வாங்கம்மா வாங்க 4 கிலோ வெங்காயம் ரூ.100! எங்கன்னு பாருங்க!

onion - 2026

நாடு முழுவதும் வெங்காயம் தட்டுப்பாட்டால், கடுமையாக விலை உயர்ந்துள்ளது. கிலோ ரூ.100 முதல் ரூ. 180 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரு நாட்களில் சற்று விலை குறைந்து இருந்தாலும் பெரிய அளவு விலையில் வித்தியாசம் இல்லை.

இந்த நிலையில் கடலூர் பான்பரி மார்க்கெட்டில் உள்ள ஒரு காய்கறி கடையில் நேற்று, ‘100 ரூபாய்க்கு 4 கிலோ வெங்காயம்’ விற்பனை செய்யப்பட்டது.

மக்கள் இதை அறிந்த உடன் வேகமாக வந்து வாங்கி சென்றனர். வாடிக்கையாளர்கள் பலர் அந்தக் கடையில் எழுதப்பட்டிருந்த, ‘4 கிலோ வெங்காயம் 100 ரூபாய்’ என்ற வாசகத்தை செல்போனில் படம்பிடித்து, தெரிந்தவர்களுக்கு அனுப்ப, மேலும் கூட்டம் முண்டியடித்தது.

இது குறித்து கடை உரிமையாளரும், பான்பரி மார்க்கெட் சங்க செயலாளருமான பக்கிராமிடம் கேட்டதற்கு, “பெங்களூரு பகுதியிலிருந்து நேற்று லாரிகளில் 22 டன் வெங்காயம் எங்கள் கடைக்கு வந்தது.

பெங்களூருவில் இருந்து அனுப்பிய மொத்த வியாபாரி தெரிவித்தது போல 4 கிலோ வெங்காயம் (சிறிய பல்லாரி வெங்காயம்) 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். மேலும் பல்லாரி வெங்காயம் ஒரு கிலோ ரூ 60க்கும், சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம் கிலோ ரூ.140க்கு விற்பனை செய்கிறோம்.

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

எங்களுக்கு வழங்கக்கூடிய வெங்காய விலையை வைத்து தான் நாங்கள் விலை நிர்ணயம் செய்கிறோம். 4கிலோ 100 ரூபாய் என்ற அளவில் வந்த 22டன் வெங்காயமும் விற்று தீர்த்து விட்டது” என்றார்.

ஆனால், கடலூரில் மற்ற கடைகளில் நேற்று வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் தர வாரியாக விற்கப்பட்டன.

இந்த ஒரு கடையில் மட்டும் எப்படி சாத்தியம் என்று பிற வியாபாரிகளிடம் கேட்டதற்கு, அளவில் சிறியதாக, சற்றே உலர்ந்த தன்மையில் இருப்பதால் இந்த விலைக்கு கிடைத்துள்ளது. தவிர, பெங்களூருவில் இருந்து மொத்த விலைக்கு கொள்முதல் செய்து, பெரிய அளவு லாபம் எதிர்பார்க்காமல் விற்றதும் ஒரு காரணம் என்று தெரிவிக்கின்றனர்.

தொடர்ச்சியாக இதுபோல வெங்காய வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் விலை கட்டுக்குள் வரும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories