எடப்பாடியை வரவேற்க ஏன் வரவில்லை ஓபிஎஸ்.,?! அதிமுக.,வினர் குழப்பம்!

ops panneerselvam - 2026

வெளிநாட்டு சுற்றுப் பயணம் முடித்து திரும்பியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ஓபிஎஸ் ஏன் விமான நிலையம் வரவில்லைஎன அதிமுகவினர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

அதிமுக தொண்டர்கள் மத்தியில், அம்மா கைகாட்டியவர் என்ற அடையாளம் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு உண்டு. பல்வேறு அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர் என்றும், ஆட்சியில் துணை முதல்வர் என்றும் தொடர்ந்து வருகிறார் ஓபிஎஸ்.

இருப்பினும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தன்னை ஒரு தலைவராக வெளிப்படுத்தி முன்னின்று வருகிறார். ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பேசியவர்கள், ஆதரவாளர்கள் என்று இனம் காணப் பட்டவர்களும் அதிமுக.,வில் ஒதுங்கிப் போயுள்ள சூழல் நிலவுகிறது.

கடந்த பத்து நாட்களாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது முதல்வர் பொறுப்பை யாரிடமும் ஒப்படைக்கவில்லை. இது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மூத்த அமைச்சர்கள் விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றனர். அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் முதல்வரை வரவேற்க வருவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், அவர் விமான நிலையம் வராமல் போனது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

edappadi palanisamy - 2026

முன்னதாக, விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு தொண்டர்கள் மாலைகளை அணிவித்து, மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். முதல்வரிடம் செய்தியாளர்கள் அவரது பயணம் குறித்து கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர், அரசு முறைப் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது என்று கூறினார். மேலும், சுற்றுலாவை மேம்படுத்த திட்டம் உள்ளதாகவும், கார் உற்பத்தி தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வர உள்ளதாகவும் கூறினார்.

கிங்ஸ் மருத்துவமனை கிளை சென்னைக்கு வர ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது; வெளிநாடு வாழ் தமிழர்களை ஒன்றிணைக்க யாதும் ஊரே என்னும் திட்டம் துவங்கப் பட்டுள்ளது! 40 க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று கூறிய அவர், புதிய திட்டங்கள் மூலம் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

எரிச்சல், பொறாமையால் தான் எதிர்ப்புக் குரல் வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் விமர்சனம் குறித்து பதில் அளித்தார் எடப்பாடி.

மேலும், வெளிநாடு வாழ் தமிழர்களின் வரவேற்பு மகிழ்சியை தந்தது என்று கூறிய அவர், தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய பலரும் ஆர்வம் காட்டுவதாகவும், அரசு முறைப் பயணம் மேலும் தொடரும் என்றும் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories