ஐயோ பாவம்… அந்த நீதிபதியால் அவமானப்பட்ட ‘அந்த’ சார்பு உதவி ஆய்வாளர்!

complaint - 2026

டிச.3 அன்று இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்து உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் -1 என்ற நீதிமன்றத்தில் இராமநாதபுரம் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு சார்பு ஆய்வாளர் திருமதி. ஜெனிபா ராணி என்பவர் நீதிமன்ற பணிகளுக்காக காலை 10 மணி அளவில் வந்து உள்ளார்.

உரிய நேரத்தில் நீதிமன்றம் தொடங்கியதும், இராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் -1 நீதிபதி திருமதி ஜெனிதா , CCIW சார்பு ஆய்வாளரை “உன்னை யார் என்னுடைய கோர்ட்க்கு வரச் சொன்னது. உடனே நீ வெளியே போ என்று கூறி , அங்கு நீதிமன்ற பணியில் இருந்த ஊழியர்கள் நான்கு பேரை அழைத்த நீதிபதி, “இவளை மூன்றாவது மாடியில் உள்ள நமது நீதிமன்றத்தில் இருந்து , கீழ்தளத்தில் உள்ள மெயின் கேட் அருகே விடுங்கள் என்று கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் , நீதிமன்ற ஊழியர்கள் மேற்படி சார்பு ஆய்வாளரை அழைத்து வரும் போது, மேற்படி சார்பு ஆய்வாளர் அவமானத்தில் கூனி குறுகி பெரும் குரல் எடுத்து , அழுது கதறியுள்ளார்…

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

அதன் அடிப்படையில் , சத்தம் கேட்டு தலைமை குற்றவியல் நீதிபதி அவர்கள் அந்த சார்பு ஆய்வாளரை நேரில் விவரங்களை கேட்ட நேரத்தில் சார்பு ஆய்வாளர் நீதிபதி முன்பாக நெஞ்சு அடைப்பதாகக் கூறி மயங்கி சரிந்துள்ளார்.

காவல் சார்பு ஆய்வாளர் இராமநாதபுரம் D பிளாக் பகுதியில் அமைந்து உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

நீதித்துறை நடுவர் திருமதி.ஜெனிதா அவர்கள் காவல் சார்பு ஆய்வாளரிடம் அநாகரிமாக நடக்க காரணம் என்னவென்று விசாரித்த வகையில், மேற்படி நீதிமன்றத்தில் முன்பு (கடந்த 2013 ஆண்டுகளில் இருந்து) வணிக குற்ற புலனாய்வு பிரிவு சார்பாக நீதிமன்ற பணிகளை கவனித்து வந்தவர் முதல் நிலை காவலர் திரு.முருகன்.

அண்மைக் காலமாக காவலர் முருகன் என்பவர் வணிக குற்ற புலனாய்வு பிரிவு நீதிமன்ற பணிகளை சரி செய்வதில்லை என்று கூறப்படுகிறது. காரணம் நீதிபதி அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று கூட்டி வருவது, நீதிபதி அவர்களின் கார் டிரைவராக காவலர் பணிபுரிந்து வருவது என்று இருந்ததாக கூறப்படுகிறது.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

இதன் அடிப்படையில் காவலர் முருகன் நீதிமன்ற பணிகளிலிருந்து, வேறு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வேறு பணிக்கு மாற்றம் செய்யப்பட்ட காவலர் முருகன் என்பவரை மீண்டும் நீதிமன்ற பணிகளுக்கு மாற்றம் செய்ய நீதிபதி அவர்கள் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் இராமநாதபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் -1 என்ற நீதிமன்றத்தில் வணிக குற்ற புலனாய்வு பிரிவு காவல்துறையினர் உள்ளே நுழையக் கூடாது என்ற அடிப்படையில் சார்பு ஆய்வாளர் அவர்களை நீதிமன்றத்திலிருந்து வெளியே துரத்தியதற்கான காரணம் என தெரிய வருகிறது.

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் நீதிமன்றங்களில் உள்ள CCTV கேமிராக்களில் பதிவு ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

நீதிமன்றம் எண் -1 நீதிபதி திருமதி ஜெனிதா என்பவர் பல்வேறு நிலை அதிகாரிகளை வயது வித்தியாசம் பார்க்காமல் ஒருமையில் பேசுவது குறித்து பல்வேறு புகார்கள் பரவலாகக் கூறப்படுகிறது.

திருமதி ஜெனிதா இதற்கு முன் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் நடுவராகப் பணியாற்றியவர்

  • கா.குற்றாலநாதன், நெல்லை
    .
ALSO READ:  பிஜேபி., உள்ள வந்துடும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories