ஸ்டாலின் அரசியலை விட்டு விலகுவது.. இப்போது ராமதாஸின் கையில் மட்டுமே இருக்கிறது..!

stalin ramadoss - 2026

திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலை விட்டு விலகுவது இப்போது பாமக., நிறுவுனர் ராமதாஸின் கையில் தான் இருக்கிறது. காரணம், அண்மைக் காலமாக சூடன் ஏத்தி சத்தியம் செய்யாத கதையாக, ஒண்டிக்கு ஒண்டி வாரியா, ஒத்தையா வரச் சொல்லு, நானும் நீயும் போட்டி போடலாம் என்றெல்லாம் அண்மைக் காலமாக சவால் விட்டு வரும் ஸ்டாலின், இப்போது, ராமதாஸுக்கு சவால் விட்டுள்ளார்.

திமுகவின் அதிகாரபூர்வ பத்திரிகையான முரசொலி இருக்கும் இடம் குறித்து ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார் ராமதாஸ். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ள புகாருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார்.

‘அசுரன்’ படத்தில் பழங்குடியினர்க்கு சொந்தமான பஞ்சமி நிலத்தை குறிப்பிட்ட ஜாதியினர் கைப்பற்றுவதாக, காட்சி அமைப்புகள் உள்ளன. இந்தப் படத்தை நேற்று முன்தினம் தனது அடுத்துள்ள இருக்கையைக் கூட எவருக்கும் பகிராமல், ஸ்டாலின் தனியாக அமர்ந்து பார்த்தார்.

அதைத் தொடர்ந்து கதாநாயகனாக நடித்த தனுஷ், வெற்றிமாறன் ஆகியோரைப் பாராட்டினார். அவரது டுவிட்டர் பக்கத்திலும் இந்தப் பாராட்டுதல்களை விவரித்திருந்தார்.

இதை அடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதில் அளித்திருந்த போது, “பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல; பாடம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பாராட்டியிருக்கிறார். ஆஹா… அற்புதம்… அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று ‘முரசொலி’ நாளிதழ் அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என நம்புவோம்” என்று கிண்டல் அடித்திருந்தார்.

இது இன்று பெரிய அளவில் சமூகத் தளங்களில் பேசப் படவே, ராமதாஸ்க்கு சவால் விடும் வகையில் ஸ்டாலின் இன்று டிவிட்டர் பதிவில் ஒரு அறிவிப்பைச் செய்திருக்கிறார்.

அதில்… ” மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.!
அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை!
நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்!
அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என்று கேட்டுள்ளார்.

எனவே, ஸ்டாலின் அரசியலை விட்டு விலகுவது என்பது, இப்போதைக்கு பாமக., நிறுவுனர் ராம்தாஸ் கையில்தான் இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் சமூகத் தளங்களில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories