Home Blog Page 6357

நவகிரகங்களும் அதன் தமிழ் பெயரும்

சூரியன் – திவாகரன்
சந்திரன் – சோமன்
செவ்வாய் – நிலமகன்
புதன் – புலவன்
குரு – சீலன்
சுக்கிரன் – கங்கன்
சனி – முதுமகன்
ராகு – கருநாகன்
கேது -செந்நாகன்

27 நக்ஷத்ரங்களும் அதன் தமிழ் பெயர்களும்

பெயர்அதிபதி
திசை ஆண்டு
தமிழ் பெயர்
1. அஸ்வினிகேது7புரவி
2. பரணிசுக்கிரன்20அடுப்பு
3. கார்த்திகைஸூரியன்6அஆரல்
4. ரோகிணிசந்திரன்10சகடு
5. மிருகசீரிடம்செவ்வாய்7மான்றலை
6. திருவாதிரைராகு18மூதிரை
7. புனர்பூசம்குரு16கழை
8. பூசம்சனி19காற்குளம்
9. ஆயிலியம்புதன்17கட்செவி
10. மகம்கேது7கொடுநுகம்
11. பூரம்சுக்கிரன்20கணை
12. உத்தரம்ஸுரியன்6உத்தரம்
13. ஹஸ்தம்சந்திரன்10கை
14. சித்திரைசெவ்வாய்7அறுவை
15. சுவாதிராகு18விளக்கு
16. விசாகம்குரு16முறம்
17. அனுஷம்சனி19பனை
18. கேட்டைபுதன்17துளங்கொலி
19. மூலம்கேது7குருகு
20. பூராடம்சுக்கிரன்20உடைகுளம்
21. உத்திராடம்ஸுரியன்6கடைக்குளம்
22. திருவோணம்சந்திரன்10முக்கோல்
23. அவிட்டம்செவ்வாய்7காக்கை
24. சதயம்ராகு18செக்கு
25. பூரட்டாதிகுரு16நாழி
26. உத்திரட்டாதிசனி19முரசு
27. ரேவதிபுதன்17தோணி

12 ராசிகள்

எண்பெயர்அதிபதிடிகிரிதமிழ் மாதம்
1மேஷம்செவ்வாய்0 – 30சித்திரை
2ரிஷபம்சுக்கிரன்31 – 60வைகாசி
3மிதுனம்புதன்61 – 90ஆனி
4கடகம்சந்திரன்90 – 120ஆடி
5சிம்மம்ஸூர்யன்121 – 150ஆவணி
6கன்னிபுதன்151 – 180புரட்டாசி
7துலாம்சுக்கிரன்181 – 210ஐப்பசி
8விருச்சிகம்செவ்வாய்211 – 240கார்த்திகை
9தனுசுகுரு241 – 270மார்கழி
10மகரம்சனி271 – 300தை
11கும்பம்சனி310 – 330மாசி
12மீனம்குரு331 -360பங்குனி

குறிப்பு: ராசிக்கான தமிழ் மாதம் என கொள்க

rasi - 2026

அம்மனின் 51 சக்தி பீடங்கள்

அம்மனின் 51 சக்தி பீடங்கள்

maa durga devi - 2026

1. மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா
2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு
3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு
4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.
5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.
6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு
7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு
8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு
9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு
10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு
11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.
12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு
13.  வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்
14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்
15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா
16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்
17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா
18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்
19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்
20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு
21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா
22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்
23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உபதேசபீடம்)ஹரியானா
24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு
25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்
26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா
27. மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா
28. அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்
29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு
30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா
31. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு
32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்
33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்
34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு
35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு
36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு
37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு
38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு
39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு
40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்
41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்
42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்
43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா
44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்
45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்
46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா
47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்
48. மந்த்ரிணி-கயை-  (திரிவேணிபீடம்) பீகார்
49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா
50. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர்- (விரஜாபீடம்) உ.பி.
51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத்

பன்னிரு ஆழ்வார்கள்

எண்        பன்னிரு ஆழ்வார்கள்
       
1        பொய்கையாழ்வார்
2        பூதத்தாழ்வார்
3        பேயாழ்வார்
4        திருமழிசையாழ்வார்
5        நம்மாழ்வார்
6        மதுரகவி ஆழ்வார்
7        குலசேகர ஆழ்வார்
8        பெரியாழ்வார்
9        ஆண்டாள்
10        தொண்டரடிப்பொடியாழ்வார்
11        திருப்பாணாழ்வார்
12        திருமங்கையாழ்வார்

12 %E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D - 2026

நாயன்மார்களின் பட்டியல்

எண்        பெயர்
1        அதிபத்தர்
2        அப்பூதியடிகள்
3        அமர்நீதி நாயனார்
4        அரிவட்டாயர்
5        ஆனாய நாயனார்
6        இசைஞானியார்
7        இடங்கழி நாயனார்
8        இயற்பகை நாயனார்
9        இளையான்குடிமாறார்
10        உருத்திர பசுபதி நாயனார்
11        எறிபத்த நாயனார்
12        ஏயர்கோன் கலிகாமர்
13        ஏனாதி நாதர்
14        ஐயடிகள் காடவர்கோன்
15        கணநாதர்
16        கணம்புல்லர்
17        கண்ணப்பர்
18        கலிய நாயனார்
19        கழறிற்ற்றிவார்
20        கழற்சிங்கர்
21        காரி நாயனார்
22        காரைக்கால் அம்மையார்
23        குங்கிலியகலையனார்
24        குலச்சிறையார்
25        கூற்றுவர்
26        கலிக்கம்ப நாயனார்
27        கோச் செங்கட் சோழன்
28        கோட்புலி நாயனார்
29        சடைய நாயனார்
30        சண்டேஸ்வர நாயனார்
31        சத்தி நாயனார்
32        சாக்கியர்
33        சிறப்புலி நாயனார்
34        சிறுதொண்டர்
35        சுந்தரமூர்த்தி நாயனார்
36        செருத்துணை நாயனார்
37        சோமசிமாறர்
38        தண்டியடிகள்
39        திருக்குறிப்புத் தொண்டர்
40        திருஞானசம்பந்தமூர்த்தி
41        திருநாவுக்கரசர்
42        திருநாளை போவார்
43        திருநீலகண்டர்
44        திருநீலகண்ட யாழ்ப்பாணர்
45        திருநீலநக்க நாயனார்
46        திருமூலர்
47        நமிநந்தியடிகள்
48        நரசிங்க முனையர்
49        நின்றசீர் நெடுமாறன்
50        நேச நாயனார்
51        புகழ்சோழன்
52        புகழ்த்துணை நாயனார்
53        பூசலார்
54        பெருமிழலைக் குறும்பர்
55        மங்கையர்க்கரசியார்
56        மானக்கஞ்சாற நாயனார்
57        முருக நாயனார்
58        முனையடுவார் நாயனார்
59        மூர்க்க நாயனார்
60        மூர்த்தி நாயனார்
61        மெய்ப்பொருள் நாயனார்
62        வாயிலார் நாயனார்
63        விறன்மிண்ட நாயனார்

சித்தர்களின் பட்டியல்

        சித்தர்களின் பட்டியல்
       
1        அக்கா சுவாமிகள்
2        அருணகிரிநாதர்
3        அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்
4        அழகண்ண சித்தர்
5        அழகர் சுவாமிகள்
6        இராமதேவர்
7        உரோமரிசி
8        ஒடுக்கத்தூர் சுவாமிகள்
9        கண்ணப்ப நாயனார்
10        கதிர்வேல் சுவாமிகள்
11        கம்பர்
12        கம்பளி ஞானதேசிக சுவாமிகள்
13        கமல முனி
14        கன்னிச் சித்தர்
15        காகபுசுண்டர்
16        காசிபர்
17        காடுவெளி சித்தர்
18        குகை நாச்சியார் மகான்
19        குதம்ப்பைச் சித்தர்
20        குமரகுருபரர்
21        குமாரசாமி சித்தர் சுவாமிகள்
22        குரு பாபா ராம்தேவ்
23        குழந்தையானந்த சுவாமிகள்
24        கோட்டூர் சுவாமிகள்
25        கௌதமர்
26        சக்திவேல் பரமானந்த குரு
27        சதாசிவப் பிரம்மேந்திரர்
28        சதுர்முக சுரேஸ்வர சித்தர்,
29        சந்திரானந்தர்
30        சாந்த நந்த சுவாமிகள்
31        சித்தானந்த சுவாமிகள்
32        சிவஞான பாலசித்தர்
33        சிவஞான பாலைய சுவாமிகள்
34        சிவப்பிரகாச அடிகள்
35        சிறுதொண்டை நாயனார்
36        சுந்தரர்
37        சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள்
38        சுப்பிரமணிய சித்தர்
39        சென்னிமலை சித்தர்
40        சேக்கிழார் பெருமான்
41        சேடயோகியார்
42        ஞானகுரு குள்ளச்சாமிகள்
43        ஞானானந்த சுவாமிகள்
44        தகப்பன் மகன் சமாதி
45        தம்பிக்கலையான் சித்தர்
46        தயானந்த சுவாமிகள்
47        தன்வந்தரி
48        தஷிணாமூர்த்தி சுவாமிகள்
49        திரிபலாதர சுரேஸ்வர சித்தர்,
50        திரி மதுர நீற்று முனீஸ்வரர்
51        திருமூலம் நோக்க சித்தர்
52        நடன கோபால நாயகி சுவாமிகள்
53        நந்தி சித்தர்
54        நாகலிங்க சுவாமிகள்
55        நாரதர்
56        நாராயண சாமி அய்யா
57        பகவந்த சுவாமிகள்
58        பஞ்சமுக சுரேஸ்வர சித்தர்
59        பட்டினத்தார்
60        பதஞ்சலி சித்தர்
61        பரமஹம்ச யோகானந்தர்
62        பரமாச்சாரியார்
63        பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள்
64        பாம்பன் சுவாமிகள்
65        புண்ணாக்கீசர்
66        புலத்தியர்
67        பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி
68        பெரியாழ்வார் சுவாமிகள்
69        போதேந்திர சுவாமிகள்
70        மகான் படே சுவாமிகள்
71        மண்ணுருட்டி சுவாமிகள்
72        மாயம்மா
73        மார்க்கண்டேயர்
74        முத்து வடுகநாதர்
75        மெய்வரத் தம்பிரான் சுவாமிகள்
76        மௌன சாமி சித்தர்
77        யுக்தேஸ்வரர்
78        யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்)
79        ரமண மகரிஷி
80        ராகவேந்திரர்
81        ராணி சென்னம்மாள்
82        ராமகிருஷ்ணர், சாரதாதேவியார்
83        ராமானுஜர்
84        ரெட்டியபட்டி சாமிகள்
85        லஷ்மண சுவாமிகள்
86        வரதர்
87        வல்லநாட்டு மகாசித்தர்
88        வள்ளலார்
89        வன்மீக நாதர்
90        வான்மீகி
91        விசுவாமித்திரர்
92        வேதாந்த சுவாமிகள்
93        ஜட்ஜ் சுவாமிகள்
94        ஜமதக்கினி
95        ஷீரடி சாயிபாபா
96        ஸ்கந்த பதுமபலாதி சித்தர்,
97        ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்
98        அகத்தியர்
99        அகத்தியர்
100        அகப்பேய் சித்தர்
101        அழுகண்ணச் சித்தர்
102        அறிவானந்தர்
103        இடைக்காட்டுச் சித்தர்
104        இடைக்காட்டு சித்தர்
105        இராமதேவ சித்தர்
106        இராமலிங்க சுவாமிகள்
107        இராம தேவர்
108        உரோமரிஷி
109        எனாதிச் சித்தர்
110        கடுவெளிச் சித்தர்
111        கணபதி தாசர்
112        கமல முனி
113        கருவூர்சித்தர்
114        கருவூரார்
115        காக புசுண்டர்
116        காரைச் சித்தர்
117        காளங்கி நாதர்
118        காளங்கி நாதர்
119        காளைச் சித்தர்
120        குடைச் சித்தர்
121        குதம்பைச் சித்தர்
122        கைலயக் கம்பளிச் சட்டை முனி
123        கொங்கணர்
124        கொங்கண சித்தர்
125        கோரக்கர்
126        கோரக்கர்
127        சட்டைமுனி
128        சட்டை முனி்
129        சண்டேசர்
130        சிவவாக்கியர்
131        சிவவாக்கியர்
132        சுந்தரானந்தர்
133        சூரியானந்தர்
134        சூரியானந்தர்
135        சோதி முனி
136        டமரகர்
137        தன்வந்திரி
138        திருமூலர்
139        திருமூலர்
140        தேரையர்
141        தேரையர்
142        நந்தீசர்
143        பட்டினத்தார்
144        பத்திரகிரியார்
145        பதஞ்சலியார்
146        பாம்பாட்டி சித்தர்
147        பாம்பாட்டி சித்தர்
148        பீரு முகமது
149        புண்ணாக்கீசர்
150        புலத்தியர்
151        புலிக் கையீசர்
152        புலிப்பாணி
153        புலிப்பாணி
154        பூகண்டம்
155        பூரணானந்தர்
156        பூனைக் கண்ணர்
157        போகர்
158        மச்சமுனி
159        மச்ச முனி
160        மதுரை வாலைச் சாமி
161        வரரிஷி
162        வல்லப சித்தர்
163        வாம தேவர்
164        வாலைகுருசுவாமி
165        வான்மீகர்
166        வியாசர்
167        கடையிற் சுவாமிகள்
168        சித்தானைக்குட்டி சுவாமிகள்
169        சிவயோக சுவாமி
170        சிவாச் சித்தர்
171        செல்லப்பா சுவாமி்
172        பரமகுரு சுவாமிகள்
173        பெரியானைக்குட்டி சுவாமிகள்
174        யாழ்ப்பாணத்துச் சுவாமி

நரசிங்கப் பெருமாள் – மதுரை ஒத்தக்கடை

ஸ்தல வரலாறு:

இந்த கலியுகத்தில் உள்ள அனைத்து ஜீவாத்மாவும், பரமாத்மாவிடம் சேரவேண்டும். கலியுகத்தில் தர்மங்களை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீமகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்தார். ஸ்ரீமகாவிஷ்ணு எடுத்த பல அவதாரங்களில் நரசிங்க அவதாரமும் ஒன்று.

ad9cda11 bdd1 49f9 a763 936fa6429178 S secvpf.gif - 2026
இந்த அவதாரம் ஒரு தூய்மையான விஷ்ணு பக்தர்களுக்காக எடுக்கப்பட்ட அவதாரமாகும். ஸ்ரீவிஷ்ணு மீது அளவு கடந்த பக்தி இருந்தால் நம்மில் உள்ள ஜீவாத்மாவை விஷ்ணு தன்னிடம் சேர்த்து முக்தி அளிப்பார் என்பது ஐதீகம். வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ நரசிங்க பெருமாள் திருக்கோவில் மதுரை அருகே ஒத்தக்கடையில் உள்ளது.

இத்திருக்கோவில் தோற்றம் குறித்து திருவிளையாடல் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திருத்தலம், மலையை குடைந்து அமைக்கப்பட்ட குடவறை கோவிலாகும். கோவில் சன்னதிக்குள் நுழைந்தவுடன் தொடக்கத்தில் கருட மண்டபம் காட்சியளிக்கிறது.

இங்குள்ள பெருந்தூண்கள் கி.பி. 16-ம் நூற்றாண்டு விசயநகர வேந்தர் பாணியில் விளங்குகின்றன. இந்த குடவறை கோவில் சிறிய சதுரமான கருவறையாக உள்ளது. இக்கருவறையில் யோகாசனத்தில் குத்திட்டு அமர்ந்த கோலத்தில் நரசிம்மர் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.

இந்த உருவம் தனியாக செய்யாமல் பாறையிலேயே வெட்டி செதுக்கப்பட்டுள்ளது விசேஷமானதாகும். நரசிங்க பெருமாள் கோவில் பெரிய திருச்சுற்று சுவருக்குள் நரசிங்க பெருமாள் சன்னதி, நரசிங்கவல்லி தாயார் சன்னதி என்று 2 சன்னதிகளை கொண்டு விளங்குகிறது.

இக்கோவிலுக்குள் நுழைந்தவுடன் வடபுறம் நரசிங்கவல்லி தாயார் கோவில் அமைந்துள்ளது. கருவறையின் உள்ளே சுகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் கருணை பொழியும் முகத்துடன் தோற்றமளிக்கிறார்.

தாயாரின் மகிமை :

நரசிங்கவல்லி தாயார் என அழைக்கப்படுகிற மகாலட்சுமியை வணங்கினால் 16 வகையான செல்வங்களும் பெற்று இன்புற்று வாழலாம். மேலும் பல பலன்கள் கூறப்பட்டுள்ளது.

நீண்ட நாள் திருமணமாகாமல் இருந்தால் இரண்டு மாலைகள் வாங்கி அம்பாளுக்கு சாத்தி பூஜை செய்துவிட்டு ஒரு மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டு 11 முறை சுற்றி வணங்கிவிட்டு வீட்டில் வைத்தால் ஒருசில மாதங்களிலேயே தாயாரின் அருளாளால் திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது.

இதேபோல குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 12 வாரங்கள் அம்பாளுக்கு ஐந்து நெய்விளக்கு ஏற்றி வணங்கினால் குழந்தைச்செல்வம் கிடைக்கும் என்றும், படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்கள் வேலை கிடைக்க வேண்டி ஐந்து வாரங்கள் செவ்வாய்தோறும் நரசிங்க பெருமாளுக்கு நெய் விளக்கு ஏற்றினால் வேலை கிடைக்கும் எனவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

பாவங்கள் போக்கும் தீர்த்தம் :

திருக்கோவிலின் வெளிப்புறத்தினையொட்டி வடதிசையில் அழகிய தாமரைக்குளம் ஒன்று உள்ளது. இதில் உள்ள தீர்த்தத்தினை “சக்கரத்தீர்த்தம்” என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.

இத்தீர்த்தமானது, அனைத்து புண்ணிய நதிகளுக்கும் ஒப்பானது என்றும், இத்தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீநரசிம்மரை வழிபட்டால் நாம் செய்த அனைத்து பாவங்களும் தீர்ந்து, எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றும், நவராத்திரி விழாவின்போது வெள்ளிக்கிழமை அன்றும் பல்வேறு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த பூஜையில் கலந்துகொண்டு சுவாமி, அம்பாளை வணங்கினால் கோடி நண்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது என்றால் அது மிகையாகாது.

பாண்டிய மன்னரின் அமைச்சராக இருந்த மாறங்காரி என்பவர் யானை மலையில் கி.பி. 770-ல் நரசிங்க பெருமாளுக்கு ஒரு குகைக்கோவிலை அமைத்தார் என்று அங்குள்ள வட்டெழுத்து சாசனங்கள் கூறுகிறது. இந்த ஆனைமலை பகுதியில் கி.பி. 7-ம் நூற்றாண்டில் சமண முனிவர்கள் வாழ்ந்துள்ளதை தமது மதுரை பதிகத்தில் திருஞான சம்பந்தர் குறிப்பிட்டு இருக்கிறார்.

யானை மலை வரலாறு :

இந்த யானைமலைக்கு ஒரு கதை உண்டு. அதாவது பாண்டிய மன்னனை வீரத்தால் வெல்ல முடியாத சோழ மன்னன் சூழ்ச்சியாலும், மந்திரத்தாலும் அவனை அழிக்க கருதினான். அதற்காக உதவியை நாடி தன் நாட்டு சமணர்களுக்கு ஓலை அனுப்பினான்.

சமணர்களும் அதற்கு சம்மதித்து அசோக மரத்தின் நிழலில் பெரும் யாகத்தீயை வளர்த்தனர். இதிலிருந்து மூன்றுலகமும் நடுங்கச்செய்யும் பெரும் யானை ஒன்றை வெளிவரச்செய்தனர். மதுரையோடு பாண்டியனையும் அழிக்கும்படி அந்த யானைக்கு ஆணையிட்டனர்.

பெரும் முழக்கத்துடன் மதுரை நோக்கி வருவதை அறிந்த பாண்டியன மன்னன், அஞ்சி சிவபெருமானிடத்தில் அதனை தடுக்குமாறு வேண்டினான். உடனே அசரீரி மூலம் மதுரைக்கு வெளியே கிழக்கு பக்கத்தில் அட்டாவை மண்டபம் கட்டுமாறு பாண்டியனுக்கு உத்தரவிடப்பட்டது.

அந்த மண்டபத்தின் மீது அட்டாவை சேவகனாய் சிவபெருமான் தோன்றினார். பின்னர் நரசிங்காஸ்திரத்தால் சமணர்கள் ஏவிய யானையை அழித்தார். அதுவே தற்போதுள்ள யானைமலையாகும். இக்குன்றத்திலேயே நரசிங்க பெருமாளுக்கு கோவில் ஒன்றை பாண்டிய மன்னன் ஆட்சியில் கட்டப்பட்டதாகவும் திருவிளையாடல் புராணம் உணர்த்துகிறது.

சக்கர தீர்த்தத்தில் நீராடிய சிவன் :

சிவபெருமான், பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றை கொய்ததினால் ஏற்பட்ட பிரம்மகத்தி தோஷம் நீங்குவதற்காக கெஜரி ஷேத்திரமாகிய யானைமலையின் அடிவாரத்தில் உள்ள சக்கரத் தீர்த்தத்தில் சிவபெருமான் நீராடி ஒரு மண்டல காலம் நரசிம்மரை வழிபட்டு பிரம்மகத்தி தோஷம் நீக்கியதாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து ரோக நிவாரணி :

இங்குள்ள தெப்பக்குளத்தில் புவியியல் சத்து நிறைந்த நீரை உடையது என்றும் அனைத்து ரோக நிவாரணி என்றும் இயற்கையாகவே பல மூலிகை நீரை கொண்டதால்தான் பல நோய்களை போக்குவதுடன் பாவங்களையும் போக்கும் என பத்துப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இசக்கி அம்மன் – அம்பத்தூர் ஓம் சக்திநகர்

தலபெருமை: 

தமிழர்களின் மரபாக விளங்குவது தாய்த்தெய்வ வழிபாடு. பழங்குடிமக்கள் வணங்கிய பழையோள், கொற்றவை, காளி போன்ற பெண்தெய்வங்களின் மறுவடிவமே இசக்கியம்மனாக விளங்குகிறது. அன்னை பார்வதி உலகை இயக்குபவளாக இருப்பவள். அதனால், அவளுக்கு இயக்கி என்று பெயர். அப்பெயரே இசக்கி என மருவி வழங்குவதாக கூறுவர்.

isakki - 2026
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இசக்கியம்மன் வழிபாடு அதிகம். சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் ஓம்சக்திநகரில் இசக்கியம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மன் ஓம்சக்தி இசக்கியம்மன் என்று அழைக்கப்படுகிறது.

உக்ரதெய்வமான இசக்கியம்மன் இங்கு சாந்த கோலத்தில் அமைதியாக காட்சியளிக்கிறாள்.  இடக்கையில் குழந்தையும், வலக்கையில் திரிசூலமும் இருப்பது அவளின் கருணை, வீரத்தை வெளிப்படுத்துகிறது.

குழந்தையை கையால் அரவணைத்து காப்பதுபோல, தன்னை நாடிவரும் அன்பர்களை அரவணைத்து அருள்புரிகிறாள். நீதிதெய்வமாக இருந்து தர்மத்தை நிலைநாட்டுவதன் அடையாளமாக தலையில் நெருப்புக்கிரீடம் தாங்கியிருக்கிறாள்.

கன்னியாகுமரி முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் மாதிரியிலும், தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் உருவஅமைப்பிலும் இக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தை வரம் தருபவளாகவும், குழந்தைகளை நோய்நொடியிலிருந்து காப்பவளாகவும் இங்கு வீற்றிருக்கிறாள்.

ஆடித்திருவிழா: இங்கு தமிழ்மந்திரம் சொல்லி வழிபாடு நடத்தப்படுகிறது. செவ்வாய், வெள்ளியன்று மாலை 6மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். குழந்தைகள், பெண்கள் அம்மனுக்கு தாங்களே அபிஷேகம் செய்து வழிபடலாம். ஆடியில் மூன்றுநாட்கள் திருவிழா உண்டு.

பிரார்த்தனை:

திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.அம்மனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

முகவரி:

அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோவில்,
ஓம் சக்தி நகர்,
கள்ளிக்குப்பம்,
அம்பத்தூர்,
சென்னை. 

போன்:   +91 98407 36575.

இருப்பிடம்: அம்பத்தூர் ஓ.டி.பஸ்ஸ்டாண்டில் இருந்து செங்குன்றம் (ரெட்ஹில்ஸ்) ரோட்டில் 3 கி.மீ., தூரத்தில் கள்ளிக்குப்பம். இங்கிருந்து பிரியும்ரோட்டில் ஒரு கி.மீ., தூரத்தில் ஓம்சக்திநகர். 

சபரிமலை சந்நிதானம் மேல்சாந்தி தேர்வு

கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள் இன்று தேர்வு செய்யப்பட்டனர்.
259 003 - 2026
சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் கோயில்களுக்கு கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கு மேல்சாந்திகள் புதிதாக தேர்வு செய்யப்படுகின்றனர். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்கள் ஆண்டு முழுவதும் சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்ய வேண்டும்.
இந்நிலையில், மேல்சாந்தி குலுக்கல் தேர்வு இன்று காலை சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்றது. பந்தளம் அரண்மனையை சேர்ந்தவர்கள்தான் மேல்சாந்தி குலுக்கல் தேர்வு செய்ய வேண்டும் என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்த எல்.கே.ஜி. மாணவன் வியாஸ்வர்மா சபரிமலை மேல்சாந்திக்கான துண்டு சீட்டுகளை எடுத்தார். ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்ட 16 பேர் பெயர் எழுதப்பட்ட துண்டு சீட்டுகள் ஒரு பாத்திரத்திலும், மற்றொரு பாத்திரத்தில் 15 எழுதப்படாத துண்டு சீட்டுகளும், ஒரு சீட்டில் மேல்சாந்தி என்று எழுதியும் போடப்பட்டது. இதில் 12-வது முறை எடுக்கப்பட்ட சீட்டில் எர்ணாகுளம் கோதமங்கலத்தை சேர்ந்த பி.கே. நாராயணன் நம்பூதிரி பெயருக்கு நேராக மேல்சாந்தி சீட்டு வந்ததை தொடர்ந்து அவர் தேர்வு செய்யப்பட்டார்.
இதுபோல மாளிகைப்புறம் கோயிலுக்கான தேர்வில் மூன்றாம் வகுப்பு மாணவி கவுதமி துண்டு சீட்டுகளை எடுத்தார். ஒன்பது பேர் பட்டியலில் 3-வது பெயராக பி.எம். மனோஜ் பெயருக்கு நேராக மேலசாந்தி சீட்டு வந்ததை தொடர்ந்து அவர் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே சபரிமலையில் மேல்சாந்தியின் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.