December 6, 2025, 6:58 PM
26.8 C
Chennai

பத்திரிகை சுதந்திரம் காக்கப்படும்: கருணா பாதையில் ஸ்டாலினும் இந்திரா பாதையில் ராகுலும் செல்வதனால்!

thuglaq cho - 2025

நண்பர் ரஜினி அரசியல்வாதி அல்ல, அவர் ஒரு நடிகர். * தமிழ் சமூகத்திற்காக 95 ஆண்டுகள் போராடிய பெரியார் பற்றி பேசும் போது நடிகர் ரஜினி கவனமுடன் யோசித்து பேச வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ….. திமுக தலைவர் ஸ்டாலின்.

???? துக்ளக் மேடையில் ரஜினி காந்த் பேசியதன் மையப் பொருள், தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதியும், இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தியும் எங்கள் ஆசிரியருக்கும், துக்ளக் பத்ரிக்கைக்கும் இலவச விளம்பர ஏஜென்டுகளாக செயல்பட்டு பிரபலப்படுத்தினார்கள் என்பது தான்.

கருணாநிதி தனது ஆட்சி காலத்தில் கருத்துரிமையை பாதுகாப்பதிலும், பத்திரிகைச் சுதந்திரத்தை காப்பதிலும் மாவீரராக திகழ்ந்தார்.

ஹிந்து கடவுள்களை நிர்வாண கோலத்தில் ஊர்வலமாக கொண்டு செல்ல விரும்பிய திராவிடர் கழகத்தவரின் கருத்துச் சுதந்திரத்திற்கு தடை விதிக்க விரும்பாத பரந்த மனம் கொண்ட முதலமைச்சராக இருந்தார். * அந்த செய்தியை வெளியிட்ட துக்ளக் இதழ்களை அச்சத்தில் நுழைந்து பறிமுதல் செய்ய உத்தரவிடும் அளவுக்கு பத்ரிகை சுதந்திரத்தின் மீது தீராத தாகம் கொண்ட தலைவராக திமுக தலைவராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த கருணாநிதி திகழ்ந்தார் .

கருணாநிதியின் இந்த கருத்துச் சுதந்திர, பத்ரிகைச் சுதந்திர வேட்கை எங்கள் ஆசிரியரையும், துக்ளக்கையும் மாநிலம் தழுவிய அளவில் பிரபலப்படுத்தியது என்பது தான் ரஜினி பேச்சின் மையக் கருத்து.

????முதலமைச்சராக இருந்த கருணாநிதி துக்ளக் இதழ்களை பறிமுதல் செய்து பத்ரிகை சுதந்திரத்தைக் கட்டிக்காத்து ஆசிரியரையும், துக்ளக்கையும் தமிழ் கூறும் நல்லுகில் பிரபலப் படுத்தினார். பிரதமராக இருந்த இந்திரா காந்தியோ செய்தி ஊடகங்கள் முழுமைக்கும் முன் தணிக்கை விதித்து அகில இந்திய அளவில் பத்ரிகைச் சுதந்திரத்தைப் போற்றி வளர்த்தார். பல வருடங்களுக்கு முன்பே வெளியான சர்வாதிகாரி திரைப்படத்தின் விமர்சனத்தை துக்ளக்கில் வெளியிட்டு நெருக்கடி நிலை கால சூழலை மக்களுக்கு புரிய வைத்து ஆசிரியர் பரபரப்பை உண்டாக்கினார்.

தமிழக அளவில் பிரபலமாக இருந்த ஆசிரியரையும், துக்ளக்கையும் அகில இந்திய அளவில் பிரபலமடைய வைத்த விளம்பர மேலாளர் இந்திரா காந்தி.

கருணாநிதியின் பத்ரிகைச் சுதந்திர பற்றைக் குறித்து விளக்க வேண்டும் என்றால் பெரியார் விட்ட ஊர்வலத்தை சொல்லாமல் எப்படி விளக்க முடியும்? இந்திரா காந்தியின் ஜனநாயகப் பற்றை விளக்க வேண்டுமென்றால் அவர் பதவியில் நீடிக்க முடியாது என்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சொல்லிவிட்டு தானே அவர் கொண்டு வந்த நெருக்கடி நிலை பிரகடனத்திற்கான காரணத்தை விளக்க முடியும்.

இரண்டையும் சொல்லி தானே ஆசிரியரின் துணிச்சலையும், துக்ளக்கின் வரலாற்றையும் சொல்ல முடியும்?

???? துக்ளக் மேடையில் ரஜினி சொன்னது போல ஆசிரியரின் புகழுக்கும் க்ளக்கின் பெருமைக்கும் உழைத்த இருபெரும் தலைவர்கள், கருணாநிதி மற்றும் இந்திரா காந்தி என்பது உண்மை.

இரண்டு பேரிடமும் காணப்படும் அரிய குணாதிசயம் ஜனநாயகம் மற்றும் பத்ரிகை சுதந்திரத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த தீராத காதல் என்றால் அது மிகையல்ல.

கருணாநிதியின் பாதையில் ஸ்டாலினும், இந்திரா காந்தியின் பாதையில் ராகுல் காந்தியும் நடந்து நடந்து ஜனநாயகம் காக்க, பத்ரிகை சுதந்திரம் காக்க போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நாடும்,ஜனநாயகமும், பத்ரிகை சுதந்திரமும் நிச்சயம் காக்கப்படும்!

  • வசந்தன் பெருமாள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories