December 7, 2025, 12:28 AM
25.6 C
Chennai
Home Blog Page 6359

தென்றலில் இருந்துதான்; ஆனால் வீசுவது புயல்!

thendral - 2025
வட அமெரிக்கத் தமிழர்கள் சார்பில் நடத்தப்படும்
தென்றல் மாத இணைய இதழிலிலிருந்து…
மனத்துள் புயலை வீசச்செய்யும் ஒரு கடிதம்…

ஹிட்லரின் தீர்க்கதரிசனம்– |ஏப்ரல் 2009

என்னுடைய பெயர் ப்ரியா. வயது 14. நான் ரொறொன்ரோவில் உள்ள நடுநிலைப் பள்ளியில் எட்டாவது படிக்கிறேன். என்னுடைய பெற்றோர் இலங்கையிலிருந்து வந்து அகதிகளாகக் குடியேறிய தமிழர்கள். நான் பிறந்தது கனடாவில். எனக்குத் தமிழ் எழுதவோ வாசிக்கவோ கதைக்கவோ தெரியாது. நான் ஆங்கிலத்தில் படிக்கிறேன். ஒரு மருத்துவராக வரவேண்டும் என்பது என் கனவு.

என் பெற்றோரின் சொல்லைக் கேட்காமல் வெள்ளை மாளிகை முன்பு பிப்ரவரி 20ம் தேதி நடக்கப்போகும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொள்ள முடிவு செய்தேன். இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் தினம்தினம் ராணுவத்தினரால் கொல்லப்படுவதைக் கண்டிப்பதுதான் இந்த நிகழ்வு. ரொறொன்ரோவில் இருந்து நூற்றுக் கணக்கான பஸ்களும் வான்களும் கார்களும் புறப்பட்டன. நானும் அதில் சேர்ந்து கொண்டேன். பத்து மணி நேரம் பயணம் செய்து வெள்ளை மாளிகைக்கு முன்னால் காலை 11 மணிக்குக் கூடினோம். அமெரிக்காவின் பல மாகாணங்களிலிருந்தும் தமிழ் மக்கள் அங்கே வந்து திரளாகக் குழுமியிருந்தனர்.

இந்தப் பிரயாணம் எங்களுக்கு இலகுவாக அமையவில்லை. நாங்கள் ஏற்பாடு செய்திருந்த பேருந்து எதிராளிகள் செய்த சதியில் கைமாறிவிட்டது. ஆறுதல் சொல்லவேண்டிய பஸ் சொந்தக்காரர் எங்கள்மேல் ஆத்திரப்பட்டார். நான் “நீங்கள் முன்பு எனக்கு அப்பாவாக இருந்தீர்களா?” என்று கேட்டேன். அவர் “என்ன, என்ன?” என்றார். “நீங்களும் என்மேல் அப்பாவைப் போல பாய்கிறீர்கள்” என்றேன். பின்னர் ஒருமாதிரி சமாதானமாகி வேறு வாகனம் பிடித்துத் தந்தார். அதில் இரவிரவாக நானும் பல மாணவர்களும் பயணம் செய்தோம்.

இலங்கையில் நடக்கும் தமிழ் இனப் பேரழிவை உலகத்தின் கவனத்துக்கு கொண்டுவருவதும், போரை நிறுத்தக் கோருவதுமே இந்தப் போராட்டத்தின் நோக்கம். வாஷிங்டன் காலநிலை பூஜ்யத்துக்கு கீழே 5 டிகிரி. நாங்கள் தக்க குளிராடைகள் அணிந்திருந்தாலும் குளிர் நெஞ்செலும்பைத் தொட்டது. குதிரைகளில் வீற்றிருந்த வெள்ளை மாளிகைப் பொலீஸார் முன்னிலையில் ‘நீங்கள் ரத்தம் கொட்டுகிறீர்கள்; நாங்கள் கண்ணீர் கொட்டுகிறோம்’ என்றும் ‘ஒபாமா ஒபாமா, எங்களைக் காப்பாற்று’ என்றும் குரல் எழுப்பினோம். பார்ப்பவர்களுக்கு உலகம் எங்களைக் கைவிட்ட நிலையில் நாங்கள் எடுக்கும் கடைசி முயற்சி என்பது தெரிந்திருக்கும்.

சமீபத்தில் ஐ.நா. விசேட தூதுவர் இலங்கை ராணுவத்துக்குச் சொன்னார் ‘யுத்தம் தொடர்ந்தாலும் பொதுமக்கள் சாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று. அவருடைய உச்சமான கண்ணீர் கலந்த புத்திமதி இதுதான். இரண்டே வார்த்தைகள் ‘போரை நிறுத்தவும்’ அவருடைய தொண்டையில் இருந்து வெளியே வராமல் வார்த்தை அடைத்துக்கொண்டது. இதைச் சொல்வதற்கா அவர் முதல் வகுப்பில் 10,000 மைல்கள் விமானத்தில் பறந்து சென்றார்?

சரி, ஒரேயொரு கேள்வி கேட்டிருக்கலாம், அவர் அதையும் செய்யவில்லை. ஒரு நாட்டின் குடிமகன் தன் நாட்டில் எங்கே வேண்டுமானாலும் போகலாம், வரலாம். அது அவன் குடியுரிமை. நாட்டு மக்களின் ஒரு பகுதியினரை முள்ளுக்கம்பி வேலி போட்டு அடைத்து வைப்பது என்ன நியாயம்? அவர்கள் வேற்று நாட்டைச் சேர்ந்தவர்களா? அல்லது அவர்களுக்கு வேறு நாடு கொடுக்கப் போகிறார்களா? என் தாத்தா அடிக்கடி சொல்வார் ‘தமிழர்கள் சபிக்கப்பட்ட இனம்’ என்று. அது என் கண் முன்னால் ஒவ்வொரு கணமும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

நாங்கள் இவ்வளவு தூரம் பயணம் செய்து இந்தப் போராட்டத்தை நடத்தியது ஒரு துளிக் கடைசி நம்பிக்கை இருந்தபடியால்தான். எல்லாக் காசும் செலவழிந்த பிறகு முடிவில் எஞ்சியிருக்கும் ஒரு டொலர் குற்றிபோல. ஒபாமா ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். கொடுமை அவருக்கு அந்நியமானதல்ல. அவர் கன்னத்தில் கண்ணீர் வழிந்து ஓடியிருக்கிறது. நித்தமும் குண்டுகள் விழுந்து அப்பாவித் தமிழர்கள் செத்து மடிவதைக் கண்டு அவர் மனம் இரங்கலாம்; போரை நிறுத்த உதவலாம்.

மூன்று லட்சம் தமிழர்கள் வாழும் கனடாவில் எங்கள் இன அழிப்புப் பிரச்சினையைச் சொல்ல ஒருவருமே இல்லை. உலகத்தில் மிக மோசமாக உதாசீனம் செய்யப்படும் இனம் தமிழ் இனம்.

இரண்டு நாள் முன்பாக ஒபாமா கனடாவுக்கு வந்திருந்தார். அவரை முதலில் சந்தித்தது கனடா நாட்டு ஆளுநர், மிக்கையில் ஜோன், ஒரு கறுப்பினப் பெண். அவர் ஹைட்டியிலிருந்து கனடாவுக்கு புலம் பெயர்ந்தவர். அவர் ஒபாமாவிடம் ஹைட்டி நிலவரத்தை எடுத்துச் சொன்னார். எங்கள் லிபரல் கட்சித் தலைவர் ஒபாமாவுடன் குவண்டனாமா சிறையில் அடைபட்டிருக்கும் ஒரேயொரு சிறைக்கைதி பற்றிப் பேசினார். மூன்று லட்சம் தமிழர்கள் வாழும் கனடாவில் எங்கள் இன அழிப்புப் பிரச்சினையைச் சொல்ல ஒருவருமே இல்லை. உலகத்தில் மிக மோசமாக உதாசீனம் செய்யப்படும் இனம் தமிழ் இனம்.

நான் வெள்ளை மாளிகையின் தெற்குப் பகுதியில் பதாகையுடன் நின்றபோது என்னோடு படிக்கும் மாணவிகளிடமிருந்து செல்பேசியில் குறுஞ்செய்திகள் வந்த வண்ணமே இருந்தன. ‘நீ தமிழா? எதற்காக அங்கே குளிரில் நடுங்கிக்கொண்டு நிற்கிறாய்?’ நான் பதில் அனுப்பவில்லை. கனடாவுக்கு திரும்பும் போதும் இதையே நினைத்துக்கொண்டேன். நான் பிறந்தது கனடாவில், படிப்பது ஆங்கிலத்தில். தமிழ் பேசவோ எழுதவோ தெரியாது. நான் எப்படி தமிழாக முடியும்?

வீட்டுக்கு திரும்பியதும் அப்பா என்னுடைய கோட்டைக் கழற்றி கொழுவியில் மாட்டினார். அம்மா தலையைத் தடவி ஆறுதல் சொன்னார். பாட்டி கோப்பையில் சுடச் சுடச் சாப்பாடு பரிமாறி சாப்பிடச் சொன்னார். தொலைக்காட்சியில் நேற்று திருப்பித் திருப்பி ஒரே காட்சியைக் காட்டினார்கள். இரண்டு நாளில் அந்த ஈழத்துச் சிறுமி நாலு இடம் மாறினாள். அப்படியும் எறிகணை வீச்சில் அவள் செத்துப்போனாள். நான்தான் அந்தச் சிறுமி. நான் தவறிப்போய் இங்கே பிறந்துவிட்டவள். அங்கே எத்தனைபேர் இன்று வீடில்லாமல், உடுப்பில்லாமல், உணவில்லாமல் எப்பொழுது அடுத்த குண்டு விழும் என்று ஆகாயத்தைப் பார்த்தபடி காத்திருக்கிறார்கள்!

எங்கள் வகுப்பில் வரலாறு படிப்பித்த ஆசிரியர் சொன்ன ஹிட்லரின் வாசகம் நினைவுக்கு வருகிறது. ‘பூமி சுழன்று கொண்டிருக்கிறது. மனிதன் மிருகத்தைக் கொல்லலாம் அல்லது மிருகம் மனிதனைச் சாப்பிடலாம், பூமி தொடர்ந்து சுழலும். வலியது வெல்லும் என்பது இயற்கையின் விதி. அது ஒரு போதும் மாறுவதில்லை.’

‘நீ எதற்காக அம்மா போனாய். படிக்கிற வேலையைப் பார்’ என்று சொல்லியபடி படுக்கைப் போர்வையை இழுத்து என்னைப் போர்த்திவிட்டு, அறை லைட்டையும் அணைத்துவிட்டு அம்மா போனார்.

2050ம் ஆண்டில் என் மகள் தன் பூர்வீகத்தைப் பற்றி வரலாற்றில் ஆராய்வாள். இலங்கையில் தன் இனம் முடிந்து போனதைக் கண்டுபிடிப்பாள். அப்போது “அம்மா, இலங்கையில் எங்கள் இனம் அழிந்தபோது நீ என்ன செய்துகொண்டிருந்தாய்?” என்று கேட்பாள். நான் சொல்வேன், “மகளே, வெள்ளை மாளிகையின் முன், பூஜ்யத்துக்கு கீழே ஐந்து டிகிரி குளிரில் ‘இன ஒழிப்பை நிறுத்து’ என்று பதாகைகள் ஏந்திப் போராடிய பத்தாயிரம் சனங்களுடன் நானும் நின்றேன்”.

ப்ரியா, கனடா
தமிழில்: ரஞ்சனி

Dakshinamurthy Sthothram

ஸ்ரீ விருஷபதேவர் அருளிச் செய்த

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தோத்திரம்

அகணித குணகண மப்ரமேயமாத்யம்

ஸகல ஜகத் ஸ்திதி ஸம்யமாதி ஹேதும்

உபரத மநோயோகி ஹ்ருந் மந்திரம்தம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (1)

நிரவதி ஸுகம் இஷ்ட தாதார மீட்யம்

நதஜந மநஸ்தாப பேதைக தக்ஷம்

பவ விபிந தவாக்னி நாமதேயம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (2)

த்ரி புவன குரும் ஆகமைக ப்ரமாணம்

த்ரி ஜகத்காரண ஸூத்ரயோக மாயம்

ரவி சத பாஸ்வரம் ஈஹித ப்ரதானம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (3)

அவிரத பவ பாவனாதி தூரம்

பத பத்மத்வய பாவினா மதூரம்

பவ ஜலதி ஸுதாரணாங்க்ரி போதம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (4)

க்ருத நிலய மநிஸம் வடாக மூலே

நிகம சிகா வ்ராத போதிதைக ரூபம்

த்ருத முதுராங்குளி கம்ய சாரு போதம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (5)

த்ருஹிண ஸுத பூஜிதாங்க்ரி பத்மம்

பதபத்மாநத மோக்ஷ தாந தக்ஷம்

க்ருத குருகுல வாஸ யோநி மித்ரம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (6)

யதி வர ஹ்ருதயே ஸதா விபாந்தம்

ரதி பதி சதகோடி ஸுந்தராங்க மாத்யம்

பரஹித நிரதாத்மனாம் ஸுஸேவ்யம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (7)

ஸ்மித தவள விகாஸிதாந நாப்ஜம்

ச்ருதி ஸுலபம் வ்ருஷாபதிரூட காத்ரம்

ஸித ஜலஜ ஸுஸோப தேஹ காந்திம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (8)

வ்ருஷப க்ருதமிதம் இஷ்ட ஸித்திதம்

குருவர தேவ ஸந்திதௌ படேத்ய:

ஸகல துரித துக்க வர்க ஹாநிம்

வ்ரஜதி சிரம் க்ஞானவான் சம்புலோகம் (9)

Some Dakshinamurthy Temples


திருவலிதாயம் – பாடி:
குருபகவான் தான் செய்த தவறால் தனது தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரைச் சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி, இந்தத் தலத்தில் உறையும் சிவபெருமானை வணங்கினால் பாவம்நீங்கி, அவருக்கு சாபவிமோசனம் கிட்டும் என்று அருளினார். அதன்படி இங்கு வந்த வியாழனாகிய குருபகவான், இங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடி, சுவாமியை வணங்கி அருள் பெற்றார். இந்தத் தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினால் தோஷங்கள் நீங்கும் என்பதும், தலத்து தட்சிணாமூர்த்தியைவணங்கினால் பாவங்கள் விலகும் என்பதும் நம்பிக்கை. இந்தத் தலத்தில் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுகிறது. இறைவனை வணங்கினால் திருமணத்தடை, நோய்கள் போன்றவை நீங்கும் என்றும், தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வணங்கிட, ஞானம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.
சென்னை, பாரிமுனை, கோயம்பேடு, தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதி நிறைய உள்ளன.
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
இலம்பையங்கோட்டூர்:

தேவலோக கன்னிகளான ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகிய மூவரும் இந்தத் தலத்துக்கு வந்து தங்களது அழகு என்றும் குறையாமல் இருக்கவேண்டும் என்று அருளும்படி சிவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்களுக்கு சிவபெருமான், ‘யோக தட்சிணாமூர்த்தியாகக் காட்சி தந்து என்றும் இளமையாக இருக்கும்படி அருள் புரிந்தார். இவரே கோஷ்ட தெய்வமாக சின்முத்திரை தாங்கி, வலது கையை இதயத்தில் வைத்தபடி, வலது பாதத்தை மடக்கி, யோக பட்டையம் தரித்து, அபூர்வமான திருக்கோலத்தில் காட்சிதருகிறார்.
பேரின்ப நிலையில் உள்ள இவரை வணங்கினால் காண்போரை வசீகரிக்கும் பொலிவையும் மன அழகையும் பெறலாம் என்று சொல்கிறார்கள். குறிப்பாக பெண்கள் இவரை வணங்கினால் நல்ல அழகு வாய்க்கப் பெறுவார்களாம். கோயிலின் நுழைவாயிலின் அருகே தேவதைகள் வணங்கிய சிவபெருமான், ரம்பாபுரிநாதராக, 16 பேறுகளை அளிக்கும் வகையில் 16 பட்டைகளுடன் மேற்குநோக்கி காட்சி தருகிறார்.
இந்தத் தலம் காஞ்சிபுரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவு. சென்னை பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கம் சென்று, அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம். இங்கு குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெறுகிறது.
—————————————-

திருநெறிகாரைக்காடு:

பொதுவாக தட்சிணாமூர்த்தி தெய்வத்துக்கு சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வர் மட்டும் இருப்பதாகவே அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்தத் தலத்தில் தட்சிணாமூர்த்திப் பெருமான் ஏழு சீடர்களுக்கு ஞானம் தருவதாக அமைக்கப்பட்டுள்ளது. இது வித்தியாசமான அமைப்பாகும். இவரிடம் வேண்டிக்கொண்டால் தெளிந்த ஞானம் பிறக்கும்.
இந்தத் தலம் கவுதம ரிஷியிடம் சாபம் பெற்ற இந்திரனுக்கு சாப விமோசனம் அளிக்கப்பட்ட தலம். மேலும், பிரகஸ்பதியின் மனைவி தாரையிடம் மையல் கொண்டு, அவள் மூலம் சந்திரனுக்குப் பிறந்த புதன், தான் பிறந்த முறையில் வெறுப்பு கொண்டு, தனியாக இந்தத் தலத்துக்கு வந்து, தனக்கு கிரக பதவி அளிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டிக்கொண்டானாம். சிவபெருமானும் வரம் தர, உரிய காலத்தில் புதனுக்கு கிரக பதவி கிடைத்ததாம். எனவே, இந்தத் தலத்தை புதன் தலமாகவும் கொண்டாடுகிறார்கள்.
இந்தத் தலம் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. திருக்காலிமேடு என்றும் அழைக்கப்படுகிறது இந்தத் தலம்.

————————————————————

சிம்ம தட்சிணாமூர்த்தி – மன்னார்குடி

குருபகவானுக்கு உரியதலமாகப் போற்றப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிம்மராசியில் குருபகவான் பிரவேசிக்கும் போது மகாமகம் வரும். இந்தத் தலத்தில் தட்சிணாமூர்த்தி நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து சிம்ம தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவரை வழிபடுபவர்களுக்கு சிம்மகுருவின் அருள் பரிபூரணமாகக் கிடைக்குமாம்.
ஒருமுறை தட்சிணாமூர்த்தியின் சீடர்கள் நால்வரும் விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டத்துக்குச் சென்றார்களாம். அப்போதுஇவர்களை துவாரபாலகர்கள் தடுக்கவே, இவர்களுக்குக் கோபம் வந்தது. அதனால் முனிவர்கள் துவாரபாலகர்களுக்கு சாபம் கொடுத்தனர். அப்படி சாபம் கொடுத்ததால், முனிவர்கள் நால்வருக்கும் தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்கவேண்டும் என்பதற்காக இந்தத் தலத்து இறைவன் பாமணி நாகநாதரையும் சிம்ம தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றனராம். சிம்மம், கும்பம், கடகம்,தனுசு, மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களும், லக்னத்துக்குரியவர்களும் சிம்ம தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறப்பான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

வியாழன், அக்டோபர் 25, 2007

கோவை ‘சிறை’ வாசியின்(வாசகனின்) மடல்.

“மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்

தம்மையே தம்ர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தை, தானே

இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, “இராமன்” என்னும்

செம்மைசேர் நாமம் தன்னை, கண்களின் தெரியக் கண்டான்!”

கோவைச்சிறை * 23.08.2006 புதன்

பேரன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய, இராஜபாளையம் கம்பன்கழ‌கப் பொதுச் செயலாளர் அய்யா உயர்திரு. என். எஸ். முத்துகிருஷ்ணராஜா அவர்களுக்கு,

கோவைச் சிறைவாசி மு. ஏகாம்பரம் வணக்கம் கூறிப் பணிவுடன் எழுதும் நன்றி மடல்.

எனது கடித வேண்டுகோளினை ஏற்றுத் தாங்கள் பரிவுடன் கூரியர் அஞ்சலில் அனுப்பித் தந்த

1. கம்பனின் வாழ்வியல் நெறிகள்

2. இரமனைத் தரிசிப்போம்

3. சரணடைவோம்! –

ஆகிய மூன்று நூல்களும் நேற்று 22. 08. 2006 அன்று கிடைக்கப் பெற்றேன்.

தங்களுக்கும் தங்களின் கம்பன் கழகத்திற்கும் எங்களின் மனமார்ந்த நன்றியினைக் காணிக்கையாக்கிப் பெருமகிழ்வு கொள்கிறோம்.

இராமாயணம் முழுமையும் உள்ள 6 காண்டங்களில் இராமபிரானின் நிலைகளையும் செயற்பாங்கினையும் கற்றுணர்ந்த 6 ஆய்வாளர்களின் கட்டுரைகளின் வாயிலாகத் தொகுத்து அளித்துள்ள பாங்கு மிக நேர்த்தியாக உள்ளது.

இராமபிரானின் பண்புநலன் வழியே கதை முமமையும் சுருக்கித் தரப்பட்டுள்ளது. ஆங்காங்கே கம்பநாடனின் உயரிய கவிதை வரிகள் தரப்பட்டது.மேலும் கதை முழுமையும் கம்பனின் சொர்சித்திரம் வாயிலாகப் படித்து இன்புற வேண்டும் என்ற ஆவலையும் வேட்கையையும் தூண்டுகிறது.

சிறைவாழ்வுக்கும் இராமாயணத்திற்கும் ஒருவகையில் தொடர்பு உண்டு என்றுதான் ஆயுத்தண்டனை (எ) ஜென்ம தண்டனை பெற்றவர்கள் நம்புகிறார்கள்; நம்புகின்றோம்.

இராமனின் கானகவாசம் 14 ஆண்டுகள்; பாரதத்திலே பாண்டவரின் கானகவாசமும் 14 ஆண்டுகள் – இந்தியாவில் ஆயுட் தண்டனைச் சிறைவாச காலமும் 14 ஆண்டுகளே!

2

‘ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய்

தாழிரும் சடைகள் தாங்கித் தாங்களும் தவம் மேற்கொண்டு

பூழிவெங் கானம் நண்ணிப் புண்ணிய துறைகள் ஆடி

ஏழிரண் டாண்டின் வா என்றியம்பினன் அரசன் என்றாள்!’

இத்தகு ஏழிரண்டாண்டு கானக வாசத்தைத்தான் பாரதத்தில் பஞ்ச பாண்டவர்களும் பெற்றனர். அத்தகைய மறைவு சிறைவாழ்க்கையில் உள்ள எங்களுக்கு இராமாயணமும், மஹாபாரதமும் மிகவும் பிடித்த காப்பியங்கள் ஆகிவிட்டதில் வியப்பேதுமில்லை.

சர்வ வல்லமை பெற்ற கடவுளர்களே மானிட அவதாரம் எடுத்து பூமியில் பிறக்கும்போது பட்ட கஷ்டங்களும், வேதனைகளும் எவ்வளவு? எத்தகையது! என்பதை நினைத்துப் பார்க்கும்போது எங்களின் இந்த சிறைவாசம் தூசுக்குச் சமானமாகும் என்ற ஆறுதலும் தேறுதலும் அவற்றைப் படிக்கும்போது எங்களுக்கு ஏற்படுகிறது.

பாரத கதாபாத்திரப் படைப்புகளை விட இராமாயண பாத்திரப் படைப்புகள் – அதிலும் குறிப்பாகத் தமிழில் கவிச் சக்கரவர்த்தி கம்பனின் கண்ணோட்டத்தில் மிகவும் உன்னதமான நிலையிலும், முறையிலும் காட்டப்பட்டுள்ளதாக அறிகிறோம். சுவாமி விவேகானந்தரும் கூட இதே கருத்தையே சீதையையும், இராமனையும் நமது பாரத கண்டத்தின் அபிபந்த இந்து கலாச்சாரத்தின் பிரதிநிதிகளாகப் பின்பிற்றி ஒழுகிட வேண்டும் என்று தமது நூலில் பல இடங்களில் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

மகன், மாணவன், கணவன், சகோதரன், சான்றோன், நண்பன், சக்ரவர்த்தித் திருக்குமாரன், மாவீரன், மன்னிக்கும் மாதவன் – என பல்வேறு முகங்களாய் விரிந்து காவிய முழுவதும் இராமன் காட்சி தருகிறான்!

கம்பனின் தத்துவக் கருத்துக்களும், உவமைகளும் அற்புதமாக பொருத்தமாக அமைந்துள்ளது. இலக்குவனிடம்,

“நதியின் பிழையன்று நறும்புனலின்மை; அற்ற

பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்

மதியின் பிழையன்று, மகன் பிழையன்று மைந்த!

விதியின் பிழை! நீ இதற்கென்னை வெகுண்டதென்றான்!”

எனும் இராமபிரான் கூற்று வரிகள் எம் போன்றோருக்கு மிகுந்த ஆறுதலையும் தேறுதலையும் தருவனவாகும்.

இதே கவிதை வரிகளை கவிஞர் கண்ணதாசன்,’தியாகம்’ என்னும் திரைப்படத்திற்கான பாடலில்

“நதி வெள்ளம் காய்ந்துவிட்டால், நதி செய்த குற்றம் என்ன?விதி செய்த குற்றம் அன்றி வேறு ஏதம்மா?…

என்று எடுத்தாண்டு இருக்கிறார்.

(பாடலின் முதல்வரி: ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு – ஒன்று மனசாட்சி- ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா என்பது)

3

இதனையே நகர்நீங்கு படலத்தில் வசிட்டரின் வாய்மொழியாக,

“சூழ்வினை நான்முகத்து ஒருவன் சூழினும்

ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கற் பாலதோ?- என்றும்

நல்தவமுனி பரத்துவாசன் – வழி வனம் புகு படலத்தில் ‘அந்தோ! விதி தருநனை’ என்பான் இற்றது செயல் உண்டோ கிளி? என இடர் கொண்டான்’ – என்றும்

சடாயூ இராமனைப் பார்த்து வருத்தத்துடன்,

‘அதிசயம் ஒருவரால் அமைக்கல் ஆகுமோ?

துதி அறு பிறவியின் இன்ப துன்பம் தான்

விதிவயம் என்பதை மேற்கொளாவிடின்

மதி வலியால் விதி வெல்ல வல்லமோ?

எனும் கம்பனின் வரிகள் துயருறுவோர்க்கு அவன் தடவும் அருமருந்து!மனக் காயங்களுக்கு இதமான இன்பமளித்து ஆற்றுப்படுத்துவது.

பேராசிரியை இளம்பிறை மணிமாறன் அவர்கள்,

“There is a Divinity that shapes our ends..”

என்னும் ஷேக்ஸ்பியரின் கூற்றையும்

‘Heaven from all creatures hides the book of Fate’

என்ற அவரின் மற்றுமோர் கவிதை மூலமும்,

கெதேவின்

“All is created and goes according to order – yetover our life time rules an uncertain Fate!’

என்பதையும் எடுத்தியம்பி … இறுதியிலே,

‘Fate is the friend of the Good,

the guide of the wise,

the tyrant of the foolish

the enemy of the bad…’

எனும் W.R ஆல்ஜெர் எனும் அறிஞனின் கருத்தோடு ஒப்பிட்டு ‘கம்பனின் வாழ்வியல் நெறிகள்’ நூலில் மிக அழகாக விளக்கியுள்ளார்.

இத்தகு நூல்களை இளமையிலே படிக்கும் பாக்கியம் கிடைத்திருந்தால் நாங்கள் ஒருவரும் சிறை புகுதற்கான சந்தர்ப்பமே அமைந்திருக்காது என்பது உறுதி. எனினும், சிறைவாசத்தின் போதாவது தங்களின் உதவியினால் இத்தகு அரிய நூல்களைப் படித்துணரும் பாக்கியம் கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம்.

வாழ்வினில் ஒவ்வொரு மாந்தரும் செய்யத்தக்கவை என்ன? செய்யத்தகாதவகைகள் என்ன? எனும் அரிச்சுவடியை விளக்குகிறது.

4

அரசு அளித்த சலுகையால் நாங்கள் பலரும் கோவை பாரதியார் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகங்களில் அஞ்சல்வழி தொலைதூரக் கல்வியில் பல்வேறு பட்ட வகுப்புகளில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம். அதில் நாங்கள் 20 பேர் சென்னைப் பல்கலையில் B.Lit எனப்படும் ‘தமிழ் இலக்கியம்’ பாடத்தை தேர்ந்தெடுத்து தற்போது மூன்றாம் (இறுதி) ஆண்டுத் தேர்வுகளை எழுதியுள்ளோம்.

அதில் இரண்டாம் ஆண்டில்,” காப்பியங்கள் சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள்”- எனும் பாடத்தில் கம்பராமாயண – சுந்தர காண்ட ‘சூடாமணிப் படலம்’ பாடப்பகுதியாக வந்திருந்தது. அதிலே இடம் பெற்ற ‘சொல்லின் செல்வன் அநுமன் – சீதாப்பிராட்டியார்’ இடையே அசோக வனத்தில் நடைபெற்ற உரையாடல் கவிச் சக்ரவர்த்தியின் காவிய வரிகளின் வழியே படித்தறியும் பாக்கியம் கிடைத்தது. அ·தே கம்பனை மேலும் மேலும் அறிந்திட வேண்டுமென்ற வேட்கையை தூண்டியது என்பதனை மிக்கப் பணிவுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

தாங்கள் தற்போது மனம் உவந்து அனுப்பித் தந்த மூன்று நூல்களும் முத்தானதும் சத்தானதுமாக உள்ளது. இங்கு படிப்பும் எழுத்துமே எங்களுக்கு நம்பிக்கையும் உற்சாகத்தையும் தந்து வேதனைகளை மறக்க உதவுகின்றன. நான்கு சுவர்களுக்கு மத்தியிலே ஆண்டுக்கணக்காகஅடைபட்டு, தவிக்கும் எங்களுக்கு தங்களின் இராஜபாளையம் கம்பன் கழக வெளியீடுகள் மற்றும் இதர இலக்கிய நூல்களையும் அனுப்பித் தந்தால் மிகுந்த உதவியாயிருக்கும் என நம்புகிறோம்.

இத்தகு உயரிய கைம்மாறு கருதாத ஞானக்கொடை நல்கும் கம்பன் கழகப் புரவலர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கம் பெற்றுள்ள அங்கத்தினர் ஆகிய உங்கள் அனைவருக்கும் எமது சிரம் தாழ்த்திக் கரம் கூப்பிய நன்றிகளைச் சம்ர்ப்பிக்கின்றோம்.

தாங்கள் அன்புகூர்ந்து அனுமதி ஈந்தால் தொடர்ந்து தங்களுக்கு கடிதங்கள் எழுதியனுப்பிட ஆவலாயுள்ளேன்.

மற்றவை தங்களின் அன்பான பதில் பார்த்து.

இவண்,

தங்களன்புச் ‘சிறை’ வாசகன்’

மு. ஏகாம்பரம்

(மற்றும் நண்பர்கள்)

25.08.2006

Dakshinamurthy Sthothram

ஸ்ரீ விருஷபதேவர் அருளிச் செய்த

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தோத்திரம்

அகணித குணகண மப்ரமேயமாத்யம்

ஸகல ஜகத் ஸ்திதி ஸம்யமாதி ஹேதும்

உபரத மநோயோகி ஹ்ருந் மந்திரம்தம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (1)

நிரவதி ஸுகம் இஷ்ட தாதார மீட்யம்

நதஜந மநஸ்தாப பேதைக தக்ஷம்

பவ விபிந தவாக்னி நாமதேயம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (2)

த்ரி புவன குரும் ஆகமைக ப்ரமாணம்

த்ரி ஜகத்காரண ஸூத்ரயோக மாயம்

ரவி சத பாஸ்வரம் ஈஹித ப்ரதானம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (3)

அவிரத பவ பாவனாதி தூரம்

பத பத்மத்வய பாவினா மதூரம்

பவ ஜலதி ஸுதாரணாங்க்ரி போதம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (4)

க்ருத நிலய மநிஸம் வடாக மூலே

நிகம சிகா வ்ராத போதிதைக ரூபம்

த்ருத முதுராங்குளி கம்ய சாரு போதம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (5)

த்ருஹிண ஸுத பூஜிதாங்க்ரி பத்மம்

பதபத்மாநத மோக்ஷ தாந தக்ஷம்

க்ருத குருகுல வாஸ யோநி மித்ரம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (6)

யதி வர ஹ்ருதயே ஸதா விபாந்தம்

ரதி பதி சதகோடி ஸுந்தராங்க மாத்யம்

பரஹித நிரதாத்மனாம் ஸுஸேவ்யம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (7)

ஸ்மித தவள விகாஸிதாந நாப்ஜம்

ச்ருதி ஸுலபம் வ்ருஷாபதிரூட காத்ரம்

ஸித ஜலஜ ஸுஸோப தேஹ காந்திம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (8)

வ்ருஷப க்ருதமிதம் இஷ்ட ஸித்திதம்

குருவர தேவ ஸந்திதௌ படேத்ய:

ஸகல துரித துக்க வர்க ஹாநிம்

வ்ரஜதி சிரம் க்ஞானவான் சம்புலோகம் (9)

Some Dakshinamurthy Temples


திருவலிதாயம் – பாடி:
குருபகவான் தான் செய்த தவறால் தனது தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரைச் சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி, இந்தத் தலத்தில் உறையும் சிவபெருமானை வணங்கினால் பாவம்நீங்கி, அவருக்கு சாபவிமோசனம் கிட்டும் என்று அருளினார். அதன்படி இங்கு வந்த வியாழனாகிய குருபகவான், இங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடி, சுவாமியை வணங்கி அருள் பெற்றார். இந்தத் தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினால் தோஷங்கள் நீங்கும் என்பதும், தலத்து தட்சிணாமூர்த்தியைவணங்கினால் பாவங்கள் விலகும் என்பதும் நம்பிக்கை. இந்தத் தலத்தில் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுகிறது. இறைவனை வணங்கினால் திருமணத்தடை, நோய்கள் போன்றவை நீங்கும் என்றும், தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வணங்கிட, ஞானம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.
சென்னை, பாரிமுனை, கோயம்பேடு, தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதி நிறைய உள்ளன.
\\\\\\\\\\\\\
இலம்பையங்கோட்டூர்:

தேவலோக கன்னிகளான ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகிய மூவரும் இந்தத் தலத்துக்கு வந்து தங்களது அழகு என்றும் குறையாமல் இருக்கவேண்டும் என்று அருளும்படி சிவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்களுக்கு சிவபெருமான், ‘யோக தட்சிணாமூர்த்தியாகக் காட்சி தந்து என்றும் இளமையாக இருக்கும்படி அருள் புரிந்தார். இவரே கோஷ்ட தெய்வமாக சின்முத்திரை தாங்கி, வலது கையை இதயத்தில் வைத்தபடி, வலது பாதத்தை மடக்கி, யோக பட்டையம் தரித்து, அபூர்வமான திருக்கோலத்தில் காட்சிதருகிறார்.
பேரின்ப நிலையில் உள்ள இவரை வணங்கினால் காண்போரை வசீகரிக்கும் பொலிவையும் மன அழகையும் பெறலாம் என்று சொல்கிறார்கள். குறிப்பாக பெண்கள் இவரை வணங்கினால் நல்ல அழகு வாய்க்கப் பெறுவார்களாம். கோயிலின் நுழைவாயிலின் அருகே தேவதைகள் வணங்கிய சிவபெருமான், ரம்பாபுரிநாதராக, 16 பேறுகளை அளிக்கும் வகையில் 16 பட்டைகளுடன் மேற்குநோக்கி காட்சி தருகிறார்.
இந்தத் தலம் காஞ்சிபுரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவு. சென்னை பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கம் சென்று, அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம். இங்கு குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெறுகிறது.
—————————————-

திருநெறிகாரைக்காடு:

பொதுவாக தட்சிணாமூர்த்தி தெய்வத்துக்கு சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வர் மட்டும் இருப்பதாகவே அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்தத் தலத்தில் தட்சிணாமூர்த்திப் பெருமான் ஏழு சீடர்களுக்கு ஞானம் தருவதாக அமைக்கப்பட்டுள்ளது. இது வித்தியாசமான அமைப்பாகும். இவரிடம் வேண்டிக்கொண்டால் தெளிந்த ஞானம் பிறக்கும்.
இந்தத் தலம் கவுதம ரிஷியிடம் சாபம் பெற்ற இந்திரனுக்கு சாப விமோசனம் அளிக்கப்பட்ட தலம். மேலும், பிரகஸ்பதியின் மனைவி தாரையிடம் மையல் கொண்டு, அவள் மூலம் சந்திரனுக்குப் பிறந்த புதன், தான் பிறந்த முறையில் வெறுப்பு கொண்டு, தனியாக இந்தத் தலத்துக்கு வந்து, தனக்கு கிரக பதவி அளிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டிக்கொண்டானாம். சிவபெருமானும் வரம் தர, உரிய காலத்தில் புதனுக்கு கிரக பதவி கிடைத்ததாம். எனவே, இந்தத் தலத்தை புதன் தலமாகவும் கொண்டாடுகிறார்கள்.
இந்தத் தலம் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. திருக்காலிமேடு என்றும் அழைக்கப்படுகிறது இந்தத் தலம்.

————————————————————

சிம்ம தட்சிணாமூர்த்தி – மன்னார்குடி

குருபகவானுக்கு உரியதலமாகப் போற்றப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிம்மராசியில் குருபகவான் பிரவேசிக்கும் போது மகாமகம் வரும். இந்தத் தலத்தில் தட்சிணாமூர்த்தி நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து சிம்ம தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவரை வழிபடுபவர்களுக்கு சிம்மகுருவின் அருள் பரிபூரணமாகக் கிடைக்குமாம்.
ஒருமுறை தட்சிணாமூர்த்தியின் சீடர்கள் நால்வரும் விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டத்துக்குச் சென்றார்களாம். அப்போதுஇவர்களை துவாரபாலகர்கள் தடுக்கவே, இவர்களுக்குக் கோபம் வந்தது. அதனால் முனிவர்கள் துவாரபாலகர்களுக்கு சாபம் கொடுத்தனர். அப்படி சாபம் கொடுத்ததால், முனிவர்கள் நால்வருக்கும் தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்கவேண்டும் என்பதற்காக இந்தத் தலத்து இறைவன் பாமணி நாகநாதரையும் சிம்ம தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றனராம். சிம்மம், கும்பம், கடகம்,தனுசு, மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களும், லக்னத்துக்குரியவர்களும் சிம்ம தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறப்பான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

கோவை சிறைவாசியின் மனம் திறந்த இலக்கிய மடல்

வியாழன், அக்டோபர் 25, 2007

கோவை ‘சிறை’ வாசியின்(வாசகனின்) மடல்.

“மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்

தம்மையே தம்ர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தை, தானே

இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, “இராமன்” என்னும்

செம்மைசேர் நாமம் தன்னை, கண்களின் தெரியக் கண்டான்!”

கோவைச்சிறை * 23.08.2006 புதன்

பேரன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய, இராஜபாளையம் கம்பன்கழ‌கப் பொதுச் செயலாளர் அய்யா உயர்திரு. என். எஸ். முத்துகிருஷ்ணராஜா அவர்களுக்கு,

கோவைச் சிறைவாசி மு. ஏகாம்பரம் வணக்கம் கூறிப் பணிவுடன் எழுதும் நன்றி மடல்.

எனது கடித வேண்டுகோளினை ஏற்றுத் தாங்கள் பரிவுடன் கூரியர் அஞ்சலில் அனுப்பித் தந்த

1. கம்பனின் வாழ்வியல் நெறிகள்

2. இரமனைத் தரிசிப்போம்

3. சரணடைவோம்! –

ஆகிய மூன்று நூல்களும் நேற்று 22. 08. 2006 அன்று கிடைக்கப் பெற்றேன்.

தங்களுக்கும் தங்களின் கம்பன் கழகத்திற்கும் எங்களின் மனமார்ந்த நன்றியினைக் காணிக்கையாக்கிப் பெருமகிழ்வு கொள்கிறோம்.

இராமாயணம் முழுமையும் உள்ள 6 காண்டங்களில் இராமபிரானின் நிலைகளையும் செயற்பாங்கினையும் கற்றுணர்ந்த 6 ஆய்வாளர்களின் கட்டுரைகளின் வாயிலாகத் தொகுத்து அளித்துள்ள பாங்கு மிக நேர்த்தியாக உள்ளது.

இராமபிரானின் பண்புநலன் வழியே கதை முமமையும் சுருக்கித் தரப்பட்டுள்ளது. ஆங்காங்கே கம்பநாடனின் உயரிய கவிதை வரிகள் தரப்பட்டது.மேலும் கதை முழுமையும் கம்பனின் சொர்சித்திரம் வாயிலாகப் படித்து இன்புற வேண்டும் என்ற ஆவலையும் வேட்கையையும் தூண்டுகிறது.

சிறைவாழ்வுக்கும் இராமாயணத்திற்கும் ஒருவகையில் தொடர்பு உண்டு என்றுதான் ஆயுத்தண்டனை (எ) ஜென்ம தண்டனை பெற்றவர்கள் நம்புகிறார்கள்; நம்புகின்றோம்.

இராமனின் கானகவாசம் 14 ஆண்டுகள்; பாரதத்திலே பாண்டவரின் கானகவாசமும் 14 ஆண்டுகள் – இந்தியாவில் ஆயுட் தண்டனைச் சிறைவாச காலமும் 14 ஆண்டுகளே!

2

‘ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய்

தாழிரும் சடைகள் தாங்கித் தாங்களும் தவம் மேற்கொண்டு

பூழிவெங் கானம் நண்ணிப் புண்ணிய துறைகள் ஆடி

ஏழிரண் டாண்டின் வா என்றியம்பினன் அரசன் என்றாள்!’

இத்தகு ஏழிரண்டாண்டு கானக வாசத்தைத்தான் பாரதத்தில் பஞ்ச பாண்டவர்களும் பெற்றனர். அத்தகைய மறைவு சிறைவாழ்க்கையில் உள்ள எங்களுக்கு இராமாயணமும், மஹாபாரதமும் மிகவும் பிடித்த காப்பியங்கள் ஆகிவிட்டதில் வியப்பேதுமில்லை.

சர்வ வல்லமை பெற்ற கடவுளர்களே மானிட அவதாரம் எடுத்து பூமியில் பிறக்கும்போது பட்ட கஷ்டங்களும், வேதனைகளும் எவ்வளவு? எத்தகையது! என்பதை நினைத்துப் பார்க்கும்போது எங்களின் இந்த சிறைவாசம் தூசுக்குச் சமானமாகும் என்ற ஆறுதலும் தேறுதலும் அவற்றைப் படிக்கும்போது எங்களுக்கு ஏற்படுகிறது.

பாரத கதாபாத்திரப் படைப்புகளை விட இராமாயண பாத்திரப் படைப்புகள் – அதிலும் குறிப்பாகத் தமிழில் கவிச் சக்கரவர்த்தி கம்பனின் கண்ணோட்டத்தில் மிகவும் உன்னதமான நிலையிலும், முறையிலும் காட்டப்பட்டுள்ளதாக அறிகிறோம். சுவாமி விவேகானந்தரும் கூட இதே கருத்தையே சீதையையும், இராமனையும் நமது பாரத கண்டத்தின் அபிபந்த இந்து கலாச்சாரத்தின் பிரதிநிதிகளாகப் பின்பிற்றி ஒழுகிட வேண்டும் என்று தமது நூலில் பல இடங்களில் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

மகன், மாணவன், கணவன், சகோதரன், சான்றோன், நண்பன், சக்ரவர்த்தித் திருக்குமாரன், மாவீரன், மன்னிக்கும் மாதவன் – என பல்வேறு முகங்களாய் விரிந்து காவிய முழுவதும் இராமன் காட்சி தருகிறான்!

கம்பனின் தத்துவக் கருத்துக்களும், உவமைகளும் அற்புதமாக பொருத்தமாக அமைந்துள்ளது. இலக்குவனிடம்,

“நதியின் பிழையன்று நறும்புனலின்மை; அற்ற

பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்

மதியின் பிழையன்று, மகன் பிழையன்று மைந்த!

விதியின் பிழை! நீ இதற்கென்னை வெகுண்டதென்றான்!”

எனும் இராமபிரான் கூற்று வரிகள் எம் போன்றோருக்கு மிகுந்த ஆறுதலையும் தேறுதலையும் தருவனவாகும்.

இதே கவிதை வரிகளை கவிஞர் கண்ணதாசன்,’தியாகம்’ என்னும் திரைப்படத்திற்கான பாடலில்

“நதி வெள்ளம் காய்ந்துவிட்டால், நதி செய்த குற்றம் என்ன?விதி செய்த குற்றம் அன்றி வேறு ஏதம்மா?…

என்று எடுத்தாண்டு இருக்கிறார்.

(பாடலின் முதல்வரி: ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு – ஒன்று மனசாட்சி- ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா என்பது)

3

இதனையே நகர்நீங்கு படலத்தில் வசிட்டரின் வாய்மொழியாக,

“சூழ்வினை நான்முகத்து ஒருவன் சூழினும்

ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கற் பாலதோ?- என்றும்

நல்தவமுனி பரத்துவாசன் – வழி வனம் புகு படலத்தில் ‘அந்தோ! விதி தருநனை’ என்பான் இற்றது செயல் உண்டோ கிளி? என இடர் கொண்டான்’ – என்றும்

சடாயூ இராமனைப் பார்த்து வருத்தத்துடன்,

‘அதிசயம் ஒருவரால் அமைக்கல் ஆகுமோ?

துதி அறு பிறவியின் இன்ப துன்பம் தான்

விதிவயம் என்பதை மேற்கொளாவிடின்

மதி வலியால் விதி வெல்ல வல்லமோ?

எனும் கம்பனின் வரிகள் துயருறுவோர்க்கு அவன் தடவும் அருமருந்து!மனக் காயங்களுக்கு இதமான இன்பமளித்து ஆற்றுப்படுத்துவது.

பேராசிரியை இளம்பிறை மணிமாறன் அவர்கள்,

“There is a Divinity that shapes our ends..”

என்னும் ஷேக்ஸ்பியரின் கூற்றையும்

‘Heaven from all creatures hides the book of Fate’

என்ற அவரின் மற்றுமோர் கவிதை மூலமும்,

கெதேவின்

“All is created and goes according to order – yetover our life time rules an uncertain Fate!’

என்பதையும் எடுத்தியம்பி … இறுதியிலே,

‘Fate is the friend of the Good,

the guide of the wise,

the tyrant of the foolish

the enemy of the bad…’

எனும் W.R ஆல்ஜெர் எனும் அறிஞனின் கருத்தோடு ஒப்பிட்டு ‘கம்பனின் வாழ்வியல் நெறிகள்’ நூலில் மிக அழகாக விளக்கியுள்ளார்.

இத்தகு நூல்களை இளமையிலே படிக்கும் பாக்கியம் கிடைத்திருந்தால் நாங்கள் ஒருவரும் சிறை புகுதற்கான சந்தர்ப்பமே அமைந்திருக்காது என்பது உறுதி. எனினும், சிறைவாசத்தின் போதாவது தங்களின் உதவியினால் இத்தகு அரிய நூல்களைப் படித்துணரும் பாக்கியம் கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம்.

வாழ்வினில் ஒவ்வொரு மாந்தரும் செய்யத்தக்கவை என்ன? செய்யத்தகாதவகைகள் என்ன? எனும் அரிச்சுவடியை விளக்குகிறது.

4

அரசு அளித்த சலுகையால் நாங்கள் பலரும் கோவை பாரதியார் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகங்களில் அஞ்சல்வழி தொலைதூரக் கல்வியில் பல்வேறு பட்ட வகுப்புகளில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம். அதில் நாங்கள் 20 பேர் சென்னைப் பல்கலையில் B.Lit எனப்படும் ‘தமிழ் இலக்கியம்’ பாடத்தை தேர்ந்தெடுத்து தற்போது மூன்றாம் (இறுதி) ஆண்டுத் தேர்வுகளை எழுதியுள்ளோம்.

அதில் இரண்டாம் ஆண்டில்,” காப்பியங்கள் சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள்”- எனும் பாடத்தில் கம்பராமாயண – சுந்தர காண்ட ‘சூடாமணிப் படலம்’ பாடப்பகுதியாக வந்திருந்தது. அதிலே இடம் பெற்ற ‘சொல்லின் செல்வன் அநுமன் – சீதாப்பிராட்டியார்’ இடையே அசோக வனத்தில் நடைபெற்ற உரையாடல் கவிச் சக்ரவர்த்தியின் காவிய வரிகளின் வழியே படித்தறியும் பாக்கியம் கிடைத்தது. அ·தே கம்பனை மேலும் மேலும் அறிந்திட வேண்டுமென்ற வேட்கையை தூண்டியது என்பதனை மிக்கப் பணிவுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

தாங்கள் தற்போது மனம் உவந்து அனுப்பித் தந்த மூன்று நூல்களும் முத்தானதும் சத்தானதுமாக உள்ளது. இங்கு படிப்பும் எழுத்துமே எங்களுக்கு நம்பிக்கையும் உற்சாகத்தையும் தந்து வேதனைகளை மறக்க உதவுகின்றன. நான்கு சுவர்களுக்கு மத்தியிலே ஆண்டுக்கணக்காகஅடைபட்டு, தவிக்கும் எங்களுக்கு தங்களின் இராஜபாளையம் கம்பன் கழக வெளியீடுகள் மற்றும் இதர இலக்கிய நூல்களையும் அனுப்பித் தந்தால் மிகுந்த உதவியாயிருக்கும் என நம்புகிறோம்.

இத்தகு உயரிய கைம்மாறு கருதாத ஞானக்கொடை நல்கும் கம்பன் கழகப் புரவலர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கம் பெற்றுள்ள அங்கத்தினர் ஆகிய உங்கள் அனைவருக்கும் எமது சிரம் தாழ்த்திக் கரம் கூப்பிய நன்றிகளைச் சம்ர்ப்பிக்கின்றோம்.

தாங்கள் அன்புகூர்ந்து அனுமதி ஈந்தால் தொடர்ந்து தங்களுக்கு கடிதங்கள் எழுதியனுப்பிட ஆவலாயுள்ளேன்.

மற்றவை தங்களின் அன்பான பதில் பார்த்து.

இவண்,

தங்களன்புச் ‘சிறை’ வாசகன்’

மு. ஏகாம்பரம்

(மற்றும் நண்பர்கள்)

25.08.2006