அமித் ஷாவை சந்தித்து என்ன பேசினார் மம்தா பானர்ஜி..?

amit sha mamta - 2026

திருப்பம் தரும் திடீர் சந்திப்பாக, இன்று தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

மம்தா பானர்ஜிக்கும் மத்தியில் ஆளும் பாஜக., அரசுக்கும் ஏழாம் பொருத்தமாகவே சென்று கொண்டிருந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், பாஜக.,வினர் பிரசாரம் செய்ய பல்வேறு தடைகளை ஏற்படுத்தினார் மம்தா பானர்ஜி. குறிப்பாக, அமித் ஷா, மோடி ஆகியோர் மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று இடம் ஒதுக்க மறுத்தார். அமித் ஷா வந்த ஹெலிகாப்டரை திருப்பி அனுப்பினார். அமித் ஷாவை மேற்கு வங்க மண்ணிலேயே மிதிக்க அனுமதிக்க மாட்டேன் என்று முரண்டு பிடித்தார்.

இந்நிலையில், நேற்று பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசிய மம்தா பானர்ஜி, தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கப் பட்டால் இன்று சந்திப்பேன் என்று கூறியிருந்தார். அதன்படி, இன்று அவர்களது சந்திப்புக்கு அனுமதி கிடைத்தது.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

அதன்படி, இன்று அமித்ஷாவை சந்தித்துப் பேசினார் மம்தா பானர்ஜி. அப்போது, தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு, எல்லை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக அவர் கூறினார்.

amit sha mamta1 - 2026

முன்னதாக, மம்தா பானர்ஜி தில்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியபோது, மேற்க வங்க மாநிலத்தின் பெயரை மாற்றம் செய்வது குறித்து பேசியதாகவும், பிர்பாம் மாவட்டம், தியோச்சா பச்சாமியில் நிலக்கரி சுரங்க பணிகளை துவக்கி வைக்க வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் கூறினார்.

தொடர்ந்து இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை, ‘பங்களா’ என பெயர் மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளித்தாராம்.

இது குறித்துசெய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பில் 19 லட்சம் பேர் விடுபட்டது குறித்து அமித்ஷாவிடம் மனு அளித்தேன். இந்தப் பட்டியலில் இருந்து இந்தி, வங்காளம், அசாமி மொழி பேசும் உள்ளூர் மக்கள் அதிகளவில் விடுபட்டுள்ளனர். நேர்மையான வாக்காளர்களும் இடம்பெறவில்லை. இது குறித்து ஆராய வேண்டும்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

மேற்கு வங்கத்தில், தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு குறித்து அமித்ஷா எதுவும் கூறவில்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு தேவையில்லை என்பது எங்களது நிலைப்பாடு. இதனை முன்னரே கூறியுள்ளேன் என்று கூறினார்.

இந்நிலையில், அமித் ஷாவுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப் பட்டுவருகின்றன. மம்தா பானர்ஜி சாரதா சிட்பண்ட் ஊழலில் சிக்கிக் கொண்டுள்ள நிலையில், தனது சகாக்கள், காவல் அதிகாரி ராஜீவ் குமார் ஆகியோரை காப்பாற்றும் கடைசிக் கட்ட முயற்சியில் அவர் இறங்கியுள்ளார் என்று கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், காலம் எப்படி மாற்றம் கண்டிருக்கிறது என்றும் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories