தொண்டையில் அடைத்த முட்டை! மூச்சு முட்டி செத்த ‘குடிமகன்’!

Published:

egg caused death - 2026

தொண்டையில் முட்டை அடைத்துக் கொண்டதால் குடிமகன் மரணம் அடைந்தார்.

தொண்டையில் முட்டை அடைத்து ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் ஹைதராபாத் புறநகர் இப்ரஹிம் பட்டினத்தில் நடந்தது. மது அருந்திக்கொண்டே கோழிமுட்டையை முழுவதாக விழுங்கியதால் அது தொண்டையில் அடைத்துக் கொண்டு மூச்சு விட முடியாமல் இறந்து போனார்.

யாசாரம் மண்டலம் ‘குன்கல்’ கிராமத்தைச் சேர்ந்த ‘மச்ச யாதய்யா’ (45) இப்ரஹீம்பட்டனத்திலுள்ள ஸ்ரீராமா ஒயின்ஸ் கடையில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

வியாழனன்று நவம்பர் 28 இரவு வேலை முடிந்தபின் ஒயின்ஸ் கடையின் பர்மிட் அறையில் அமர்ந்து மது அருந்தினார். மது பெக் அடித்தவுடனே கோழி முட்டையை வாயில் முழுதாக போட்டுக் கொண்டதால் அது தொண்டையில் சிக்கி அங்கேயே மயங்கி விழுந்தார்.

உடனிருந்த ஊழியர் அவரை கவனித்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

யாதய்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் தொண்டையில் முட்டை அடைத்துக் கொண்டதால் மூச்சு நின்றுவிட்டது என்றனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img