Home Blog Page 5934

ராகுல்காந்தியை கிண்டலடித்த பெண் மத்திய அமைச்சர்

எனது பேச்சு பாணியோடு ராகுல்காந்தியின் பேச்சு பாணி ஒத்துப்போகிறது என்று மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி கிண்டலடித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கலகலப்பாக அளித்த பேட்டியின் போது கூறியுள்ளார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி மேலும் கூறியுள்ளதாவது :-

டெல்லியில் ”சில முறைகளை நான் கையாள்கிறேன். அமேதியில் என்னுடைய பேச்சுகளை கேட்டால் உங்களால் என்னுடைய தனி பாணியை உணர முடியும்.

ஆனால் என்ன ஆச்சர்யம் என்றால் ராகுல் காந்தியின் பேசும் பாணியும் என்னுடைய பேசும் முறையோடு நிறைய ஒத்து போகின்றதை நான் கண்டுபிடித்துள்ளேன். இதனை நான் புகாராக சொல்லவில்லைஎன சிரித்துக் கொண்டே செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழக அரசை கட்டுப்பாட்டில் வைக்க தவறிய முதலமைச்சர் ஜெயலலிதா : காதர்மொய்தீன் குற்றச்சாட்டு!

தமிழக அரசை கட்டுப்பாட்டில் வைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தவறிவிட்டார் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று திருச்சி ரோஷன் மஹாலில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அந்த கட்சியின் தலைவராக காதர் மொய்தீன், பொதுச்செயலாளராக முஹம்மது அபூபக்கர், பொருளாளராக ஷாஜகான் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டது .பல்வேறு நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் காதர்மொய்தீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வரும் டிசம்பர் 24-ம் தேதி நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு 1 லட்சம் இளைஞர்கள் ரத்ததானம் செய்ய முடிவெடுத்துள்ளோம் என்றார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள 2016 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க மீண்டும் ஆட்சி அமைக்கும். தொடர்ந்து தி.மு.க கூட்டணியிலேயே நாங்கள் பயணிப்போம் என்றார் .

மத சார்பற்ற, ஜனநாயக, சமூக நீதியில் அக்கறை கொண்ட கட்சிகள் தி.மு.க கூட்டணிக்கு வரவேண்டும். மேலும், வரும் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் தொகுதிகளான 12 சட்டமன்ற தொகுதிகளை இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஒதுக்க வலியுறுத்தி கேட்போம். அதில் 8 தொகுதிகளை இந்திய முஸ்லிம் லீக் கட்சி கேட்க, இந்த கூட்டத்தில் கலந்தாலோசித்து உள்ளதாகவும் கூறினார் .

தமிழகத்தில் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் கொடுமையான நிலையில் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் சென்றடையவில்லை. எனவே, மத்திய அரசு இன்னும் அதிக தொகையை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் தமிழகத்தின் பாதிப்பை உணர்ந்து ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். அதனை பெற்று தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு விநியோகிக்க வேண்டும்.

மேலும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது கட்சியினை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார். ஆனால், அவர் ஆட்சி செய்யும் அரசின் கட்டுப்பாடு அவரிடம் இல்லை. அவரது பிடியில் இருந்து அரசு தளர்ந்து விட்டது என்பதைவிட, தொலைந்துவிட்டது என்றுதான் சொல்லனும். தமிழக அரசு அதிகாரிகள் யாரும் அரசு கட்டுப்பாட்டில் இல்லை என்று காதர்மொய்தீன் செய்தியாளர்களிடம் கூறினார் .

 

திருவண்ணாமலை கோயிலில் கோபரணி தீபம் ஏற்றம் : பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

 

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பஞ்சபூதத் தலங்களில் அக்னித்தலமான அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கோபரணி தீபம் இன்று அதிகாலை 4 மணிக்கு பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலையில் கடந்த 16ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் ஒருபகுதியாக கடந்த நவம்பர் 21ம் தேதி வெள்ளித் தேரோட்டமும், 22-ம் தேதி கொட்டும் மழையில் பெரிய தேரோட்டத்துடன் பஞ்ச ரதங்களின் தேரோட்டமும் நடைபெற்றது.

மேலும் இன்று அதிகாலை 4 மணிக்கு தீபவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் கோயில் மூலவர் சன்னிதியில் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் ஏற்றப்பட்டது.

இன்று மாலை 6 மணிக்கு கோயில் தங்கக் கொடிமரம் எதிரே சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளிக்க, 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலையில் தீப திருவிழாவையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்த பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.

 

ஆனந்தவிகடன் வெளியிட்ட கட்டுரை மந்திரி தந்திரி! – 30 : தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவதூறு வழக்கு

சென்னை:

தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்தும், அவரது கடந்த கால வாழ்க்கை குறித்தும், செயல்பாடு குறித்தும் கட்டுரை வெளியிட்டதாக, ஆனந்த விகடனின் ஆசிரியர், வெளியீட்டாளர் மீது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

 மந்திரி தந்திரி என்ற பகுதியில் முதல்வர் குறித்து அவதூறாக வெளியிடப்பட்ட செய்தி, கோபாலபுரத்தில் தயாரிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக செய்தி வெளியானது. மேலும் ஆனந்த விகடன் நிறுவனத்தை திமுக., குறிப்பிட்ட அளவு பங்குகள் கொடுத்து கைப்பற்றிவிட்டதாகவும், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக தளங்களில் செய்திகள் வைரலாகப் பரப்பப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

ஆனந்த விகடன் மீது தமிழக முதல்வர் வழக்கு: விகடன் தரப்பு விளக்கம்

ஆனந்தவிகடனின் ஆசிரியர், வெளியிட்டாளர் மீது ஜெயலலிதா அவதூறு வழக்குமீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார்.

ஜெயலலிதா அவதூறு வழக்கு பதிவு செய்து குறித்து ஆனந்தவிகடன் கூறியுள்ளதாவது :-.

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு,  தனது ஐந்து ஆண்டுகால பதவிக்காலத்தைத் தொட்டு, சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயார் ஆகி வருகிறது. இந்த நிலையில் கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் தமிழக அமைச்சர்கள் செயல்பாடுகள் குறித்த ஸ்கேன் ரிப்போட்டுகளை கடந்த 30 வாரங்களாக ஆனந்த விகடன் வெளியிட்டு வந்தது. ‘மந்திரி தந்திரி’ என்ற பெயரில் வெளியான இத்தொடர் கட்டுரைகள் வாசகர்களுக்கு புதிதானது அல்ல. கடந்த தி.மு.க. ஆட்சியின் போதும் கருணாநிதி தலைமையில் இருந்த அமைச்சர்கள் அனைவரைப் பற்றியும் இதேபோல் தொடர்ந்து எழுதி வந்துள்ளோம்.

 

img.vikatan.com news 2015 11 24 images jaya%20cortoon - 2026

அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான ரிப்போர்ட்டுகளின் ஸ்பெஷல் கட்டுரையாக, முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடுகளை விமர்சனம் செய்து, ‘என்ன செய்தார் ஜெயலலிதா?’ என்ற தலைப்பில் நவம்பர் 25 தேதியிட்ட இதழில் வெளியிட்டோம்.

அது முதல் விகடன் மீது வழக்கம்போல அவதூறுகள், களங்கங்கள் ஆளும்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது எம்.ஜி.ஆர்’ இதழில் எழுதப்பட்டு வருகிறது. இவை நான்கைந்து நாட்களாகத் தொடர்ந்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதா, சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆனந்தவிகடன் ஆசிரியர், வெளியிட்டாளர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார். அந்த வழக்கை விகடன் நிறுவனம் சட்டரீதியாக எதிர்கொள்ளும்.
 

img.vikatan.com news 2015 11 24 images jaya%20cortoon%202 - 2026

இந்த சூழ்நிலையில் ஆனந்த விகடனின் ஃபேஸ்புக் பக்கம் நேற்று முதல் முடக்கப்பட்டு இருக்கிறது. எந்த ஒரு அறிவிப்பும் ஃபேஸ்புக் நிர்வாகத்திடம் இருந்து விகடனுக்கு வரவில்லை. விகடன் தரப்பில் மேற்கொண்ட விசாரணைக்கும் இதுவரை பதில் இல்லை. ஃபேஸ்புக் பக்கம் முடக்கத்துக்கும் இந்த நிகழ்வுகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

எத்தகைய இடையூறுகள் வந்தாலும், வாசகர்களுக்கு உண்மையைக் எடுத்துச் சொல்லும் விகடனின் பணி அனைத்து தளங்களிலும் தடையின்றி தொடரும். ஆனந்த விகடனுக்கு பக்கபலமாக இலட்சக்கணக்கான வாசகர்கள் எப்போதும் இருந்து வந்துள்ளார்கள். அதற்காக இத்தருணத்தில் வாசகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்! என்று ஆனந்தவிகடன் நிர்வாகம் கூறியுள்ளது.

48 வருடங்களாக 48 லட்சம் கி.மீ. தொடர்ந்து கார் ஓட்டுபவர்

 

 
மதுரையிலிருந்து சென்னை வரை காரை ஓட்டி திரும்பிவந்தாலே நமக்கெல்லாம் நாக்கு தள்ளிவிடுகிறது. இங்கே ஒரு மனுஷன் விடாம 48 வருஷமா தொடர்ந்து கார் ஓட்டுகிறார். 
 
3.bp.blogspot.com Vs0pYubC26I VlSN71XqGsI AAAAAAAAGXs amBal23RW4g s640 volvo p1800 irv gordon - 2026
தனது ‘வால்வோ’வுடன் இர்வ் கோர்டன்
பயணம் செய்வது பலருக்கும் பிடித்தமான ஒரு விஷயம்தான். அதிலும் தனக்கு சொந்தமான காரில் தானே ஓட்டிச் செல்வது அற்புதமான அனுபவம். இப்படி தனது ‘வால்வோ’ காரில் உலகையே சுற்றி வந்திருக்கிறார் ஒருவர். அவர் பெயர் இர்வ் கோர்டன். நியூயார்க் நகரைச் சேர்ந்த ’75 வயது இளைஞர்’. 
 
வால்வோ கார்களின் அறிவிக்கப்படாத விளம்பர தூதுவர் இவர். தனது 1966 மாடல் காரில் தான் எல்லா பயணத்தையும் நடத்தி வருகிறார். இதுவரை இவர் பயணம் செய்து கடந்த தூரம் கொஞ்சம்தான். அதாவது 48 லட்சம் கி.மீ.கள். 
 
3.bp.blogspot.com pqwNecuKQII VlST0mx7IHI AAAAAAAAGYE FXd P4b9Sfg s320 Irv Gordon 3M mile Volvo - 2026
 
கடந்த 48 வருடங்களாக விடாமல் இந்த காரை ஓட்டும் கோர்டன், வாரம் ஒரு முறை 10 நிமிடங்கள் மட்டும் நேரம் ஒதுக்கி காரை கூர்ந்து பார்த்து அதிலுள்ள பிரச்சனைகளை தெரிந்து கொள்கிறார். “இன்னும் பல லட்சம் கிலோ மீட்டர் தூரம் ஓடுவதற்கும் என் வால்வோ ரெடி. ஆனால், எனக்கு தான் வயதாகிவிட்டது.” என்று கூலாக சொல்கிறார். 
 
தனது 45 லட்சம் கிலோ மீட்டர் சாதனைக்காக கோர்டன் தேர்ந்தெடுத்தது, அலாஸ்கா. அவர் உலகில் போகாத இடமாக அலாஸ்கா மட்டுமே இருந்தது. அதனால், அவர் தனது முதல் பயணத்தை அங்கிருந்தே தொடங்கினார். 
 
2.bp.blogspot.com Yknuu o xm8 VlSYH5Opa2I AAAAAAAAGYQ AIhcmisWOso s400 volvo 1 - 2026
 
இதுவரை 18 நாடுகளில் தனது காரை ஒட்டியுள்ள கோர்டன், தனக்கு மிகவும் பிடித்த நாடாக ஸ்வீடனை சொல்கிறார். 20 லட்சம் மைல்களை கடந்த போதே கொர்டனின் பெயர் கின்னஸ்சில் பதிவாகிவிட்டது. அப்போதே வால்வோ நிறுவனமும் தன் பங்குக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் காரை கோர்டனுக்கு பரிசளித்து பெருமைபடுத்தியது. 
 
இப்போது வரை கோர்டன் தனது காரில் கடந்துள்ள தூரம் உலகத்தை 120 முறை சுற்றி வருவதற்கு சமமான தூரம். இதைப் பற்றி கோர்டனிடம்  கேட்டால், “எவ்வளவு தூரம் கடந்திருக்கிறேன் என்பது முக்கியமல்ல. 
ஒவ்வொரு பயணமும் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன என்பதுதான் முக்கியம். என் வால்வோ எனக்கு வாழ்க்கையை வாழ கற்றுக்கொடுத்திருக்கிறது. இன்னும் போக வேண்டிய தூரமும் கற்க வேண்டிய பாடமும் நிறைய இருக்கிறது” என்கிறார். 
 
2.bp.blogspot.com fOq ZAAXU6g VlSYZ2pd1yI AAAAAAAAGYY b3V 2wYcDWM s640 s 1 - 2026
 
பயணம் எப்போதும் அப்படிதான், நமக்கு புது புதுப் பாடங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
 
4.bp.blogspot.com ob9uZEbs2mw VlSZ5aiE5TI AAAAAAAAGYk CbJ2IUyGmwo s400 29384 - 2026

கடலை சுத்தப்படுத்தும் ‘பைட்டோபிளாங்க்டான்’

 

 
 
நிலத்தில் எப்படி மரங்கள் கார்பன்டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகிறதோ அதே போல் கடலுக்குள் இருக்கும் கார்பன்டை ஆக்சைடை உறிஞ்கிக் கொண்டு ஆக்சிஜனை வெளியிட்டு கடலை மாசுபடாமல் இருக்க வைக்கிறது. ‘பைட்டோபிளாங்க்டான்’ என்ற நுண் பாசிகள் கொண்ட மிதக்கும் தாவரம்.
 
2.bp.blogspot.com dEUezp7urZY VlC24t9 vHI AAAAAAAAGWo xc8DPQhxY98 s400 6a00d8341c730253ef0133f36ae873970b 800wi - 2026
‘பைட்டோபிளாங்க்டான்’
கடலில் மிக அதிக அளவில் காணப்படும் மிதக்கும் தாவரம் இதுதான். இந்த பைட்டோ பிளாங்க்டானுக்கும் வானிலை மற்றும் சுற்றுச்சூழல் மாறுபாடுகளுக்கும் ஏகப்பட்ட நேரடித் தொடர்புகள் இருப்பதாக வானிலை ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. இந்த பைட்டோபிளாங்க்டானை கணக்கெடுப்பது என்பது சாதாரண காரியமில்லை. அப்படி கணக்கெடுப்பது கடற்கரை மணலை எண்ணுவது போன்றது. அதனாலேயே இந்த பைட்டோபிளாங்க்டானை கணக்கெடுக்க யாரும் முன் வரவில்லை. ஆனால் நாசாவோ, வானத்தில் கோடிக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களையே ஆராய்ந்து சொல்லி விடுகிறோம். கடலில் கண்ணுக்கு எதிரில் இருக்கும் இந்த தாவரத்தை கணக்கிடுவதா முடியாத காரியம் என்று பைட்டோபிளாங்க்டானை கணக்கில் எடுக்க களத்தில் இல்லையில்லை கடலில் குதித்து விட்டது. நாசாவிற்கு உதவியாக நேஷனல் சயின்ஸ் பவுன்டேஷனும் கணக்கெடுப்பதற்காக கடலுக்குள் குதித்துள்ளது.
 
இதுவரை வானில் ஏவப்பட்ட செயற்கை கோள்கள் எதிலும் பைட்டோபிளாங்க்டானை அளவிடும் தொழில்நுட்பம் இல்லை நொடிக்கு நொடி பிரம்மாண்டமாக பெருகி வளரும் பைட்டோபிளாங்க்டானை கனக்கெடுப்பது கஷ்டம்தான். ஆனால் பெருகிய அதே வேகத்தில் பிற உயிரினங்களால் இந்த நுண் பாசி உணவாக உண்ணப்பட்டு அழிக்கப்பட்டு விடுகின்றன.
 
3.bp.blogspot.com rtvTnowFpXU VlC3FpAMk2I AAAAAAAAGWw 54uGGvGJRQk s400 0t1jyLg - 2026
பிரமாண்ட வளர்ச்சி
அப்படியிருந்தும் குத்து மதிப்பாக கடலுக்குள் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரத்து 500 கோடி டன் கணக்கில் இந்த பைட்டோபிளாங்க்டான் இருக்கும் என்று கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். கடலில் அபரிமிதமாக அதிகரிக்கும் கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சும் தன்மையை இந்த பைட்டோபிளாங்க்டான் பெற்றிருப்பதால் சுற்றுச்சூழல் காரணியில் முக்கியமானதாக திகழ்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. ‘குளோபல் பயோஜியோ கெமிக்கல் சைக்கிள்’ என்று சொல்லப்படுகிற பிரபஞ்சத்தின் உயிரியல், புவியியல், வேதியியல் சுழற்சிகள் என்கிற கருத்து தற்போது ஐரோப்பிய விஞ்ஞானிகளிடம் அதிகமாக ஆராயப்பட்டு வருகிறது. எப்படியோ பைட்டோபிளாங்க்டானை அதிகமாக வளர்த்தால் நன்மை, நமது சுற்றுச்சூழலுக்குத்தான். இதை தாமதமாக புரிந்து கொண்டாலும் உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய நாசாவையும் நேஷனல் சயின்ஸ் பவுன்டேஷனையும் பாராட்டியே ஆக வேண்டும். 

‘நள்ளிரவு ஆனாலும் குளித்து தூங்கு..!’

 

 
நமது நாட்டில் குளிப்பது என்பது பெரும்பாலும் காலை நேரத்தில் நிகழும் ஒரு நிகழ்வு. கடினமான உழைப்பு கொண்ட சிலர் மட்டும் கசகசப்பான வியர்வையில் இருந்து விடுபட இரவிலும் குளிப்பதுண்டு. ஆனால் சீனாவில் நிலைமையே வேறு.
 
VANORIG Stylish Design Lovely Shower Caps Bathing Accessories Bath Hat for Women Pink 67944739 b63fa64e 7b4c 464a 8c15 e82e112a008c - 2026
 
அங்கு ராத்திரி 10 மணிக்கு மேல் எதிர்படும் எல்லோரிடமும் கேட்கும் கேள்வி ஒன்றுதான். “குளிச்சாச்சா..?” என்பது தான் அது. அக்கறையான இந்த விசாரிப்பு புதிதாக அங்கு சென்றவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை தரும். இரவுக்கு குளியல் என்பது சீனாவில் பாரம்பரியமாக தலைமுறை தலைமுறையாக கலந்து விட்ட ஒரு கலாச்சாரம்.
 
ஒருவேளை யாராவது குளிக்கவில்லை என்று பதில் தந்தால் அவ்வளவுதான். அவர்களை ஒரு அற்ப பதர் போல் படுகேவலமாக பார்ப்பார்கள். இரவில் குளிக்கா விட்டால் சீனர்கள் பார்வையில் அவர்கள் ஒரு அசுத்த ஜீவி. சீனர்கள் இரவில் குளித்து விட்டு சுத்த பத்தமாக தூங்கப்போவார்கள். குளிக்காமல் ஒரு நாளும் அவர்கள் தூங்கியதில்லை. குளித்து முடித்து இரவு உடையான நைட்டியை அணிந்து விட்டால் எந்த வேலையாக இருந்தாலும் சரி பெண்கள் வீட்டை  விட்டு வெளியே வர மாட்டார்கள். நம்மூர் பெண்கள் போல் நைட்டியோடு ஊரை வலம் வரும் பழக்கமெல்லாம் அங்கில்லை. 
 
1.bp.blogspot.com 6Oy q5fjxGk VlHL32YidaI AAAAAAAAGXI jFMdZdk3bbw s400 womens men nightdress pajamas couple micro - 2026
 
ஆண்களும் கூட அப்படிதான், இரவு உடைக்கு மாறிய பின் வெளியே எங்கும் சுற்றப்போக மாட்டார்கள். தூய்மையோடு தூங்க வேண்டும் என்பது சீனர்களின் ரத்தத்தோடு கலந்து விட்டப்பழக்கம். 
 
சரி, இரவில் தான் குளிக்கிறார்கள் என்றால் காலையில் என்ன பண்ணுவார்கள்? சும்மா சும்மா குளித்துக்கொண்டே இருக்கமுடியுமா..? அதனால் காலையில் பல் தேய்த்து, முகம் கழுவிவிட்டு ஆபீசுக்கு அடித்துப்பிடித்து ஓடுவார்கள். காலையில் குளிப்பதெல்லாம் அவர்கள் சரித்திரத்தில் இல்லாத ஒன்று. 
 
2.bp.blogspot.com siJmmG4bTGg VlHMZ14bVNI AAAAAAAAGXQ aDVC82eg05g s640 91840493 476227 - 2026
 
காலையில் அரக்கப்பரக்க குளிக்க வேண்டும். நிம்மதியாக  தேய்த்துக் குளிக்க முடியாது. ராத்திரி என்றால் நம் இஷ்டத்துக்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குளிக்கலாம். அதோடு பகல் முழுவதும் பார்க்கும் வேலை, டென்ஷன், அழுக்கு, வியர்வை, களைப்பு எல்லாம் ஓடிப்போய்  விடும் என்று நீண்ட லெக்சர் கொடுக்கிறார்கள் சீனர்கள்.
 
இவர்களின் இரவுக் குளியலை பார்த்து மற்ற நாட்டினர் ஆச்சரியப்பட்டு கேட்பது, “நீங்கள் ஏன் இரவில் குளிக்கிறீர்கள்?” என்று அதற்கு அவர்கள் தரும் பதில், “நீங்கள் ஏன் காலையில் குளிக்கிறீர்கள்?” என்பதுதான்.
 
சீனர்களின் ஆத்திச்சூடியில் ‘கூழானாலும் குளித்துக்குடி’ என்பது ‘நள்ளிரவு ஆனாலும் குளித்து தூங்கு’ என்றிருக்கிறது போலும்.!

முகனூலில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளைத்துரை

தமிழகத்தில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என அனைவராலும் அழைக்கப்படும் வெள்ளைத்துரை முகனூலில் நேற்று 23-11-2015 அன்று இணைந்துள்ளார் .

என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்றால் உடனடியாக அனைவரின் நினைவுக்கும் வருபவர் வெள்ளைத்துரைதான் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது .

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வெள்ளைத்துரை தமிழக காவல்துறையில் மிகச் சிறப்பாக பணியாற்றியமைக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றவர். அவர் தற்போது இராமநாதபுரம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

காவல்துறையில் அவர் பணியாற்றும் பகுதிகளில் பொதுமக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு குற்றங்களைத் தடுக்க குற்றவாளிகள்மீது எடுக்கும் அதிரடியான நடவடிக்கைகளால் ஊடகங்கள் வாயிலாக திடீர் திடீர் என தோன்றக் கூடியவர்.

அரசாங்கத் துறைகளில் பணியாற்றும் பெரும்பாலான உயர் அதிகாரிகள் சமூக ஊடகங்களில் இணைந்து அதில் பதிவிடும் பதிவுகளைக் கண்டு நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டுக்குரியது.

இந்த நிலையில் துணை காவல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை முகனூலில் இணைந்தது வரவேற்புக்குரியது.

4 மணி நேர மழையில் நிலைகுலைந்த சென்னை; முற்றிலும் செயலிழந்த அரசு: அன்புமணி

images politics anbumani ramados - 2026சென்னை:

4 மணி நேர மழையில் சென்னை நிலைகுலைந்தது என்றும், பாதிப்புகளை சரிக்கட்ட செயலிழந்த நிலையில் அரசு இருந்ததாகவும் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:

பேரிடரும், பெரும் பாதிப்பும் ஏற்படும் போது, அவற்றிலிருந்து ஒரு மாநிலம் எவ்வளவு விரைவாக மீண்டு வருகிறது என்பதைப் பொறுத்து தான் அம்மாநில அரசின் செயல்படும் தன்மை மதிப்பிடப்படும். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பார்க்கும் போது இங்கு அரசு நிர்வாகம் என்ற ஒன்று செயல்படவில்லை என்பது தான் தெளிவாகிறது.

சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த வாரம் கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் பாதியளவு கூட இன்னும் சரி செய்யப்படவில்லை. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக சென்னையில் மீண்டும் கடுமையான மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக நேற்று மாலை தொடங்கி நள்ளிரவு வரை பெய்த மழை தலைநகர் சென்னையை தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டது. 4 மணி நேரத்தில் சுமார் 10 செ.மீ. அளவுக்கு மழை பெய்த நிலையில், அதை தாங்கிக் கொள்ள முடியாமல் சென்னை நிலைகுலைந்து போனது என்பதை விட நிர்வாகத்தின் அலட்சியத்தாலும், பாராமுகத்தாலும் சென்னை நிலைகுலைய வைக்கப்பட்டது என்பது தான் உண்மை.

மழை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். ஆனால், நேற்று பெய்த மழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போக்குவரத்துக் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை அண்ணா சாலையில் ஒரு கி.மீ தொலைவைக் கடப்பதற்கு 2 மணி நேரம் ஆகியிருக்கிறது. சென்னையின் அதிவிரைவுச் சாலை என்று போற்றப்படும் பழைய மாமல்லபுரம் சாலையில் டைடல் பூங்கா முதல் மத்திய கைலாசம் வரை செல்வதற்கு மூன்றரை மணி நேரம் தடுமாற வேண்டியிருந்தது. கோயம்பேட்டிலிருந்து வடபழனி வருவதற்கு 2 மணி நேரத்திற்கும் மேலாகியிருக்கிறது. சென்னையில் நேற்று மாலை அலுவலகம் முடிந்து புறப்பட்டவர்களால் நள்ளிரவுக்குப் பிறகு தான் வீடுகளைச் சென்றடைய முடிந்திருக்கிறது. சென்னையை முடக்கிப் போட்ட போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிலும், குறிப்பாக இரவு 8.00 மணிக்குப் பிறகு சென்னையின் எந்த பகுதியிலும் காவலர்களை காண முடியவில்லை.

சென்னையின் முக்கிய சாலைகளான டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ராஜிவ்காந்தி சாலை, அண்ணா சாலை ஆகியவற்றில் மழை நீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. கோயம்பேடு& வடபழனி இடையிலான 100 அடி சாலையில், விருகம்பாக்கம் கால்வாய் நிரம்பி வழிந்ததால், நள்ளிரவில் பல அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்தது. இதுபோன்ற நிகழ்வுகளில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும், போக்குவரத்தை முறைப்படுத்தவும் காவலர்கள் நிறுத்தப்படுவது அவசியம் ஆகும். ஆனால், எந்த சாலையிலும் ஒரு காவலரையும் காண முடியவில்லை. முதல்வர் ஜெயலலிதா வாரத்திற்கு ஒருமுறை தலைமைச் செயலகம் செல்வதற்காக 5 அடிக்கு ஒரு காவலரை உணவு கூட வழங்காமல் நிறுத்தி வைக்கும் காவல்துறை உயரதிகாரிகள், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தான தருணங்களில் கூட காவலர்களை நிறுத்தாததிலிருந்தே அவர்கள் யாருக்கு பணி செய்கிறார்கள் என்பது தெளிவாகிறது. திருவேற்காடு பகுதியில் கூவம் ஆற்றை தரைப்பாலம் வழியாக கடக்க முயன்ற இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தால் இந்த உயிரிழப்பை தடுத்திருக்கலாம்.

தொடர்மழையால் சென்னை புறநகர் பகுதிகளில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், கடந்த வாரம் செய்த மழைக்காக வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கிய பின் வீடு திரும்பியிருந்த மக்கள் ஒரு சில நாட்களிலேயே மீண்டும் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். சென்னை,காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல ஏரிகள் உடைந்ததால் ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் மீண்டும் மிக மோசமான நிலை உருவாகியிருக்கிறது.

வட தமிழ்நாட்டில் மட்டுமே பாதிப்புகளையும், உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி வந்த தொடர்மழை இம்முறை நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களையும் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது. அம்மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த பாதிப்புகள், சேதங்கள் அனைத்துமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியதால் ஏற்பட்டவை ஆகும்.

மழையால் ஏற்படும் பாதிப்புகள் மக்களுக்குத் தான்; நமக்கு இல்லை என்ற மமதையை கைவிட்டு மழை பாதிப்புகளை சரி செய்ய ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் முன்வர வேண்டும். மாநிலம் முழுவதும் நிவாரணப்பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.