மாநிலங்களவை வேட்பாளர் வாய்ப்பு என்ற அறிவிப்புக்கே… இப்படி பாலபிஷேகமா?!

Published:

kcr milk bath - 2026

விஜயவாடாவில் கேசிஆர் போட்டோவுக்கு பாலாபிஷேகம் செய்து, யாதவகுல தலைவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தெலங்காணா முதல்வர் சந்திரசேகர ராவின் படத்திற்கு விஜயவாடாவில் பாலாபிஷேகம் செய்தார்கள் யாதவகுலத்தவர்கள். காரணம் ஒன்றுமில்லை… யாதவ குலத்தவருக்கு மாநிலங்களவையில் போட்டியிட சீட் அளித்து வாய்ப்பளிப்பதாக கேசிஆர் அறிவித்து இருந்தார்.

அதனால் யாதவ யுவபேரி தலைர்களும் ஆதரவாளர்களும் தெலங்காணா முதல்வர் போட்டோவிற்கு பாலாபிஷேகம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

kcr milk bath1 - 2026

யாதவர்களின் தலைவருக்கு மாநிலங்களவை சீட் அறிவிக்கும் வரை மாநில அளவில் தினமும் பாலபிஷேகம் செய்து கொண்டே இருப்போம் என்று தலைவர்கள் தெளிவுபட கூறினர்.

நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு யாதவ வேட்பாளரை அறிவித்த பின் அமராவதியிலிருந்து ஹைதராபாத் வரை பாத யாத்திரை செய்து விஜயவாடா கனகதுர்கா அம்மனின் பிரசாதத்தை கேசிஆருக்கு நேரில் சென்று கொடுப்போம் என்றனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img