Home Blog Page 5937

மதத்தை கைவிட்வரின் தலையை வெட்டிக் கொல்ல உத்தரவிட்ட நீதிமன்றம்

 
 
சவுதி அரேபிய நீதிமன்றம் ஒன்று ஒருவருக்கு இஸ்லாத்தை கைவிட்டார் எனக் கூறி அவரது தலையை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
 
ஆனால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கவிஞரும், கலைஞருமான அஷ்ரஃப் ஃபயாத் தான் ஒரு உண்மையான முஸ்லிம் என்று வலியுறுத்துகிறார்.
 
கடவுளை சபித்தார் மற்றும் நாத்திகக் கொள்கைகளை ஊக்குவித்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
 
சவுதி அரேபியாவில் பிறந்த பாலஸ்தீன அகதியாக அவருக்கு, முதலில் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறையும், 800 கசையடிகளும் விதித்து தீர்ப்பளித்தது.
 
பின்னர் அவர் மேல்முறையீடு செய்தபோது அது நிராகரிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி வேறு ஒரு நீதிபதி வழக்கை விசாரித்து மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அவரது சார்பாக நீதிமன்றத்தில் யாரும் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.
 
மரண தண்டனை மீது மேல்முறையீடு செய்ய அவருக்கு 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
 
அவர் பாலஸ்தீனியர் என்பதாலும், சவுதியிலுள்ள மதக்காவல்துறையினர் ஒரு ஆளை அடுத்து நொறுக்குவதை காட்டும் வீடியோவை அவர் இணையதளத்தில் வெளியிட்டதாலுமே அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ரூ.7,000 கோடியை மோசடி செய்த விஜய் மல்லையா : பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு

 
 
கிங்ஃபிஷர் விமான நிறுவனத்துக்காகப் பெறப்பட்ட ரூ.7,000 கோடி கடனை திருப்பிச் செலுத்தாததால் தொழிலதிபர் விஜய் மல்லையாவை பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர் என்ற பட்டியலின்கீழ் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து அந்த வங்கியின் மூத்த அதிகாரிகள் சிலர் கூறியதாவது, விஜய் மல்லையா, அவரது கிங்ஃபிஷர் விமான நிறுவனம், அதன் தாய் நிறுவனமான யுனைடெட் ப்ரீவரீஸ் (யு.பி.) குழுமம் ஆகியவற்றை பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்கள் என்ற பட்டியலின் கீழ் இணைத்துள்ளோம் என்று தெரிவித்தனர்.
 
முன்னதாக, விஜய் மல்லையாவையும், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் மூன்று இயக்குநர்களையும் பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்கள்’ என்ற பட்டியலின்கீழ் முதன்முதலாக யுனைடெட் வங்கி கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது.
 
யு.பி. குழுமத்தின்கீழ் கிங்ஃபிஷர் விமான நிறுவனம் , கிங்ஃபிஷர் மதுபான ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை விஜய் மல்லையா நடத்தி வருகிறார்.
 
இதில் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பல்வேறு காலகட்டங்களில் பின்னடைவைச் சந்தித்து வந்தது. இந்நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கி உள்பட 17 கடன்தாரர்களிடம் ரூ.6,900 கோடியை கிங்ஃபிஷர் நிறுவனம் கடனாகப் பெற்றது.
 
எஸ்பிஐ – 1,600 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி – 800 கோடி, ஐடிபிஐ வங்கி -800 கோடி, பாங்க் ஆஃப் இந்தியா – 650 கோடி, பாங்க் ஆஃப் பரோடா – 550 கோடி, செண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா – 410 கோடி, யுகோ வங்கி – 320 கோடி, கார்ப்பரேஷன் வங்கி – 310 கோடி என்ற அளவில் கடன் வழங்கியிருந்தன.
மேலும், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் – 150 கோடி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 140 கோடி, ஃபெடரல் வங்கி – 90 கோடி, பஞ்சாப் சிந்து வங்கி – 60 கோடி, ஆக்சிஸ் வங்கி – 50 கோடி என்ற அளவிலும் கடன் கொடுத்திருந்தன.
 
இருப்பினும், தொடர்ச்சியான தொழில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி கிங்ஃபிஷர் நிறுவனம் தனது விமானச் சேவைகளை கடந்த 2013-ஆம் ஆண்டில் இருந்து நிறுத்தி வைத்துள்ளது. மேலும், வங்கிகளிடம் பெற்ற கடனையும் அந்த நிறுவனம் திருப்பிச் செலுத்தவில்லை.
 
இதனிடையே, யு.பி. குழுமத்தின் பங்குகளைக் கையகப்படுத்தி ஏலம் விட்டதன் மூலம் ரூ.1,100 கோடி கடன் தொகையை வங்கிகள் கடந்த 2013-ஆம் ஆண்டில் மீட்டெடுத்தன.
மேலும், மும்பை விமான நிலையத்துக்கு அருகில் உள்ள, ரூ.100 கோடி மதிப்புமிக்க கிங்ஃபிஷர் இல்லத்தை பாரத ஸ்டேட் வங்கி கையகப்படுத்தி வைத்துள்ளது.
 
இதைப்போலவே, அந்த நிறுவனத்துக்கு சொந்தமான கார்கள், இரும்புத் தூண்கள், எடைதூக்கிகள் உள்ளிட்ட அசையும், அசையா சொத்துகளை அடுத்த மாதம் இணையதளம் மூலமாக ஏலம் விட வங்கிகள் திட்டமிட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கியின் மூத்த அதிகாரிகள் சிலர் கூறி என்று தெரிவித்தனர்.
 

மாநில ஆளுநர் மீது இந்திய தேசிய கீதம் அவமதிப்பு புகார்

 
ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்யாண் சிங் மீது இந்திய தேசிய கீதத்தை அவமதித்தாக புகார் கூறப்பட்டுள்ளது.
 
ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கல்யாண் சிங், ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜூலையில் பங்கேற்று பேசினார். அப்போது,
 
ஜனகன மன என துவங்கும், நம் தேசிய கீதத்தில் உள்ள, ‘அதிநாயக’ என்ற சொல் சரியானதாக படவில்லை.
 
நாடு அடிமைப்பட்டிருந்த காலத்தில் இயற்றப்பட்டதால், இந்த வார்த்தை, ஆங்கிலேயர்களின் தலைமையை புகழ்வது போல உள்ளது.எனவே, இந்த, ‘அதிநாயக’ என்ற வார்த்தையை நீக்க வேண்டும். அதற்கு பதிலாக, ‘மங்கள்’ என்ற வார்த்தையை, பயன்படுத்த வேண்டும் என்றார். ஆளுநர் கல்யாண் சிங்கின் இந்த பேச்சுக்கு, அப்போதே, கடும் விமர்சனம் எழுந்தது.
 
இதுகுறித்து, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை, மேற்கு வங்கத்தை சேர்ந்த, முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர். சுகந்து சேகர்ராய் சந்தித்து, ‘கல்யாண் சிங்கை ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என புகார் அளித்தார்.
 
இந்நிலையில், இந்தத் தீர்மானத்திற்கு, மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றது.
 

 

அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா மீண்டும் நியமனம்

 
அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் முதலமைச்சர் ஜெயலலிதா நியமிக்கப்பட்டுள்ளார்.
 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் புதிய நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக முதலமைச்சர் ஜெயலலிதா நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக, கழக சட்ட திட்ட விதிமுறைகளின்படி, கழகத்தின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால், தான் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாக அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும், கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகளாக இ. மதுசூதனன் (அவைத் தலைவர்), சி. பொன்னையன் (கழக அமைப்புச் செயலாளர்), ஓ. பன்னீர்செல்வம் (பொருளாளர் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்), நத்தம் இரா. விசுவநாதன் (கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்), ஆர். வைத்திலிங்கம் (கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்), எடப்பாடி கே. பழனிசாமி (கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்), பி. பழனியப்பன் (கழக தலைமை நிலையச் செயலாளர் மற்றும் கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்), அ. தமிழ்மகன் உசேன் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்), டாக்டர் திருமதி விசாலாட்சி நெடுஞ்செழியன் (கழக அமைப்புச் செயலாளர்), பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் (கழக அமைப்புச் செயலாளர்), டாக்டர் மு. தம்பிதுரை (கழக கொள்கை பரப்புச் செயலாளர்), செ. செம்மலை (கழக அமைப்புச் செயலாளர்).
 
துரை கோவிந்தராஜன் (கழக விவசாயப் பிரிவுத் தலைவர்), பா. வளர்மதி (கழக இலக்கிய அணிச் செயலாளர்), தாடி ம. ராசு (அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர்), ஆர். சின்னசாமி (அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர்), ஏ. ஜஸ்டின் செல்வராஜ் (கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர்), ஏ. அன்வர்ராஜா (கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர்), 20. ஆர்.பி. உதயகுமார் (கழக ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்), எஸ். கோகுல இந்திரா (கழக அமைப்புச் செயலாளர் மற்றும் கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர்).
 
ஏ.கே. செல்வராஜ் (கழக அமைப்புச் செயலாளர் மற்றும் கழக மனுக்கள் பரிசீலைனக் குழு உறுப்பினர்), டாக்டர் பி. வேணுகோபால் (கழக மருத்துவ அணிச் செயலாளர் மற்றும் கழக நாடாளுமன்ற குழுத் தலைவர்), வி.எஸ். சேதுராமன் (கழக வழக்கறிஞர் பிரிவுத் தலைவர்). ஏ. நவநீதகிருஷ்ணன் (கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் மற்றும் கழக மாநிலங்களவை குழுத் தலைவர் ).
 
எஸ். ராஜூ அவர்கள் (கழக அமைப்புச் செயலாளர்), கே.கே. கலைமணி (கழக மீனவர் பிரிவுச் செயலாளர்), உடுமலை கே. ராதாகிருஷ்ணன் (கழக தேர்தல் பிரிவுச் செயலாளர்), ஏ. பாப்பாசுந்தரம் (கழக அமைப்புச் செயலாளர்), எஸ். ஜெனிபர் சந்திரன் (கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர்).
 
ஆர். கமலகண்ணன் (கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்), நாஞ்சில் சம்பத் (கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்), எல். சசிகலா புஷ்பா (கழக மகளிர் அணிச் செயலாளர்), ப. குமார் (கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்), எஸ்.ஆர். விஜயகுமார் (கழக மாணவர் அணிச் செயலாளர்), அஸ்பயர் கே. சுவாமிநாதன் (கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர்), வி. அலெக்சாண்டர் (கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்), பி.கே. வைரமுத்து (கழக விவசாயப் பிரிவுச் செயலாளர்), டாக்டர் மு. கோபால் (கழக அமைப்புச் செயலாளர்), எஸ். வளர்மதி (கழக அமைப்புச் செயலாளர்), ஜெ. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (கழக அமைப்புச் செயலாளர்) ஆகியோரை நியமித்து அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்

 

சொந்த செலவில் சாலையை சீர்செய்த காவல் துறை அதிகாரிகள்

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகருக்குள் வரும் வாகனங்கள் பழுதில்லாமல் வர,சொந்த செலவில் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் சாலையை சீரமைத்தனர்.

கிருஷ்ணகிரி நகருக்குள் வரும் அனைத்து புறநகர் பஸ்களும் கிருஷ்ணகிரி – ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள நுழைவு வாயில் வழியாகத்தான் வர வேண்டும்.

அண்ணா நூற்றாண்டு நினைவு வாயில் வழியாக தான் பெங்களூர், சேலம், ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் பஸ்கள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நகருக்குள் செல்ல முடியும்.

போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை, கடந்த சில ஆண்டுகளாக பழுதாகி குண்டும், குழியுமாக காட்சியளித்தது. பழுதாகிய சீர்செய்ய வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடமும், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடமும் பலமுறை பொதுமக்கள் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .

தொடர் மழையால் இந்த சாலை மேலும் பழுதாகி, வாகனங்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நுழைவு வாயில் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அத்துடன் வாகனங்களில் அமர்ந்து பயணிப்பவர்கள் பெரும் அச்சத்துடன் தான் பயணம் செய்தனர். காரணம் இந்த நுழைவு வாயில் மீது வாகனம் மோதினால் அது கீழே விழுந்துவிடுமோ என்ற அச்சம் அனைவர் மனதில் இருந்துகொண்டே இருந்தது.

இந்த நுழைவு வாயில் வழியாக செல்லும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி, பலர் காயம் அடைந்த சம்பவங்களும் நடந்துள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை ஓட்டுநர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சாலை சீர் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டகாவல் கண்காணிப்பாளராக புதியதாக பொறுப்பேற்றுள்ள திருநாவுக்கரசு அறிவுறுத்தலின்பேரில், கிருஷ்ணகிரி போக்குவரத்து பிரிவு போலீஸ் காவல் ஆய்வாளர் செல்வமணி, ஏட்டுகள் நவீத்பாஷா, அருள்பிரகாஷ், வடிவேலு மற்றும் பூங்காவனம் ஆகியோர் தங்களது சொந்த செலவில், நுரம்பு மண்ணை வாங்கி, சாலையை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அங்கிருந்த மேடு, பள்ளங்களை காவல் துறை சீருடையுடன் அவர்களே சமன் செய்தனர். அரசில் காழ்ப்புணர்ச்சியால் சீர் செய்யப்படாத இந்த சாலையை, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சீர் செய்த போக்குவரத்து போலீசாரை பஸ் டிரைவர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசிடம் நிதி கேட்டு பிரதமரிடம் பேசாதது ஏன் ? : மு.க.ஸ்டாலின் கேள்வி

 
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதி மக்களை
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கினார்.
 
அகரம் ஜி.கே.எம். காலனி, பூம்புகார் நகர், மகாத்மாகாந்தி நகர், ராஜீவ்காந்தி நகர், அன்னை சத்யா நகரில் உள்ள மக்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் 5 கிலோ அரிசி, பிரட், பால், போர்வை மற்றும் பிஸ்கட்டுகள் ஆகிய வைகளை 3,500 பேருக்கு வழங்கினார்.
 
அப்போது மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
இன்றைக்கு மத்திய அமைச்சராக இருக்க கூடிய நிர்மலா சீராமன் பல பகுதிகளில் ஆய்வு செய்திருக்கிறார். மக்கள் அவரிடமும் முறையிட்டுள்ளார்கள். மாநில அரசு, மத்திய அரசிடம் இது வரைக்கும் இந்த மழையைப் பற்றியோ, இந்த மழைக்குரிய நிவாரணங்கள் கேட்டோ எந்தவித ஆய்வு அறிக்கையும் கொடுக்கவில்லை என்று பகிரங்மாக சொல்லி இருக்கிறார்.
 
இரண்டு வாரமாக மழை பெய்து கொண்டிருக்கிறது. ஆனால் 19ந்தேதி தான் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்யிடம் முதலமைச்சர் ஜெயலலிதா பேசி நிவாரணப் பகுதிகளை பார்வையிட குழு அனுப்புங்கள் என்று கேட்டிருக்கிறார். அப்போது கூட பிரதமரிடம் பேசி நிதி கேட்கவில்லை.
 
தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது போல் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண தொகையாக ரூ. 5 ஆயிரமும், இறந்தவர்களுக்கு குடும்பங்களுக்கு குறைந்த பட்சம் ரூ.10 லட்சம் இழப்பீடு தொகையும் வழங்கிட வேண்டும்.
 
நிவாரண தொகை வழங்குவதற்கென்று, ஒரு தனி குழு அமைக்க வேண்டும். அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் அதே இடம் பெற வேண்டும். அந்த குழுவின் மூலமாக தான் நிவாரணப் பணிகள் நடைபெற வேண்டும் என்று தலைவர் கலைஞர் கூறியிருக்கிறார். அப்படி நடந்தால் அது முறையாக மக்களுக்குப் போய் சேரும்.
 
இல்லையென்றால் தேர்தலுக்காக அவர்கள் இதை பயன்படுத்தக் கூடிய ஒரு சூழ்நிலை நிச்சயமாக உருவாகும் என்று மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த ஆண்டின் சிறந்த மனிதராக மோடி அறிவிக்கப்படுவாரா ?

 

இந்தாண்டின் சிறந்த மனிதரை தேர்வு செய்ய அமெரிக்காவின் பிரபல, ‘டைம்’ பத்திரிகை, வாசகர்களுக்கான போட்டியை நடத்துகிறது.

அந்த போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, இந்தியாவைச் சேர்ந்த, சுந்தர் பிச்சை, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, உள்ளிட 58 பேர் இடம் பெற்றுள்ளனர்.

வாசகர்களின் அதிகப்படியான வாக்குகளை பெறுபவர், இந்தாண்டின் சிறந்த மனிதராக அடுத்த மாதம் அறிவிக்கப்படுவார்.

இதுவரை, மோடி, சுந்தர் பிச்சை, ரஷ்ய அதிபர் புடினுக்கு ஆதரவாக, தலா, 1.3 சதவீத வாசகர்கள் வாக்கு அளித்துள்ளனர். 0.2 சதவீதம் பேர் முகேஷ் அம்பானிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை நவீனமயமாக்கவும், அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்கவும், மோடி சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார்,

மேலும் மோடி பல்வேறு சர்ச்சைகளுக்கும் ஆளாகியுள்ளார் என டைம் பத்திரிகை கூறியுள்ளது :-

தொலைத்தொடர்பு துறைமுதல், எண்ணெய் சுத்திகரிப்பு வரை அனைத்து துறைகளிலும் கால் பதித்து, இந்தியாவின் முதல் நிலை பணக்காரராக, முகேஷ் அம்பானி திகழ்கிறார்,

11 ஆண்டுகள் ‘கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி, அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான, லாரி பேஜ்ஜின் வலது கரமாக, சுந்தர் பிச்சை உயர்ந்துள்ளார் என்றும் டைம் பாராட்டியுள்ளது.

கடந்த ஆண்டும் டைம் பத்திரிகையின், சிறந்த மனிதருக்கான போட்டியில் இடம் மோடி பெற்றிருந்தார்;

50 லட்சம் வாசகர்களில், எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர், மோடிக்கு வாக்குஅளித்து இருந்தனர். அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹோலண்டே, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்டோர் இந்தாண்டு போட்டியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகையின் பெற்றோரிடம் ரூ. 2 கோடி மோசடி செய்த மதகுரு கைது

பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டியின் பெற்றோரிடம் ரூ. 2 கோடி மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் பெற்றோருக்கு தேவேந்திர குஜ்ஜார் என்பவர் தான் ஒரு மதகுரு என்று அறிமுகம் செய்து கொண்ட 2 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமானார்.

அவருக்கு யோகா குரு பாபா ராம்தேவை நன்கு தெரியும் என்று கூறியுள்ளார். அதனால் நடிகையின் பெற்றோருக்கு அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் ஷில்பா ஷெட்டியின் பெற்றோரிடம் ஆயுர்வேத மருந்து நிறுவனம் தொடங்க உதவி செய்வதாகக் கூறி ரூ. 2 கோடி வாங்கி மோசடி செய்தாக கூறப்படுகின்றது.

இதைத் தொடர்ந்து, ஷில்பா ஷெட்டியின் பெற்றோர்காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தேவேந்திர குஜ்ஜாரை தேடி வந்தனர்.

தேவேந்திர குஜ்ஜார் தன் சொந்த ஊரான உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ராணிகலன் பகுதியில் பதுங்கி இருப்பதாக மும்பை காவல்துறையினருக்குத் ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவல்துறையினர், உள்ளூர் காவல்துறையினரின் உதவியுடன் தேவேந்திர குஜ்ஜாரை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

ஜெயலலிதா பேச்சை மிமிக்ரி செய்து  காணொளியாக வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவவிட்ட வாலிபர்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பேசுவது போல் ஒருவர் பேசி அதை காணொளியாக  பதிவிட்டு  வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவ விட்டுள்ளார்.

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் பெரும்பாலானோர்  அவர்களது  திறமையை  வெளிப்படுத்தும் வகையில் தொடர்ந்துபல பதிவுகளை  பதிவிடுகின்றனர்.

ஒரு சிலர் அவர்களின்  பதிவுகளில்  முக்கியமாக அரசியல் கட்சி தலைவர்களை பலவிதமாக சித்தரித்து  நக்கல், நையாண்டி செய்து  எதைக் கண்டும் அஞ்சாமல் மிகத் துணிவுடன்  சமூக ஊடகங்களில்  பதிவிடுவது  தற்போது அதிகமாகியுள்ளது. 

 அவ்வாறு   பதிவிடப்படும் பதிவுகளில் சிக்காத அரசியல்வாதிகளே இல்லை என்கிற  நிலைமைதான் தற்போது நிலவுகிறது.

மேலும் ஊடகத் துறையில்  பணியாற்றும் செய்தியாளர்களை அரசியல்வாதிகள் கண்டால் அவர்களிடம் சிக்கி ஏதாவது அவர்களுக்கு எதிரான செய்திகள் ஊடகங்களில் வந்து  விடக் கூடாது என  பயந்து ஓடும் நிலைமையே  கடந்த காலங்களில் இருந்தது. ஆனால் தற்போது சமூக ஊடகங்களில்  செய்திகள் பதிவிடுபவர்களை கண்டு பயந்து செய்வது அறியாமல் முழித்து கொண்டுள்ளனர்.  

அரசியல்வாதிகளுக்கு எதிரான செய்திகளை செய்தியாளர்கள் உருவாக்கி அவர்கள் பணியாற்றும் ஊடகதில்  வெளியிடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு அன்பளிப்பு கொடுத்தும் சரிக்கட்டி வந்தனர்.

ஊடக நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலோர் ஒரு சிலரைத் தவிர  அன்பளிப்புமீது மோகம் கொள்(ல்)லாமல்  நேர்மையாக பணியாற்றுபவர்கள் தற்போதும் உள்ளனர்.

நடுநிலைமையாக  எவருக்கும் ஆதரவு அளிக்காமல் எதைக் கண்டும் அஞ்சாமல் மிக துணிவுடன்  செய்தியாளர்கள் உருவாக்கி  செய்திகளை அவர்கள் பணியாற்றும் ஊடகத்தில்  வெளியிட்டும்  வருகின்றனர்.

ஊடகத் துறையில் நேர்மையாக பணியாற்றுபவர்கள்  தவறு செய்பவர்களுக்கு எதிரான  செய்திகளை உருவாக்கி  அனுப்பினாலும்  பல  ஊடக நிறுவனத்தினர் அந்த செய்தியை பயன்படுத்தி  பணத்தின் மோகத்தில் மிரட்டல் விடுத்து பல வழிகளில் லஞ்சப் பணத்தை சம்பாதித்து  செய்திகளை  அவர்களது ஊடகங்களில் வெளியிடாமலும்  உள்ளனர். பல ஊடக நிறுவனங்கள்  அரசியல்  கட்சியினரிடம்  உள்ளதால்  செய்தி வெளியீட்டிலும் பலர் அரசியல் நடத்துகின்றனர். இது நிதர்சனமான உண்மை.  இதை யாராலும் மறுக்க முடியாது.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பேசுவது போல் ஒருவர் பேசி அதை காணொளியாக  பதிவிட்டு  வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவ விட்டுள்ளார்.

வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மோடிக்கு மீண்டும் கோரிக்கை விடுத்த ஜெயலலிதா !

தமிழக முதலமைச்சர்ஜெயலலிதா பிரதமர் பிரதமர் மோடிக்கு இலங்கை கடற்படையின சிறை பிடித்த 14 மீனவர்கள் மற்றும் 50 படகுகளை உடனே விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க மீண்டும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலலிதா மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது :-.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிப்பது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில் கடந்த 8 ஆம் தியதி 4 மீனவர்களை சிறை பிடித்திருந்தனர் தற்போது 18 ஆம் தியதி 14 மீனவர்களையும் 47 படகுகளையும் இலங்கை படையினர் சிறை பிடித்துள்ளனர்.

மீனவர்களின் வாழ்க்கை பிரச்சினைக்கு மத்திய அரசை அனுமதிக்காமல் தனிப்பட்ட முறையில் பிரதமராகிய நீங்கள் முடிவெடுக்க வேண்டும். தூதரக ரீதியாக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க டனடி நடவடிக்கை எடுக்க மீண்டும் வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.