December 7, 2025, 4:59 AM
24.5 C
Chennai

சுகபிரசவம் ஆன பெண் வயிற்றில் உடைந்தஊசியை வைத்து தைத்த செவிலியர்கள்.!

UCHIPULI - 2025

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே உள்ள மரவெட்டி வலசையைச் சேர்ந்தவர் கார்த்தி, கட்டிட தொழிலாளி.

இவரது மனைவி ரம்யா (வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன

.கடந்த 19-ந்தேதி உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரம்யாவுக்கு சுகப்பிரசவம் நடந்தது.

அதன்பிறகு அவருக்கு ரத்தக்கசிவும் வயிற்று வலியும் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ரம்யாவுக்கு ‘ஸ்கேன்’ எடுக்கப்பட்டது.

இதில் தையல் போடப்பட்ட பகுதியில் உடைந்த ஊசி இருப்பது தெரியவந்தது.

உடனடியாக ரம்யா, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரது உறவினர்கள், இன்று காலை உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பிரசவத்தின்போது தையல் போட்ட செவிலியர்கள், ஊசியை உடலில் வைத்து தைத்து விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். இது தொடர்பாக ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குநர் குமரகுருபரன் கூறியதாவது:-

பிரசவத்தின்போது பெண்களுக்கு தையல் போடுவது வழக்கமான ஒன்றுதான் ரம்யாவுக்கு அப்படி போடும்போது தையல் ஊசியில் பாதி உடைந்துள்ளது.

இது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு தற்போது ஆபரேசன் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

மாவட்ட தாய்-சேய் நல அலுவலர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரடியாக தொடர்பு கொண்டு ரம்யாவுக்கு உரிய சிகிச்சை அளிக்க பரிந்துரைந்துள்ளார்.

விசாரணைக்கு பின்னர் தவறு நடந்திருப்பது தெரிய வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories