Home Blog Page 6255

“பெரியவாளின் தியாகம்.”

“பெரிய10482143_599228513527816_46027082804070919_nவாளின் தியாகம்” சொன்னவர்-ஸ்ரீ மடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன்

 
ஒரு வனப் பிரதேசத்தில் பெரியவா தங்கியிருந்தார்கள்.
 
பிற்பகல் சுமார் மூன்று மணிக்கு, மூன்று ஆந்திர
வைதீகர்கள் தரிசனத்துக்கு வந்தார்கள். ஸ்நானம்,
ஸந்த்யை,தேவதார்ச்சனம்- எல்லாம் இனிமேல் தான்.
 
அவர்கள் சுயம்பாகிகள். தாங்களே சமைத்துச்
சாப்பிடுவார்கள்.
 
ஆனால், அந்த முகாமில், அதற்கெல்லாம் வசதியில்லை.
“சரி, போய் நித்யகர்மாக்களை முடித்து விட்டு வாருங்கள்”
என்று சொல்லி அனுப்பிவைத்தார்கள், பெரியவா.
 
சிஷ்யர்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
சிரமசாத்யமான ஒரு காரியத்தைச் சொல்லி 
விடுவார்களோ?என்று, உள்ளூர அச்சம்,கவலை.
 
அரைமணிக்குப் பின் அவர்கள் வந்து 
நமஸ்காரம் செய்தார்கள்.
 
“உங்களுக்கெல்லாம் சரியானபடி போஜனம் செய்விக்க
வசதிப்படவில்லை. உப்புசப்பில்லாத என் பிக்ஷா 
பக்குவங்களை உங்களுக்குக் கொடுக்கச் 
சொல்லியிருக்கிறேன்”.என்றார்கள், பெரியவா.
 
சிஷ்யர்களுக்கு அதிர்ச்சி- பெரியவா பிக்ஷக்காக
செய்யப்பட்டவைகளை இவர்களுக்குக் கொடுத்து விட்டால்,
பெரியவாளுக்கு என்ன பிக்ஷை?
 
“இன்று சம்பாசஷ்டி, நான் சாப்பிடக் கூடாது.
பால் மட்டும் போதும்..” என்று சிஷ்யர்களுக்கு சமாதானம்.
 
பெரியவாளின் தியாகத்தைக் கண்டு, சிஷ்யர்களின்
கண்களில் நீர் துளித்தது.

“பெரியவா பண்ணின வேடிக்கையும் ஆச்சர்யமும்”

“பெரியவா பண்ணின வேடிக்கையும் ஆச்சர்யமும்” சொன்னவர்-ஸ்ரீ மடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன்

1507603_10202994818654217_4035239553088867808_n
அகண்டகாவேரிப் பகுதியில் பெரியவா
சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.
 
ஒரு நாள், முகாம் செய்திருந்த இடத்துக்கு அருகிலிருந்த தென்னந்தோப்புக்குப் போனார்கள்.
தோப்பு மரங்களில் நூற்றுக்கணக்கான காகங்கள் இருந்தன.
 
உடன் வந்திருந்த ஒரு பையனைப் பார்த்து,
“இந்தக் காக்கைகளையெல்லாம் 
கத்தச் சொல்லட்டுமா?” என்றார்கள் பெரியவா.
 
பையனுக்கு என்ன பதில் சொல்வதென்று
புரியவில்லை.
 
“இதோ,பார்…”என்று சொல்லிவிட்டு,காகத்தைப் போலவே, கா….கா…..என்று கத்தினார்கள்,பெரியவா.
 
எல்லாக் காகங்களும் கோரஸாக எதிரொலி கொடுத்தன.
 
பெரியவா சொன்னார்கள்; ‘காகங்கள் கத்துகின்றன.
நிறைய விருந்தாளிகள் வருவார்கள் என்று சூசகம்.
நிறைய சாப்பாடு தயார் பண்ணச் சொல்லு…’
 
‘நிறைய சமைத்தால், எல்லாம் வேஸ்டாகிப் போகும்.
சாப்பிடுவதற்கு மனிதர்கள் எங்கே?’
என்று சிஷ்யர்கள் சங்கடப்பட்டார்கள்.
 
பக்கத்து, ஏதோ ஊரில், காங்கிரஸ் கட்சியின் கூட்டமாம்.
அந்தக் கூட்டத்துக்கு வந்தவர்கள், பெரியவா அருகில்
இருப்பது தெரிந்ததும் தரிசனத்துக்கு வந்து விட்டார்கள்.
 
எல்லாரையும் சாப்பிட்டு விட்டுப் போகும்படி பெரியவா பணித்தார்கள்.
 
கடைசியில், ஒரு பிடி சோறு மிஞ்சவில்லை!

டி.வி. அலுவலக முற்றுகை முயற்சி: நிர்வாகிகள் கைதுக்கு இந்து முன்னணி கண்டனம்

rama-gopalanசென்னை: சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று, சர்வதேச மகளிர் தினமான மார்ச். 8 அன்று, “தாலி- பெண்ணுக்கு பெருமையா, சிறுமையா?’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடத்த இருந்தது. இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், அந்த அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிடச் சென்றபோது, கைகலப்பும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிலர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அந்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் வெளியிட்ட அறிக்கையில்… புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மகளிர் தினத்தை முன்னிட்டு(இன்று), `பெண்களுக்குத் தாலி தேவையா?’ என்ற விவாதத்தை நடத்துவதாக விளம்பரப்படுத்தியிருந்தார்கள். இந்த விளம்பரத்தில் பெண்களுக்கு தாலி என்பது நாய்க்கு சங்கலி கட்டுவது போல என ஒரு பெண் பேசுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொது மக்கள், இதனைத் தடுத்து நிறுத்த இந்து முன்னணிக்கு வேண்டுகோள் விடுத்ததோடு, புதிய தலைமுறைக்கும் தங்களது ஆட்சேபணையைத் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்து முன்னணி பொறுப்பாளர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு நம்முடைய ஆட்சேபணையை தெரிவித்தபோது, நிகழ்ச்சியை ரத்து செய்யமுடியாது எனத் தெரிவித்துவிட்டனர். அதனை அடுத்து, எல்லா மாவட்டங்கள், நகரங்களிலும் காவல்துறையிடம் புதிய தொலைக்காட்சி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் கொடுக்கப்பட்டன. காவல்துறை அதிகாரிகள், இதற்கு பெரும் ஆட்சேபம் எழுந்துள்ளது என்பதை எடுத்துக்கூறியும், அதனை அலட்சியப்படுத்தி தொலைக்காட்சி அதிகாரிகள் பேசியுள்ளனர். இன்று காலை 10 மணி அளவில் மாநிலப் பொதுச் செயலாளர் சி. பரமேஸ்வரன் தலைமையில் சென்னை மாநகர இந்து முன்னணி சார்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த சென்றனர். அலுவலகத்திற்கு ஒரு கிலோமீட்டர் முன்பாகவே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தி, அனைவரையும் கைது செய்ய முற்பட்டனர். அங்கு ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலையில் தடியடி நடத்தினர். அந்த தள்ளுமுள்ளுவை படம்பிடிக்க வந்த பத்திரிகையாளர் காமிரா கீழே விழுந்தது. இதனை திட்டமிட்டு புதிய தலைமுறை தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்தது என்பது தற்போது தெரிய வந்ததுள்ளது. அதன் பரபரப்பு செய்தியில் சமூக விரோதிகள் தாக்குதல், பத்திரிகையாளர் மீது தாக்குதல், காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்த்தனர் என செய்தியை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். நடந்தது ஜனநாயக வழியிலான எதிர்ப்பு, இதனை திசைத்திருப்பும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இந்து முன்னணி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், புதிய தலைமுறை தொலைக்காட்சி, மக்கள் விரோதமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் மனு மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இனியும் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் புதிய தலைமுறை தொலைக்காட்சி ஈடுபட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அவர்களே பொறுப்பு என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கைது விவகாரத்தில், மீடியாவின் கயமைக்கு பயப்படும் காவல்துறையையும் அரசாங்கத்தையும் கண்டிக்கிறோம்.. புதிய தலைமுறை தொலைக்காட்சி சதி செய்து ஒரு நாடகம் நடத்தி இந்து முன்னணி பொறுப்பாளர்களை கைது செய்ய வைத்துள்ளது. இதனால் அதன் கயமைத்தனம் உலகத்திற்கு தெரிய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்து முன்னணி நாளை இதற்குக் கண்டனம் தெரிவித்து மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள், போஸ்டர்கள் மூலம் மக்களிடம் நியாயத்தை எடுத்துச் சொல்வார்கள். மீடியாவின் கயமைத்தனத்திற்குத் துணைபோகும் தமிழக அரசையும், காவல்துறையையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அழிவிற்கு அவர்களே ஏற்படுத்திக் கொள்ளும் வழி என்பதைத் தவிர வேறென்ன சொல்ல. காவல்துறை ஒரு கிலோமீட்டருக்கு முன்பே ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கைது செய்ய தடுப்புப் போட்டு நின்றனர். இதனிடையே வேண்டுமென்றே அந்த இடத்திற்கு வந்து போலீஸ் நடத்திய தடியடியில் புகுந்த ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது புதிய தலைமுறை தொலைக்காட்சி. இது காவல்துறைக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தெரியும். அப்படி இருந்தும் செந்தில்குமரன் கொடுத்த புகாரை அடுத்து

  1. மாநிலப் பொதுச் செயலாளர் சி. பரமேஸ்வரன்,
  2. மனோகரன் மாநில நிர்வாகக்குழு உறுப்பனர் 3.இளங்கோ சென்னைமாவட்ட பொதுச்செயலாளர் செயலாளர் 4.முகுந்தன் 5.குமரேசன் 6.ஹரிபாபு 7.ராஜா
  3. ஜெயகுமார் 9.அய்யப்பன் 10.சீனிவாசன்.

ஆகிய பத்து பேர் மீது 147, 341, 294(),323, 506(2) பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். அதேசமயம் இந்து முன்னணியின் சார்பில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு ஊர்களில் கொடுக்கப்பட்ட வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்தது காவல்துறை என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். மக்களின் தங்கள் ஆட்சேபணையை தொலைபேசி வாயிலாகத் தெரிவித்தற்கு கேவலமாகவும், துச்சமாகவும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலைய அதிகாரிகள் பேசியுள்ளனர். இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க தவறினால், இந்தப் பிரச்னையை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்வதைத் தவிர வேறு வழியில்லை. காவல்துறையும், தமிழக அரசும் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டுள்ளதற்கு இந்து முன்னணி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. என்று கூறியுள்ளார்.

காஷ்மீர் பிரிவினைவாதி விடுதலை விவகாரத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்: காங்கிரஸ்

புது தில்லி:mufti-mohammed-syed காஷ்மீரில் பிரிவினைவாதி மசாரத் ஆலம் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. காஷ்மீர் சிறைகளில் இருக்கும் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் முப்தி முகமது சயீத் உத்தரவிட்டார். இதையடுத்து, காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்த மசாரத் ஆலம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவர், கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். அவருக்கு வயது 44. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசித் தாக்கும் போராட்டத்தை மக்களிடம் தூண்டி விட்டதாக மசாரத் ஆலமை போலீசார் தேடி வந்தனர். இந் நிலையில் அவர் தலைமறைவானார். அவர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்தனர். இந்நிலையில், 2010 அக்டோபரில் அவர் கைது செய்யப்பட்டு பாரமுல்லா சிறையில் அடைக்கப்பட்டார். முதல்வர் முப்தி முகமது சயீத் உத்தரவுப் படி, நேற்று அங்கிருந்து விடுதலை செய்யப்பட்ட மசாரத் ஆலம், ஷாகீத் குனி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனிடையே, காஷ்மீர் முதல்வரின் நடவடிக்கைக்கு ஆளும் கூட்டணிக் கட்சியான பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மசாரத் ஆலத்தை விடுதலை செய்த செயலுக்கு தனது கண்டனத்தை அது தெரிவித்துள்ளது. காஷ்மீர் மாநில பாஜக இளைஞரணித் தலைவரும், நவ்ஷேரா தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரவீந்தர் ரெய்னா, “மசாரத் ஆலம் அரசியல் கைதி அல்ல, அவர் ஒரு பயங்கரவாதி என்பதால் அவரது விடுதலை தேசத்துக்கு அச்சுறுத்தலாக அமையும், அவரை விடுவித்ததை பாஜக., ஒருபோதும் சகித்துக் கொள்ளாது” என்று தெரிவித்தார். மேலும், இதுபோன்று தேசவிரோதிகளும், பாகிஸ்தானுக்கு ஆதரவான தலைவர்களும் விடுதலை செய்யப்பட்டால், கூட்டணி அரசை நடத்திச் செல்வது சிரமம்தான் என்றும் அவர் கூறினார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிந்தர் சர்மா கூறுகையில், ”மசாரத் ஆலம் விடுதலை செய்யப்பட்டதற்கு பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, பிரதம அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் காஷ்மீர் மாநில துணை முதலமைச்சர் நிர்மல் சிங் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

“இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா,பார்..”

“இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா,பார்..”
 

‘தர்ஷன்’. இதழிலிருந்து.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா1507603_10202994818654217_4035239553088867808_n
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
 
சந்நியாசிகளுக்கு என்று சில விசேஷ தர்மானுஷ்டானங்கள்
இருக்கின்றன. அதிலும் பீடாதிபதியாக வீற்றிருக்கும்
துறவிக்குக் கடுமையான கட்டுப்பாடுகள்.
 
கால் நூற்றாண்டுக்கு முன்னால் காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில்
ஒரு காலை வேளை.
 
அன்றைக்கு அடியார் கூட்டம் அவ்வளவாக இல்லை.
 
மகாப் பெரியவாள் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தபோது
அலங்காரம் செய்யப்படாத அம்பாள் போல ஒரு சுமங்கலி
வந்தார். நேரே பெரியவாளிடம் சென்று நமஸ்கரித்தார்.
எழுந்தவர் கண்களில் குபுகுபு வென்று நீர் மல்கியது.
 
சொந்த விவகாரம் – சிக்கல் – பிரச்னை பெரியவாளிடம்
தனிமையில் பேசி வழிகாட்டுதலை எதிர்நோக்கி நிற்கிறார்.
 
கண்கள் கெஞ்சுகின்றன – ;என்மீது தங்கள் அருட்பார்வை
படட்டுமே!’ என்று உதடுகள் துடிக்கின்றன.
‘நான் சொல்வதைக் கேட்க மாட்டீர்களா?’ என்று.
 
அருளரசர் அந்த அம்மையார் சொல்வதைக் கேட்கவே
விரும்பினார்.
 
‘ஒரு பெண்ணிடம் தனியாகப் பேசக்கூடாது’
என்று விதி தடுக்கிறதே?.
 
அம்மையார் இடத்தை விட்டு நகராமல் கண்ணீர் பெருக்கிக்
கொண்டிருந்தார். அவர் அங்கிருந்து நகர்ந்தால்தான்
காத்துக்கொண்டிருக்கும் மற்ற அடியார்கள் பெரியவா
அருகில் செல்ல முடியும்.
 
இந்த இக்கட்டான சூழ்நிலை எத்தனை நேரம்தான் நீடிப்பது?
 
விரல் சொடுக்கில், ஓர் அணுக்கத் தொண்டரை
பெரியவா அழைத்தார்கள்.
 
“இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா,பார்..”
 
தொண்டர் அதிருஷ்டசாலி! சில விநாடிகளிலேயே
ஒரு செவிடரைக் கண்டுபிடித்து விட்டார்.
 
“ஒரு காரியம் செய்.அந்த அம்மாளுடன் அவன் வரும்போது
கையைத் தட்டி அவர் பெயரைச் சொல்லிக் கூப்பிடு.அவர்
திரும்பிப் பார்க்கிறாரா? இல்லையா?-என்பதிலிருந்தே அவர்
நிஜமான செவிடர்தானா என்பதைப் புரிந்து கொள்ளலாம்..”
 
(பெரியவாள் சொல்லிக் கொடுத்த இந்தத் தந்திரத்தில்
ஒரு புதைபொருளும் இருக்கிறது)
 
தொண்டர் ஏதோ ஓர் அலுப்பில், காது கேட்கக்கூடிய
ஒருவரையே, “பெரியவா முன்னாடி நீ செவிடன் மாதிரி
நில்லு…..போதும்” என்று சொல்லி அழைத்துக்கொண்டு
வந்துவிட்டால், குடும்ப ரகசியங்களைப் பேச விரும்பும்
அம்மணிக்கு சங்கடமாகப் போய் விடக்கூடும். எனவே,
செவிட்டுத்தனத்தை டெஸ்ட் செய்வதாக ஒரு யோஜனை.
 
டமாரச் செவிடர் பக்கத்தில் நிற்க தன் மனத்திலிருந்த
ஆதங்களையெல்லாம் கொட்டித் தீர்த்தார் அம்மையார்.
 
பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கருணாமூர்த்தி
பிரசாதம் கொடுத்து, பெருமைப்படுத்தி அனுப்பிற்று.
அம்மையாரின் கண்களில் நீர்….ஆமாம்.ஆனந்தக் கண்ணீர்!
பிறை சூடி அல்லவா,அவருக்குப் பதில் கூறியிருக்கிறது.
 
அம்மையார் பிரசாதம் பெற்றுக் கொண்டு புறப்பட்டதும்
செவிடரிடம் ஒரு ஜாடை; ‘நீங்களும் போகலாம்’
 
துறவு நெறி காக்கப்பட்ட அதே சமயத்தில்,
ஒரு சுமங்கலிக்கும் அருள்பாலித்தாகி விட்டது.

கும்பகோணம் கடப்பா!

“ஹரிதாஸ் கிரி ஸ்வாமிகள் விரும்பி சாப்பிட்ட கும்பகோணம் கடப்பாவின் மற்றொரு ரெசிபி.” “கும்பகோணம் கடப்பா [5 பேருக்கு]” எதேச்சையாக 4-7-99 கதிர் ஒரு பக்கம் எனக்கு கிடைத்தது. கட்டுரையாளர் பேர் இல்லை ஆனால் தமிழ்நாட்டின் பெரிய சமையல்காரர். ஒரு தடவை குருஜி [ஹரிதாஸ்கிரி] அவரது குருநாதர் ஞானானந்த ஸ்வாமிகளின் ஆராதனையை நடத்த நினைத்தார்.அவரது கட்டளையை ஏற்று ஆராதனைக்கு தர்மப்ரகாஷ் முதலாளி, இடம் மற்றும் சகல வசதிகளையும் செய்து தந்தார். சுமார் 3000 பேர் சாப்பிட்ட ஆராதனைக்கு நான்தான் சமையல் ரவா சொஜ்ஜியும்,வெண் பொங்கலும் செய்தேன். இந்த ஐட்டங்களுடனே வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து ரவாதோசையும் அதற்கு தொட்டுக் கொள்ள கும்பகோணம் கடப்பாவும் செய்தேன். இந்தக் கடப்பா குருஜிக்கு மிகவும் பிடித்தமானது. இது இட்லி,தோசை,ரவா தோசை,ஊத்தப்பம்,பூரி,வடை போன்றவற்றுக்குப் பக்க மேளமாக அமையும். செய்முறை+தேவையான பொருள்கள் உருளைக்கிழங்கு-300 கிராம் பெரிய வெங்காயம்-அரை கிலோ தக்காளி-100 கிராம் பூண்டு-பெரியதாக-1 தேங்காய்-ஒரு மூடி பச்சைமிளகாய்-7 இஞ்சி-சிறிய துண்டு உப்பு-தேவையான அளவு மஞ்சள் பொடி-அரை டீஸ்பூன் எலுமிச்சம்பழம்-1 முந்திரி-50 கிராம் எண்ணெய்-150 கிராம் பயத்தம் பருப்பு-50 கிராம். கசகசா,சோம்பு-தலா 1 டீஸ்பூன் பயத்தம் பருப்பை நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கை நன்றாக வேகவைத்துப் பொடியாக உடைத்துக் கொள்ளவும். வெங்காயத்தைத் தோல் எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு,சோம்பு,கசகசா, பச்சை மிளகாய்,இஞ்சி,தேங்காய்த் துருவல் ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் வைத்து அடுப்பில் ஏற்றி காய்ந்தவுடன் வெட்டிய வெங்காயத்தை அதில் நன்றாக வதக்கிக்.கொண்டு மிக்ஸியில் அரைத்த மசாலாக் கலவையை அதில் சேர்த்து சிறிதளவு தண்ணீரும் சேர்த்து மஞ்சள் பொடி,மிளகாய்ப் பொடி சேர்த்து நன்றாக வெந்தவுடன் வேக வைத்து உடைத்த உருளைக் கிழங்கையும் வெந்த பயத்தம் பருப்பையும் அதில் சேர்த்துக் கூட்டு மாதிரி பதம் வந்ததும் கீழே இறக்கி எலுமிச்சம் பழம் பிழியவும். இதில் முந்திரியை வறுத்துப் போட்டுக் கலந்து சாப்பிடவும்

ஸ்பெஷல் அரிசி உப்புமா (5 பேருக்கு)

மாயவரம் / கும்பகோணம் ஸ்பெஷல் அரிசி உப்புமா (5 பேருக்கு)
செய்முறை :facebook_2
இரண்டு ஆழாக்கு பச்சைஅரிசி ஒரு ஆழாக்கு துவரம் பருப்பு , 8 சிவப்பு மிளகாய, கொஞ்சம் மிளகு, சீரகம், சிறிதளவு கட்டி பெருங்காயம எல்லாவற்றையும்மிக்ஸியில் போட்டு பெரிய அளவு ரவையாக உடைத்துக்கொள்ளவும்.
 குக்கரில் மூன்று கரண்டி எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு பெருங்காயம் பவுடர் தாளித்து கொஞ்சம் கருவேப்பிலை போட்டு 6 டம்பளர் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அதனுடன் அரை மூடி துறுவிய தேங்காயை போட்டு அரைத்து வைத்திற்க்கும் ரவையையும் போட்டு அதனுடன் 2 ஸ்பூன் நெய் விட்டு நன்றாக கட்டி தட்டாமல் கிளறி குக்கர மூடி 3 விசில் வந்ததும் இறக்கவும்.
 15 நிமிடம் குக்கரை திறந்து கிளறினால் நீங்கள் மாய வரம் அல்லது கும்பகோணத்தில் இருக்கும் உணர்வு ஏற்படும
OPTION
ரவையை போடுவதற்கு 5 நிமிடம் முன்னால் கொஞ்சம் வெங்காயம் துண்டாக நறுக்கிய கேரட் பீன்ஸ் உருளைகிழங்கு பச்சைபட்டாணி போட்டு ஒரு கொதி வந்ததும் ரவையை போட்டு….

“13 வயது பையனின் அனுபவம்”

“13 வயது பையனின் அனுபவம்” 10482143_599228513527816_46027082804070919_n சொன்னவர்-என்.வெங்கட்டராமன். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்

 
1949ம் ஆண்டில் ஸ்ரீ மகாஸ்வாமிகள் ஆனந்த
தாண்டவபுரத்துக்கு விஜயம் செய்து நாற்பது நாட்கள்
தங்கியிருந்தார்கள். நான் பதின்மூன்று வயதுப்பையன்.
 
சிவன் கோவிலைச் சேர்ந்த திருக்குளத்தைத் தூர் வாரிச்
செப்பனிடவேண்டும் என்ற பூர்த்த தர்மத்தைத் துவக்கி
வைப்பதற்காக ஸ்ரீ ஸ்வாமிகளைப் பிரார்த்தித்துக்
கொண்டதற்கிணங்க, அவர்கள் அங்கு முகாமிட்டிருந்தார்கள்.
 
எங்கள் வீட்டருகே ஸ்ரீ சுவாமிகள் வந்தபோது,
‘ஆபித்வா..’ என்று தொடங்கும் ஸாமவேத மந்திரத்தைக் கூறி
பூர்ணகும்பம் கொடுத்தோம். இந்த மந்திரம், சிவ ஸ்தோத்ரமாக
வருவது. ஸாமவேதிகள், இந்த மந்திரத்தைக் கூறி,
பூர்ண கும்பம் கொடுப்பது வழக்கம்.
 
பெரியவாள், உடனே, ‘ந கர்மணா…’ தெரியாதா?-
என்று கேட்டார்கள். எங்கள் தகப்பனார் அந்த மந்திரத்தையும்
முழுமையாகச் சொன்னார். நானும் சொன்னேன்.
 
அடுத்த வீட்டில், பூர்ணகும்பம். என்னையே ‘ஆபித்வா..’
சொல்லும்படி பெரியவாள் ஆக்ஞாபித்தார்.
 
சொல்லிமுடித்ததும், ‘தேங்காயைத் தொடு, நீ சொன்ன
மந்திரத்தின் பவர், தேங்காய்க்கு வர வேண்டாமா?”
என்றார்கள். நான் தொட்ட பின்னர் தான் அவர்கள்
தொட்டு அனுக்ரஹித்தார்கள். இப்படியே ஒவ்வொரு வீட்டிலும்.

“இலகுவாக-கனமே இல்லாமல் அத்வைத தத்துவம்.”

“இலகுவாக-கனமே இல்லாமல்

அத்வைத தத்துவம்.” சொன்னவர்-என்.வெங்கட்டராமன். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்947129_585338794830241_865216797_n

 
ஒரு நெட்டி வேலைக்காரர், பெரிய பூச்செண்டு
மாதிரி அலங்காரமாகத் தயாரித்து பெரியவாளிடம்
சமர்ப்பித்தார். அருகில் நின்று கொண்டிரூந்த என்னைப்
பார்த்து.பூச்செண்டிலிருந்த பச்சை இலைகளைக் காட்டி, ‘இது என்ன?’ என்று பெரியவாள் கேட்டார்கள். ‘காகிதம்..?
 
உள் சுற்றில் அழகாக அடுக்கப்பட்டிருந்த மல்லிகையைக்
காட்டி, ‘இது என்ன?’ என்றார்கள்.
 
‘காகிதம்’
 
அதற்கு அடுத்த சுற்றாக இருந்த ரோஜா வரிசையைக் காட்டி
‘இது என்ன?’ என்றார்கள்.
 
‘காகிதம்’
 
நடுவில் மஞ்சளாக எலுமிச்சம்பழம் பளீரென்று விளங்கியது.
‘இது என்ன?’
 
‘எலுமிச்சம்பழம்…’ என்றேன்.
 
பெரியவாள் சற்று முதியவரான ஒருவரைப் பார்த்து,
எலுமிச்சையைக் காட்டி, ‘இது என்ன?’ என்று கேட்டார்கள்.
 
அவர், ‘நெட்டி!’ என்றார். உண்மையில் நெட்டியைத்தான்
அவ்வளவு தத்ரூபமாகச் செய்திருந்தார்,அந்த நெட்டிக் கலைஞர்.
 
உடனே,பெரியவாள், ‘அதாவது…ஸர்வம் ஏகமேவ-என்கிறே?’
என்று சொல்லிவிட்டு, ‘அதை இந்தப் பையனுக்கு
விளக்கிச் சொல்லு’ என்று கட்டளையிட்டார்.
 
ஸர்வம் (எல்லாம்)-பச்சை இலை,வெள்ளை மல்லிகை.
சிவப்பு ரோஜா,மஞ்சள் எலுமிச்சை எல்லாமே,’ஏகம் ஏவ-
ஒன்றே தான்; ஒரே பொருளால் ஆனவைதான், நெட்டிக் காகிதம்.
 
தலையைப் பாரமாக அழுத்தும் அத்வைத தத்துவம்.
ஒரு சிறு பையனுக்கும் புரியும்படி இலகுவாக-கனமே இல்லாமல்
நெட்டியாக – ஆக்கவல்லவர், மகா ஸ்வாமிகள்

“இன்னிக்கு- பாலா,பாதுகையா?

1969132_763012707087106_4352134091554339462_n சொன்னவர்-என்.வெங்கட்டராமன். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்

 
ஆனந்தத்தாண்டவபுரத்தில் முகாம் இருந்த வரையில்
ஸ்ரீ சந்த்ரமௌளீஸ்வரர் அபிஷேகத்துக்காகக் கொண்டு
வரப்படும் பாலைச் சேகரித்து, எடுத்துச் சென்று பூஜைக்
கட்டு அருகே வைப்பது என் வேலை. பெரியவாள் அந்தப்
பெரும் பாக்கியத்தை எனக்கு அளித்திருந்தார்.
 
ஒருநாள் காலை குளத்தில் படிக்கட்டில் உட்கார்ந்து
தண்ணீரில் பாதங்கள் நனைத்து ‘விளையாடிக்
கொண்டிருந்தார்,பெரியவாள். சற்றுத் தொலைவில்
என் வயதொத்தப் பையன்கள். அப்போது ஒருவர் பால் கொண்டு வந்து வைத்தார்.
 
‘பால் எதுக்கு?’
 
‘அபிஷேகத்துக்கு..’
 
‘சரி…சரி..வை..’
 
சிறிது நேரம் கழித்து, ஸ்ரீ சுவாமிகள் எழுந்தார்.
 
சட்டென்று ஒரு பையன், பால் பாத்திரத்தைக் கையில்
எடுத்துக் கொண்டு விட்டான். எனக்கு ஆத்திரமாக
வந்தது. பாலை எடுத்துக்கொண்டு போவது என் உரிமை
அல்லவா? அதை,எப்படி இவன் தட்டிப் பறிக்கலாம்?.
 
மெல்லிய குரலில் சொன்னேன்; ‘டேய்,பாலை எங்கிட்டக்
கொடுத்துடு. இல்லே… தொலைச்சுப்புடுவேன் !
ஆமா….கொடுடான்னா…’
 
அவன் கொடுக்காமல் படியேறிக் கொண்டிருந்தான்.
 
ஸ்ரீ சுவாமிகளுக்கு, பாதுகையில் ஏதோ குத்திற்று போலும்.
கழற்றிவிட்டு,என்னைத் தூக்கிக்கொண்டு வரச்சொன்னார்
தூக்கிக் கொண்டேன். என்றாலும்,பால் கைமாறிப்
போய்விட்டதே?- என்ற கோபம் அடங்கவில்லை.
‘மடத்துக்கு வா..உதைப்பேன்…செருப்பால் அடிப்பேன்’
என்றெல்லாம்,அவனுக்கு மட்டும் கேட்கும்படியாக
பொறுமிக் கொண்டே வந்தேன்.
 
ஸ்ரீமடம் வந்ததும், பாதுகையைக் கீழே வைக்கும்படி
ஆக்ஞையாயிற்று.பெரியவாள், காலில் 
போட்டுக்கொண்டு உள்ளே போய்விட்டார்.
 
நான்,சொன்னபடி,அந்தப்பையனை வெளுத்துக்
கட்டி விட்டேன்.!.
 
அன்று சாயங்காலம். ஒரு வீட்டுத் திண்ணையில்
உட்கார்ந்து கொண்டார் பெரியவாள்.
பத்திருபது பேர் கூட்டம்.
 
“இன்னிக்கு- பாலா,பாதுகையா?-என்ற தலைப்பில் பேச்சு என்றார்.
 
எல்லாருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பெரியவா
அவ்வப்போது சிற்றுரை நிகழ்த்துவார்தான்.
ஆனால், அதற்கெல்லாம் தலைப்பு கிடையாது.
ரத்தினம் போன்று தத்துவங்கள் பளிச்சென்று
தெறித்து விழும்.
 
நந்திக்கிராமத்தில்,எதற்கு பட்டாபிஷேகம் தெரியுமோ?..பாதுகைக்கு!
 
சாதாரணமா. காலிலே போட்டுக்கிறதை செருப்புன்னு
சொல்லுவா. அதுதான் பாதரட்சை. அதையே
சந்யாசிகள் போட்டுண்டா, பாதுகை-ன்னு பேர்.
 
“பரதன், ஸ்ரீ ராமனோட பாதுகையை சிம்மாசனத்தில்
வைத்து அபிஷேகங்கள்-பாலாபிஷேகம்!-செய்தான்”
 
“அதனால், பால் ஒசத்தியா?இல்லே,
பாதுகை ஒசத்தியா?…
 
என்று சொல்லிவிட்டு, சட்டென்று, ‘கோவிந்த நாம
சங்கீர்த்தனம்’ என்று புண்டரீகம் போட்டு உரையை
முடித்து விட்டார்.
 
என் பொட்டில்,சம்மட்டியால் தட்டினாற்போல் 
இருந்தது. எவ்வளவு பெரிய பாவி, நான். ரொம்ப ரொம்ப ஒசந்த
பாதுகையை எங்கிட்டக் கொடுத்து, எடுத்துண்டு
வரச் சொல்லியிருக்கா,பெரியவா. 
 
பாதுகையில் ஏதும் குத்தல்லே. எனக்கு அந்த 
பாக்கியத்தைக் கொடுக்கணும் என்பதற்காகவே,
அப்படி ஒரு நாடகம்.பைத்தியக்காரத்தனமாக
அந்தப் பையனைப் போய், தலைகால் புரியாமல் 
அடிச்சேனே…
 
எனக்குக் கிடைச்ச பாக்யத்தை என்னாலே புரிஞ்சுக்க
முடியாமல்,சுவாமி கண்ணை மறைச்சுட்டாரே…
 
இன்றைக்கும் கண்ணீர் துளிக்கத்தான் செய்கிறது