பின் தொடர்ந்தவனை… தலைமுடியைப் பிடித்திழுத்து… செருப்பால் அடித்து வெளுத்து வாங்கிய பெண்!

Published:

hit by girl - 2026

பொறுக்கிப் பயலின் தலை முடியைப் பற்றி இழுத்து வந்து செருப்பால் அடித்தார் பெண் ஒருவர். பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் செய்தியின் சாரம் இதுதான்!

வீட்டிலிருந்து வெளியில் வந்தது முதல் திரும்பி வரும்வரை பின் தொடர்ந்து தொல்லை தந்தான் இளைஞன் ஒருவன். அவனுக்கு ஒரு திருமணமான பெண் தகுந்த ‘மரியாதை’ செய்து, பின்னர் அவனை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

தினமும் தொல்லை கொடுத்து வந்த இளைஞனை போட்டுத் தாக்கினார் ஒரு வீரப்பெண். தினமும் தொடர்ந்து வேதனைக்கு உள்ளாக்கியதால் எரிச்சலடைந்து அவனைக் கும்மியெடுத்தார். அந்த ஊர்சுத்திப் பயலை நையப்புடைத்தார்.

அவளோடு உள்ளூர் மக்களும் கூட்டணி சேரவே ஈவ்டீசிங் செய்தவனின் உடல் நொந்து நூல் ஆகியது . பெண்கள் திருப்பித் தாக்கினால், போக்கிரிகள் எவ்வாறு வாலை சுருட்டிக் கொள்வார்கள் என்பதை நிரூபித்த இந்தச் சம்பவம் ஆந்திரம், கிருஷ்ணா மாவட்டத்தில் நடந்தது.

விஜயவாடா அருகிலுள்ள கொண்டபல்லியைச் சேர்ந்த ஒரு திருமணமான பெண்ணை சாய் சைதன்யா என்ற இளைஞன் சில நாட்களாக துன்புறுத்தி வந்தான். அந்தப் பெண் வீட்டிலிருந்து வெளியில் வருவதற்காக காத்திருப்பான். வழியெங்கும் பின் தொடர்வான். இதனால் அந்தப் பெண்ணுக்கு வாழ்க்கையே நரகம் ஆனது!

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

டிச.1 பள்ளியில் படிக்கும் தன் பிள்ளைகளுக்கு உணவு கொடுத்து விட்டு திரும்பி வரும்போது ‘ஆறுபம்புல ‘ சென்டர் அருகில் தடுத்து நிறுத்தி, அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டான்.

அது வரை பல முறை அவனுக்கு புத்தி கூறி சோர்ந்து போன அந்தப் பெண் பொறுமை இழந்து பத்திரகாளி அவதாரம் எடுத்தார். எதிர்த்து நின்றார். தலைமுடியைப் பிடித்து தரதரவென சாலைப் பக்கமாக இழுத்து வந்து செருப்பை கழற்றி பளார் பளார் என்று அறை விட்டார்.

“எத்தனை தடவைடா சொல்வது?” என்று அடக்கமுடியாத கோபத்தால் வெளுத்து வாங்கினார். உள்ளூர்வாசிகளும் உடன் சேர்ந்து இளைஞனை புரட்டி எடுத்தனர். சாயியை அங்கேயே மடக்கிப் போட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இப்ரஹிம்பட்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாயி சைதன்யாவை கைது செய்தனர்!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img