சந்திரன் – சோமன்
செவ்வாய் – நிலமகன்
புதன் – புலவன்
குரு – சீலன்
சுக்கிரன் – கங்கன்
சனி – முதுமகன்
ராகு – கருநாகன்
கேது -செந்நாகன்
| பெயர் | அதிபதி | திசை ஆண்டு | தமிழ் பெயர் | ||
| 1. அஸ்வினி | கேது | 7 | புரவி | ||
| 2. பரணி | சுக்கிரன் | 20 | அடுப்பு | ||
| 3. கார்த்திகை | ஸூரியன் | 6 | அஆரல் | ||
| 4. ரோகிணி | சந்திரன் | 10 | சகடு | ||
| 5. மிருகசீரிடம் | செவ்வாய் | 7 | மான்றலை | ||
| 6. திருவாதிரை | ராகு | 18 | மூதிரை | ||
| 7. புனர்பூசம் | குரு | 16 | கழை | ||
| 8. பூசம் | சனி | 19 | காற்குளம் | ||
| 9. ஆயிலியம் | புதன் | 17 | கட்செவி | ||
| 10. மகம் | கேது | 7 | கொடுநுகம் | ||
| 11. பூரம் | சுக்கிரன் | 20 | கணை | ||
| 12. உத்தரம் | ஸுரியன் | 6 | உத்தரம் | ||
| 13. ஹஸ்தம் | சந்திரன் | 10 | கை | ||
| 14. சித்திரை | செவ்வாய் | 7 | அறுவை | ||
| 15. சுவாதி | ராகு | 18 | விளக்கு | ||
| 16. விசாகம் | குரு | 16 | முறம் | ||
| 17. அனுஷம் | சனி | 19 | பனை | ||
| 18. கேட்டை | புதன் | 17 | துளங்கொலி | ||
| 19. மூலம் | கேது | 7 | குருகு | ||
| 20. பூராடம் | சுக்கிரன் | 20 | உடைகுளம் | ||
| 21. உத்திராடம் | ஸுரியன் | 6 | கடைக்குளம் | ||
| 22. திருவோணம் | சந்திரன் | 10 | முக்கோல் | ||
| 23. அவிட்டம் | செவ்வாய் | 7 | காக்கை | ||
| 24. சதயம் | ராகு | 18 | செக்கு | ||
| 25. பூரட்டாதி | குரு | 16 | நாழி | ||
| 26. உத்திரட்டாதி | சனி | 19 | முரசு | ||
| 27. ரேவதி | புதன் | 17 | தோணி |
| எண் | பெயர் | அதிபதி | டிகிரி | தமிழ் மாதம் | |
| 1 | மேஷம் | செவ்வாய் | 0 – 30 | சித்திரை | |
| 2 | ரிஷபம் | சுக்கிரன் | 31 – 60 | வைகாசி | |
| 3 | மிதுனம் | புதன் | 61 – 90 | ஆனி | |
| 4 | கடகம் | சந்திரன் | 90 – 120 | ஆடி | |
| 5 | சிம்மம் | ஸூர்யன் | 121 – 150 | ஆவணி | |
| 6 | கன்னி | புதன் | 151 – 180 | புரட்டாசி | |
| 7 | துலாம் | சுக்கிரன் | 181 – 210 | ஐப்பசி | |
| 8 | விருச்சிகம் | செவ்வாய் | 211 – 240 | கார்த்திகை | |
| 9 | தனுசு | குரு | 241 – 270 | மார்கழி | |
| 10 | மகரம் | சனி | 271 – 300 | தை | |
| 11 | கும்பம் | சனி | 310 – 330 | மாசி | |
| 12 | மீனம் | குரு | 331 -360 | பங்குனி | |
குறிப்பு: ராசிக்கான தமிழ் மாதம் என கொள்க
1. மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா
2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு
3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு
4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.
5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.
6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு
7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு
8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு
9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு
10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு
11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.
12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு
13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்
14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்
15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா
16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்
17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா
18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்
19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்
20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு
21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா
22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்
23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உபதேசபீடம்)ஹரியானா
24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு
25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்
26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா
27. மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா
28. அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்
29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு
30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா
31. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு
32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்
33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்
34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு
35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு
36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு
37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு
38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு
39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு
40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்
41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்
42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்
43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா
44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்
45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்
46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா
47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்
48. மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்
49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா
50. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர்- (விரஜாபீடம்) உ.பி.
51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத்
இந்த கலியுகத்தில் உள்ள அனைத்து ஜீவாத்மாவும், பரமாத்மாவிடம் சேரவேண்டும். கலியுகத்தில் தர்மங்களை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீமகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்தார். ஸ்ரீமகாவிஷ்ணு எடுத்த பல அவதாரங்களில் நரசிங்க அவதாரமும் ஒன்று.
இத்திருக்கோவில் தோற்றம் குறித்து திருவிளையாடல் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திருத்தலம், மலையை குடைந்து அமைக்கப்பட்ட குடவறை கோவிலாகும். கோவில் சன்னதிக்குள் நுழைந்தவுடன் தொடக்கத்தில் கருட மண்டபம் காட்சியளிக்கிறது.
இங்குள்ள பெருந்தூண்கள் கி.பி. 16-ம் நூற்றாண்டு விசயநகர வேந்தர் பாணியில் விளங்குகின்றன. இந்த குடவறை கோவில் சிறிய சதுரமான கருவறையாக உள்ளது. இக்கருவறையில் யோகாசனத்தில் குத்திட்டு அமர்ந்த கோலத்தில் நரசிம்மர் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.
இந்த உருவம் தனியாக செய்யாமல் பாறையிலேயே வெட்டி செதுக்கப்பட்டுள்ளது விசேஷமானதாகும். நரசிங்க பெருமாள் கோவில் பெரிய திருச்சுற்று சுவருக்குள் நரசிங்க பெருமாள் சன்னதி, நரசிங்கவல்லி தாயார் சன்னதி என்று 2 சன்னதிகளை கொண்டு விளங்குகிறது.
இக்கோவிலுக்குள் நுழைந்தவுடன் வடபுறம் நரசிங்கவல்லி தாயார் கோவில் அமைந்துள்ளது. கருவறையின் உள்ளே சுகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் கருணை பொழியும் முகத்துடன் தோற்றமளிக்கிறார்.
தாயாரின் மகிமை :
நரசிங்கவல்லி தாயார் என அழைக்கப்படுகிற மகாலட்சுமியை வணங்கினால் 16 வகையான செல்வங்களும் பெற்று இன்புற்று வாழலாம். மேலும் பல பலன்கள் கூறப்பட்டுள்ளது.
நீண்ட நாள் திருமணமாகாமல் இருந்தால் இரண்டு மாலைகள் வாங்கி அம்பாளுக்கு சாத்தி பூஜை செய்துவிட்டு ஒரு மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டு 11 முறை சுற்றி வணங்கிவிட்டு வீட்டில் வைத்தால் ஒருசில மாதங்களிலேயே தாயாரின் அருளாளால் திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது.
இதேபோல குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 12 வாரங்கள் அம்பாளுக்கு ஐந்து நெய்விளக்கு ஏற்றி வணங்கினால் குழந்தைச்செல்வம் கிடைக்கும் என்றும், படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்கள் வேலை கிடைக்க வேண்டி ஐந்து வாரங்கள் செவ்வாய்தோறும் நரசிங்க பெருமாளுக்கு நெய் விளக்கு ஏற்றினால் வேலை கிடைக்கும் எனவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.
பாவங்கள் போக்கும் தீர்த்தம் :
திருக்கோவிலின் வெளிப்புறத்தினையொட்டி வடதிசையில் அழகிய தாமரைக்குளம் ஒன்று உள்ளது. இதில் உள்ள தீர்த்தத்தினை “சக்கரத்தீர்த்தம்” என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.
இத்தீர்த்தமானது, அனைத்து புண்ணிய நதிகளுக்கும் ஒப்பானது என்றும், இத்தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீநரசிம்மரை வழிபட்டால் நாம் செய்த அனைத்து பாவங்களும் தீர்ந்து, எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றும், நவராத்திரி விழாவின்போது வெள்ளிக்கிழமை அன்றும் பல்வேறு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த பூஜையில் கலந்துகொண்டு சுவாமி, அம்பாளை வணங்கினால் கோடி நண்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது என்றால் அது மிகையாகாது.
பாண்டிய மன்னரின் அமைச்சராக இருந்த மாறங்காரி என்பவர் யானை மலையில் கி.பி. 770-ல் நரசிங்க பெருமாளுக்கு ஒரு குகைக்கோவிலை அமைத்தார் என்று அங்குள்ள வட்டெழுத்து சாசனங்கள் கூறுகிறது. இந்த ஆனைமலை பகுதியில் கி.பி. 7-ம் நூற்றாண்டில் சமண முனிவர்கள் வாழ்ந்துள்ளதை தமது மதுரை பதிகத்தில் திருஞான சம்பந்தர் குறிப்பிட்டு இருக்கிறார்.
யானை மலை வரலாறு :
இந்த யானைமலைக்கு ஒரு கதை உண்டு. அதாவது பாண்டிய மன்னனை வீரத்தால் வெல்ல முடியாத சோழ மன்னன் சூழ்ச்சியாலும், மந்திரத்தாலும் அவனை அழிக்க கருதினான். அதற்காக உதவியை நாடி தன் நாட்டு சமணர்களுக்கு ஓலை அனுப்பினான்.
சமணர்களும் அதற்கு சம்மதித்து அசோக மரத்தின் நிழலில் பெரும் யாகத்தீயை வளர்த்தனர். இதிலிருந்து மூன்றுலகமும் நடுங்கச்செய்யும் பெரும் யானை ஒன்றை வெளிவரச்செய்தனர். மதுரையோடு பாண்டியனையும் அழிக்கும்படி அந்த யானைக்கு ஆணையிட்டனர்.
பெரும் முழக்கத்துடன் மதுரை நோக்கி வருவதை அறிந்த பாண்டியன மன்னன், அஞ்சி சிவபெருமானிடத்தில் அதனை தடுக்குமாறு வேண்டினான். உடனே அசரீரி மூலம் மதுரைக்கு வெளியே கிழக்கு பக்கத்தில் அட்டாவை மண்டபம் கட்டுமாறு பாண்டியனுக்கு உத்தரவிடப்பட்டது.
அந்த மண்டபத்தின் மீது அட்டாவை சேவகனாய் சிவபெருமான் தோன்றினார். பின்னர் நரசிங்காஸ்திரத்தால் சமணர்கள் ஏவிய யானையை அழித்தார். அதுவே தற்போதுள்ள யானைமலையாகும். இக்குன்றத்திலேயே நரசிங்க பெருமாளுக்கு கோவில் ஒன்றை பாண்டிய மன்னன் ஆட்சியில் கட்டப்பட்டதாகவும் திருவிளையாடல் புராணம் உணர்த்துகிறது.
சக்கர தீர்த்தத்தில் நீராடிய சிவன் :
சிவபெருமான், பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றை கொய்ததினால் ஏற்பட்ட பிரம்மகத்தி தோஷம் நீங்குவதற்காக கெஜரி ஷேத்திரமாகிய யானைமலையின் அடிவாரத்தில் உள்ள சக்கரத் தீர்த்தத்தில் சிவபெருமான் நீராடி ஒரு மண்டல காலம் நரசிம்மரை வழிபட்டு பிரம்மகத்தி தோஷம் நீக்கியதாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து ரோக நிவாரணி :
இங்குள்ள தெப்பக்குளத்தில் புவியியல் சத்து நிறைந்த நீரை உடையது என்றும் அனைத்து ரோக நிவாரணி என்றும் இயற்கையாகவே பல மூலிகை நீரை கொண்டதால்தான் பல நோய்களை போக்குவதுடன் பாவங்களையும் போக்கும் என பத்துப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் மரபாக விளங்குவது தாய்த்தெய்வ வழிபாடு. பழங்குடிமக்கள் வணங்கிய பழையோள், கொற்றவை, காளி போன்ற பெண்தெய்வங்களின் மறுவடிவமே இசக்கியம்மனாக விளங்குகிறது. அன்னை பார்வதி உலகை இயக்குபவளாக இருப்பவள். அதனால், அவளுக்கு இயக்கி என்று பெயர். அப்பெயரே இசக்கி என மருவி வழங்குவதாக கூறுவர்.
உக்ரதெய்வமான இசக்கியம்மன் இங்கு சாந்த கோலத்தில் அமைதியாக காட்சியளிக்கிறாள். இடக்கையில் குழந்தையும், வலக்கையில் திரிசூலமும் இருப்பது அவளின் கருணை, வீரத்தை வெளிப்படுத்துகிறது.
குழந்தையை கையால் அரவணைத்து காப்பதுபோல, தன்னை நாடிவரும் அன்பர்களை அரவணைத்து அருள்புரிகிறாள். நீதிதெய்வமாக இருந்து தர்மத்தை நிலைநாட்டுவதன் அடையாளமாக தலையில் நெருப்புக்கிரீடம் தாங்கியிருக்கிறாள்.
கன்னியாகுமரி முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் மாதிரியிலும், தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் உருவஅமைப்பிலும் இக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தை வரம் தருபவளாகவும், குழந்தைகளை நோய்நொடியிலிருந்து காப்பவளாகவும் இங்கு வீற்றிருக்கிறாள்.
ஆடித்திருவிழா: இங்கு தமிழ்மந்திரம் சொல்லி வழிபாடு நடத்தப்படுகிறது. செவ்வாய், வெள்ளியன்று மாலை 6மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். குழந்தைகள், பெண்கள் அம்மனுக்கு தாங்களே அபிஷேகம் செய்து வழிபடலாம். ஆடியில் மூன்றுநாட்கள் திருவிழா உண்டு.
பிரார்த்தனை:
திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.அம்மனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
முகவரி:
அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோவில்,
ஓம் சக்தி நகர்,
கள்ளிக்குப்பம்,
அம்பத்தூர்,
சென்னை.
போன்: +91 98407 36575.