படைந்த அனைத்து இடங்களிலும் முகாமிட்டு சேவை செய்வதுதானே?  ஏன் கரைவேட்டிகள் தலைமறைவு ஆக வேண்டும் என்கிற சர்ச்சை  குமுறல் தமிழகத்தில்  ஒலிக்க  கிளம்பியுள்ளது.

எது எப்படியோ தமிழகத்தில்  கனிம வளங்களை  தோண்டி நடைபெறும் முறைகேடுகளை கண்டும்  காணாமலும் அரசாங்கம்  இருந்தது போல் தண்ணீர் செல் லும், தேங்கும் இடங்களையெல்லாம் முறையாக  பராமரிக்கா ததால் இயற்கை தற்போது ஒரு  சரியான  பாடத்தை தமிழக  மக்களுக்கு புகட்டியுள்ளது.

பொதுவாக தமிழகத்தில்  மழை வெள்ளத்தால்  ஏற்ப்பட்ட கொடூர பாதிப்புகளுக்கு முக்கிய  காரணம் பெரும்பாலான தமிழக பொதுமக்கள் தான். 

இனியாவது நமது இளய தலைமுறை வாழ்க்கையை கருத்தில் கொண்டு முதலில் அரசியல்வாதி கொள்ளையர்கள் தேர்தல் நேரத்தில் விடுக்கும் இலவச அரசாங்க திட்டங்க ளையும் வாக்களிக்க கொடுக்கும் லஞ்சங்களுக்கு    ஆசைப்படாமல்  பொதுமக்கள் அனைவரும் நிராகரித்து ஒழித்துகட்டி நேர்மையானவர்களை ஆட்சி கட்டிலில் அமர வைத்தால் மட்டுமே நாடு உருப்படும்.

இயல்பு நிலைக்கு மெல்ல திரும்பும் சென்னை

 
சென்னை மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சென்னை நகரே வெள்ளத்தில் மூழ்கியது. 36 மணி நேரத்துக்கு பெய்த தொடர மழையால் சென்னை நகரை சுற்றி உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பியதால் அங்கிருந்து உபரி நீர் திறந்து விடபட்டது.
 
இதனால் சென்னை மற்றும் சென்னையை சுற்றி உள்ள குன்றத்தூர், மாங்காடு, பம்மல், அனகாபுத்தூர், மணப்பாக்கம், விமான நிலையம், சைதாப்பேட்டை, கிண்டி, கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர், அசோக் நகர், உள்பட பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.
 
மின்சார ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. சாலைகளில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியதால் பல பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் கடந்த 3 நாட்களாக இயக்கப்படமல் இருந்தது.தற்போது ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீரின் அளவு குறைக்கபட்டுள்ளது. மேலும் மழை குறைந்து உள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் படிப்படியாக தண்ணீர் வடிய ஆரம்பித்தது. இன்று முதல் மாநகர பஸ்கள் அதிகளவு ஓடத் தொடங்கின. 3 நாட்களாக ஓடாமல் இருந்த பல பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது.
 
கடந்த 2 தினங்களாக மழை விட்டுள்ளதால் சென்னையில் தேங்கிய வெள்ளம் வடசென்னை, மத்திய சென்னை பகுதிகளில் உட்பகுதி சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கி நின்ற வெள்ளம் வடிந்து விட்டது.கூவம் கரையோரம் மற்றும் அடையார், பகுதிகளில் வீடுகள் மற்றும் தெருக்களில் புகுந்த வெள்ளம் வடிந்து வருகிறது. ஓரிரு நாட்களில் அந்த பகுதியில் வெள்ளம் வடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சென்னையில் இன்று பல பகுதிகளுக்கு வழக்கமான மாநகர பேருந்து சேவை இயக்கப்பட்டது.
 
அடையாறு ஆற்றில் கரை புரண்டு ஓடிய வெள்ளம் ஓரளவு குறைந்தது. இதனால் சைதாப்பேட்டை பாலத்தை மூழ்கடித்து சென்ற வெள்ளம் குறைந்து பாலத்துக்கு கீழே தான் தண்ணீர் செல்கிறது. இதன் காரணமாக அந்த பாலத்தில் மீண்டும் போக்கு வரத்து தொடங்கி உள்ளது. இது மக்களை நிம்மதி ஏற்பட செய்துள்ளது. சென்னை மாநகரில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்புகிறது.