Home Blog Page 5948

தானாக தீப்பிடித்து எரியும் மனிதர்கள்  

 

 
 

மனிதன் எப்படி தானாக எரிவான்? இப்படி ஒரு கேள்வியை யாரிடமாவது கேட்டால், ‘அது எப்படி முடியும்..?!’ என்பதுதான் எல்லோரின் பதிலாக இருக்கும். அறிவியலும் கூட அப்படித்தான் சொல்லும். ஆனால் இயற்கை அவ்வப்போது வெகு அபூர்வமாக சில மனிதர்களை தானாகவே எரித்து விடுகிறது.

கடந்த 300 ஆண்டுகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக 200 மனிதர்கள் எரிந்து போய் இருக்கிறார்கள். 1673-ல் ஒரு விசித்திரமான வழக்கு ஒன்று பிரான்ஸ் கோர்ட்டுக்கு வந்தது. வழக்கமான கணவன்-மனைவி சண்டைதான் அது. மனைவி இறந்து விட்டார். கொன்றது கணவன் தான் என்பது வழக்கு. கோர்ட்டு தீர்ப்போ வேறு மாதிரி இருந்தது. கணவர் குற்றமற்றவர். அவர் மனைவி தானாக எரிந்து விட்டார் என்று தீர்ப்பளித்தது. அது எப்படி ஒரு பெண்ணால் தானாக எரிய முடியும்? என்று உலகம் முழுவதும் ஒரே பேச்சாக இருந்தது.

2.bp.blogspot.com LeK1aMS TfA VUEJMxdP2OI AAAAAAAAD6I LlenHxOOaxo s1600 human combustion 2 - 2026
கால் மட்டும் எரியாத நிலையில்

இந்த தீர்ப்பு பிரான்ஸ் நாட்டு அறிஞர் ஜேம்ஸ் ரூபாண்ட் என்பவரை மிகவும் சிந்திக்க வைத்தது. அவர் மனித உடல் தானாக எரிவது குறித்து ஆராயத் தொடங்கினார். மனித உடலில் தானாக எரியும் அளவுக்கு எந்த வேதிப் பொருட்களும் இல்லை. பின் இது எப்படி நிகழ்கிறது?

2.bp.blogspot.com 6XhNqtKeZ1Y VUEIcp2BpnI AAAAAAAAD6A mnTKIJ2H8Iw s1600 url - 2026

அதிலும் மனிதன் தானாக தீப்பிடித்து எரியும் போது முழுவதுமாக எரிந்தப்பின் அந்த இடத்தில் கருகிய மண்டையோடு அல்லது கருகிய கால்கள், கைகள் மட்டுமே இருக்கும். மற்ற பகுதிகள் எல்லாமே சாம்பல் குவியலாக குவிந்து கிடக்கும்.

அதே வேளையில் வீட்டின் மற்ற பகுதிகள், இறந்தவருக்கு அருகே உள்ள பொருட்கள் போன்றவற்றில் நெருப்பு எரிந்தற்கான அடையாளம் இருக்கவில்லை. இதனை ஆங்கிலத்தில் ‘ஸ்பாண்டேனியஸ் ஹுயூமென் கம்பஷன்’ என்கிறார்கள்.

இப்படி தானாகவே எரிந்து போனவர்கள் பெரும்பாலும் மது அடிமைகளாகவே இருந்திருக்கிறார்கள். அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு அதீத போதையில் இருக்கும்போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பதாக ஆரம்பத்தில் கருதப்பட்டது.

இந்த நிகழ்வுகள் பெரும்பாலும் நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி மிக மெதுவாகவும் உடல் முழுவதும் எரியும் வரையிலும் நடைபெறுகிறது. எரிந்து முடிந்தவுடன் மண்டை ஓடு, கை, கால்கள் தான் மிஞ்சுகின்றன.

2.bp.blogspot.com FZxXXdAg8OU VUEITGrt2LI AAAAAAAAD5w 9gYMkf05gWU s1600 16963firestarter by neville dsouza - 2026

சில சம்பவங்களில் முதுகெலும்பு தவிர மற்ற பகுதிகள் எரிந்து சாம்பலாகின்றன. அதனால், குடிகாரர்களுக்கு மட்டும்தான் இது ஏற்படுகிறது என்பதை ஏற்க முடிவதில்லை.

மேலும் தானாக உடல் எரியும் போது உருவாகும் வெப்பம், மின்சார சுடுகாட்டில் ஏற்படும் வெப்பத்தைவிட அதிகம். சுமார் 600 டிகிரி சென்டி கிரேடு வெப்பம். இப்படி மிதமிஞ்சிய வெப்பநிலை இருந்தும்கூட, அவர்களுக்கு அருகில் உள்ள காகிதங்கள் கூட எரியவில்லை என்பதுதான் அதிசயம்.

1951-ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி புளோரிடாவில் வாழ்ந்து வந்த 67 வயதான மேரி ரீட்சர் என்ற பெண் இப்படி தான் இறந்தார். நாற்காலியின் கைபிடியை பிடித்தபடியே அவரது உடல் கருகிக் கிடந்தது. மண்டை ஓடு, இடது கால், முதுகெலும்பு கருகிய நிலையிலும், மற்ற பகுதிகள் சாம்பல் குவியலாகவும் மாறியிருந்தன. இதை சாதாரண விபத்து என்று போலீஸ் பைலை மூடியது.

1998 நவம்பர் 17-ந் தேதி கைசெல் என்ற 67 வயது பெண் தந்து இருக்கையில் அமர்ந்தபடி இறந்திருந்தார். செருப்புடன் கூடிய அவரது இடது கால் மட்டும் தரையில் ஊன்றியபடி இருந்தது. மற்ற பகுதிகள் எல்லாம் எரிந்து சாம்பலாகி இருந்தன. வீட்டின் மற்ற பகுதிகளில் எந்த பாதிப்பும் இல்லை.

3.bp.blogspot.com 50VjJOzUxY0 VUEIYVXC3iI AAAAAAAAD54 LbW98VjdXcA s1600 article 2401922 1B42C5D0000005DC - 2026
தமிழகத்தில் ராகுல்

சமீபத்தில் நமது தமிழகத்தில் கூட திண்டிவனத்தில் ராகுல் என்ற குழந்தைக்கு இதைப்போன்ற பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும் இது தானாக எரியும் நோயில்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.

மனித உடல் ஏன் இப்படி தானாக எரிகிறது? என்ற கேள்விக்கு இன்னமும் விடை கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானம் திணறிக்கொண்டுதான் இருக்கிறது. இதுபோன்ற விஷயங்களை கடவுள் செயல் என்று கூறி விடுகின்றனர். மனிதன் தானாக எரிவதும் இப்போதைக்கு கடவுள் செயலாகவே இருக்கிறது.

கடலை கட்டுப்படுத்திய சித்தர் பெருமான்

 

 
அது சித்ரா பவுர்ணமி நாள்.

அன்றைய இரவில்தான் இந்திரன் சொக்கலிங்கப் பெருமானுக்கு பூஜை செய்து வருவது வழக்கம். மன்னன் அபிஷேகப் பாண்டியன் பூஜையை முடிக்கும் வரை இந்திரன் காத்திருந்தான். ஒவ்வொரு வருடமும் இது தொடர்ந்தது.

    ஆனால், அன்று இந்திரனைப் பார்ப்பதற்காக வருணன் வந்திருந்தான். “என்ன தேவேந்திரா! இன்று நீ வருத்தமாக இருக்கிறாய்?” என்று கேட்டான்.
    “என்ன செய்வது வருணா! மதுரை சொக்கநாதரைப் பூஜிக்க வந்தேன். அபிஷேகப் பாண்டியன் செய்யும் பூஜையால் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் கவலையோடு இருக்கிறேன்” என்றான் இந்திரன்.
    “இந்த சொக்கலிங்கம்தான் மற்ற எல்லா லிங்கங்களைக் காட்டிலும் சிறந்ததோ?
    “ஆமாம், வருணா! அன்று ஒரு முறை எனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தையும், வெள்ளை யானையின் சாபத்தையும் நீக்கி அருள் புரிந்தது இந்த சொக்கலிங்கம்தான்”.
    “அப்படியானால் என்னை வருத்தப்படுத்துகிற வயிற்றுநீர் நோயை இந்த சொக்கலிங்கம் தீர்த்துவைப்பாரா?”
    “பிறவி நோயைத் தீர்க்கும் சிவபெருமானுக்கு உனது வயிற்று நோயை தீப்பதா பெரிய காரியம்! அப்படி உனக்கு சந்தேகம் இருந்தால் அவரின் சக்தியை சோதித்துப்பார்! உனக்கு திறமை இருந்தால்…!” என்றான் இந்திரன்
    இந்திரனிடம் விடைபெற்ற வருணனின் பார்வை மதுரை நகர் மீது பட்டது. முதன்மைச் சித்தரான சிவனை சோதித்து பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தான் வருணன். உடனே கடலைக் கூப்பிட்டான்.
2.bp.blogspot.com NhFAZdoMAlU VPKDZGkZbGI AAAAAAAADJ4 4fRyyKSCDoc s1600 z p12 Thiruvilayadal1 - 2026

    “ஏய்! கடலரசனே, நீ உலகத்திலே வலிமையானவன் என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறாயே! நீ வலிமை ஆனவன் என்பது உண்மையானால் இப்போதே சொக்கநாதர் குடியிருக்கும் மதுரை நகரத்தை அழித்துவிட்டு வா!” என்று ஏவினான்.

    வருணனின் ஆணையைக் கேட்ட மாத்திரத்தில் கடல் குமுறிக்கொண்டு பொங்கி எழுந்தது. பெரிய ஆரவாரத்துடன் மரங்களை எல்லாம் வேரோடு பிடுங்கி எறிந்தபடி மதுரையை நோக்கி முன்னேறியது.
    ஏதோ பிரளயம் ஏற்பட்டதோ என்று மக்கள் நடுங்கினர். தேவர்கள் பிரம்ம கல்பத்திலும் கூட அழியாத மதுரையம்பதி அழிந்துவிடுமோ என்று பயந்தனர். அபிஷேகப்பாண்டியனும் என்ன செய்வதென்று புரியாமல் சொக்கநாதன் பாதத்தை சரணடைந்தான். 
    சோமசுந்தரர் முன் தோன்றினார், “பயப்படாதே பாண்டியா! மதுரைக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது!” என்று புன்னகை பொழிந்தார். பிறகு தன்னுடைய ஜடா மகுடத்திலிருந்து நான்கு மேகங்களையும் பார்த்த சிவபெருமான் “நீங்கள் வேகமாக சென்று மதுரை நகரத்தை அடிக்க வந்து கொண்டிருக்கும் கடலை அது வற்றிப் போகும்படி நன்றாக உறிஞ்சி எடுத்து விடுங்கள்” என்று கட்டளையிட்டார்.
    மேகங்கள் நான்கும் உடனே எழுச்சியோடு புறப்பட்டன. கடலின் ஆர்ப்பரிப்பை அடக்கும் விதமாக கடல்நீர் முழுவதும் வற்றிப்போகும்படி குடித்துவிட்டன. மதுரை நகரம் பேராபத்தில் இருந்து தப்பி பிழைத்தது.
    மக்களும் மன்னனும் நிம்மதி அடைந்தனர். இந்த நிம்மதி அதிக நாட்களுக்கு நீடிக்கவில்லை. கடலரசன் தோல்வியடைந்து திருப்பியது வருணனை வதைத்தது. தனது வலிமை குறைந்து போனதாக உணர்ந்தான். கண்கள் சிவந்தன. வருணன் இன்னும் இறைவனின் அருமை பெருமைகளை சக்தியை புரிந்து கொள்ளவில்லை.
    தனக்கு கீழே இருக்கும் ஏழு மேகங்களையும் அழைத்தான். “என்ன செய்வீர்களோ! தெரியாது மதுரையை நீரால் அழித்துவிட்டுதான் திரும்ப வேண்டும்” என்று ஆணையிட்டான்.
    ஏழு மேகங்களும் காற்றில் மிதந்தபடி வேகமாக கிளம்பின. கருமை வண்ணத்தில் மதுரையை சூழ்ந்து நின்றன. மின்னலை வீசி எறிந்தன. இடி முழக்கங்களால் பூமியை அதிர வைத்தன. புயல் ஒன்று சுழன்று அடித்துக் கொண்டிருந்தது
    அவ்வளவுதான் இன்றோடு மதுரை நீரில் மூழ்கி அழியப்போகிறது என்று மக்கள் மனம் கலங்கினர். அபிஷேகப்பாண்டியனும் கோவிலுக்கு ஓடிச் சென்று சித்தர் பெருமானான சிவனிடம் மதுரையை காப்பாற்றும்படி திருவடியில் விழுந்து வணங்கினான்.
    உடனே சோமசுந்தரக் கடவுள் தனது சடையிலுள்ள நான்கு மேகங்களையும் பார்த்து “நீங்கள் மதுரையின் நான்கு எல்லைகளையும் சூழ்ந்து நின்று கொள்ளுங்கள் நான்கு மாடங்களைப் போல் இருந்து ஏழு மேகங்களையும் விலக்கிவிட்டு விடுங்கள்” என்று கூறி அனுப்பினார்.
    மேகங்கள் நான்கும் இறைவனின் ஆணையை ஏற்று உடனே புறப்பட்டன. மதுரையின் நான்கு திசைகளிலும் சூழ்ந்து கொண்டு நின்றன. எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல் மூடிக்கொண்டன. பெரிய கோபுரங்களை தூண்களாகக் கொண்டு, மதுரை மாநகரையே ஒரு பெரிய கூடாரத்தைப் போல் மூடிக் கொண்டன.
    அவற்றை மீறி மழைநீர் மதுரைக்குள் வரவில்லை. தொடர்ந்து மழை பொழிந்த மேகங்கள் வறண்டுவிட்டன. மதுரையை விட்டு தோல்வி பயத்தோடு விலகின. வருணனிடம் நடந்ததைக் கூறின. வருணன் தோல்வியால் வெட்கமடைந்தான். பயத்தால் நடு நடுங்கினான். அவனின் வீரம் ஒடுங்கிவிட்டது.
    ஆனாலும் அவனது மனதுக்குள் பெரும் மகிழ்ச்சி தோன்றியது. சிவபெருமான் சக்தி மிக்கவர் என்ற உண்மைபுரிந்தது. அவரின் மகிமை தெரியாமல் அவரை சோதித்தது மிகப்பெரிய தவறு என்பதை உணர்ந்த வருணன், பொற்றாமரைக் குளத்தை அடைந்தான். அதை அடைவதற்கு முன்பே அவனுடைய வயிற்று நீர் வியாதி குணமாகிவிட்டது.
    பொற்றாமரைக் குளத்தில் மனதின் அழுக்கு நீங்க நீராடிய வருணன், சோமசுந்தரக் கடவுளை பூஜை செய்ய நினைத்தான். பயபக்தியோடு விபூதியை நெற்றியில் இட்டுக்கொண்டான். ருத்திராட்ச மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டான். கங்கை முதலிய பெண்கள் தங்கக் குடங்களில் வாசனை கலந்த திருமஞ்சனநீரைக் கொண்டு வந்து கொடுத்தனர். கற்பகத்தரு வசனையுள்ள மலர்கள், சந்தனம், வாசனைத் திரவியங்கள், ரத்தினங்கள் பதித்த தங்க பாத்திரங்கள் பொன்னாடை எல்லாம் அணியக் கொடுத்தது. காமதேனுவோ ஐந்து வகையான பழங்களையும், பஞ்சாமிர்தம், பஞ்சகாவ்யம், தூபம், தீபம் எல்லாம் கொடுத்தது
    இத்தனையும் பெற்ற வருணன் சோமசுந்தரப்பெருமானை நெறிதவறாது பூஜித்தான். இறைவனின் ஆயிரம் திருப்பெயர்களையும் கூறி முத்துக்களால் திருவடிகளை அர்ச்சனை செய்தான்!
    வருணனின் வழிபாட்டில் உள்ளம் மகிழ்ந்த இறைவன் “வருணா! உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்! தருகிறேன்” என்றார்.
    “இறைவா! எத்தனையோ தவங்களில் போகாத, எத்தனையோ மந்திரங்களில் போகாத எனது வியாதி தாங்கள் குடியிருக்கும் இத்திருக்கோவிலின் திவ்ய தீர்த்த்திலே நீராட நினைத்தவுடனே குணமாகிவிட்டது. தங்களின் அருமை பெருமைகளை தெரியாமல் தங்களையே சோதனை செய்யத் துணிந்த என்னிடமே இத்தனை கருணையோடு நடந்து கொள்கிறீர்களே, தங்கள் செயல் எனது ஆணவத்தை நீக்கியது. தங்களின் அருளாலே எனக்கு மோட்சமும் கிடைத்துவிடும். எனக்கு இனி எதுவும் வேண்டாம். அடியேன் அறியாமல் செய்த பிழைகளைப் பொறுத்தருள வேண்டும்” எனக்கூறி பலவாறு வணங்கிவிடை பெற்றுச் சென்றான் வருணன்.
    நான்கு பக்கமும் மதுரையை சூழ்ந்த மேகங்கள் உயர்ந்து நான்கு மாடங்களாகக் கூடியதால் அன்றுமுதல் மதுரை “நான்மாடக் கூடல்” என்ற சிறப்பு பெயர்பெற்றது.

ஹனிமூன் கொண்டாட்டம்

 

 
ஹனிமூன்களைக் கொண்டாடுவதற்கு ஏற்ற இடங்கள் உலகில் பல உள்ளன. அவற்றில் சிறந்தவற்றை இங்கு கொடுத்துள்ளோம்.

1. ஹவாய் தீவுகள்

அமெரிக்காவின் சொர்க்கம் என்று இதைச் சொல்கிறார்கள். கடலில் அமைந்திருக்கும் ஒரே அமெரிக்க மாகாணம் இதுதான். இங்கிருக்கும் முக்கிய 6 தீவுகளும் ஆறு விதமான அனுபவங்களைக் காதலர்களுக்கு தரும்.

 

1.bp.blogspot.com A0AbQlIJPwA VPU0UGQ0c7I AAAAAAAADKU wpxHd4O00wc s1600 646 IMG 4157 - 2026

இயற்கை செதுக்கி வைத்த அழகு சிற்பங்களாக ஒவ்வொரு இடமும் இருப்பது தம்பதிகளை வேறொரு உலகுக்கு அழைத்துச் செல்லும். தீவுகள் நிறைந்த இடம் என்பதால் சாகஸ நீர் விளையாட்டுகள், படகு போக்குவரத்துகள் நிரம்பியிருக்கின்றன. எல்லாவற்றிலும் பங்கு கொள்வது மனதை உற்சாகப்படுத்தும். ஹவாய் தீவில் ஹனிமூன் என்பது வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்கும் நினைவுகளாக என்றென்றும் இருக்கும்.

4.bp.blogspot.com GoCh5egTGKY VPU0SIt41hI AAAAAAAADKM uf DqBCRWVA s1600 498 6 - 2026

2. செயின்ட் லூசியா

கரீபியன் கடலில் அமைந்திருக்கும் தீவு நாடு இது. இந்நாட்டின் முக்கிய வருமானமே சுற்றுலாதான். அதனால் தான் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏகப்பட்ட வசதிகளை இந்நாடு செய்து தருகிறது. அதிலும் ஹனிமூன் கொண்டாட்டத்திற்காக வரும் புதுமணத் தம்பதிகளை கையில் வைத்து தாங்குகிறது.

2.bp.blogspot.com ru3faPe1YJ4 VPU1hZfhmfI AAAAAAAADKc P UKdTihCqU s1600 infinity pool - 2026

 

 ஜனவரி முதல் ஏப்ரல் வரை சுற்றுலா சீஸன் களைக்கட்டும். எரிமலை, தாவரவியல் பூங்கா, இரட்டை சிகரம், பீஜியன் தேசியப்பூங்கா, ரோட்னி கோட்டை, பிரிட்டீஷ் மிலிட்டரி பேஸ் என்று பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் ஏராளமான இடங்கள் இருக்கின்றன. இயற்கையின் பிடியில் இருக்கும் இந்த இடங்களில் டெண்ட் போட்டு தங்குவதையே நிறைய சுற்றுலாப்பயணிகள் விரும்புகிறார்கள். அதற்காகவே இங்கு பல முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

1.bp.blogspot.com FtlwJJvpG54 VPU1l TrNUI AAAAAAAADKo y4bwrzAnzTs s1600 saint - 2026

3. செயிண்ட் பார்ட்ஸ்

பல ஆண்டுகளாகவே ப்ரெஞ்ச் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த தீவுக்கூட்டம் இது. ப்ரெஞ்ச் ஆட்சி செய்ததால் இந்த நாட்டிலும் ப்ரெஞ்ச் கலாசாரம் மேலோங்கி இருக்கிறது. வருடத்திற்கு 2 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் நாடு இது.

 

2.bp.blogspot.com wz34 fV4o VPU3cV YayI AAAAAAAADK4 CXhzQ5 XyIw s1600 o main 500 - 2026

 இந்த நாடு முழுவதும் சுற்றுலாவை மையமாகக் கொண்டே இயங்குகிறது. எல்லா பொருட்களும் அமெரிக்கா அல்லது ஃப்ரான்ஸில் இருந்துதான் வர வேண்டும். இங்கிருக்கும் ஹோட்டல்கள் எல்லாமே ஆடம்பரம் நிரம்பியது. அதனால் சுற்றுலா செலவு அதிகமாகும். இந்த நாட்டில் இருக்கும் வனச்சரணாலயம் இயற்கையின் கொடை. இதுபோக ‘யாட்ச்’ என்று சிறிய கப்பலில் செல்லும் சுற்றுலா இங்கு புகழ் பெற்றது. புதுமணத்தம்பதிகளுக்கு இவ்வளவு வசதிகள் இருந்தால் போதாதா ஹனிமூன் சிறப்பாக கொண்டாட.

3.bp.blogspot.com uhNB7DkO6pY VPU3YB - 2026

4. பாலி

இந்தோனேஷியாவில் இருக்கும் ஒரு தீவு தான் பாலி. இது சுற்றுலாப்பயணிகளை அதிகம் ஈர்க்கும் ஓர் இடம். இங்கு சுற்றுலாதான் வருமானத்திற்கான ஆதாரம். இங்கு பெரும்பான்மையினராக இந்துக்களே இருக்கிறார்கள்.

1.bp.blogspot.com QeO5y9 vUt0 VPU4eQqgeHI AAAAAAAADLA UYd75V3er0 s1600 bali indonesia - 2026

 இங்கிருக்கும் கலை, கலாசாரம், நடனம், சிற்பம், இசை எல்லாமே மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றன. கலை மீது ஆர்வம் கொண்ட தம்பதிகளை கவர்ந்திழுக்கும் இடமாக பாலி உள்ளது. பாரம்பரியத்தை ரசிப்பவர்களுக்கு பாலி மிகச் சிறந்த இடம்.

3.bp.blogspot.com - 2026

5. ப்ரூகஸ்

பெல்ஜியம் நாட்டில் உள்ள ஒரு நகரம்தான் ப்ரூகஸ். சரித்திரப் புகழ்பெற்ற இந்த நகரம் யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதை ‘வடக்கு வெனீஸ்’ என்று அழைக்கிறார்கள்.

3.bp.blogspot.com PJSZ jJLDD8 VPU6LS5EqeI AAAAAAAADLU vi0eLJZ2550 s1600 Brugge Belgium - 2026

 இங்கிருக்கும் பழமையான கட்டடங்கள் பார்க்க பார்க்க அழகு தருபவை. நீர் நிறைந்த தெருக்களில் காதலர்கள் படகில் சவாரி செய்தபடி இருபக்கமும் உயரமாக இருக்கும் நூற்றாண்டு பழமையான கட்டடங்களைப் பார்த்து ரசிப்பது தனியழகு. இது மட்டுமல்லாமல் பார்ப்பதற்கு பல இடங்கள் இருக்கின்றன.

2.bp.blogspot.com YxKdy2sBbUU VPU6Z8 0uPI AAAAAAAADLc 1QD1z7euzBo s1600 Brugge Belgium%2B%281%29 - 2026

தனி மனிதன் உருவாக்கிய பெருங்காடு

 

 
முலாய் கதோனி

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்கிறது அரசு. அந்த ஒரு மரத்தை நட்டு, அதை பராமரித்து பெரிதாக வளர்ப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது நமக்கு. ஆனால் இங்கொரு மனிதர் ஒற்றை ஆளாய் நின்று பெரும் காட்டையே உருவாக்கியிருக்கிறார். ஒன்றல்ல… இரண்டல்ல… லட்சக்கணக்கான மரங்களை வளர்த்திருக்கிறார். இவரது காட்டில் யானை, புலி, மான், காண்டாமிருகம் மற்றும் ஏராளமான பறவைகள் பயமின்றி வாழ்கின்றன. அந்த மனிதரின் பெயர் ஜாதவ் பயேங்க்.

 

 

 

3.bp.blogspot.com RF7V X - 2026
ஜாதவ் பயேங்க்

உலகம் அண்ணாந்து பார்க்கும் ‘ஃபாரஸ்ட்மேன்’ இவர். இந்திய வரைப்படத்தில் புதிதாக இணைந்திருக்கும் ‘முலாய் கதோனி’ இவர் உருவாக்கியது. ‘முலாய்’ என்பது ஜாதவ் பயேங்கின் செல்லப் பெயர். ‘கதோனி’ என்றால் அஸாமி மொழியில் காடு. முலாய் உருவாக்கிய காடு என்பதால் இந்தப் பெயர். இந்தக் காட்டின் பரப்பளவு 1,360 ஏக்கர். மனிதன் நினைத்தால் இயற்கையைக் கூட உருவாக்க முடியும் என்பதற்கு வாழும் உதாரணம் இந்த ஜாதவ் பயேங்க்!

 ‘மிஷிங்’ பழங்குடி இனத்தில் 1963-ல் பிறந்தவர் ஜாதவ். அஸாமில் ‘போடோ’ பழங்குடி இனத்தவருக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் மக்கள் தொகை கொண்ட பழங்குடியினம் ‘மிஷிங்’தான்.

பழங்குடியினத்தவர்களுக்கு இயல்பாகவே வனக் காதல் அதிகம். ஜாதவிற்கும் அந்தக் காதல் ஏராளமாய் இருந்தது. அவர் 16 வயது சிறுவனாக இருந்த போது பிரம்மபுத்திரா நதியில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது மாஜூலி தீவு.

அப்போதைய வெள்ள நீரில் ஏராளமான பாம்புகளும் அடித்து வரப்பட்டன. வெள்ளம் வடிந்த பின் எல்லா பாம்புகளும் இறந்து கிடந்தன. ‘மாஜூலி’ என்ற அந்த தீவு முழுவதும் பாம்புகளின் உடல்கள் நிலமே தெரியா வண்ணம் போர்வை போல் மூடிக் கிடந்தன.

பிரம்மபுத்திரா நதியின் மையத்தில் அமைந்திருக்கும் ‘மாஜூலி’ தீவுதான், உலகின் மிகப்பெரிய ஆற்றுத் தீவாகும். இந்தத் தீவில் பாம்புகள் மடிந்ததற்கு காரணம் மரங்கள் இல்லாததுதான் என்பதை ஜாதவ் உணர்ந்த போது அவரின் வயது 16.

மரங்கள் இல்லாமல் வெப்பம் அதிகரித்திருக்கும் இந்தப் பகுதியில் மரம் வளர்க்க வேண்டும். அதன் மூலம் குளுமையை உருவாக்க வேண்டும், என்பதற்காக வனத்துறையை ஜாதவ் அணுகினார். மணல் மண்டிக்கிடக்கும் அந்த இடத்தில் மூங்கில் மரங்களை வேண்டுமானால் வளர்க்கலாம், என்று வனத்துறைச் சேர்ந்தவர்கள் சொல்லி விட்டார்கள்.

2.bp.blogspot.com K2PMxm1UGZc VPc8xXuFe6I AAAAAAAADL4 ys7m1q8T3Ks s1600 jadav payeng - 2026

சரியாக ஒரு வருடம் கழித்து, 1980-ல் வனத்துறை ஜாதவ் குறிப்பிட்ட இடத்துக்கு மிக அருகிலேயே அதாவது அஸாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் மாவட்டம் ‘கோகிலமுக்’ என்ற இடத்தில் 200 ஹெக்டேர் பரப்பளவில் சமூக காடுகளை உருவாக்க முனைந்தார்கள். அந்த திட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்ட ஜாதவ் மற்ற தொழிலாளர்களோடு இணைந்து மரக் கன்றுகளை நட்டார்.

வேலை முடிந்ததும் மற்ற தொழிலாளர்கள் அவரவர்கள் ஊருக்கு கிளம்பி விட்டார்கள். லேசாக துளிர் விட்டு நிற்கும் மரக்கன்றுகளை அப்படியே விட்டு விட்டால், வாடிப்போய்… மரித்து விடும். அந்த மரங்களைப் பார்த்து பராமரிக்க அனுமதி கேட்டார் ஜாதவ். வனத்துறையும் அனுமதி கொடுத்ததோடு, எல்லா விஷ­யங்களையும் மறந்தும் போய் விட்டது. அதன்பின் ஒருவர் கூட அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.

மூங்கில் மட்டுமே வளர்ந்து வந்த சமூக காட்டில் வேறு சில மரங்களையும் வளர்க்க ஜாதவ் முயன்று பார்த்தார். மண்ணின் தன்மை மற்ற மரங்களை வளரவிடவில்லை.

4.bp.blogspot.com - 2026

மண்ணை வளப்படுத்துவதற்காக அவர் ஒரு யுக்தியைக் கையாண்டார். நமது மண்ணை மண்புழுக்கள் வளப்படுத்துவது போல் அஸாமில் சிவப்பு நிற எறும்புகள் மண்ணை வளப்படுத்தும் உயிரினம். அதற்காக தனது ஊருக்குச் சென்று சிவப்பு நிற எறும்புகளை பெருமளவில் பிடித்து வந்து இந்த மணல் திட்டில் விட்டார்.

மூர்க்கத்தனமாக தாக்கும் தன்மைக் கொண்ட அந்த சிவப்பு எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் தனது முயற்சியில் தொய்வடையாமல் பல இடங்களில் இருந்து சிவப்பு எறும்புகளை சேகரித்து இங்கு வந்து விட்டிருக்கிறார். எறும்புகள் மண்ணின் தன்மையை அதிகப்படுத்தியது. மண்ணும் வளம் பெற்றது.

மூங்கிலோடு மற்ற மரங்களையும் வளர்க்க நினைத்தார். மற்ற மரங்களின் விதைகளையும் ஊன்றினார். மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இரவு பகல் பாராமல் பராமரித்தார். ஜாதவின் நம்பிக்கை வீண் போகவில்லை. பண்பட்டுப் போன பூமித்தாய் தனது பொக்கிஷத்திலிருந்து மரங்களைப் பலனாய் கொடுத்தாள்.

ஜாதவ் கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கிய காடு ஆயிரம் ஏக்கர்களை கடந்து வளர்ந்து கொண்டிருந்தது. பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் அது பெருகிக் கொண்டே சென்றது. வெளி உலகத்திற்கு இது தெரியவே இல்லை.

2008-ம் ஆண்டில் அருகில் இருந்த காட்டுக்குள் இருந்து 115 யானைகள் இவரது காட்டுக்குள் தற்செயலாக வந்து புகுந்து கொண்டன. அதைத் துரத்திக் கொண்டு வந்த வனத்துறையினர் முலாய் காட்டைப் பார்த்ததும் அதிர்ச்சித்துப் போய் நின்றனர். தங்களது பட்டியலில் இருந்து இவ்வளவு பெரிய காடு எப்படி விடுபட்டுப் போனது என்று வியந்தனர்.

அந்த நேரத்தில் தான் ஜோர்ஹாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜீத்தோ கலிதா ஜாதவ் பயேங்கைப் பற்றி அஸாமிய பத்திரிகையில் விரிவாக ஒரு கட்டுரை எழுதினார். அதன்பின்னே ஜாதவ் பெயர் வெளியுலகுக்கு தெரியத் தொடங்கியது.

30 வருடங்களாக எந்தவொரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தன்னந்தனியாக தனது குடும்பத்தினருடன் இணைந்து இந்த சாதனையை செய்திருக்கிறார். காடு வளர்ப்பதற்காக நகர வாழ்க்கையை விட்டு இந்த காட்டில் வாழத்தொடங்கினார். மாஜுலி தீவில் மரங்களால் ஆன சிறு வீட்டை ஏற்படுத்திக் கொண்டார். அதில் அவரின் மனைவி பினிதா பயேங்க். மகன்கள் சஞ்சய், சஞ்ஜீவ் மற்றும் மகள் மூன் முனி ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.

2.bp.blogspot.com KaFWRUjVQRU VPc86zsUHUI AAAAAAAADMI ffWi4zw9jhs s1600 Jadav Payeng 3 - 2026

தனது வருமானத்திற்காக 50 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். பாலின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் ஓடுகிறது. காலை 3.30 மணிக்கே எழுந்துவிடும் இவர் மாடுகளிடம் பால் கறந்து விற்றப்பின் முழு நேரமும் காட்டைப் பராமரிக்கவே நேரத்தை செலவிட்டுள்ளார்.

சிறிய உயிரினம் கூட வாழத் தகுதியற்றதாக இருந்த இந்த மணல் திட்டு மரங்கள் பெருக பெருக பல உயிரினங்கள் வாழும் இடமாக மாறியிருக்கிறது. பக்கத்து காடுகளில் இருந்து வரும் புலிகள் தனது வளர்ப்பு ஆடுகள் நூறை தனக்கு இரையாக்கியுள்ளன. அப்படி இருந்தும் தனது காட்டில் விலங்குகள் வாழ வேண்டும் என்று நினைக்கிறார். இப்போது இவரின் காட்டில் 5 புலிகள், 3 காண்டாமிருகங்கள் நிரந்தரமாக வாழ்கின்றன.

இதுபோக நூற்றுக்கணக்கான முயல்கள், மான்கள், பறவைகள் வாழ்கின்றன. நூறுக்கும் மேற்பட்ட யானைகள் ஒவ்வொரு வருடத்திலும் 6  மாதங்கள் இங்கு வந்து தங்கி குட்டிகளை ஈன்று செல்கின்றன.

இந்த வனவிலங்குகளால் ஜாதவிற்கும் நிறைய தொந்தரவுகள் ஏற்பட்டுள்ளன. பக்கத்திலிருக்கும் விளைநிலங்களை இங்கிருந்த யானைகள் பாழாக்கியதால் இந்தக் காட்டை அழிக்க விவசாயிகள் அரசிடம் கோரிக்கை வைத்தார்கள்.

அதற்கு ஜாதவ் அந்த மக்களிடம் ‘காட்டையும் வனவிலங்குகளையும் அழிப்பதற்கு பதில் என்னைக் கொன்று விடுங்கள்!’ என்று தீர்மானமாகச் சொன்னார். அவரது உறுதியைக் கண்டு வனத்துறையினர் அவருக்கு உதவ முன்வந்தனர். ஜாதவின் சாதனையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். முலாயின் காட்டை வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சிகளை அரசு எடுத்துள்ளது.

தனது 17 வது வயதில் தொடங்கி 51 வயது வரை தன்னலமற்ற சேவை மனித குலத்திற்கு செய்துள்ள ஜாதவ்வை எவ்வளவு பாராட்டினாலும் அதற்கு ஈடாகாது. ஆனால் இதை எதையும் காதில் வாங்காத ஜாதவ், ‘இது எனது சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமை’ என்று ஒற்றை வரியுடன் தனது மொத்த உழைப்பையும் சாதனையையும் முடித்துக் கொள்கிறார்.

இப்பொழுதும் நான் உருவாக்கிய காட்டை வனத்துறையினர் நன்றாக பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால், ‘நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயாராக உள்ளேன்!’ என்று கூறுகிறார் இந்த சாதனை மனிதர்.

ஒரு அரசாங்கமே செய்யத் தயங்கும் வேலையை தனிமனிதனாக இருந்து சாதித்த ஜாதவ் பயேங்கை வாழ்த்துவோம்.

நர்மதை தரும் ஆனந்தம்

 

 
அஹில்யா கோட்டை

1.bp.blogspot.com nQrGgKUdxVQ VPfSRZ08s I AAAAAAAADMs g9G PMeRDbM s1600 india2011 pan2 - 2026

நர்மதா நதியின் கரையில் அமைந்திருக்கும் அஹில்யா கோட்டை 250 வருடங்கள் பழமை வாய்ந்தது. இது இந்தூர் மகாராணியின் இருப்பிடமாக இருந்த இடம். 18-ம் நூற்றாண்டில் இந்தியாவை ஆட்சி செய்த பெண்ணரசிகளில் குறிப்பிடத்தக்கவர் அஹில்யா பாய் ஹோல்கர். அவர் வாழ்ந்த இந்த இடம் தற்போது பாரம்பரியமிக்க தங்குமிடமாக மாறியிருக்கிறது.

3.bp.blogspot.com 46vCjQjg3ss VPfSdSBiYxI AAAAAAAADM0 BkH5SeiUG68 s1600 Ahilya Fort Maheshwar North India 4 - 2026

மொத்தம் 14 அறைகள் இங்குள்ளன. ஒவ்வொன்றும் பழமையை பறைசாற்றும். ஃபர்னிச்சர்கள், உபயோகப்பொருட்கள் அனைத்தும் பழமையின் அம்சமே! இந்த கோட்டையில் அமர்ந்து நர்மதை நதியின் அழகைப் பார்க்க பார்க்க புதுமண தம்பதிகளுக்கு காதல் அரும்பும். அதனால்தான் இந்த இடத்தை ஹனிமூன் ஜோடிகள் தங்க சிறந்த இடம் என்று பல அமைப்புகள் தேர்ந்தெடுத்திருக்கின்றன.

எப்படி போவது?
மத்தியப்பிரதேசத்தின் தலைநகர் போபாலில் இருந்து இந்தூர் 194 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சாலைப்பயணத்தில் 4 மணி நேரத்தில் வந்து சேரலாம். ரயில் போக்குவரத்தும் உண்டு.

1.bp.blogspot.com kjeOvZMdh74 VPfSq47XCrI AAAAAAAADM8 sdPjGxK37Co s1600 accueil photo2 - 2026
நர்மதையின் அழகு

எங்கு தங்குவது?
அஹில்யா கோட்டையே தங்கும் இடம்தான். இங்கு இருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.18,060.

3.bp.blogspot.com lNPxHznfIkk VPfS2XornnI AAAAAAAADNE pSFkRR5Yh3s s1600 1329556189 ahilyabai holkar - 2026
அஹில்யா பாய் ஹோல்கர்

 

வலுவான பெண்களும்..! வலிமையற்ற ஆண்களும்..!!

 

 
இது ஆண்களுக்கு கசப்பானா சங்கதியாகத்தான் இருக்கும்! இருந்தாலும் என்ன செய்ய..? உண்மை அப்படித்தானே இருக்கிறது..!!

ஆரோக்கியம் என்ற விஷயத்தில் ஆணையும் பெண்ணையும் ஒப்பிட்டால், ஆணை விட பெண்ணே வலிமையானவள். நோய் நொடிகள் அண்டாத, நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வது பெண்கள்தான். ஆண்கள் இந்த விஷயத்தில் பலவீனமானவர்கள்தான்..!

ஆணின் பலமெல்லாம் உடலுக்கு வெளியேதான். பெண்ணைவிட எல்லா விஷயத்திலும் 25 சதவீதம் கூடுதலானவன் ஆண். உதாரணத்திற்கு ஒரு ஆண் 100 கிலோ எடையை தூக்கினால், பெண்ணால் 75 கிலோதான் தூக்க முடியும். அவ்வளவுதான் அவர்கள் பலம்.

இதெல்லாம் உடலுக்கு வெளியேதான், உடலுக்குள் என்று எடுத்துக் கொண்டால், பெண்ணை அடித்துக் கொள்ளவே முடியாது. பைத்தியம், திக்குவாய், பிறவி ஊனம், காக்கை வலிப்பு போன்ற எல்லாமே பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம். சராசரி ஆயுளிலும் கூட ஆணைவிட பெண் கூடுதலாக 8 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்கிறாள்.

2.bp.blogspot.com - 2026

தாய்மை என்ற பேற்றிற்காக பெண்ணுக்கு இயற்கை அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறது.‘இம்முனோ குளோபின்’ என்ற எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட ரத்த புரதம் பெண்களின் உடலில் மட்டுமே அதிக அளவில் உள்ளது.

ஆண், பெண் பாலினத்தை நிர்ணயிக்கும் ‘எக்ஸ்’, ‘ஒய்’ குரோமோசோம்களில் கூட பெண்ணினத்தை உருவாக்கும் ‘எக்ஸ்’ (X) குரோமோசோமே வலிமையையும் ஆரோக்கியமும் முழுமையான வளர்ச்சியும் கொண்டது. ஒரு பெண் உருவாக இரண்டு ‘எக்ஸ்’ குரோமோசோம்கள் தேவை.

ஆணுக்கு ஒரு ‘எக்ஸ்’ (X), ஒரு ‘ஒய்’ (Y) என்று இரண்டு குரோமோசோம்கள் தேவை. இதில் ‘ஒய்’ அரைகுறையாக வளர்ச்சியடைந்த ஒரு  குரோமோசோம். அதாவது மருத்துவ கூற்றுப்படி மூளியாக்கப்பட்ட ஒரு பெண்ணே ஆண்.

பெண் ஆரோக்கியத்திற்கு இதுதான் மிகப்பெரிய காரணம்.

மேலும், தற்காப்பு சக்தியை அதிகம் உண்டாக்கும் ‘ஹீமோபைலியா ஜிடென்ராஸ்’ என்கிற ஹார்மோன் எப்போதும் கருவுற்ற தாயின் உடலில் இருந்து கருவில் உள்ள குழந்தை பெண்ணாக இருந்தால் மட்டுமே அக்குழந்தைக்கு செல்கிறது.

இது ஒரு போதும் தாயிடம் இருந்து ஆண் குழந்தைக்கு செல்வதில்லை. எப்படி ஆண் குழந்தையைத் தவிர்த்து, பெண் குழந்தைக்கு மட்டும் இந்த தற்காப்பு சக்தி செல்கிறது என்பது விஞ்ஞானத்திற்கே புலப்படாத புதிராக இருக்கிறது. இதனால்தான் பெண் குழந்தைகள் கடுமையான பாக்டீரியாக்களின் தாக்குதல்களை சமாளித்து வாழ்ந்து விடுகின்றன.

1.bp.blogspot.com - 2026

உடல்  வலிமை வேறு, உடலின் எதிர்ப்புச் சக்தி வேறு. வலிமையை ஆணுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை பெண்ணுக்கும், இயற்கை அளித்துள்ளது. நீண்ட நாட்கள் வாழ இயலாமல், நோய்களை தாங்கிக் கொள்ளவும் முடியாத இந்த வலுவற்ற ஆண்கள், பெண்களின் வலிமையை உணர்ந்து அனுசரித்து வாழ வேண்டும் என்பதுதான் ஆண்களுக்கு இயற்கை இட்டிருக்கும் கசப்பான நியதி.

சரி, அப்படியென்றால் ஆணுக்கென்று எந்த பெருமையும் இல்லையா என்று கேட்டால்… இயற்கை இருக்கிறது என்ற பதிலைத்தான் தருகிறது. வலிமையான வெளிப்புற உடலும், வாழ்நாள் முழுவதும் உடலுறவில் ஈடுப்பட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடிய சக்தியும் ஆணுக்கு மட்டுமே உண்டு. குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்ணால் இது முடியாது.

கோடையில் ‘ஜில்’லுன்னு சில இடங்கள்

 

 
இந்தியாவை துணைக்கண்டம் என்று கண்டறிந்து சொன்ன வாய்க்கு சர்க்கரை தான் போட வேண்டும். பாலைவனமா, அடர்ந்தகாடா, கொட்டும் நீர்வீழ்ச்சியா, மலைத்தொடர்களா, அலைக்கடலா எல்லா வகையான நிலங்களும் இந்தியாவில் உண்டு. பனி உறைந்திருக்கும் நிலப்பகுதியைப் பார்க்க நாம் வெளிநாட்டுக்குப் போக வேண்டியதில்லை. நம் நாட்டிலே அதற்கான இடங்கள் ஏராளமாய் இருக்கின்றன. அவற்றில் ஐந்து இடங்களை மட்டும் இங்கு பார்க்கலாம்… அங்கு சென்று வெள்ளைப் பனி மழையில் நனையலாம், வீசியெறிந்து விளையாடலாம்.

குல்மார்க் – ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 52 கி.மீ. தொலைவில் குல்மார்க் அமைந்துள்ளது. 2,690 மீட்டர் உயரம் கொண்ட இந்த இடத்தில் வருடம் முழுவதும் உலுக்கி எடுக்கும் குளிரின் ராஜ்ஜியம்தான். குளிர்காலங்களில் கேட்கவே வேண்டாம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனி… பனி… பனி…. தான்!

2.bp.blogspot.com K Jlub8wDLk VPryU53 rdI AAAAAAAADO8 gqNIybJJvg s1600 fsh lodge - 2026

இந்த பனி தான் இங்கு சுற்றுலா பயணிகளை குவியக்கிறது. பனிச்சறுக்கு விளையாடுபவர்களுக்கு இந்த இடம் சொர்க்கம். இங்கிருக்கும் குல்மார்க் பீடபூமியில் 40 ஹோட்டல்கள் இருக்கின்றன.

‘சி.என்.என். தொலைக்காட்சி’ குல்மார்க்கை ‘இந்தியாவின் பனி விளையாட்டுகளின் இதயம்’என்று வர்ணிக்கிறது. மேலும், ஆசியாவின் ‘பெஸ்ட் ஸ்கீ ஸ்போர்ட்ஸ்’ மைதானம் இதுதான் என்கிறது. உலகிலேயே மிக உயரமான குல்மார்க் ‘கண்டோலா’ கேபிள் காரில் பயணம் செய்வது ஆனந்தத்தின் உச்சம்.

3.bp.blogspot.com uNcnbgu1hHA VPrygW9bo5I AAAAAAAADPE iTKOa087lH0 s1600 gulmarg means the place of roses - 2026

இந்த கேபிள் கார்கள் இரண்டு ஸ்டேஜாக இயக்கப்படுகிறது. முதல் ஸ்டேஜைக் கடக்க 9 நிமிடங்கள் ஆகும் .கட்டணம் 600 ரூபாய். இரண்டாவது ஸ்டேஜைக் கடக்க 12 நிமிடங்கள் ஆகின்றன. இதற்கு கட்டணம் 800 ரூபாய்.

2.bp.blogspot.com q2dtyu8Ze9o VPrypeP 7pI AAAAAAAADPM 0 JBZDJs kM s1600 gulmarg6 - 2026

உயரமான கேபிள் கார் மட்டுமல்ல. உயரமான கோல்ப் விளையாட்டு மைதானமும் இங்குள்ளது. இந்த இடத்தின் அருகே ஒரு குடில் அமைத்து ‘பாபி‘ ஹிந்திப் படத்தை எடுத்திருக்கிறார்கள். ரிஷி கபூர், டிம்பிள் கபாடியா ஜோடியாக நடித்து அசத்திய அந்த படம் எடுத்த இடத்திற்கு இப்போதும் ‘பாபி ஹட்’ என்று தான் பெயர்.

சிம்லா- ஹிமாச்சல் பிரதேசம்
இந்த மாநிலத்தின் தலைநகர் சிம்லாதான். நிலம், கட்டடங்களின் கூரை, மரத்தின் இலை, வாகனங்கள் என்று எந்த இடத்தையும் விட்டு விடாமல், பனிப்போர்த்தி இருக்கும் இடம் இது.

4.bp.blogspot.com HBaxXzqJ8fk VPry4JwFsxI AAAAAAAADPU 6oopJXQHII0 s1600 Simla Manali - 2026

பனி துகள்களை கையில் எடுத்து ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாடுவதற்கு ஏற்ற இடம். இங்கு கட்டப்பட்டுள்ள தேவாலயம்தான் வட இந்தியாவில் இரண்டாவதாக கட்டப்பட்ட தேவாலயம்.

8,000 அடி உயரத்தில் இருக்கும் ‘ஐக்கூ’ சிகரம்தான். சிம்லாவில் உயர்ந்த சிகரம். இதன்மீது நின்றபடி சிம்லா அழகைப் பார்க்கலாம்.

1974-ல் கட்டப்பட்ட மியூசியம் சிம்லாவின் கலாச்சார வளங்களை பாதுகாக்கிறது. ‘பஹாரி’எனும் ஓவியங்கள், சிற்பங்கள், மர மற்றும் வெண்கலத்தால் ஆன அணிகலன்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

4.bp.blogspot.com c1FZIs XR0k VPrzDSp UlI AAAAAAAADPc mnaJ6KTjzaI s1600 manali2007qs5 - 2026

மேலும் இங்குள்ள டவுன்ஷிப்பில் முக்கியமான ஒரு இடம் ‘சம்மர்ஹில்!’ இந்த குன்று 6,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. காந்தி சிம்லாவில் பயணம் மேற்கொள்ளும்போதெல்லாம் தங்குமிடம் இதுதான்.

3.bp.blogspot.com eCXX3HM9a2Q VPrzNTZyGXI AAAAAAAADPk udRUIV9LTM s1600 simla2 - 2026

‘நல்தேஹ்ரா’ மற்றும் ‘சைல்’ போன்ற இரு மைதானங்களும் கோல்ப் மற்றும் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஏற்ற இடமாகும்.

பட்னிடாப் – ஜம்மு காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ‘செனாப்’ நதிக்கரையில் 2,024 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பனி நகரம் தான் இது. பட்னி டாப் என்றால் ‘குளங்களின் இளவரசி’ என்று அர்த்தம்.

1.bp.blogspot.com ysoGXm5GfFY VPrzYxJkfiI AAAAAAAADPs G5EaUzGL7Zo s1600 sanasar area near patnitop - 2026

இங்கு நாம் ‘பாராகிளைடிங்’ செல்வதன் மூலம் ஒட்டுமொத்த குளங்களின் அழகையும் கண்டுகளிக்கலாம். பட்னி டாப் சன்சார் சாலையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ‘தவாரியை’ எனும் இடம். இந்த மலைச்சரிவில் தான் பாராகிளைடிங் நடைபெறும். இங்கு துவங்கும் சாகசம் ‘குட்’ எனும் இடத்தில் தான் முடியும். காற்றின் அளவைப் பொறுத்து 15 நிமிடத்திலிருந்து 1 மணி நேரத்திற்குள் குட் எனும் இடத்தை அடையலாம்.

4.bp.blogspot.com GLNXHJl zjc VPrzjlfmJPI AAAAAAAADP0 ZR2 mHiXIZQ s1600 hotel entrance w - 2026

 

டிரெக்கிங்கிற்கு சிறந்த இடம் இது. பட்னிடாப்பில் இருந்து குட் வரை 270 படிகள் கொண்ட ட்ரெக்கிங் இடம் உள்ளது.

பட்னிடாப்பில் இருந்து ‘ஷித் மஹாதேவ்’ எனும் இடத்தை 5-லிருந்து 6 மணி நேரத்தில் சென்றடையலாம். இங்கு 2800 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் ஒன்று உள்ளது.

1.bp.blogspot.com HEJen4 1Olw VPrzkAZJzoI AAAAAAAADP4 GbtV215HiKk s1600 patnitop skiing - 2026

மேலும் மிகக் கடுமையான ஒரு டிரெக்கிங் என்றால் பட்னிடாப்பில் இருந்து ‘சிவகர்க்’செல்லும் பாதைதான். அனுபவம் மிக்க நடைப்பிரியர்களால் தான் இதை 6 மணி நேரத்தில் கடக்க இயலும்.

மனாலி – ஹிமாச்சல் பிரதேசம்
ஹிமாச்சல் பிரதேசத்தில் 6,276 அடி உயரத்தில் உள்ளது மனாலி.
‘ரோஹ்பாங்’ எனும் இடம் பனிச்சறுக்கு விளையாட்டிற்கு ஏற்றது. குளிர்காலங்களில் பனி மூடிய மலைச்சரிவின் இரு பக்கங்களிலும் நிறைய  கடைகள் போடப்பட்டிருக்கும். பனிச்சறுக்கிற்கான விளையாட்டு சாதனங்களும் இக்கடைகளில் வாடகைக்கு கிடைக்கும்.

2.bp.blogspot.com H34C5Nj2r7Q VPr0Zsbig9I AAAAAAAADQE cuhV743O0jQ s1600 kullu manali%2B%281%29 - 2026

ரோஹ்பாங்கிற்கு ‘மர்ஹி’ எனும் இடம் வழியாகத்தான் செல்ல வேண்டும். நம்மூர்களில் சாலையின் இரு புறங்களிலும் மரங்களைத்தான் பார்த்திருப்போம். ஆனால் இங்கு இரு பக்கங்களிலும் பனி மலைகள் தான். மேலும் மர்ஹியில் நீரில் விளையாடும் விளையாட்டுகளை அதிகம் மேற்கொள்ளலாம்.

1.bp.blogspot.com uUsmaOU5BVA VPr0x1EG50I AAAAAAAADQU E0bvC Tenpc s1600 kullu manali%2B%282%29 - 2026
 

மனாலியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, ‘ராணி நலா’, இங்கு குதிரை சவாரி தான் பிரபலம். பனி மலையில் குதிரை சவாரி மேற்கொள்ள வேண்டுமென்றால் இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் முடியும்.

2.bp.blogspot.com z1PUasjnugc VPslyWti7eI AAAAAAAADQ8 uyyngnuGCrY s1600 horse%2Briding%2Bgulmarg1 - 2026

இங்குள்ள ‘ஷோலாங்’ என்னுமிடத்திலும் பனிச்சறுக்கு விளையாடலாம். இவ்விடம் குழந்தைகளுக்கு ஏற்றது. ஏனென்றால் இங்குள்ள பனிச்சறுக்கு ஆழம் குறைவாக இருப்பதனால் அனுபவம் இல்லாதவர்கள் கூட பனிச்சறுக்கை கற்றுக் கொள்ளலாம்.

 

பனிச்சிகரங்களையும் சில வியூ பாயிண்ட்களையும் கோதி எனும் இடத்தில் நாம் காணலாம். மனாலியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் இவ்விடத்தை அடையலாம்.

முசோரி – உத்தரகாண்ட்
உத்தரகாண்டின் தலைநகரான டேராடூனில் இருந்து 35 கி.மீ. தொலைவில் முசோரி உள்ளது. முசோரி என்றால் ‘மலைகளின் இளவரசி’ என்று அர்த்தம்.

இங்கு 1993-ல் ஆரம்பிக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயம் ஒன்று உள்ளது. 339 ஹெக்டேர் பரப்பளவில் இது அமைந்துள்ளது. இதுவரை நாம் பனிமலையில் அமைந்திருக்கும் சரணாலயத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை. மேலும் குளிர்காலத்தில் இங்கு வரும் விலங்குகளும் மிக அரிதானவை.

 

இங்கிருந்து ஒரு மணி நேர பயணத்திலேயே உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்த்தின் அடிவாரத்தை அடைந்து விடலாம். உயரமான பனி மூடிய சிகரத்தை கண்டு ரசிப்பது மறக்க முடியாத அனுபவங்களுள் ஒன்று.

டேராடூனிலிருந்து 6 கி.மீ. தொலைவில் முசோரி ஏரி உள்ளது. இங்கு எல்லாவிதமான படகு சவாரியும் உள்ளது. இங்குள்ள பனிமலைகளை பார்த்தாற்போல் படகு சவாரி செய்ய ‘பெடல் போட்டிங்’தான் ஏற்றது.

4.bp.blogspot.com ZNPFt8ggA8Q VPr1E7JbOLI AAAAAAAADQk SqchiMUOZQA s1600 snow fall at mussoorie 52d0ebbe15229 g - 2026

இங்கு ‘கெம்படி’ மற்றும் ‘ஜரிபானி’ எனும் இரண்டு அருவிகள் உள்ளன. ஜரிபானி அருவிக்கு செல்ல வேண்டுமென்றால், இரண்டு கி.மீட்டருக்கு முன்பாகவே காரை நிறுத்தி விட்டு பனி அடர்ந்த ரோட்டில் நடந்துதான் செல்ல வேண்டும்.

1.bp.blogspot.com 1DUd KPSplg VPr1M53rsPI AAAAAAAADQs 1CKEZUAQojg s1600 mussoorie honeymoon packages india - 2026

‘குன் ஹில்’ எனப்படும் மலைக்குன்று தான் இரண்டாவது உயரமான இடமாக முசோரியில் கருதப்படுகிறது.

குளிர்காலத்தில் இங்கு விஜயம் செய்து பனிப்பொழிவில் அனுபவம் பெறுவது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக என்றென்றும் தொடரும்.

‘டார்லிங் ஹில்’ டார்ஜிலிங்

 

 
க்லென்பர்ன் டீ எஸ்டேட்

டார்ஜிலிங்கை எப்போதும் ‘டார்லிங் ஹில்’ என்றுதான் ஆங்கிலேயர்கள் சொல்வார்கள். அப்படி காதலோடு இணைந்த பந்தம் அது. கொடுமையான வெயில் காலத்தில் கூட 25 டிகிரி செல்சியஸை தாண்டியதில்லை. அப்படியொரு குளுமை நிலவும் இடம்.

2.bp.blogspot.com H13 kY6dprI VP7K2GwKMXI AAAAAAAADVA NvbkRUWAhu4 s1600 glenburn tea estate tour 2098 - 2026

மலை ரயிலில் பயணம் செய்து டார்ஜிலிங்கை அடைவது தனி இன்பம் என்றால் அங்கிருக்கும் இங்கு ஐந்து தலைமுறைகளாக 150 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் ‘க்லென்பர்ன் டீ எஸ்டேட்’டில் அமைந்திருக்கும் ஹோட்டல் காதலர் நெருக்கத்தை இன்னும் கூட்டும். 1860-ல் கட்டப்பட்ட இந்த கட்டடம் காலனிய கலையை எடுத்துக்காட்டுகிறது.

2.bp.blogspot.com 3j5Qi2QhtZw VP7LIfYoivI AAAAAAAADVI f 0tNAI2BZ0 s1600 the new bungalow at glenburn - 2026

நீண்டு இருக்கும் இதன் வராந்தாவில் அமர்ந்தபடி கஞ்சன் ஜங்கா சிகரத்தைப் பார்க்கலாம். தாழ்வாக அமைந்திருக்கும் தேயிலைத் தோட்டத்தையும் பார்க்கலாம். தேயிலை பசுமையழகு என்றால், கஞ்சன் ஜங்கா பனி வெண்மையழகு. இப்படி அழகுகள் போட்டிப் போடும் இடத்தில் தங்குவது இனிமை நிறைந்த அனுபவமாகும்.

3.bp.blogspot.com RRyFkXbekrE VP7LZN3ohRI AAAAAAAADVQ wl0rr sXH4 s1600 india himalaya glenburn terrace d - 2026
வராந்தா

இங்கு நான்கு அறைகள் இருக்கின்றன. நான்குமே பாரம்பரிய ஆங்கிலேயர் பாணியில் இருக்கும் இடமாகும்.

3.bp.blogspot.com OPiCB7C6hIs VP7LpGwutLI AAAAAAAADVY YqNw zhOiZQ s1600 Indian Summers A Historical Highlands Drama 15 - 2026
பின்னணியில் கஞ்சன்ஜங்கா சிகரம்

மேற்கு வங்காளம், சிக்கிம் மாநிலங்களின் எல்லைப் பகுதியில் இந்த இடம் அமைந்துள்ளது. விமானம், யஹலிகாப்டர், படகு மூலம் இந்த இடத்தை அடையலாம். டார்ஜிலிங்கில் இருந்து ஒன்றரை மணி நேர சாலைப்பயணத்தில் இங்கு வந்து சேரலாம்.

3.bp.blogspot.com 2J yJo5wn c VP7L7oAdYtI AAAAAAAADVg cojN BEm6oQ s1600 the sitting room - 2026
அறையின் சிட்டிங் ரூம்

க்லென்பர்ன் டீ எஸ்டேட் ஹோட்டலே சொகுசாக தங்க ஏற்றது. இருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.30,000.

தென்னாப்ரிக்காவில் நீங்களே கார் ஓட்டலாம்

 

 
சுற்றுலாவிற்காக நீங்கள் வெளிநாடு சென்றிருந்தால் உங்கள் நண்பர் காரை நீங்கள் ஓட்டமுடியாது.

ஒரு வெளிநாட்டிற்கு சென்று அங்கு கார் ஓட்டுவது அவ்வளவு சுலபமல்ல. முதலில் இன்டர்நேஷனல் டிரைவிங் லைசன்ஸ் வேண்டும். அந்த நாட்டின் சட்ட திட்டங்கள் தெரிந்திருக்க வேண்டும். இப்படி ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கும்.

ஆனால், தென்னாப்ரிக்காவில் அப்படி எதுவும் இல்லை. உங்களுக்கு கார் ஓட்ட தெரிந்திருந்தால் போதும். கூடுதலாக இந்திய டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். இவை இருந்தால் போதும். தென்னாப்ரிக்காவில் தாரளமாக கார் ஓட்டலாம்.

3.bp.blogspot.com NIm8GpzRKj0 VQCaxwD88MI AAAAAAAADWE IAj 5510o4k s1600 stock footage couple driving convertible car cabriolet cape town south africa steadicam shot - 2026

இந்திய சாலைகளில் இடது பக்கம் வாகனங்கள் செல்வது போலத்தான் அங்கேயும்… அதனால் பிரச்சனை இல்லை. விமானத்தில் இருந்து இறங்கிய உடனே இங்கே விரும்பிய காரை ஓட்டலாம். கெம்ப்பெர் என்ற வேனும் வாடகைக்கு கிடைக்கும்.

நீங்கள் அந்த நாட்டில் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு சென்று அங்கிருந்து விமானத்தில் பயணம் மேற்கொள்பவராக இருந்தாலும் கார் வாடகைக்கு கிடைக்கும். காரை திரும்ப வந்து ஒப்படைக்க வேண்டியதில்லை.  நினைத்த இடத்தில் விட்டுச் செல்லலாம். காரை எந்த இடத்திலும் எடுக்கலாம். இப்படி நிற்கும் கார்களை எடுத்துச் செல்வதற்காகவே ஆட்கள் இருக்கிறார்கள்.

1.bp.blogspot.com wsAnx1K7MTU VQCbCatveII AAAAAAAADWM x4W10sDFVH0 s1600 stock footage couple driving convertible car cabriolet cape town south africa steadicam shot%2B%281%29 - 2026

சுற்றுலா பயணிகளே கார் ஓட்டும் இந்த திட்டத்தை ‘யூரோப் கார் சவுத் ஆப்பிரிக்கா’ என்ற நிறுவனம் நடத்தி வருகிறது.

உலகின் முதல் பெண் டாக்டர் பட்டப்பாடு

 

 
இன்று பெண்கள் தலைவலி காய்ச்சல் என்றால் கூட பெண் டாக்டர்களைத்தான் பார்க்கிறார்கள். ஆனால் முன்னொரு காலத்தில் அப்படியில்லை. ஆண்கள் மட்டுமே டாக்டர்களாக இருந்தனர்.
பெண்ணின் பிரசவம் என்றாலும் சரி,  அவளின் அந்தரங்கப் பிரச்சனை என்றாலும் சரி,  அதை ஆண் டாக்டர்கள்தான் பார்த்தாக வேண்டும். இதனால் கூச்ச சுபாவம் உள்ள பெண்கள் நோய்களுக்காக மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்து வந்தார்கள்.
 
அப்போது அமெரிக்காவில் எலிசபெத் பிளாக்வெல் என்ற சிறுமி பள்ளிப் படிப்பை முடித்திருந்தாள். அவள் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அருகில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளுக்கு உதவுவாள். அப்போது ஒரு பெண் ‘உன்னைப் போல் ஒரு பெண் டாக்டராக இருந்தால் என்னைப் போன்ற பெண்களுக்கு  எவ்வளவு வசதியாக இருக்கும்’ என்று கூறினார். அந்தப் பெண்ணின் கூற்றுதான் எலிசபெத்துக்கு டாக்டராக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
 
1821 பிப்ரவரி 3-ம் தேதி இங்கிலாந்தில் பிறந்த எலிசபெத், தனது 11-வது வயதில் அமெரிக்காவில் குடியேறினார். டாக்டர் படிப்புக்காக ஒவ்வொரு மெடிக்கல் காலேஜாக ஏறி இறங்கினார். எந்த காலேஜும் இவருக்கு இடம் தரவில்லை. கடைசியாக ஜெனிவாவில் உள்ள ஒரு சாதாரண மெடிக்கல் காலேஜ் போனால் போகட்டும் என்று இடம் தந்தது.
 
கல்லூரியில் சேர்ந்தபின் மாணவர்களின் கேலி பேச்சு தாங்க முடியவில்லை. விடுதியில் தங்கி படிக்க யாரும் உதவவில்லை. பல தொந்தரவுகளைத் தாங்கிக் கொண்டு ஆண்கள் மத்தியில் ஒற்றை மாணவியாக படித்து 1849 ஜனவரி 23-ல் டாக்டர் பட்டம் பெற்றார்.
 
4.bp.blogspot.com V3dNoJug3Nw VQOY5 31pCI AAAAAAAADWk vUnc3Vqrito s1600 90112 004 5C961AD5 - 2026
கல்லூரி மாணவியாக எலிசபெத்
உலகின் முதல் பெண் டாக்டர் உருவானார். டாக்டரான பின்னும் அவரது பிரச்சனைகள் குறையவில்லை. அவர் ஹவுஸ் சர்ஜனாக பயிற்சி பெற எந்தக் கல்லூரியும் இடம் தரவில்லை. அப்போதெல்லாம் அமெரிக்காவில் அறுவைச் சிகிச்சை கற்றுத்தரும் கல்லூரிகள் இல்லை. ஃப்ரான்ஸுக்குத்தான் போக வேண்டும்.
 
ஃப்ரான்ஸில் மட்டுமே அதற்கான கல்லூரிகள் இருந்தன. எலிசபெத் ஃப்ரான்ஸ் புறப்பட்டார். பாரிஸ் நகரில் அவரை மருத்துவ கருத்தரங்கில் கூட நுழையவிடவில்லை. ‘நீ மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்றால், நர்ஸாக வேலை செய். அதற்கு எதற்கு டாக்டர் பட்டம் உனக்கு..?’ என்று மனம் நோக பேசினார்கள்.
 
எதற்கும் எலிசபெத் மனம் கலங்கவில்லை. டாக்டருக்கு படித்த அவர் ‘செயிண்ட் பார்தோலோமங்ஸ்’ மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்தார். அப்போது நோய்களைப் பற்றி மக்களிடம் இருந்த அறியாமையைப் போக்குவதற்கு சொற்பொழிவு நடத்தினார். இது அமெரிக்கா முழுவதும் புகழ் பெற்றது.
 
எட்டு வருட நர்ஸ் வேலைக்குப் பின் 1857-ல் டாக்டராக வேலை கிடைத்தது. சில ஆண்டுகள் கழித்து பெண்களுக்காக தனி மருத்துவமனையைத் தொடங்கினார்.
 
அதற்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகளும் நன்கொடைகளும் குவிந்தன. எலிசபெத் பிறந்த நாடான இங்கிலாந்தில் மருத்துவமனை அமைக்க அந்த அரசு அனுமதி தந்தது. 1865-ல் இங்கிலாந்து அரசால் முதன் முதலாக ‘பெண் டாக்டர்’ என்ற அங்கீகாரம் தரப்பட்டது.
 
4.bp.blogspot.com E0aBPI6RptE VQObSE8W7AI AAAAAAAADWw kNO8epITWOQ s1600 EBlackwell1905 - 2026
டாக்டராக எலிசபெத்
1867-ல் பெண்கள் மட்டுமே படிக்கும் முதல் பெண் மருத்துவக் கல்லூரியை தொடங்கினார். இன்றைக்கும் அந்த கல்லூரி பெண்களை மட்டுமே சேர்த்துக் கொள்கிறது. 1910 மே மாதம் 31-ம் தேதி தனது 89-வது வயதில் எலிசபெத் இயற்கை எய்தினார். 
உலகின் முதல் பெண் டாக்டரான எலிசபெத் பிளாக்வெல் பல போராட்டங்களுக்குப் பின் டாக்டரானதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கென்று தனி மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி ஆரம்பித்தது மிகப் பெரிய சாதனைதான்!