மாவட்ட பிரிப்புக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை!

Published:

IMG 20191122 WA0014 - 2026

தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் உருவாக்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து ஒரு பகுதியை பிரித்து தென்காசி தனி மாவட்டமாக சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ..

IMG 20191122 WA0011 - 2026

இதையடுத்து தென்காசி தனி மாவட்டம் அமைப்பதற்கான பணிகள் விரைவாக நடைபெற்றன. தொடர்ந்து மாவட்டத்துக்கு ஆட்சியர் அறிவி ப்பு , காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு என்று நிர்வாக ரீதியான நடைமுறைகள் விரைவுபடுத்தப்படும்.

இந்நிலையில் நவம்பர் 22 வெள்ளிக்கிழமை இன்று தென்காசி தனி மாவட்டமாக உதயமானது. இன்று தென்காசியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

IMG 20191122 WA0009 1 - 2026

இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட பிரிப்பு என்பதற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார்

அவர் மேலும் பேசுகையில்

மக்களின் கோரிக்கைப்படி நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

உள்ளாட்சித் தேர்தலுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். ஆனால் நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்

IMG 20191122 WA0010 1 - 2026

செண்பகவல்லி அணைக்கட்டு பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அணை பிரச்சினை தொடர்பாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தையில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது விரைவில் நதிநீர் பிரச்சனை தீர்க்கப்படும்

தமிழகத்திலுள்ள குளங்கள், குட்டைகள் என நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்படும் என்று முதல்வர் பழனிசாமி பேசினார்

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img