நேற்றே தர்பார் கதையை களியக்காவிளையில் ரிலீஸ் செய்துவிட்ட ‘ஜிஹாதீஸ்’!

Published:

darbar rajini1 - 2026

நேற்று களியக்காவிளையில் பயங்கரவாதிகளால் காவல் உதவி ஆய்வாளர் கொலை…
இன்று ரஜினி தர்பார் ரிலீஸ்…
கதை கரு ஒன்றுபடுகிறதோ ?

இப்படி கேள்வி எழுப்புகின்றனர் சமூகத்தளங்களில்! காரணம், கன்னியாகுமரியில் களியக்காவிளை சோதனைச்சாவடியில் சிறப்பு காவல் ஆய்வாளர் வில்சனை சுட்டுக் கொன்று விட்டு, அருகில் உள்ள மசூதியை நோக்கி தப்பி ஓடிய இரு பயங்கரவாத இயக்கத் தொடர்பாளர்கள் குறித்த செய்தி தமிழகத்தையே உலுக்கி எடுத்திருப்பதுதான்!

இந்தச் செய்தி இன்று செய்தி சேனல்களை உலுக்கி எடுத்திருக்கிறது. காவலர் ஒருவர் இப்படி கண்மூடித் தனமாக சுட்டுக் கொல்லப் பட்டிருப்பது, தமிழக காவல் துறையையே கடும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. குறிப்பாக இந்தச் சம்பவம் தமிழக அரசை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து உடனடி விசாரணை, உடனடி நடவடிக்கை உறுதி என்று கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி விட்டது தமிழக அரசு.

kalikavalai - 2026

ரஜினியின் தர்பார் வெளியான அதே நேரத்தில் இந்தக் கதையை முன்னரே ஹிண்ட்ஸ் கொடுத்து, ஹிட் செய்து விட்டுள்ளனர் ஜிஹாதிகள் என்று சமூகத் தளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img