வரலாற்றிலேயே முதல் முறையாக ரயில்வே செலுத்திய இழப்பீடு!

tejas1 - 2026

தேஜாஸ் ரயில் தாமதம்… பயணிகளுக்கு 1.62 லட்சம் ரூபாய் இழப்பீடு. முதல் தனியார் ரயில் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் தனிப்பட்ட பல சிறப்புகள் கொண்ட து. முக்கியமாக இந்த ரயில் தாமதமாக வந்தால் பயணிக்கு இழப்பீடு அளிப்பார்கள்.

இதன்படி முதல் முறையாக இந்த ரயில் இரண்டு நாட்களுக்கு முன் தாமதமாக ஓடியது. ஐஆர்சிடிசி கொடுத்த வாக்கின்படி 1.62 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க ரயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது. ரயில்வே வரலாற்றிலேயே இது முதல்முறை.

அக்டோபர் 19 அன்று தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் 3 மணி நேரம் தாமதமாக வந்தது. அதனால் 950 பயணிகளுக்கு ரூபாயை ரூபாய் 1.62 லட்சம் இன்சூரன்ஸ் கம்பெனிகள் மூலம் அளிக்கப் போகிறோம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

என்ன நடந்தது?

அக்டோபர் 19ஆம் தேதி லக்னோவில் இருந்து காலை 9. 55க்கு கிளம்பிய தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லியை 12.25 மணிக்குச் சேர வேண்டும். ஆனால் கான்பூர் அருகே ரயில் ஒன்று தடம் புரண்டதால் ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனால் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் 3 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக 3.40க்கு சென்றடைந்தது.

அதுமட்டுமின்றி 3.35 மணிக்கு மீண்டும் லக்னோ கிளம்ப வேண்டியரயில் 5.30 மணிக்கு புறப்பட்டது. இரவு 10.05 மணிக்கு சென்றடைய வேண்டிய ரயில் இரவு 11.30 மணிக்குத்தான் சென்றடைந்தது. அதனால் லக்னோவில் இருந்து டெல்லிக்கு சென்ற 450 பயணிகளுக்கு ஒவ்வொருவருக்கும் 250 ரூபாயும், டில்லியிலிருந்து லக்னோ சென்ற 500 பயணிகளுக்கு ஒவ்வொருவருக்கும் 100 ரூபாயும் இழப்பீடு அளிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்டில் கொடுத்துள்ள இன்சூரன்ஸ் கம்பெனியின் லிங்க் மூலம் இழப்பீடு பெற முடியும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

தேஜாஸ் எக்ஸ்பிரஸ் அக்டோபர் 6ஆம் தேதி முதல் கமர்ஷியல் ஆபரேஷன்ஸ் ஆரம்பித்துள்ளது. அன்றிலிருந்து அக்டோபர் 19, 20 தேதிகளில் மட்டுமே தாமதமாக சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாமதத்தைப் பொறுத்து இழப்பீடு….!

19ஆம் தேதி மணிக்கணக்காக தாமதமானாலும் 20ஆம் தேதி 24 நிமிடங்கள் மட்டுமே தாமதமானது. ஐஆர்சிடிசி விதிகளின்படி ரயில் குறிப்பிட்ட நேரத்தை விட ஒரு மணிநேரம் தாமதம் ஆனால் ஒரு பயணிக்கு 100 ரூபாயும் 2 மணி நேரங்களுக்கு மேல் தாமதமானால் 250 ரூபாயும் அபராதத் தொகை செலுத்துவார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories