ஓரம்போ! ஓரம்போ! பணம் இல்லெனா படம் இல்ல ! வை.கோ !

Published:

 

vaiko paises - 2026ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுடன் செல்ஃபி  எடுக்க விரும்புவோர், கட்சிக்கு  100 ரூபாய் வழங்க வேண்டும் என்று ம.தி.மு.க தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. அதோடு வைகோவுக்குச் சால்வை அணிவிப்பதை தவிர்த்து, கட்சிக்கு நிதி வழங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் வைகோ கட்சி சார்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, அவருடன் புகைப்படம் எடுக்க விருப்பப்படும் தொண்டர்களிடம் 100 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வைகோ நேற்று வேலூர் வழியாக காரில் சென்றார். அப்போது தொண்டர்கள் போட்டோ எடுத்துக்கொள்ள விரும்பினால், 100 ரூபாய் கொடுக்க வேண்டும்’’ என்று மாவட்ட நிர்வாகிகள் அறிவுறுத்தியிருந்தனர். இதனிடையே ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே வந்திறங்கிய வைகோவை உற்சாகமாக வரவேற்ற தொண்டர்கள் அவருடன் போட்டோ எடுக்க முயற்சித்தனர்.ரூ.100 கொடுத்தவர்களுடன் மட்டும்

அப்போது தொண்டர் ஒருவர் 100 ரூபாய் இல்லாமல் போட்டோ எடுக்க வைகோ அருகில் சென்றார். அப்போது ”காசு இல்லையா, அப்போ போட்டோ எடுக்க முடியாது” என அவரை தள்ளி விட்டார். இதனால் அந்த தொண்டர் வருத்தத்துடன் திரும்பி சென்றார். இந்த சம்பவம் அங்கிருந்த தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Related articles

Recent articles

spot_img