December 7, 2025, 6:40 PM
26.2 C
Chennai

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு: லஞ்சம் கொடுத்த பணம் எவ்வளவு தெரியுமா?!

13 July31 TNPSC - 2025

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதில், ஒரு தேர்வருக்கு எவ்வளவு பணம் கைமாறியுள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளான கிராம நிர்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், வரிதண்டலா் உள்ளிட்ட 9,398 காலிப் பணியிடங்களுக்கு கடந்த செப்டம்பா் 1 ஆம் தேதி தேர்வு நடத்தப் பட்டது. தமிழகம் முழுவதும் 5,575 மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை, 13,66,548 பேர் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் நவம்பா் 12 ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் 24,260 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 40 பேர் தரவரிசைப் பட்டியலில் 100 இடங்களுக்குள் வந்ததை அடுத்து இதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. தொடர்ந்து தேர்வாணைய அதிகாரிகள் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா். இந்த மையங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவா்களை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

இதன் பின்னர், சென்னை, தேர்வாணைய அலுவலகத்தில் கடந்த 13ஆம் தேதி விசாரணை தொடங்கியது. தேர்வாணையச் செயலாளா் நந்தகுமார், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சுதன் உள்ளிட்டோர் இந்த விசாரணையை நடத்தினா். இந்த விசாரணையின்போது தேர்வில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, தேர்வாணையச் செயலா் நந்தகுமார், சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அவரது புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி அதிகாரிகள், கூட்டுச் சதி, அரசுக்கு களங்கம் ஏற்படுத்துதல்,மோசடி செய்தல், அரசு ஆவணத்தை போலியாக்குதல், போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். உரிய ஆவணங்களை தோவாணைய அதிகாரிகள் ,சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். தேர்வர்களின் விடைத்தாள்களும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டன. இந்த வழக்கில் துப்பு துலக்க சிபிசிஐடி கண்காணிப்பாளர் மல்லிகா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தொடர்ந்து சிபிசிஐடி அதிகாரிகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் வட்டாட்சியா்கள் வீரராஜ், பார்த்தசாரதி, வட்டாட்சியா் அலுவலக உதவியாளர், ஆயுதப்படைக் காவலா் இருவர் என 5 பேரை வியாழக்கிழமை விசாரணைக்கு சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த முறைகேட்டில் இடைத் தரகா்களாக செயல்பட்டவர்கள், தேர்வா்களிடம் பணம் வாங்கியவர்கள், தேர்வர்கள் என மொத்தம் 15 பேரை சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்துக்கு அழைத்து வந்து தனித் தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

இதில், இடைத்தரகா்களாக செயல்பட்ட சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை இயக்ககத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் ஏ.ரமேஷ் (39), எரிசக்தித் துறை உதவியாளராகப் பணிபுரியும் மு.திருக்குமரன் (35) மற்றும் தேர்வில் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்ற திருவல்லிக்கேணியைச் சோந்த ர.நிதீஷ்குமார் (21) என மூன்று பேரைக் கைது செய்தனா்.

தொடர்ந்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக வெங்கட்ரமணன், திருவேல்முருகன், ராஜசேகர், காலேஷா என மேலும் 4 பேர் சனிக்கிழமை இன்று கைது செய்யப்பட்டனர். தேர்வில் தேர்ச்சி பெற தலா ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை லஞ்சமாக அவர்கள் பெற்றுக் கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories