வாங்கம்மா வாங்க 4 கிலோ வெங்காயம் ரூ.100! எங்கன்னு பாருங்க!

onion - 2026

நாடு முழுவதும் வெங்காயம் தட்டுப்பாட்டால், கடுமையாக விலை உயர்ந்துள்ளது. கிலோ ரூ.100 முதல் ரூ. 180 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரு நாட்களில் சற்று விலை குறைந்து இருந்தாலும் பெரிய அளவு விலையில் வித்தியாசம் இல்லை.

இந்த நிலையில் கடலூர் பான்பரி மார்க்கெட்டில் உள்ள ஒரு காய்கறி கடையில் நேற்று, ‘100 ரூபாய்க்கு 4 கிலோ வெங்காயம்’ விற்பனை செய்யப்பட்டது.

மக்கள் இதை அறிந்த உடன் வேகமாக வந்து வாங்கி சென்றனர். வாடிக்கையாளர்கள் பலர் அந்தக் கடையில் எழுதப்பட்டிருந்த, ‘4 கிலோ வெங்காயம் 100 ரூபாய்’ என்ற வாசகத்தை செல்போனில் படம்பிடித்து, தெரிந்தவர்களுக்கு அனுப்ப, மேலும் கூட்டம் முண்டியடித்தது.

இது குறித்து கடை உரிமையாளரும், பான்பரி மார்க்கெட் சங்க செயலாளருமான பக்கிராமிடம் கேட்டதற்கு, “பெங்களூரு பகுதியிலிருந்து நேற்று லாரிகளில் 22 டன் வெங்காயம் எங்கள் கடைக்கு வந்தது.

பெங்களூருவில் இருந்து அனுப்பிய மொத்த வியாபாரி தெரிவித்தது போல 4 கிலோ வெங்காயம் (சிறிய பல்லாரி வெங்காயம்) 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். மேலும் பல்லாரி வெங்காயம் ஒரு கிலோ ரூ 60க்கும், சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம் கிலோ ரூ.140க்கு விற்பனை செய்கிறோம்.

எங்களுக்கு வழங்கக்கூடிய வெங்காய விலையை வைத்து தான் நாங்கள் விலை நிர்ணயம் செய்கிறோம். 4கிலோ 100 ரூபாய் என்ற அளவில் வந்த 22டன் வெங்காயமும் விற்று தீர்த்து விட்டது” என்றார்.

ஆனால், கடலூரில் மற்ற கடைகளில் நேற்று வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் தர வாரியாக விற்கப்பட்டன.

இந்த ஒரு கடையில் மட்டும் எப்படி சாத்தியம் என்று பிற வியாபாரிகளிடம் கேட்டதற்கு, அளவில் சிறியதாக, சற்றே உலர்ந்த தன்மையில் இருப்பதால் இந்த விலைக்கு கிடைத்துள்ளது. தவிர, பெங்களூருவில் இருந்து மொத்த விலைக்கு கொள்முதல் செய்து, பெரிய அளவு லாபம் எதிர்பார்க்காமல் விற்றதும் ஒரு காரணம் என்று தெரிவிக்கின்றனர்.

தொடர்ச்சியாக இதுபோல வெங்காய வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் விலை கட்டுக்குள் வரும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories