வரலாற்றிலேயே முதல் முறையாக ரயில்வே செலுத்திய இழப்பீடு!

tejas1 - 2026

தேஜாஸ் ரயில் தாமதம்… பயணிகளுக்கு 1.62 லட்சம் ரூபாய் இழப்பீடு. முதல் தனியார் ரயில் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் தனிப்பட்ட பல சிறப்புகள் கொண்ட து. முக்கியமாக இந்த ரயில் தாமதமாக வந்தால் பயணிக்கு இழப்பீடு அளிப்பார்கள்.

இதன்படி முதல் முறையாக இந்த ரயில் இரண்டு நாட்களுக்கு முன் தாமதமாக ஓடியது. ஐஆர்சிடிசி கொடுத்த வாக்கின்படி 1.62 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க ரயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது. ரயில்வே வரலாற்றிலேயே இது முதல்முறை.

அக்டோபர் 19 அன்று தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் 3 மணி நேரம் தாமதமாக வந்தது. அதனால் 950 பயணிகளுக்கு ரூபாயை ரூபாய் 1.62 லட்சம் இன்சூரன்ஸ் கம்பெனிகள் மூலம் அளிக்கப் போகிறோம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

என்ன நடந்தது?

அக்டோபர் 19ஆம் தேதி லக்னோவில் இருந்து காலை 9. 55க்கு கிளம்பிய தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லியை 12.25 மணிக்குச் சேர வேண்டும். ஆனால் கான்பூர் அருகே ரயில் ஒன்று தடம் புரண்டதால் ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனால் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் 3 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக 3.40க்கு சென்றடைந்தது.

ALSO READ:  திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

அதுமட்டுமின்றி 3.35 மணிக்கு மீண்டும் லக்னோ கிளம்ப வேண்டியரயில் 5.30 மணிக்கு புறப்பட்டது. இரவு 10.05 மணிக்கு சென்றடைய வேண்டிய ரயில் இரவு 11.30 மணிக்குத்தான் சென்றடைந்தது. அதனால் லக்னோவில் இருந்து டெல்லிக்கு சென்ற 450 பயணிகளுக்கு ஒவ்வொருவருக்கும் 250 ரூபாயும், டில்லியிலிருந்து லக்னோ சென்ற 500 பயணிகளுக்கு ஒவ்வொருவருக்கும் 100 ரூபாயும் இழப்பீடு அளிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்டில் கொடுத்துள்ள இன்சூரன்ஸ் கம்பெனியின் லிங்க் மூலம் இழப்பீடு பெற முடியும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

தேஜாஸ் எக்ஸ்பிரஸ் அக்டோபர் 6ஆம் தேதி முதல் கமர்ஷியல் ஆபரேஷன்ஸ் ஆரம்பித்துள்ளது. அன்றிலிருந்து அக்டோபர் 19, 20 தேதிகளில் மட்டுமே தாமதமாக சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாமதத்தைப் பொறுத்து இழப்பீடு….!

19ஆம் தேதி மணிக்கணக்காக தாமதமானாலும் 20ஆம் தேதி 24 நிமிடங்கள் மட்டுமே தாமதமானது. ஐஆர்சிடிசி விதிகளின்படி ரயில் குறிப்பிட்ட நேரத்தை விட ஒரு மணிநேரம் தாமதம் ஆனால் ஒரு பயணிக்கு 100 ரூபாயும் 2 மணி நேரங்களுக்கு மேல் தாமதமானால் 250 ரூபாயும் அபராதத் தொகை செலுத்துவார்கள்.

ALSO READ:  மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories