December 6, 2025, 1:53 AM
26 C
Chennai

ஸ்டாலின் அரசியலை விட்டு விலகுவது.. இப்போது ராமதாஸின் கையில் மட்டுமே இருக்கிறது..!

stalin ramadoss - 2025

திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலை விட்டு விலகுவது இப்போது பாமக., நிறுவுனர் ராமதாஸின் கையில் தான் இருக்கிறது. காரணம், அண்மைக் காலமாக சூடன் ஏத்தி சத்தியம் செய்யாத கதையாக, ஒண்டிக்கு ஒண்டி வாரியா, ஒத்தையா வரச் சொல்லு, நானும் நீயும் போட்டி போடலாம் என்றெல்லாம் அண்மைக் காலமாக சவால் விட்டு வரும் ஸ்டாலின், இப்போது, ராமதாஸுக்கு சவால் விட்டுள்ளார்.

திமுகவின் அதிகாரபூர்வ பத்திரிகையான முரசொலி இருக்கும் இடம் குறித்து ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார் ராமதாஸ். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ள புகாருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார்.

‘அசுரன்’ படத்தில் பழங்குடியினர்க்கு சொந்தமான பஞ்சமி நிலத்தை குறிப்பிட்ட ஜாதியினர் கைப்பற்றுவதாக, காட்சி அமைப்புகள் உள்ளன. இந்தப் படத்தை நேற்று முன்தினம் தனது அடுத்துள்ள இருக்கையைக் கூட எவருக்கும் பகிராமல், ஸ்டாலின் தனியாக அமர்ந்து பார்த்தார்.

அதைத் தொடர்ந்து கதாநாயகனாக நடித்த தனுஷ், வெற்றிமாறன் ஆகியோரைப் பாராட்டினார். அவரது டுவிட்டர் பக்கத்திலும் இந்தப் பாராட்டுதல்களை விவரித்திருந்தார்.

இதை அடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதில் அளித்திருந்த போது, “பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல; பாடம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பாராட்டியிருக்கிறார். ஆஹா… அற்புதம்… அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று ‘முரசொலி’ நாளிதழ் அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என நம்புவோம்” என்று கிண்டல் அடித்திருந்தார்.

இது இன்று பெரிய அளவில் சமூகத் தளங்களில் பேசப் படவே, ராமதாஸ்க்கு சவால் விடும் வகையில் ஸ்டாலின் இன்று டிவிட்டர் பதிவில் ஒரு அறிவிப்பைச் செய்திருக்கிறார்.

அதில்… ” மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.!
அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை!
நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்!
அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என்று கேட்டுள்ளார்.

எனவே, ஸ்டாலின் அரசியலை விட்டு விலகுவது என்பது, இப்போதைக்கு பாமக., நிறுவுனர் ராம்தாஸ் கையில்தான் இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் சமூகத் தளங்களில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories