December 5, 2025, 5:59 PM
26.7 C
Chennai

நீட் ஆள்மாறாட்ட வழக்கு: உதித் சூர்யா, தந்தை மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு!

NEET - 2025

நீட் ஆள் மாறாட்ட வழக்கில் உதித் சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் மீது ஆள் மாறாட்டம், போலி ஆவணம் தயாரித்தது, சதித்திட்டம் தீட்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்தது தொடர்பான மோசடி வழக்கில் மாணவர் உதித் சூர்யா, தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் மீது சிபிசிஐடி போலீஸார் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். ஆள்மாறாட்டம், போலி ஆவணம் தயாரித்தல் மற்றும் சதித் திட்டம் தீட்டுவது ஆகிய 3 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக, தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள் ஆகியோரிடமும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்த உதித் சூர்யா என்ற மாணவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சேர்ந்ததாக கல்லூரி முதல்வருக்கு மின்னஞ்சலில் ஒரு புகார் வந்தது. இதுதொடர்பாக கண்டமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாணவர் உதித் சூர்யா தலைமறைவானார். தொடர்ந்து அவரது குடும்பத்தைத் தேடியதில், அவர்களும் வீட்டைப் பூட்டிக் கொண்டு தலைமறைவு ஆயினர்.

இதை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த மாணவர் உதித் சூர்யா, நேற்று திருப்பதியில் குடும்பத்தினருடன் சிக்கினார்.

தேனி தனிப்படை போலீசார் உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன், தாய் கயல்விழி ஆகியோரைக் கைது செய்து சிபிசிஐடி போலீசிடம் ஒப்படைத்தனர். இதை அடுத்து அவர்களிடம் சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் நள்ளிரவில் தேனிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூவரிடமும் விசாரணை நடத்தப் பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக, தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் எழிலரசன், மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் 4 பேர் என இன்று காலை 9 மணிக்கு உதித் சூர்யா குறித்த ஆவணங்களுடன் சிபிசிஐடி போலீஸாரிடம் விசாரணைக்கு ஆஜராகினர்.

உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர். தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனும், வெங்கடேசனும் நண்பர்கள் என்றும், எனவே வெங்கடேசனுக்கு உதவும் முயற்சிகள் நடைபெற்றதா என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப் படுகிறது.

மேலும், உதித் சூர்யாவுக்காக தேர்வெழுதியதாக கூறப்படும் மாணவர் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படுகிறது. சிபிசிஐடி எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் மூவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. ஆள் மாறாட்ட வழக்கில், வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடைபெற்றதாம்.

இதைத் தொடர்ந்து, உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories