ஊடகத்தினர், முக்கியப் பிரமுகர்களின் வாட்ஸ்அப்பில் ஊடுருவி உளவு..! அதிர்ச்சி தகவல்!

whatsapp spy - 2026

ஊடகத்தினர், வழக்கறிஞர்கள், முக்கியப் பிரமுகர்கள் என பலரது வாட்ஸ் அப்களில் ஊடுருவி உளவு பார்த்ததாக இப்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியர்கள் பலரது மொபைல் போன்களைக் குறிவைத்து இஸ்ரேல் ஸ்பைவேர்கள் இயங்கியதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிக்கையாளர்கள். சமூக செயற்பாட்டாளர்கள் உள்பட இந்திய பிரபலங்களின் செல்போனுக்கு இஸ்ரேலின் என்எஸ்ஒ சைபர் செக்யூரிட்டி நிறுவனம் வாட்ஸ் அப் சர்வர் மூலம் ஸ்பைவேர்களை அனுப்பி இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் பிரபல ஆங்கில ஊடகத்திடம் உறுதி செய்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இஸ்ரேலிய ஸ்பைவேர்களால் பிரபலங்கள் குறிவைக்கப்பட்டதாகவும், இந்த வாரம் பல இந்திய பயனாளர்கள் குறிவைக்கப்பட்டதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மே மாதம் வரை இஸ்ரேல் ஸ்பைவேர்களின் கண்காணிப்பில் இலக்காக இருந்ததாகவும் நம்பப்படுகிறது.

கடந்த செவ்வாய்கிழமை வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான பேஸ்புக் நிறுவனம் இஸ்ரேலின் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான என்எஸ்ஓ மீது வழக்கு தொடுத்தது.

தனது மனுவில் 1400 வாட்ஸ் அப் பயனர்களுக்கு தீமை தரும் வைரஸை வாட்ஸ் அப் சர்வர் மூலம் அனுப்பியதாக குற்றம்சாட்டி உள்ளது. குறிப்பாக ஊடகவியலாளர்கள், அரசியல் நிபுணர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், 20 நாடுகளில் உள்ள மூத்த அரசு அதிகாரிகள் ஆகியோரை இலக்காக நிர்ணயித்து ஸ்பைவேர்களை அனுப்பியதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் தொடர்பு கொண்டவர்களில் தானும் ஒருவர் என்று WION பத்திரிகையாளர் சித்தாந்த் சிபல் ட்வீட் செய்துள்ளார். தொழில்நுட்ப மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தனது டுவிட் பதிவில் கூறியுள்ளார்.

இஸ்ரேல் நிறுவனம் , செல்போன் இயக்கத்தை கையகப்படுத்தி, அவர்களின் தகவல்கள், அழைப்புகள் மற்றும் பாஸ்வேர்டுகள் ஆகியவற்றை கண்டறிவதற்கு ஸ்பைவேர் தாக்குதலை நடத்த வைரஸ்களுக்கு கட்டளைகளை வழங்கி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories